14 அக்டோபர், 2009

நாட்டிற்கு நான் என்ன செய்தேன் என்பதே முக்கியம்-பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர


நாடு எனக்கு என்ன செய்தது என்பதை விட நான் நாட்டிற்காக என்ன செய்தேன் என்று ஒவ்வொறுவரும் சிந்திக்க வேண்டுமென்று மத்திய பிராந்தியப் பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

அண்மையில் கண்டி சுயீஸ் ஹோட்டலில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை வழிகாட்டிகளுக்காகன மூன்று நாள் வதிவிடச் செயல் அமர்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது-

"சுற்றுலாத் துறை வழிகாட்டிகளுக்கான இச்செயலமர்வின் முக்கியத்துவத்தை நான் நான்கு அடிப்படைகளில் நோக்குகின்றேன்.முதலாவதாக இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது.அடுத்ததாக தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் இது அவசியமாகிறது.அடுத்தபடியாக மனிதாபிகானத்தேவையின் அடிப்படையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது.இதைவிட இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில் இது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

தன்மானமுள்ள தேசிய இனம் என்ற அடிப்படையில் இன்று நாம் சர்வதேச சமூகத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.யுத்தம் நீங்கி அமைதி ஏற்பட்ட சூழ்நிலையில் சர்வதேச சமூகம் எம்மை உன்னிப்பாக அவதானிக்கும் கால கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.இந்நிலையில் எமது தொழிற்பாடுகள் முக்கியமானதாகும். எனவே நாம் எமது உள்ளத்திற்கும் மன சாட்சிக்கும் பொருத்தமான முறையில் தியாக சிந்தையுடன் நடந்துகொள்ள வேண்டும்.இதற்கு மனப்பாங்கு மாற்றம் தேவை.

எம்மிடம் எத்தகைய வளம் இருந்தாலும் எவ்வளவு சுதந்திரம் இருந்தாலும் தலைமைத்துவத்தில் மனிதாபிமான மனப்பாங்கு மாற்றம் இல்லாதவிடத்து எம்மால் முன்னேற முடியாது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இலங்கையர்கள் சிறந்த ஒரு தேசிய இனம் என மற்ற நாடுகள் கணிப்பிடும் நிலை ஏற்படப்போகிறது.இந்த இடத்தில் நாடு எனக்கு என்ன செய்தது என்பதைவிட நான் நாட்டிற்கு என்ன செய்தேன் என்பதைப்பற்றி சற்று சிந்தியுங்கள்.

சுற்றுலாத்துறை ஒரு சாதாரண தொழில் அன்று.இது ஆளுமைப் பண்புகள்கொண்ட தொழிற்றகைமைசார் உயர் பணியாகும்.ஏனெனில் இது நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்துவதுடன் நம் நாட்டைப் பற்றி பிறர் அறிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கிறது.

சுற்றுலா வழிகாட்டிகளின் நடத்தை மூலம் சர்வதேசத்திற்கு தகவல்கள் சென்றடைகின்றன. எனவே வழிகாட்டிகளிடத்தில் விஷேட ஆளுமைப்பண்புகள் இருக்கவேண்டும். நடை உடை பாவனை பேச்சு உற்பட பலதுறைகளிலும் இது காணப்படவேண்டும்.

சுற்றுலா வழிகாட்டிகள் தமக்கு பல்வேறு நாட்டு மொழி பற்றிய அறிவு இருந்தால் அது போதுமானது என நினைக்கின்றனர்.இது போதாது.நம் நாட்டைப் பற்றிய பின்னணிகள்,எமது கலாச்சாரம், பண்பாடு,வரலாறு, சமயப்பின்னணிகள் புவியியல், சுற்றாடல், அழகியல் உணர்வு,புரிந்துணர்வு,மனிதாபிமானம் ஒழுக்கம் போன்ற பல விடயங்கள் தேவைப்படுகின்றது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
சிங்கள மகாவித்தியாலயம் இடைத்தங்கல் முகாமும் இன்றுடன் மூடப்பட்டது



வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த சிங்கள மகாவித்தியாலயம் இடைத்தங்கல் முகாமும் இன்றுடன் மூடப்பட்டுள்ளது.

இறுதியாக இங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 06 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேரில் 17 பேரும் இன்று விடுவிக்கப்பட்டு அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று பேரும் மீண்டும் வவுனியா இடைத்தங்கல் முகாமிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கடந்த மாதம் 11 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த127 குடும்பங்ளைக் கொண்ட 367 பேர் விடுவிக்கப்பட்டு சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு இரண்டு இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 23 ஆம் திகதி முதல் இக்குடும்பங்கள் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலய முகாம் கடந்த வாரம் மூடப்பட்டு விட்டது.

இருப்பினும் சிங்கள மகாவித்தியாலய இடைத் தங்கல் முகாமில் தொடர்ந்தும் 6 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர் .குறித்த முகாமும் இன்றுடன் மூடப்பட்டு விட்டது.
மேலும் இங்கே தொடர்க...
இந்திய தூதுக் குழு- எதிர்க் கட்சி இன்று சந்திப்பு



இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியது.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் எதிர்க்கட்சி சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ஜயலத் ஜயவர்த்தன, ரவி கருணநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல , இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் தற்போது நிலவும் நிலவரம் குறித்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடன் விளக்கிக் கூறியதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரம்சிங்க தெரிவித்தார். அத்துடன் வவுனியாவில் இடம்பெயர்ந்த்வர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களிற்கு எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல அனுமதிக்கப்படாமை குறித்தும் அவர்களுக்கு தெளிவுபடுத்தியதாக மனோகணேசன் எம்.பி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
கிழ. மாகாண முதலமைச்சர் இந்திய எம்.பிக்கள் குழுவுடன் சந்திப்பு


தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வான உறுதியான அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கும் மாகாண சபை முறைமையை பலப்படுத்துவதற்கும் இந்தியா பாரிய பங்களிப்பு செய்ய வேண்டும் என இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் தமிழகத்தை சேர்ந்த ரி.ஆர் பாலு தலைமையிலான இந்திய நாடாளுமன்ற குழுவினரை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பு இந்திய இல்லத்தில் சந்தித்தபோதே இந்த தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம், அங்குள்ள மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள், மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னரான மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரினால் இந்திய தூதுக்குழுவினரிடம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இந்திய தூதுக்குழுவினரினால் கிழக்கு மாகாணம் பற்றியும், மாகாண சபை எதிர்நோக்கும் நடைமுறை சவால்கள் குறித்தும் முதலமைச்சரிடம் கேட்கப்பட்டது. இதுகுறித்தும் முதலமைச்சரினால் தெழிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் குறித்தும் விளக்கினர்,

இந்திய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சில வேலைத்திட்டங்கள் குறித்தும் தனது நன்றியினை முதலமைச்சர் தெரிவித்துக்கொண்டார்
மேலும் இங்கே தொடர்க...