12 அக்டோபர், 2009

பணயக் கைதிகளை பாகிஸ்தான் படையினர் மீட்டபோது இலங்கை கிரிக்கெட் அணிமீதான தாக்குதல் சூத்திரதாரி கைது-
உரிமை கோரப்படாத இலங்கைப் படகொன்று தமிழக கடற்பரப்பில் மீட்பு-

உரிமை கோரப்படாத இலங்கைப் படகொன்று தமிழக கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இராமேஸ்வரம், மண்டபம் தென்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களால் நிர்க்கதியான நிலையி;ல் இருந்த இந்தப்படகு மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளது. சிங்கள மொழியிலான வாசகம் பொறிக்கப்பட்டுள்ள குறித்த படகு இலங்கைக்கு சொந்தமானதென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள இந்தப்படகு குறித்து தமிழகத்தின் சுங்கத் திணைக்களமும், கியூ பிரிவு பொலீசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பாகிஸ்தானில் இராணுவ தலைமைக் காரியாலயத்தில் பயங்கரவாதிகளால் பணயமாக வைக்கப்பட்டிருந்த குழுவினரை படையினர் விடுவித்தபோது கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதிகளில், இலங்கை கிரிக்கெட் அணிமீதான தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரும் அடங்குவதாக பாகிஸ்தான் அசோசியேட்டட் பிறஸ் தெரிவித்துள்ளது. நேற்றுக்காலை இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது காயங்களுடன் கைதான பயங்கரவாதிகளுடன் கைதுசெய்யப்பட்ட பயங்கரவாத கொமாண்டோவான உஸ்மான் என்பவர் இலங்கை கிரிக்கெட் அணிமீது தாக்குல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி என நம்பப்படுவதாக பாகிஸ்தான் பொதுஜன உறவு சேவைகள் பேச்சாளர் மேஜர்ஜெனரல் அதார் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இத் தேடுதலின்போது கொல்லப்பட்ட நான்கு பயங்கரவாதிகளில் இருவர் தற்கொலை அங்கிகளை அணிந்திருந்ததாகவும்; அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
இராணுவ அதிகாரிகள், தளபதிகள் மத்தியில் பங்கேற்கும் இறுதி நிகழ்வாக இது இருக்கலாமென ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவிப்பு-
புலிகளுக்காக உளவு வேலையில் ஈடுபட்டிருந்தவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது-

புலிகளுக்காக உளவு வேலைகளில் ஈடுபட்டுவந்த ஒருவரை சிலாபம் பிரதேசத்தில் வைத்து விசேட புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்புத் துறைமுகத்தின்மீது தாக்குதல் நடத்துவதற்கு தேவையான உளவுத் தகவல்களை குறித்த நபர் புலிகளுக்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்த உளவுப் பணிகளை அவர் மேற்கொண்டதாக தெரியவருகிறது. மற்றுமொரு புலி உறுப்பினர் வழங்கிய தகவலை அடிப்படையாகக் கொண்டு குறித்த நபரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாகவும், இச்சந்தேகநபர் புலிகளுக்கு படகுகளையும் விநியோகித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.


இலங்கை இராணுவத்தின் 60வது ஆண்டு பூர்த்திக்கான நிகழ்வுகள் இன்றையதினம் கொழும்பு, இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்று உரையாற்றிய முப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதிகள், இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட இராணுவ உயர்மட்டத்தினர் மத்தியில் தாம் கலந்து கொண்டு உரையாற்றும் இறுதி நிகழ்வாக இது இருக்குமென தான் நம்புவதாகவும், தமது இராணுவ சேவையின்போது கடப்பாட்டுடன் சகல பணிகளையும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியுள்ளதாக தாம் நம்பவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
கடவுச்சீட்டுப் பெறுவதில் புதிய விதிமுறை
வவுனியா வர்த்தகர் சங்கம் சமூகச் செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட ஏற்பாடு

வவுனியா வர்த்தகர் சங்கம் சமூகச் செயற்பாடுகளில் இனிமேல் முனைப்புடன் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வர்த்தகர் சங்கத் தலைவர் பி.எஸ்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் நடைபெற்ற வைபவத்தில் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வர்த்தகர் சங்க உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கல் மற்றும் வவுனியா பொது வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியுதவி வழங்கல்-

ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் சச்சிதானந்தன் கெளரீசன் உட்பட மாவட்டத்தில் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ள மாணவர்களுக்குப் பணப்பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய வைபவத்தில் அவர் உரையாற்றினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"இப்போது நாட்டில் யுத்தமில்லை. வவுனியாவில் அமைதி நிலவுகின்றது. முன்னர் வர்த்தகர்கள் வெளியில் செல்வதற்கே அச்சமடைந்திருந்தார்கள். இதனால் வவுனியா வர்த்தகர் சங்கம் செயலற்றிருந்தது.

இப்போது நிலைமை மாறியுள்ளது. இதனையடுத்து, வர்த்தகர் சங்கம் தனது நடவடிக்கைகளைத் துடிப்போடு செய்வதற்கு முன்வந்துள்ளது. அதன் முதற்படியாகவே இந்த வைபவம் நடைபெறுகின்றது" என்றார்.

இந்த வைவத்தில் வரவேற்புரை நிகழ்த்திய வவுனியா வர்த்தகர் சங்கத்தின் உபதலைவர் ரீ.கே.இராஜலிங்கம் பேசுகையில்,

"வவுனியா வர்த்தகர் சங்கம் முதலாவது செயற்பாடாக தனது அங்கத்தினர்களுக்கு வர்த்தகர் சங்கத்தின் அடையாள அட்டையை வழங்குகின்றது. இந்த அடையாள அட்டையில் வர்த்தகர் சங்கத் தலைவரும், வவுனியா தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டரும் கையெழுத்திட்டுள்ளார்கள். இது பெறுமதியுள்ள ஓர் ஆவணமாகும்.

புனரமைக்கப்பட்டுள்ள வவுனியா வர்த்தகர் சங்கத்திற்கு வர்த்தகர்கள் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்கள். அவர்களது ஒத்துழைப்புடன் மேலும் மேலும் பல சமூக காரியங்களை முன்னெடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

வவுனியா வர்த்தகர்கள் பல்வேறு சமூக சேவைகளுக்காக மாதந்தோறும் பெருமளவு நிதியை வழங்கி வருகின்றார்கள். இந்த நிதியைக் கொண்டு வெவ்வேறு அமைப்புக்கள் நற்பெயரைத் தட்டிச் சென்றுள்ளன.

எனவே, இவ்வாறான சமூகச் செயற்பாடுகளை வர்த்தகர் சங்கமே முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக எமது சங்கச் செயலாளர் கே.சி்றிஸ்கந்தராஜா தெரிவித்த ஆலோசனையையடுத்து, வவுனியா மாவட்டத்தில் ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தமது திறமைகளை வெளிப்படுத்தி அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ள ஐந்து மாணவர்களுக்குப் பணப் பரிசுகளை வழங்கத் தீர்மானித்தோம்.

அதேவேளை, இந்த மாணவர்களுக்கு கல்வியூட்டிய பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களைப் பாராட்டுவதற்கும் ஏற்பாடுகள் செய்தோம்.

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். அவரையும் அந்தப் பாடசாலையையும் அதிபர், ஆசிரியர்களையும் வர்த்தகர் சங்கம் பாராட்டி மகிழ்கின்றது" என்றார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வவுனியா தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன்சிகர,

"வவுனியாவில் தற்போது நள்ளிரவு 12.00 மணிவரை மக்கள் நடமாடத்தக்க வகையில் நிலைமை சீரடைந்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக பொலிசார் இரவு முழுதும் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். வவுனியா நகரத்தை அழகுற வைத்திருக்க வேண்டியது வர்த்தகர்களினதும், வவுனியா நகரசபைத் தலைவர், உறுப்பினர்களினதும் கடமையாகும்.

இதற்கான திட்டங்களை வகுத்து வவுனியா நகரசபை செயற்பட வேண்டும்" என்றார்.

இந்த வைபவத்தில் வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் நகரசபை உறுப்பினரும், முன்னாள் நகரசபைத் தலைவருமான ஜி.ரீ.லிங்கநாதன், மற்றும் நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, முனாவர், எஸ்.குமாரசாமி, வவுனியா தெற்கு வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.நா.மாணிக்கவாசகம், ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணி்ப்பாளர் சி.கணேசபாதம், வவுனியா மகப்பேற்று நிபுணர் டாக்டர் என்.சரவணபவ, வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவர் நா.சேனாதிராஜா ஆகியோர் உட்படப் பலரும்

தந்தை இருவரது இணக்கப்பாட்டின் பின்பே சிறுவர்களுக்குக் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இன்று முதல் இது அமுலில் இருக்குமெனவும் அறிவித்துள்ளது.

புது சட்ட விதிகளுக்கு அமைவாக 16 வயதுக்கு உட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோரின் இணக்கப்பாட்டுக்குப் பின்பே கடவுச்சீட்டு வழங்கப்படுமென திணைக்களத்தின் அதிகாரி ரி.பி.அபயகோன் தெரிவித்தார்.

பெற்றோர் விவாகரத்துப் பெற்றிருப்பின் அல்லது சட்ட விதிகளுக்கு அமைய பிரிந்திருப்பின் நீதிமன்ற உத்தரவு அல்லது சட்ட ஆவணங்கள் பெற்றோர் சார்பாக சமர்ப்பிக்கப்படின் கடவுச்சீட்டு வழங்கப்படும்.இப்புதிய விதிமுறை சிறுவர்கள் அவர்களது பெற்றோர்களால் கடத்தப்படுவதைக் குறைப்பதற்காகவே அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...
அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு இந்திய அரசுக்கு கால அவகாசம் தேவை - யாழ்ப்பாணத்தில் இந்திய தூதுக்குழுவின் தலைவர் பாலு


தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு இந்திய அரசாங்கத்துக்கு கால அவகாசம் தேவை. இலங்கைப் பிரச்சினையின் சாதக பாதகங்களை ஆராய வேண்டியுள்ளது. நலன்புரி முகாம்களில் உள்ள மக்களை நேரில் பார்வையிட்டு அவர்களை மீளக்குடியேற்றுவதற்கான அழுத்தத்தை வழங்குவதற்காகவே நாம் இலங்கை வந்துள்ளோம் என்று தமிழக பாராளுமன்ற குழுவின் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றுக்காலை ஹெலிகொப்டர் மூலம் வந்த இக்குழுவினர் யாழ். நூல்நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றினர். இங்கு கருத்துத் தெரிவித்தபோதே டி.ஆர். பாலு மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை தமிழர்களுடனான எமது உறவு தொப்புள் கொடி உறவு என்பதை யாரும் மறுக்கமுடியாது. இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே பார்வையில் ஒரே குடிமக்களாக வாழ வேண்டும். இதற்காக எமது அரசாங்கம் வேகமாக செயற்பட்டு வருகின்றது. இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடனும் தமிழ்நாட்டின் வேண்டுகோளுக்கிணங்கவும் இலங்கை ஜனாதிபதியின் அனுசரணையுடனும் எமது விஜயம் அமைந்துள்ளது.

இலங்கைப் பிரச்சினையில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்பவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட கடற்றொழில் சமாசத்தினால் சில கோரிக்கைகள் முனவைக்கப்பட்டன.

போர் முடிவடைந்தடையடுத்து பகுதிபகுதியாக மீன்பிடிப்பதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் உள்நாட்டு மீனவர்களின் படகுகள் சேதமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடற்றொழிலாளர் குடும்பங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றன. இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கடற்றொழில் சமாசத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்குப் பதிலளித்த டி.ஆர். பாலு, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அமைச்சர் சிதம்பரம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக கடல் எல்லையில் தொழில்செய்வதற்கு பாஸ் நடைமுறை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இங்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் சார்பில் மாணவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கøயில் ரஜீவ் காந்தி கொலையையடுத்து பெருமளவான தமிழ்மக்களது உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனைக் காரணமாக வைத்து மேலும் எத்தனை உயிர்களை பலிகொள்ளப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இறுதிக்கட்ட போராட்டத்தின்போது இந்தியாவின் தேர்தல் மாற்றத்தைக் கொண்டுவருமென நாம் நம்பியிருந்தோம். ஆனால் அவø ஒன்றும் சாத்தியப்படவில்லை. தமிழ்மக்களின் உயிர்களே பலியாகின. இனியும் எத்தனை உயிர்களை பலிகொள்ளப் போகிறீர்கள் என்றும் அந்த மாணவன் இந்திய தூதுக்குழுவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...