30 மே, 2010

இலங்கையில்,இந்தியா அதிகாரம் செலுத்தவில்லை:





இலங்கையில்,இந்தியா அதிகாரம் செலுத்தவில்லை: ஜனாதிபதி மஹிந்த ராஜபஹ்சா
விடுதலைப்புலிகளுடன் நடந்த போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்ற முதலாம் ஆண்டு விழா கொழும்புவில் கொண்டாடப்பட்டது. அப்போது அதிபர் ராஜபக்சே பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

தனி ஈழம் கேட்டுவிடுதலைப்புலிகள் போராடினார்கள் அதை இலங்கை அரசு ஒப்புக் கொள்ளவில்லை. அதற்காக அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். நான் பதவிக்கு வந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்த விரும்பினேன். அதற்கு மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதாகிவிட்டது.

விடுதலைப்புலிகளை வெற்றி பெற்று இருந்தாலும் அந்த இயக்கம் முற்றிலும் அழித்து விட்டதாக நான் கருத வில்லை. ஏனெனில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளவர்கள் மற்றும் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள் அவர்கள் பல நாடுகளில் பரவிக்கிடக்கின்றனர்.

விடுதலைப்புலிகளுடன் நடந்த போரின் போது 20 ஆயிரம் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்ததாக கூறப்படுவது தவறு. இலங்கை ராணுவம் மிகவும் கட்டுப்பாடானது. போரின் போது பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி அவர்கள் நடந்து கொண்டனர்.

இலங்கை அரசின் முகாமில்தான் பிரபாகரனின் தாயார், தந்தை மற்றும் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர் அவர்களை நாங்கள் துன் புறுத்த வில்லை. அப்படி இருக்கும் போது பொது மக்களை கொலை செய்வோமா? ஏனெனில் அவர்கள் அனைவரும் எங்கள் நாட்டு மக்கள்தான்.

இலங்கை ராணுவ முகாம்களில் இருந்த 3 லட்சம் பேரில் 30 ஆயிரம் தமிழர்கள் தங்கள் கிராமங்களில் மீண் டும் குடியமர்த்தப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் குடியமர்த்தப்படுவார்கள். விடுதலைப்புலிகளுடன் நடந்த போரின் போது எங்களுக்கு ராணுவ உதவியையும் ஆலோ சனை களையும் வழங்கி இந்தியா உதவி செய்தது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரி வித்து கொள்கிறேன். போரின் போது சீனாவில் மட்டுமின்றி இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் கூட ஆயுதங்களையும் வாங்கினோம்.

இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் இலங்கை உறவு வைத்திருப்பதாக கருதக் கூடாது. இந்தியாவுடன் இலங்கை நட்புறவுடன் திகழ் கிறது. அது மட்டுமின்றி இந்தியாவை மிக உயர்வாக கருதுகிறோம்.

எங்கள் மீதுஇந்தியா அதிகாரம் செலுத்த வில்லை. மாறாக இளைய சகோதரி யிடம் அன்பு செலுத்துவது போன்று மிக பரிவாக நடந்து கொள்கிறது. வருகிற ஜூன் 8-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறேன். அப்போது பல விஷயங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறேன்.

பொருளாதார வளர்ச்சி குறித்த பேச்சுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக