31 ஜூலை, 2010

ஐஸ்கட்டி உருகுவதால் 12 ஆண்டுகளில் பூமி நீரில் மூழ்கும் அபாயம்; சுற்றுச் சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை

.

ஐஸ்கட்டி உருகுவதால்    12 ஆண்டுகளில் பூமி    நீரில் மூழ்கும் அபாயம்;    சுற்றுச் சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை

பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் தட்ப வெப்ப நிலையில் மாறுதல் ஏற்பட்டு வருகிறது. பூமியில் ஏற்படும் மாசுகாரணமாக விண்வெளியில் கார்பனின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் வடக்கு மற்றும் தென் துருவங்களில் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வழக்கத்தை விட அதிக அளவில் உருகுகின்றன. இதனால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 12 ஆண்டுகளில் பூமியின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இந்த தகவலை தாய்லாந்து சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கார்பன் உற்பத்தியை குறைத்து பூமியை காப்பாற்றும் பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாடு சென்றவர்ளின் பெயர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கக்கூடாது:த.தே.கூ

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குக் சென்றவர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தைவிட்டு வெளியேறியவர்களின் விருப்பத்தை அறியாது, அவர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது. அவர்கள் மீண்டும் வரமாட்டார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டால் மட்டு மே நீக்குவது குறித்த முடிவுக்கு செல்லவேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்க தரப்பினரையும் தேர்தல்கள் ஆணையாளரையும் விரைவில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளோம். பாராளுமன்றத்திலும் இது குறித்து குரல் எழுப்புவோம். இதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர் பதிவு மற்றும் திருத்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது :

யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர் இடாப்பு தொடர்பான பதிவுகளை செய்யும்போது கடந்த காலங்களில் போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்ந்து சென்றவர்களின் பெயர்களை அவர்களின் விருப்பங்களை அறியாது வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதை நாங்கள் எதிர்க்கின்றோம். வேறு மாவட்டங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்த நிலையிலேயே அதிகளவான மக்கள் சென்றுள்ளனர். எனவே உடனடியாக அவர்களின் பெயர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கக்கூடாது.

அதாவது இவ்வாறு சென்றுள்ள மக்களின் விருப்பங்களை அறிந்துகொண்ட பின்னரே அவர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவது தொடர்பான முடிவை எடுக்கவேண்டும். எனவே இவ்விடயம் குறித்து அடுத்தவாரமளவில் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து விரிவாக பேச்சு நடத்தவுள்ளோம். மேலும் அரசாங்கத்துடனும் இது குறித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதுடன் பாராளுமன்றத்திலும் இந்த விடயத்தை எழுப்பவுள்ளோம். நாங்கள் எமது தரப்பு நியாயங்களை முன்வைப்போம். இதேவேளை இதுகுறித்து அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்யவும் தயாராகவே இருக்கின்றோம்.
மேலும் இங்கே தொடர்க...

கடலில் மூழ்கும் நிலையில் இருந்த இலங்கை அகதிகள் உட்பட 81 பேர் அவுஸ்திரேலியாவில் மீட்பு

கடலில் மூழ்கும் அபாயநிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81 பேர் அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கிறிஸ்மஸ் தீவுக் கடற்பரப்பில் வைத்து கடந்த புதன்கிழமை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். அகதிகளுடன் சேர்த்து, அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய நான்கு இந்தோனேசிய ஆட்கடத்தல்காரர்களும் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தெரிவானதைத் தொடர்ந்து அங்கு சென்ற 150 ஆவது படகாக புதனன்று சென்ற படகு பதிவாகியுள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்ட நான்கு ஆட்கடத்தல்காரர்களும் குற்றவாளிகளாக கருதப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் நான்கு பேரும் ஏனைய அகதிகளுடன் ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் "காப்பாற்றப்பட்ட கடற்பயணிகள்' என கருதப்படுபவரே தவிர, சட்டவிரோத குடியேறிகள் என கருதப்படமாட்டார்கள் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கப்பல் மூழ்கும் நிலையில் இருந்ததாக கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் அது மூழ்கிய நிலையில் இருக்கவில்லை என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது ஆட்கடத்தல்காரர்களின் சூழ்ச்சியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த படகில் மீட்கப்பட்ட அகதிகளில் அதிக அளவிலானவர்கள் இலங்கையர்கள் எனவும் பெரும்பாலும் அவர்கள் 18 தொடக்கம் 50 வயதுடைய ஆண்கள் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட், தமக்கு அகதிகளின் படகுகளை நிறுத்தும் எண்ணம் இல்லை எனவும், அவர்கள் தமது நாடுகளில் இருந்து வெளியேறாமல் தடுப்பதே தமது எண்ணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்காகவே பிராந்திய ஒத்துழைப்பினை தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்!

தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்த வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொமினிக் கார்டேஸ் என்ற இந்த பெண் வில்லேஸ் ஆவ் டெர்ட்ரே நகர் அருகே உள்ள லில்லே கிராமப்புற வீட்டிலிருந்து 6 சிசுக்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மிக உடல் பருமன் கொண்ட இந்த 40 வயதுப் பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் 20 வயதுக்கு மேலானவர்கள்.

முதல் முறையாக இவருக்கு பிரசவம் நடந்தபோது உடல் பருமன் காரணமாக பெரும் வலியையும் வேதனையையும் இவர் அனுபவித்தாராம். இந்த வேதனையால் மனரீதியில் பாதிக்கப்பட்ட அவர் தனக்கு அடுத்துப் பிறந்த 8 குழந்தைகளையும் கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்துள்ளார்.

இந்த வீட்டை சமீபத்தில் இந்தத் தம்பதி விற்றது. இதையடுத்து புதிதாக வாங்கியவர்கள் வீட்டு வளாகத்தில் செடிகளை நட தோண்டியபோது இரு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் சிக்கின. இதையடுத்து அவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் டொமினிக் கார்டேஸ் அடுத்தடுத்து 8 குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்து புதைத்தமை தெரியவந்தது.

இதில் 6 குழந்தைகளின் உடல்கள் இந்தத் தம்பதி இப்போது வசிக்கும் சென்டியர் டி ப்ரூ வீட்டு வளாகத்தில் மீட்கப்பட்டன. இந்த உடல்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீட்டின் தரைப்பகுதி கிட்டங்கியில் போட்டு வைத்திருந்தார் கார்டேஸ். இந்த உடல்களும் எலும்புக் கூடுகளாகிவிடடன.

இந்தக் கொலைகளுக்கும் தனது கணவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பொலிஸாரிடம் கார்டேஸ் தெரிவித்துள்ளார். மேலும் தான் கர்ப்பமானது கூட அவருக்குத் தெரியாது, குழந்தைகள் பிறந்ததும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து கணவர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். கார்டேஸ் தொடர்ந்து சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் இங்கே தொடர்க...

விசா வழங்க மலேசியா புதிய நடைமுறை






மலேசியா வர விரும்பும் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது மலேசியா.

விசா கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர், மலேசியா சேர்ந்தவரை கணவராகவோஅல்லது மனைவியாகவோ கொண்டவராக இருந்தால் அல்லது தொழில் துறை சார்ந்த நிபுணராகவோ இருந்தால் அல்லது 12 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தவராகவோ இருந்தால், அவர்களுக்கு சிறப்பு விசா அனுமதி வழங்க பரிசீலிக்கப்படும் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

புதிய நடைமுறையின் படி, வயது, கல்வித் தகுதி, மலேசியாவில் உள்ளவர்களுடன் உள்ள உறவு போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு மதிப்புஎண் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

65 புள்ளிகளுக்கு மேல் பெரும் விண்ணப்பதாரர்களுக்கு விசா வழங்க பரிசீலிக்கப்படும். எனினும் அனைத்து விண்ணப்பங்களையும் போலீஸக்ஷ்ர் ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இப்புதிய திட்டம் ஜூலை 15-லிருந்து அமலிலுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தான் விமானம் மீது பறவை மோதியது: 421 பயணிகள் உயிர்தப்பினர்






வெள்ளிக்கிழமை பறப்பதற்கு தயாரான விமானம் மீது பறவை மோதியது. இதில் 421 பயணிகள் உயிர்தப்பினர். பாகிஸ்தான் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பிகே-320 விமானம் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் 421 பயணிகளுடன் பறக்கத் தயாரானது. விமானம் ஓடுபாதையில் ஓடும் போது அதன் ஒரு என்ஜினில் பறவை ஒன்று வேகமாக மோதியது.

இதையடுத்து அந்த விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணம் ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டு பறவை மோதியதால் விமானத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது சோதிக்கப்பட்டது. ""விமானத்தில் பறவை மோதிய போது பலத்த சப்தம் வந்தது. ஒரு என்ஜினில் இருந்து தீப் பொறியும் கிளம்பியது. விமானம் நிறுத்தப்பட்டதும் தீ அணைக்கப்பட்டது'' என்று அந்நாட்டு ஜியோ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 28-ம் தேதி தனியார் விமானம் இறங்கவிருந்த நேரத்தில் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 155 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து நடந்த 3 தினங்களில் மற்றொரு விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதிய சம்பவம் அந்நாட்டு விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

லண்டனில் வாடகை சைக்கிள் திட்டம்





லண்டனில் வெள்ளிக்கிழமை வாடகை சைக்கிள் திட்டத்தை தொடங்கி வைத்த அந்நகர மேயர் போரிஸ் ஜான்சன் (இடது), பார்க்ளேஸ் சைக்கிள் நிறுவனத் தலைவர் மார்க்கஸ்.
லண்டன், ஜூலை 30: பிரிட்டன் தலைநகர் லண்டனில் வாடகைக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

இத்திட்டத்தை லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இப்போது நகரில் எங்கு பார்த்தாலும் மோட்டார் வாகனங்களின் ஆதிக்கம்தான் உள்ளது. இதனால் சுற்றுச்சூழலும் பெருமளவு பாதிக்கப்படுகிறது. எனவே சூழலைக் காக்கும் வகையில் வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

÷லண்டனில் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு நகரின் பசுமையைக் காக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லண்டன் நகருக்குள் பயணம் செய்யும் மக்கள் இந்த வாடகை சைக்கிள்களைப் பயன்படுத்தி கொள்ள முடியும்.

÷ மொத்தம் 5 ஆயிரம் சைக்கிள்கள் முதல்கட்டமாக களம் இறக்கப்பட்டுள்ளன. லண்டன் நகரின் முக்கிய இடங்களில் 315 சிறப்பு வாடகை சைக்கிள் மையங்கள் உள்ளன. இந்த சைக்கிள்களைப் பயன்படுத்த விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும். இதுவரை 12 ஆயிரம் பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

÷சைக்கிளைப் பயன்படுத்த முதல் அரைமணி நேரம் வாடகை கிடையாது. அனைவரும் எளிதாக ஓட்டும் வகையில் 3 கியர்களுடன் இந்த சைக்கிள்களை பார்க்ளேஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

30 ஜூலை, 2010

என் பேச்சை கேட்டிருந்தால் பிரபாகரன் இறந்திருக்க மாட்டார்-சொல்கிறார் - கேபி







இறுதிக் கட்ட போரின்போது எனது பேச்சை கேட்க தவறி விட்டார் பிரபாகரன் . இதனால்தான் அவர் கொல்லப்பட நேரிட்டது. அவர் மட்டும் எனது பேச்சைக் கேட்டிருந்தால், இலங்கை அரசுடன் உடன்பட்டு செல்ல முன்வந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கேபி.

கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக அறிவித்த சிங்கள அரசு, ஆகஸ்ட் மாதம் கேபியை மலேசியாவில் வைத்துக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்தின் முகாமில்தான் வசித்து வருகிறார் கேபி.

ஒரு காலத்தில் பிரபாகரனின் வலதுகரமாக கருதப்பட்டவர் கேபி. ஆனால் இன்று இலங்கை அரசின் கைப்பாவையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவத்தின் பிடியில் உள்ள கேபி, இலங்கை அரசின் ஐலன்ட் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

கைதுக்குப் பின்னர் கேபி அளித்துள்ள முதல் பேட்டி இது. பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

4வது ஈழப் போரின் திருப்பு முனை எது என்று கருதுகிறீர்கள்?
அமெரிக்காவில் அல் கொய்தா அமைப்பினர் நடத்திய அதி பயங்கரத் தாக்குதல்தான் அனைத்தையும் மாற்றிப் போட்டு விட்டது. அந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் மேற்கத்திய சக்திகள் தலைமையிலான அனைத்து நாடுகளும் அனைத்து ஆயுதம் தாங்கிய குழுக்களையும் அபாயகரமானவை என்று அறிவித்தன. இது எங்களது நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது.

அல் கொய்தாவின் அதிவேக வளர்ச்சியால் ஒட்டுமொத்த ஆயுதக் குழுக்களும் பாதிக்கப்பட்டன. மேற்கத்திய நாடுகள் ஆயுதப் போராட்டம் குறித்த தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்ள நேரிட்டது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர்.

பிரிவினைவாத கருத்துக்களைப் பரப்புவதில் பெரும் சிரமங்கள் ஏற்படத் தொடங்கின. துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சில முக்கியத் தலைவர்கள், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்பட யாருமே இந்த புதிய சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை. தங்களது உத்தியை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை.

அதை அவர்கள் செய்திருந்தால், செய்ய முன்வந்திருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். இன்று புதிய உலக நடைமுறை உள்ளது. இது ஆயுதப் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாது. இதை உணர வேண்டும். அதுதான் உண்மையும் கூட.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி உங்களுக்கு எப்போது கிடைத்தது. அப்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?

மே 19ம் தேதி எனக்கு பிரபாகரன் மரணச் செய்தி கிடைத்தபோது நான் வெளிநாட்டில் இருந்தேன். சர்வதேச மீடியாக்கள் இந்த செய்தியை முரண்பட்டு வெளியிட்டுக் கொண்டிருந்தன. சில மீடியாக்களில் மரணச் செய்தி குறித்து சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வந்தன. நான் பிரபாகரனின் மிகச் சிறந்த நண்பன். இதனால், அவருடைய உயிரிழப்பு குறித்து அறிந்ததும் மிகவும் வருத்தமடைந்தேன்.

அவர் எனது பேச்சைக் கேட்டிருந்தால், அரசுடன் உடன்பாட்டுக்கு ஒத்து வந்திருந்தால் இது நடந்திருக்காது. இறுதிப் போரில் நடந்தவை தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் எல்லாமே கால தாமதமாகி விட்டது.

மே 10ம் தேதி வன்னிக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 400 அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து நான் அரசியல் பிரிவு தலைவர் நடேசனுடன் பேசினேன். ஆனால், ராணுவத் தாக்குதலை தடுக்க முடியும், 3வது தரப்பின் மூலமாக சமரசம் பேச முடியும் என அவர்கள் நம்பினர்.

நாங்களும் கூட பலருடன் பேசினோம். பல அமைப்புகளுடன் பேசினோம். ஐ.நாவுடன் கூட பேசினோம். சில ஏற்பாடுகளை செய்ய முயற்சித்தோம். ஆனால் எல்லாமே தோல்வியல் முடிந்தன. இது பிரபாகரன் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தாமதத்தால் ஏற்பட்டது. விரைந்து செயல்பட அவர் தவறி விட்டார்.

புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதியைப் பெற்று மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்த நீங்கள் சமீபத்தில் ஒரு என்ஜிஓ அமைப்பை உருவாக்கினீர்கள். அதற்கு என்ன பலன் கிடைத்துள்ளது?

வடக்கு-கிழக்கு மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சிக் கழகம் என்பது அதன் பெயர். இப்பிராந்தியத்தில் மறு சீரமைப்பு, புதுக் கட்டமைப்பு மற்றும் மறு குடியேற்ற நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இந்த அமைப்பு தயாராக உள்ளது.

இதன் தலைமை அலுவலகம், வவுனியா, வைரவபுதியன்குளத்தில் அமைந்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக இது பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. எங்களது மக்கள் குறிப்பாக குழந்தைகள் நலன் குறித்து நாங்கள் பெரிதும் அக்கறை காட்டுகிறோம்.

இந்தப் போரினால் மக்கள் பெரும் சோர்வடைந்து விட்டனர். எனவே அந்த பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும். அதில் எந்தவித அரசியலும் கலக்காமல், மனிதாபிமான நடவடிக்கை மட்டுமே மேலோங்கி நிற்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

ஒரு டாலரிலிருந்து எத்தனை டாலர் வரை வேண்டுமானாலும் நிதியாகத் தாருங்கள் என்று புலம் பெயர்ந்த தமிழர்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மாதாந்திர அடிப்படையில் இந்த நிதியை அவர்கள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த நிதி வசூலை மேற்கொள்வதற்கு வசதியாக சமீபத்தில் வவுனியாவில் உள்ள கமர்ஷியல் வங்கியில் ஒரு கணக்கையும் தொடங்கியுள்ளோம். (கணக்கு எண்ணையும் சொல்கிறார்).

எங்களது இமெயில் முகவரி- டுடூக்ச்ஃடூடீஙுக்ஷச்.ங்கூ/ சூசூசூ.டூடீஙுக்ஷச்.ங்கூ

மறு சீரமைப்பு, மறு கட்டுமான நடவடிக்கைகளில் உங்களுக்கு திருப்தி உள்ளதா?

நான் எதிர்பார்த்ததை விட இப்போது நிலைமை நன்றாகவே உள்ளது. மக்கள் நம்பிக்கையை கட்டமைப்பதில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றாலும் கூட, இந்த அரசு இதுவரை செய்துள்ளதை நான் பாராட்டுகிறேன்.

அரசையும், ஐ.நா. அமைப்புகளையும், என்ஜிஓக்களையும் தங்களது தேவைகளுக்காக தமிழ் மக்கள் முழுமையாக நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை விரைவாக செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

சமீபத்தில் நான் வடக்குக்குச் சென்றிருந்தபோது, பல நூறு மாணவர்களுக்கு தேர்வு எழுதக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பரீட்சை எழுத முடியுமா என்ற சந்தேகத்தில் அவர்கள் இருந்தனர்.

ஆனால் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் அது சாத்தியமாயிற்று. அதை அவர்களும் உணர்ந்துள்ளனர். எங்களுக்கு உதவ வாருங்கள் என்று தமிழ் மக்களிடமிருந்து எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.

சமீபத்தில் இரண்டு பள்ளிகளின் முதல்வர்கள் எங்களிடமிருந்து நிதியைப் பெற்று தமது பள்ளியின் ஏழை மாணவர்கள் தேர்வெழுதவும், கல்விக் கட்டணத்தை செலுத்தவும் உதவியுள்ளனர்.

இப்போது போர் முடிந்து விட்டது. எனவே வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். சமீபத்தில் கூட நாங்கள் வவுனியாவில் உள்ள சுந்தரலிங்கம் தமிழ் மகா வித்தியாலயாவுக்கு ரூ. 50,000 நிதியளித்தோம்.

அதிபர் ராஜபக்சே அரசுடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட முன் வருவார்கள் என நீங்கள் நம்புகிறீர்களா?

பல்வேறு சமுதாய மக்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை போக்கி, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிபர் ராஜபக்சே சீரிய வழியில் செயல்பட்டு வருகிறார். அவரது நடவடிக்கைகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவே உள்ளன.

போர் முடிந்த ஒரு வருட காலத்திற்குள், போரினால் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையினோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். முன்னாள் போராளிகள் பலருக்கு மறு வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச சமுதாயமும் கூட இலங்கை அரசின் முயற்சிகளுக்கு பெரும் துணையாக உள்ளது.

இவையெல்லாம் அதிபர் ராஜபக்சேவின் திறமையான நிர்வாகத்தால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அவரது அரசியல் தலைமையால்தான் இதை சாதிக்க முடிந்துள்ளது.

எனவே நடப்பு நிலையை புலம் பெயர்ந்த தமிழர்கள் உணர முனவர வேண்டும். விடுதலைப் புலிகளுக்குப் பிந்தையை நிலையை அவர்கள் அனுமானிக்க வேண்டும். புதிய சவால்களை சந்திக்க அவர்கள் தயாராக வேண்டும்.

கடந்த காலத்தில் நடந்ததை நினைத்துக் கொண்டு இப்போதும் அதே நினைவிலேயே நாம் இருக்கக் கூடாது. மறுசீரமைப்பு நடவடிக்கைளில் அனைவரும் இணைந்து தோள் கொடுக்க வேண்டும்.

மீடியாக்களும் விடுதலைப் புலிகளுக்குப் பிந்தையந நிலையைப் புரிந்து கொண்டு, ஆக்கப்பூர்வமாக செயல்பட முன்வர வேண்டும். எதிர்மறையாக எழுதுவதால் எந்தப் பயனும் எமது மக்களுக்கு ஏற்படப் போவதில்லை. எது பொருத்தமானதோ அதையே செய்ய வேண்டும்.

அமைதியை நிரந்தரப்படுத்துவதிலும், வளர்ச்சியிலும் மட்டுமே மீடியாக்கள் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

எப்போது முதன் முதலில் இலங்கையை விட்டு வெளியேறினீர்கள். அதன் பிறகு கடைசியாக இலங்கைக்கு எப்போது வந்தீர்கள்.?

1980ம் ஆண்டு பிரபாகரனுடன் நான் இந்தியாவுக்கு தப்பி ஓடினேன். என்னை ராணுவம் கைது செய்வதற்காக தேடியது. ராணுவத்தின் நடவடிக்கை தீவிரமாக இருந்ததால் நான் இலங்கை திரும்பவில்லை. அப்போது ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வந்த காரணத்தால், நாங்கள் ஒரு படகின் மூலம், வல்வெட்டித்துறையிலிருந்து இந்தியாவுக்கு சென்றோம்.

டியூஎல்எப் தலைவர் அமிர்தலிங்கம்தான் 70களில் என்னை பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அது 1976 என்று நினைக்கிறேன். அப்போது டெலோ மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு அமைப்புகள்தான் பெரிதான அமைப்புகளாக இருந்தன.

நான் யாழ்ப்பாணம் மகாராஜா கல்லூரியில் படித்தேன். பின்னர் எமது உரிமைகளுக்காகப் போராடுவதற்காக படிப்பை விட்டு விட்டேன். எங்களது உரிமைகளை தொடர்ந்து வந்த அரசுகள் புறக்கணித்ததாக நாங்கள் கருதியதால் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் இன்று எங்கள் முன்பு வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டிலும் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்ற நிலைதான் உள்ளது. இந்த அமைதி நிரந்தரமாக வேண்டும் என கருதுகிறோம்.

யாழ்ப்பாணம் மேயர் ஆல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்ததற்குப் பின்னர் அமைப்பின் அரசியல், ராணுவ கொள்கையாளர்கள், பிரபாகரனை அமைப்பிலிருந்து நீக்கினர். அவர் என்னிடம் வந்தார். அப்போது நான் சாதாரண மாணவன்தான். எனது அறையில் நான் பிரபாகரனுக்கு இடம் கொடுத்தேன். அவரைக் கொல்ல பலரும் முயன்றனர். டெலோ தலைவர் தங்கதுரையும் ஒருவர்.

(கேபி அளித்த இந்த ராணுவ முகாம் பேட்டி நாளை தொடரும்...)

கேபியை மன்னிக்க சட்டத்தில் இடமுண்டு-இலங்கை அரசு:

இதற்கிடையே, இலங்கை அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லா கேபி குறித்துக் கூறுகையில்,

எந்தவொரு குற்றவாளியையும் அரசுத் தரப்பு சாட்சியாக மாற்றி மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமுண்டு. கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இதற்கு விதிவிலக்கானவரல்ல.

இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும், சட்டத்திற்கு முரண்படாத வகையிலும் தமிழ் மக்களின் நலன் கருதி வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என்றார் அவர்.
மேலும் இங்கே தொடர்க...

வொய்ஸ் ஒப் ஏஸியா ஊடக நிறுவனம்மீதான தாக்குதலுக்கு புளொட் கண்டனம்


இலங்கையில் பிரபல வானொலி ஒலிபரப்பு நிறுவனமான வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்கின் சியத்த எப்.எம்., றியல் ரேடியோ, வெற்றி எப்.எம் ஆகியவற்றின் செய்திப்பிரிவுமீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை புளொட் வன்மையாகக் கண்டித்துள்ளது. இவ்வாறாக ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செயற்பாடானது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமென்று புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையானது ஊடகத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே நாம் கருதுகிறோம். கடந்த காலங்களில் இவ்வாறான பல விடயங்கள் நடந்தேறியுள்ளன. இத்தகைய மிலேட்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டது யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் தாக்குதலுக்கு இலக்கான வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க நிறுவனத்திற்கும், பணிப்பாளர், ஊழியர்கள் ஆகியோருக்கும் ஆழ்ந்த கவலைகளைக் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் புளொட் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி 77,500 பவுண்ஸ் நஷ்டஈடு

லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிகைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 2009 ஆம் ஆண்டு லண்டனில் வாழும் இலங்கை தமிழர்கள் பிரிட்டிஷ் பாராளுமன்ற வளாகத்தின் முன் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக பரமேஸ்வரன் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவர் ரகசியமாக பர்கரை சாப்பிட்டதாக லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் மற்றும் சன் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதற்கு எதிராக பரமேஸ்வரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் வியாழக்கிழமை லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சம்மந்தப்பட்ட இரு பத்திரிக்கைகளின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களும் தாங்கள் வெளியிட்ட செய்திக்கான ஆதாரங்கள் இல்லை என்று ஒப்புக் கொண்டார்கள். இது குறித்த மறுப்பை வெளியிடவும், பரமேஸ்வரனுக்கு 77,500 ஆயிரம் ஸ்டெர்லிங் பவுண்ட் நஷ்ட ஈடு தரவும் அந்த இரு பத்திரிகைகளும் ஒப்புக்கொண் டதாக பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மேக்னஸ் பாயிட் தெரிவித்தார்.

இந்த பத்திரிக்கைகளின் பொய்ச்செய்தி காரணமாக, கடந்த எட்டு மாதங்களாக தான் மிகுந்த அவமானங்களை சந்தித்ததாகவும் இந்த நிலையில் இந்த தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பரமேஸ்வரன் தெரிவித்தார்.

போராட்டத்தின் போது பல தமிழ் அமைப்புக்கள் பங்கேற்றாலும் தனக்கு தனிப்பட்ட முறையில் அவை உதவ முன்வரவில்லை என்றும், வெற்றி பெற்றால் சன்மானம் என்ற அடிப்படையிலேயே தான் வழக்கறிஞரை அமர்த்தி இந்த வழக்கை எதிர்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளைக்கொடி வழக்கின் 20 சாட்சியாளர்களையும் ஆஜர்படுத்துமாறு மேல்நீதிமன்றம் உத்தரவு









முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா மீதான வெள்ளைக்கொடி குற்றச்சாட்டு வழக்கில் பெயரிடப்பட்டுள்ள 20 சாட்சியாளர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் இதற்கான அழைப்பாணையினை அவர்களுக்கு அனுப்புமாறும் கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினர் என்பதனால் அவரது சிறப்புரிமைகளை பாதுகாக்குமாறும் அவர் பாராளுமன்றம் சென்று வருவதற்கு உரிய வசதிகளை செய்து கொண்டுக்குமாறும் மேல் நீதிமன்றம் இராணுவ அதிகாரிகள், மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் சிலர் வெள்ளைக்கொடியுடன் வந்த சந்தர்ப்பத்தில் அவர்களை இராணுவம் சுட்டுக் கொன்றது என்றும் அதற்கான உத்தரவு பாதுகாப்பின் அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்டதாகவும், ஜெனரல் சரத் பொன்சேகா சன்டே லீடர் பத்திரிகைகக்கு செவ்வி வழங்கியிருந்தாக குற்றம் சாட்டி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜயசுந்தர டபிள்யூ.எம். பீ.பி. வராவேவ மற்றும் சுல்பிகார் ரசீம் ஆகிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். இவருக்கு எதிராக இந்த வழக்கில் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரம் நேற்று ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் அவதானித்த நீதிபதிகள் குழு, தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் பிரகாரம் அதில் குறிப்பிடப்பட்டுள்ள 20 சாட்சியாளர்களையும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி மன்றில் ஆஜராக்குமாறும் அதற்கான அழைப்பானையினை அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. ஜெனரல் பொன்சேகா தரப்பில் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிப்பதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் குழு தெரிவித்தது.

இங்கு அரச தரப்பில் அஜரான பிரதி சட்டமா அதிபர் இந்த வழக்கிற்கு சாட்சிகளாக மூன்று இருவெட்டுக்கள் சமர்ப்பிக்க படவுள்ளதாகவும், தெரிவித்தார். பிரதிவாதியான ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் அஜரான சட்டத்தரணி சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரட்றிக்கா ஜேன்ஸுன் குறிப்புப் புத்தகம் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அத்துடன் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினர் என்பதனால் அவரை பாராளுமன்றம் சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன் அவரது சிறப்புரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான உத்தரவினை நீதிமன்றம் விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனையடுத்து பொன்சேகா பாராளுமன்றம் செல்வதற்கு உரிய வசதிகளை மேற்கொள்ளுமாறும் அவரது சிறப்புரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதிகள் குழு உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. வுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துமாறு ஜப்பான் இலங்கையிடம் வலியுறுத்தல்





அரசாங்க படைகளினால் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கும் இலங்கைக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஜப்பானிய வெளிநாட்டமைச்சர் கட்சூயா ஓகாடா அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் வலியுறுத்தியுள்ளார் என்று ஜப்பானிய கியோடோ செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் டோக்கியோவில் ஜப்பான் தேசிய பத்திரிகை சங்கத்தில் நேற்று உரையாற்றியபோது, இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டு என்றுமில்லாத அளவுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்குமிடையே பொருளாதார ஒத்துழைப்பை விருத்தி செய்ய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும் தொகையானோர் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலைமை, கடந்த வருடத்தில் புனர் நிர்மாண பணிகள் தொடர்பாக ஏற்பட்ட முன்னேற்றம் அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் ஆகியன பற்றி இரு அமைச்சர்களும் விளக்கி கூறினார்கள்.

ஜப்பான் இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு அதிபர் சுமிதக பூஜித தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இரண்டு இலங்கை அமைச்சர்களும் வர்ததகம், முதலீடு தொடர்பாக இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் காணப்படும் சாதகமான நிலைமைகளை ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு எடுத்து விளக்கினார்கள்.

இலங்கையின் புவியியல் அமைப்பு, இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனுமான பரஸ்பர வர்த்தக உடன்படிக்கைகள், இலங்கையின் சட்ட, அரசியல் யாப்பு பிரமாணங்களின் கீழ் ஏற்பட்டுள்ள வலுவான பாதுகாப்பு முதலீட்டு சபையினால் வழங்கப்படும் ஊக்குவிப்புக்கள், கிடைக்கக் கூடிய தனித்துவம் வாய்ந்த உயர்தர மனித வளங்கள் ஆகிய அம்சங்களை இரு அமைச்சர்களும் எடுத்துக் கூறினர்.

இலங்கையில் பணியாற்றிவரும் ஜப்பானிய தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஜப்பானிய அரங்கில் இரு அமைச்சர்களும் உரையாற்றினர். மிகவும் கஷ்டமான கால கட்டங்களில் ஜப்பானிய தன்னார்வ நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆற்றிய உதவி குறித்து அமைச்சர்கள் இருவரும் நன்றி தெரிவித்தனர்.

சொற்பொழிவுகளை அடுத்து இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போது தன்னார்வ நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு நடைமுறைசார்ந்த தீர்வுகள் காணப்பட்டன. சுமுக நிலையும் அமைதியும் தோன்றியுள்ளதை அடுத்து இலங்கையில் தங்கள் திட்டங்களை மேலும் விஸ்தரிக்க அவர்கள் விருப்பம் தெரிவித்தனர் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நிரந்தரமாக வெளியேறியோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்: பெப்ரல் அமைப்பு





யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நிரந்தரமாக வெளியேறியவர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்பட்டு முறையான வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்படவேண்டும் என்பதே பெவ்ரல் அமைப்பின் நோக்கமாகும். இதற்கு அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் ஊடகங்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுவரும் வாக்காளர் இடாப்பு பதிவு நடவடிக்கைகள் குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது:

2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன. அனைவரும் ஆர்வத்துடன் வாக்காளர் பதிவில் ஈடுபடவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். முக்கியமாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நிரந்தரமாக வெளியேறியவர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படவேண்டும். அந்த வகையில் சரியான வாக்காளர் இடாப்பு உருவாக்கப்படவேண்டும் என்றே கூறுகின்றோம்.

கடந்தகாலங்களில் அதிகமானோர் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நிர்நதரமாக வெளியேறிவிட்டனர். வேறு மாவட்டங்களுக்கு ஒரு பகுதியினர் வந்து அங்கு வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த ஒரு பகுதி மக்கள் புத்தளம் மாவட்டத்தில் உள்ளனர். இவர்களில் சிலர் தற்போது அங்கு நிரந்தரமாக குடியேறிவிட்டனர்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து அதிகமான மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். எனவே புதிய திருத்தம் அவசியமானதாகும். யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்களில் சுமார் மூன்று இலட்சம் பேர் நிரந்தரமாக அம்மாவட்டத்தைவிட்டு வெளியேறியுள்ளதாக ஒரு தகவல் கூறுகின்றது. ஆனால் அந்த தகவலை உறுதிபடுத்த முடியவில்லை. மேலும் நிரந்தரமாக சென்றவர்களின் எண்ணிக்கை தொடர்பான சரியான தகவல்கள் எங்கும் இல்லை. எனவே 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவின்போது இந்த விடயம் கவனத்திற்கொள்ளப்பட்டு புதிய இடாப்பு தயாரிக்கப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

ஒரு ஆரோக்கியமான நிலைமையின் கீழ் புதிய இடாப்பு வரவேண்டும். மேலும் 2011 ஆம் ஆண்டில் சனத்தொகை மதிப்பீடு இடம்பெறவுள்ளதாக தெரிகின்றது. அந்த சந்தர்ப்பம் எமக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்குவதாக அமையும்.
மேலும் இங்கே தொடர்க...

நளினி, முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது:







உயர் நீதிமன்றம் தண்டனை பெற்று வரும் நளினி, முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள்.

அவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். அம்மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

இதையடுத்து, வக்கில் கருப்பன் என்பவர் சுப்ரீம் நீதிமன்றத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுதாக்கல் செய்தார். அம்மனுவில் அவர் கூறி இருந்ததாவது:

ராஜீவ்காந்தி கொலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தனது இறுதி அறிக்கையை 1998ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் திகதி சமர்ப்பித்தது. அதில், ராஜீவ் கொலையில் சந்திராசாமியின் பங்கு, சி.ஐ.ஏ., மொசாத் போன்ற வெளிநாட்டு உளவு அமைப்புகளின் தொடர்பு ஆகியவை குறித்தும், சந்தேகத்துக்குரிய மேலும் 21 பேரின் தொடர்பு குறித்தும் மேற்கொண்டு விசாரணை நடத்துமாறு குறித்த குழு சிபாரிசு செய்திருந்தது.

அதன் அடிப்படையில், 1998ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி, புலனாய்வின் கீழ், பல்நோக்கு கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆணையம் விசாரணையை தொடங்கிய தகவலை, விசாரணை நீதிமன்றில் புலனாய்வு துறை தெரிவித்திருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டோரின் மனுக்களை விசாரித்து வந்த சுப்ரீம் நுதிமன்றிலும் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அந்த தகவல்களை நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் புலனாய்வு மறைத்ததால், நளினி, முருகன் உள்ளிட்ட 4 பேரும் தண்டிக்கப்பட்டனர்.

சந்திராசாமி மற்றும் 21 பேரின் தொடர்பு பற்றி விசாரிக்கப்படவில்லை. எனவே, குறைபாடுள்ள விசாரணையின் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இம்மனு, நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர், முகுந்தன் சர்மா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை என்று கூறி, நளினி உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய மறுத்து விட்டனர். மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள மனுதாரருக்கு அவர்கள் அனுமதி அளித்தனர்
மேலும் இங்கே தொடர்க...

29 ஜூலை, 2010

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக சமூக பாதுகாப்புச் சபை தெரிவித்தது.

சபையின் தலைவர் நிமல் அமரசிங்க இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை பிரஜைகளது நலன் கருதி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது தொடர்பாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளோம். அடுத்த வாரம் எமது குழு அங்கு செல்லவுள்ளது.

இவ் ஓய்வூதியத் திட்;டமானது 3 அம்சங்களை கொண்டமைந்தது. இதன் மூலம் 60 வயதின் பின் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக மாதாந்தம் வெளிநாட்டில் இருந்து வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு பணத்தை வைப்பிலிடுவதன் மூலம் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ளமுடியும்.

தற்போது 364 ஆயிரம் ஊழியர்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் அனைத்து ஊழியர்களையும் இத்திட்டத்தில் உள்வாங்கவுள்ளோம். அத்துடன் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களையும் இதில் உள்வாங்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

வடக்கின் அபிவிருத்திக்கு புலிகளின் நிதியைப் பயன்படுத்துவதில் தவறில்லை: கெஹெலிய

வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “எந்தவொரு குற்றவாளியையும் அரச தரப்பு சாட்சியாக மாற்றி மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமுண்டு. கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இதற்கு விதிவிலக்கானவரல்ல.

எமது நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் சட்டத்திற்கு முரண்படாத வகையிலும் தமிழ் மக்களின் நலன் கருதி வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை” எனத் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

வாகரையில் 70 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றம்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயளாளர் பிரிவில் இன்று காலை 70 குடும்பங்கள் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டன. கடந்த 2006 இராணுவ நடவடிக்கையின்போது போது இடம்பெயர்ந்து கதிரவெளி,சித்தாக்கேணி, பால்சேனை, வம்மிவெட்டுவான் போன்ற பகுதிகளில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் இவர்கள் தங்கியிருந்தனர். சுமார் 5 வருடங்களின் பின்னர் இவர்கள் தோணிதாண்டமடு கிராமத்தில் இன்று மீள்குடியமர்த்தப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கதிரவெளியிலிருந்து இன்று காலை புறப்பட்டுச்சென்ற இவர்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பிரதேசசெயவாளர், படையதிகாரிகள் உட்பட கலர் கலந்து கொண்டு வழியனுப்பிவைத்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று இரத்தினபுரி விஜயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று இரத்தினபுரிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரசவ வார்டினை திறந்து வைத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள சந்தைக் கட்டிடத் தொகுதியையும் திறந்து வைக்கவுள்ளார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு இரத்தினபுரி நகரில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ராஜபட்ச கேட்டுக்கொண்டதாலே இந்திய பிரதிநிதி இலங்கை வருகிறார்: கெகலிய ராம்புகவெல


இலங்கை அதிபர் ராஜபட்ச கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல என்று கூறினார்.

÷தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டதற்காக அல்ல என்றும் அவர் கூறினார்.

÷இலங்கையில் தமிழர் பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதிநிதி அனுப்பப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், இலங்கையில் உள்ள நிலவரத்தை அறிந்து கொள்ள வெளியுறவுத் துறை

அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுவார்.அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருவார் என்று பிரதமர் தெரிவித்திருந்ததாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு இந்திய அதிகாரி அனுப்பப்படுவது போன்று கூறப்பட்டிருந்தது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபட்ச தில்லி வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது, இந்தியப் பிரதிநிதி இலங்கை வந்து அகதி முகாம்களை பார்வையிடுவதை இலங்கை அரசு வரவேற்கிறது என்று தெரிவித்திருந்தார். ராஜபட்சவின் வேண்டுகோளை ஏற்றே இலங்கைக்கு இந்திய பிரதிநிதி அனுப்பப்படுகிறார் என்று இலங்கை அமைச்சக செய்தித் தொடர்பாளருமான ராம்புகவெல தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அனுமதிப்பத்திரமின்றி முகவர் நிறுவனங்கள் 5 சட்டவிரோத வேலைவாய்ப்பு நிலையங்கள் முற்றுகை

அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை நடத்திச் சென்ற 5 சட்ட விரோத நிலையங்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட பரிசோதனை பிரிவின் முற்றுகைக்கு ஆளாகின.

நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறான சட்ட விரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை சிலர் நடத்தி வருவதாக தமது அலுவலகத்துக்கு கிடைத்த தகவல்களையடுத்தே இவ்வாறான முற்றுகை நடத்தப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறியுள்ளார்.

ஹாலிஎல, நுவரெலிய வீதியில் இலக்கம் 174 இல் டிரான்ஸ் எயார் கல்ப் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த சட்ட விரோத வெளிநாட்டு வேலை முகவர் நிலையத்தில் இருந்து 99 கடவுச்சீட்டுகளுடன் ஒருவர்கைது செய்யப்பட்டார். பதுளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப் பட்டதையடுத்து அவருக்கு 05 இலட்சம் ரூபா சரீரப்பிணை விதிக்கப்பட்டது.

வெலிமடை பதுளை வீதி இலக்கம் 4 இல் டி.எம். கிப்ட் சென்டர் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத நிறுவனத்தில் இடம்பெற்ற முற்றுகையில் ஆவணங்களுடன் ஒருவர் கைது செய்யப் பட்டார். இவர் 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

மஹவ பிரதேசத்தில் நெலும்பத் வாவி வீதி அம்பன்பொல வடக்கில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டதுடன் பல ஆவணங்கள் பிடிபட்டன. அந்த நபர் 7 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்ச ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார்.

கொழும்பு மருதானை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்தப்பட்டுவந்த சட்ட விரோத நிறுவனம் முற்றுகையிடப் பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர். கொழும்பு மாளிகாவத்தை போதிராஜ மாவத்தை இலக்கம் 765/142 என்ற இலகத்தில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத முகவர் நிலையத்தில்ஒரு நபரும் ஆவணங்களும் கிடைத்தன.

மருதானை மஹிந்த ஹிமி மாவத்தை 93/1/1 என்ற இலக்கத்தில் நடத்தப்பட்டுவந்த சட்ட விரோத முகவர் நிலையம் முற்றுகையிடப்பட்டபோது 8 கடவுச் சீட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். மாளிகாகந்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு 20 ஆயிரம் ரூபா சரீரப்பிணை விதிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

மல்வத்த பீடாதிபதி, தியவதனநிலமே நேற்று வவுனியா விஜயம்



மல்வத்த பீடாதிபதியும், தலதா மாளிகையின் தியவதன நிலமேயும், நேற்று 28ம் திகதி வவுனியாவுக்கு விஜயம் செய்தனர்.

மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரும், தியவதன நிலமே நிலங்கதால பண்டாரவும் வவுனியா நகரில் நடைபெற்ற வைபவ மொன்றில் கலந்துகொள்வதற்காக வவுனி யாவுக்கு வருகை தந்தனர்.

வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் இப்பிரதேசத்தில் வாழுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார்கள்.

இந்த வைபவத்தில் கண்டி, வவுனியா அரச அதிபர்கள் வன்னி பிராந்திய பாதுகாப்பு படைகளில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

5 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு

இராணுவத்தின் ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் மெதவல தெரிவித்தார்.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் யூ. ஏ. பி. மெதவலவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார்.

பிரிகேடியர்களான 52ஆவது படையணியின் முன்னாள் கட்டளைத் தளபதி எஸ். ஏ. ஏ. எல். பெரேரா, ஈ. கே. ஜே. கே. விஜேசிறி, வி. யூ. பி. நாணயக்கார, எம். எச். எஸ். பி. பெரேரா ஆகிய நால்வரும் மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த் தப்பட்டுள்ளவர்களாவர்.
மேலும் இங்கே தொடர்க...

’தமிழ்க் கட்சிகள் அரங்கம்’ 9 கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு:கூட்டமைப்பை அழைக்க முடிவு

ஒன்பது தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் அரங்கம் நேற்று புளொட் அலுவலகத்தில் கூடி ஆராய்ந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப் பினையும் தமிழ் கட்சிகள் அரங்கத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஒன்பது கட்சிகளினதும் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட கடிதமொன்றை கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பது குறித்து இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் எம். பி. சிவாஜிலிங்கம் தெரி வித்தார்.

புளொட் அலுவலகத்தில் நேற்று நண்பகல் ஒரு மணியள வில் ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை நீடித்தது. உத்தியோக பூர்வமாக கடிதம் அனுப்பி வைப்பது மாத்திரமன்றி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம். பி. நாடு திரும்பியதும் தமிழ் கட்சிகள் அரங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து கடிதத்தின் பிரதியொன்றை அவரிடம் நேரடியாக கையளிப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ஸ்ரீ தரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சந்திரகாந்தன், ஈழ எதிரிகள் மறு வாழ்வுக் கழகத்தின் தலைவர் செ. சந்திரஹாசன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரி, ஈ. பி. டி. பி. அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவாநந்தா, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.

அமைப்பின் தலைவர் பத்மநாபா, டெலோ அமைப்பின் தலைவர் உதயராசா ஆகியோர் ஒன்பது பேரும் கையொப்பமிட்ட உத்தியோகபூர்வ கடிதமே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட விருப்பதாகவும் அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பொதுவான தீர்வு எடுப்பது குறித்து ஆராயப்பட்டிருப்பதுடன் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மட்டக்களப்பில் காலை 10 மணிக்கு நடத்துவதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாட்டை பாதுகாத்தவர் ஸ்ரீமாவோ ஜனாதிபதி


நாட்டையும் கட்சியையும் பாதுகாத்து நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக் குவதே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு நாம் செய்யும் கெளரவமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சகலதையும் சவாலாக ஏற்று நாட்டையும் நாட்டின் வளங்களையும் பாதுகாத்தவர் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க. அதனைக் கொள்கையாகக் கொண்டே அரசாங்கமும் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவியேற்ற ஐம்பதாவது ஞாபகார்த்த நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவிக்கையில், 50 வருடங்களுக்கு முன் ஸ்ரீமாவோ இந்த நாட்டின் பிரதமராகவும் உலகின் முதலாவது பெண் பிரதமராகவும் திகழ்ந்தார். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். அக்கட்சியைப் பாதுகாத்து பலப்படுத்தியது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவே. அந்த மகத்தான சேவையை என்றும் மறக்க முடியாது.

அவரது காலத்தில் அரச வளங்கள் பாதுகாக்கப்பட்டன. எமக்கான கோதுமை மா நிறுத்தப்பட்ட போதும் அவர் தாம் கொண்ட கொள்கையில் உறுதியாகவிருந்து அதற்கெதிராகப் போராடினார்.

இதனை முன்னுதாரணமாகக் கொண்டே நாமும் செயற்படுகிறோம். முழு உலகிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய போதும் அதனை எதிர்கொள்ளும் பலம் அவருக்கிருந்தது. அந்தப் பலமே எமக்கும் முன்னுதாரணமாகியது. நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்க அவர் எப்போதும் தயாராகவே இருந்தார்.

அரச வளங்கள் எதனையும் அவர் விற்கவில்லை. காப்புறுதிக் கூட்டுத்தாபனம், வங்கிகள் போன்றவற்றை பாதுகாத்ததுடன் பூகொட, துல்கிரிய, டயர் கூட்டுத்தாபனம் ஆகியன அவரது காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன. கட்சிக்காக, நாட்டுக்காக அவர் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகவிருந்தார். தமது கட்சியின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது போன்று ஏனைய கட்சிகளின் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்பதை அவர் வலியுறுத்தினார்.

இளைய பாராளுமன்ற உறுப்பினராக நான் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு உறுதுணையாக அவர் இருந்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை, அவரை முன்னுதாரண மாகக் கொண்டு நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதுவே அவருக்கு நாம் செலு த்தும் கெளரவமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தர்ஷிகாவின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைப்பு


வேலணை வைத்தியசாலை யின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தரான தர்ஷிகாவின் உடல் நேற்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி இரா. வசந்தசேனன், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, கைதடி கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

கடந்த 12ம் திகதி வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தர்ஷிகாவின் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவத்துக்கு வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் காரணமென தர்ஷிகாவின் குடும்பத்தினர்
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணம் அதிகரிப்பு அமைச்சர் முரளியுடனான பேச்சில் உலக உணவுத்திட்டம் இணக்கம்




இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிக்க உள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் நிவாநயகமூர்த்தி முரளிதரன் கூறினார். உலக உணவுத் திட்டத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதோடு இதனை அதிகரிக்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். உலக உணவுத் திட்ட வதிவிடப் பிரதிநிதி ஆத்நாத் கானுக்கும் பிரதி அமைச்சருக்கு மிடையில் அமைச்சில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு, மா, சீனி, மரக்கறி எண்ணெய் உப்பு என்பன வழங்கப்படுகிறது. பருப்பு, மரக்கறி எண்ணெய், மா என்பன அமெரிக்காவில் இருந்தும் சீனி, அரிசி, உப்பு என்பன அரபு நாடுகளில் இருந்தும் தருவிக்கப்படுகிறது. இவற்றை சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் கேள்வி மனுக்கோரி குறைந்த விலையில் பெற்றபின்னர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிப்பதாக உலக உணவுத் திட்ட பிரதிநிதி கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

2011 வரவு - செலவு திட்ட தயாரிப்பு: சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்ய தொழிற்சங்க குழு



2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து நேற்று (28) ஆலோசனை நடத்தினார்.

வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு பிரேரிக்கப்படுவதற்கு முன்னதாக ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நிவர்த்திக்க வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஏழுபேர் கொண்ட குழுவொன்றை உடனடியாக நியமித்தார். அதேநேரம், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக அறிக்கையினைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அந்தக் குழுவைக் கேட்டுக்கொண்டார்.

அலரி மாளிகையில் நேற்றுக் காலை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட ஆலோச னைக் கூட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து அரச மற்றும் தனியார் துறை தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.

வரவு செலவுத் திட்ட யோசனைகள் மற்றும் தொழிற்சங்கப் பிணக்குகள் தொடர்பாக நேற்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், சம்பள உயர்வு தொடர்பாக ஆலோசனைகளை முன்வைத்தனர்.

அதற்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, என்னதான் சம்பள உயர்வு வழங்கினாலும் சம்பள முரண்பாடு நிலவுவதன் காரணமாக சாதகமான நிலை யைக் காண முடியாதுள்ளதென்றும், ஆகவே, முதலில் சம்பள முரண்பாட்டை நீக்க வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இதற்கான பரிந்துரைகளை முன்வைப்பத ற்காக உடனடியாகவே குழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார். மலையகப் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் நேற்றைய கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

பெருந்தோட்டப் பகுதிகளின் பிரச்சினைக ளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் ஜனாதிபதி உறுதியளித்தார். தொழிற்சங்கத் தலைவர்களிடம் ஆலோசனை பெறாமல் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதில்லை என்றும் அவர்களிடம் ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதியின் இந்தத் தூரநோக்குச் சிந்தனைச் செயற்பாடுகளைத் தொழிற் சங்கத் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டினர். நாடு சுதந்திரமடைந்த காலப் பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒரு தலைவர் இருந்தால் நாட்டில் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இவர் ஜனாதிபதியாக இருக்கும் போது அரசியலில் ஈடுபட்டிருப்பது பெரும் பாக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்ட
மேலும் இங்கே தொடர்க...

28 ஜூலை, 2010

தமிழ்க் கட்சிகள் கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை



ஸ்லைடு காட்சியில் tf1.jpg -ஐ காண்பிக்கவும்
மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுபிற்பகல் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான ந.குமரகுருபரன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலர் தி.சிறீதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும், இக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும்; இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இதன்போது தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் துயரங்களையும், அவலங்களையும் கருத்திற்கொண்டு தமிழ்பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் இணைந்து செயற்பட வேண்டுமென்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது தமிழ்க் கட்சிகள் அனைத்தினது கடமையென்றும், இந்தவகையில் நீண்டகால பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், உடனடியாக எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஆக்கபூர்வமாக உதவுவதற்கும் தமிழ்பேசும் அரசியல் சக்திகள் ஒரு கருத்தொருமைப்பாட்டுக்கு வரவேண்டுமென்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும்; ஒருமித்த குரலில் தெரிவித்தனர். இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் கலந்துரையாடி ஒருமித்த நிலைப்பாட்டை அடைய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இதுவிடயமான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துகொள்ளச் செய்வதற்காக, கூட்டத்தில் பங்கேற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதமொன்றையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதில்லையென மூன்று கட்சிகள் தீர்மானம்- வவுனியா நகரசபையின் மாதாந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் நகரசபையின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக 29விடயங்களை முன்வைத்து கையெழுத்திட்டு வவுனியா நகரசபை தலைவர், உபதலைவர், செயலாளர் ஆகியோர்க்கு எதிராக அறிக்கையொன்றை சபையில் சமர்ப்பித்தனர். குறித்த விடயங்கள் தொடர்பாக சரியான விளக்கம் தந்தால் கடந்தகாலங்கள்போல் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் இல்லையேல் ஒத்துழைப்புக்களை வழங்க மாட்டோமென்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக எடுத்த முடிவின்படி இனிமேல் நகரசபை செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென்று தீர்மானிக்கப்பட்டது. இதன்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.



ஸ்லைடு காட்சியில் tf1.jpg -ஐ காண்பிக்கவும்

ஸ்லைடு காட்சியில் tf2.jpg -ஐ காண்பிக்கவும்
ஸ்லைடு காட்சியில் tf3.jpg -ஐ காண்பிக்கவும்

ஸ்லைடு காட்சியில் tf4.jpg -ஐ காண்பிக்கவும்








மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்







அமெரிக்காவின் வடக்கு புளோரிடாவை சேர்ந்தவர் கிளேடன் ஸ்கல்ட்ஷ். இவர் ஜேக்சன்வில்லா கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை சுறாமீன் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

சுறா கடித்ததால் தாடை மற்றும் கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

உயிர் பிழைத்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. அவை தவிர அவரது உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு 300 தையல்கள் போடப்பட்டன.

மிகப்பெரிய ஆபத்தில் இருந்து நான் பிழைத்தது கடவுள் புண்ணியம் என்று கிளேடன் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஏ-9 வீதியில்இரு மருங்கிலும் பனைமரத்து விதை நடுவதற்குத் திட்டம்





முகமாலை முதல் வவுனியா வரையுள்ள ஏ – 9 வீதியின் இரு மருங்கிலும் பனம் விதை நடப்படவுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

ஐந்து லட்சம் பனைவிதை நடுகைத் திட்டத்தின் ஒரு கட்டமாகவே ஏ – 9 பாதையின் இரு மருங்கிலும் பனை விதைகள் நடப்படவுள்ளதுடன் வீதிகளின் இரு மருங்கில் உள்ள வெறும் காணிகள் மற்றும் பாடசாலைகளின் மைதானங்களைச் சுற்றியும் விதைக்கப்படவுள்ளன. யுத்த காலங்களில் பெருமளவான பனை மரங்கள் அழிக்கப்பட்டமையும், அத்துடன் முன்னர் திட்டமிடாத முறையில் பனம் விதைகள் விதைக்கப்பட்டமையினால் அம்மரங்கள் அழிக்கப்பட்டமைக்காகவும் இவ் விதைகள் விதைக்கப்படுவதாக சபை தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நித்யானந்தா ஆண்மையற்றவர் எனக் கூறவில்லை?

பொலிஸ் விசாரணைகளில் நித்யானந்தா ஆண்மையற்றவர் எனக் கூறவில்லை. யாரோ தவறாக இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என செக்ஸ் சர்ச்சைக்கு உள்ளான நித்யானந்தாவின் சீடர் நித்யஞானானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நித்யானந்தா குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “ரஞ்சிதா ஆசிரமத்திற்கு வந்தால், நான் வாயில் காவலனாக இருந்தால் உள்ளே அனுமதிப்பேன். ரஞ்சிதாவை நித்யானந்தா அனுமதிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். நித்யானந்தா பிரச்னைக்கு காரணமானவர்கள் யார் என்றும், யார், யார் மீது வழக்கு தொடரப் போகிறோம் என்றும் விரைவில் தெரிவிப்போம்.

நேற்று தனியார் "டிவி'யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளார்.

தான் ஆண்மையற்றவர் என்றும் அதனால் செக்ஸில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும் நித்யானந்தா கூறியதாக ஏற்கனவே வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நித்யானந்தாவின் சீடர் இப்படியொரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

நுகர்வோர் அதிகார சபைக்கு இம்மாத வருமானம் 26,85,500 ரூபா

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச் சாட்டுக்காக இம்மாதம் 1ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 26 லட்சத்து 85ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைப்பட்டியல்களை காட்சிப்படுத்தாமை, சட்டத்துக்கு முரணான வகையில் பொருட்களை விற்பனை செய்தமை, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக இந்த அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் நுகர்வோர் அதிகார சபை சோதனைகளை நடத்தியுள்ளது. அத்துடன் ஜுலை மாதத்தில் ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளைக் கொடி விவகார விசாரணை: நாளை ஜெனரலுக்கு அழைப்பு


ஜெனரல் சரத் பொன்சேகா, சண்டே லீடர் ஊடகவியலாளரான பெட்ரிகா ஜேன்சிடம் தெரிவித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த புலி உறுப்பினர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சுட்டுக் கொள்ளுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா சண்டே லீடருக்கு தெரிவித்தமை தொடர்பாக ஆராய்வதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

சரக்கு விமானம் தீப்பிடித்தது






ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா விமான நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று, ரியாத் விமான நிலையத்தில் நேற்று இறங்கும் போது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதில், விமானம் முழுவதும் நாசமடைந்தது. விமானிகள் இரண்டு பேரும் தப்பித்து விட்டனர். ஜெர்மனியைச் சேர்ந்தது லுப்தான்சா விமான நிறுவனம். இந்நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று, ரியாத் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது. தரையிறங்கும் போதே அதில் திடீரென தீப்பிடித்தது. தரையிறங்கிய பின்னர் தீ மளமளவென்று பரவி, விமானம் இரண்டாக உடைந்தது. இச்சம்பவத்தில் விமானியும் துணை விமானியும் காயங்களுடன் தப்பித்தனர். அவர்கள் இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையப் பணியாளர்கள் அவசரமாகத் திரண்டு விமானத் தீயை அணைத்தனர். எனினும் விமானம் முற்றிலும் நாசமானது.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானில் விமான விபத்து : 152 பேர் பலி ?






இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டில் இருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் ப்ளூ விமானம் இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. . மர்கலா மலைப் பகுதியில் விமான வந்த போது விபத்து நடந்துள்ளது. மழை மற்றும் கடும் மேகமூட்டம் காரணமாக விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. மீட்புக்குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. சிறப்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் சற்று சுணக்கத்துடன் காணப்படுகிறது. விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கராச்சி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும்: பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன், ஜூலை 27: மும்பை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

மும்பை தாக்குதல் வழக்கில் உறுதியான நடவடிக்கை எடுத்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை பாகிஸ்தான் உடனடியாகச் செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் பாகிஸ்தானுக்கு இவ்விதம் நெருக்குதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அடைக்கலமாகியுள்ள பயங்கரவாதிகளால் மனித சமுதாயத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட இன்னும் ஏராளமான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுப்பது அவசியம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதும், மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து நெருக்குதல் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹிலாரியும் நெருக்குதல்... சமீபத்தில் பாகிஸ்தான் வருகை தந்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், மும்பை தாக்குதல் விவகாரத்தை பாகிஸ்தான் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு பக்கபலமாக உள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அம்பலமாகியுள்ளது.

இதனால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது.

அல்-காய்தா, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஐஎஸ்ஐ-க்கும் தொடர்பிருப்பதாக இந்தியா பல தடவை குற்றம்சுமத்தியதை அமெரிக்கா முழுமையாக நம்பியிருக்க வாய்ப்பில்லை.

ஆனால் ஐஎஸ்ஐ-யின் செயல்பாடு குறித்து விக்கிலீக்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்ட தகவலால் இந்தியாவின் குற்றச்சாட்டு மீது அமெரிக்காவுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இதனால் பயங்கரவாதத்துக்கு எதிரான விஷயத்தில் பாகிஸ்தான் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருக்கக்கூடாது என்ற ரீதியிலேயே அமெரிக்காவின் செயல்பாடு இனிமேல் அமையும்.

மும்பை தாக்குதல் விஷயத்தையும் அமெரிக்கா இனிமேல் முன்பைப் போல் அணுகாது. பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை அளிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

தலிபானுடனான ஐஎஸ்ஐ தொடர்பு இருப்பதை அமெரிக்கா ஏற்காது: அமெரிக்க தலைமை ராணுவ தளபதி மைக் முல்லன்

டையே தொடர்பு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க தலைமை ராணுவ தளபதி மைக் முல்லன் கூறினார்.

தலிபான் அமைப்புடனும், அல் காய்தா அமைப்புடனும் ஐஎஸ்ஐக்கு உள்ள தொடர்பு நீடிப்பதாக வெளியாக உள்ள செய்தி கவலையடையச் செய்துள்ளது என்றார் அவர்.

இந்த விஷயத்தில் பாகிஸ்தான் இன்னும் அதிகம் செய்ய வேண்டி உள்ளது. பாகிஸ்தானின் இப்போதைய நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு செயலர் ராபர்ட் கிப்ஸ் கூறினார்.

தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவுவதாக போலந்து ரகசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 92 ஆயிரம் பக்கங்கள் கொண்ட புலனாய்வு அமைப்பின் ரகசிய ஆவணம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

போலந்தின் ரகசிய ஆவணம், 2004-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ செயல்பாடு குறித்து விரிவாக விளக்கியுள்ளது. இந்த கால கட்டத்தில் இப்போது பாகிஸ்தானின் ராணுவ தலைவராக உள்ள அஷ்பக் பர்வேஸ் கியானிதான் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக இருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

35,333 பேர் மாத்திரமே மீள்குடியேற எஞ்சியுள்ளனர் அமைச்சர் கெஹலிய

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களில் இன்னமும் 35,333 பேர் மாத்திரமே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கும் அமைச்சரவைக்குமான பேச்சாளர்- தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாளாந்தம் சுமார் 700 பேர் சொந்த வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் பதிவு செய்யப்பட்ட தொகை 267,393 எனக் குறிப்பிட்ட அமைச்சர், இவர்களுள் முழுமையாக 2,30,000 பேர் ஒரு வருடகாலத்தினுள் மீள்குடியமர்த்தப்பட்டு ள்ளதாக குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் வழங்கிய அமைச்சர் ரம்புக்வெல்ல, “15 இலட்சத்திற்கும் அதிக மான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் மக்களை மீள்குடியமர்த்துவதில் சட்டச் சிக்கல் உள்ளது. மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உள்ளதாக ஐ.நா. சான்றுபடுத்தாமல் குடியமர்த்த முடியாது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எமக்கு உதவி வழங்க முன்வந்தன. என்றாலும் அது தாமதம் ஏற்பட்டதால், அரசாங்கமே 860 மில்லியன் ரூபாவை செலவு செய்து கண்ணி வெடிகளை அகற்றியது. இலங்கை இராணுவம் 275,000 கண்ணிகளை அகற்றியுள்ளது. இராணுவத்தின் துரித நடவடிக்கையால் இது சாத்தியமாகியுள்ளது” என்றும் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு மீள் குடியேற்ற நிலவரங்களை கண்டறிதல்: இந்திய பிரதிநிதிகளின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு



வடக்கில் மக்களின் மீள் குடியேற்ற நிலவரங்களைக் கண்டறிந்துகொள்வதற்காக இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை வருவதை அரசாங்கம் வரவேற்றுள்ளது.

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் பிரதிநிதியொருவரை அனுப்பி வைத்தால், அது நல்லதொரு விடயமாகுமென்று பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

‘‘இலங்கை விடயத்தில் இந்தியா நிதானமாகவே செயற்படும். பருப்பை போடுவதைப்போல் பலவந்தமாக செயற்படாது. இரு நாடுகளுக்குமான உறவு அந்தளவுக்குச் சிறப்பாக உள்ளது” என்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.

இந்திய மத்திய அமைச்சின் அதிகாரி யொருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகத் தமிழக முதல்வருக்குப் பிரதமர் மன்மோகன் அறிவித்திருக் கிறாரென்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியைச் சந்தித்துள்ளமை பற்றியும் அரசின் கருத்து யாதென செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அந்தக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்தோம். அப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் சந்தித்தோம். அவர்களை, இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் கண்டறியுமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். அதில் அரசியல் நோக்கம் கிடையாது. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுத்த அழைப்பு அரசியல் நோக்கம் கொண்டது” என்றார்
மேலும் இங்கே தொடர்க...

இ. போ. ச. வின் நாளாந்த வருமானம் ரூ. 4 கோடிக்கு அதிகம்



மே மாதம் முதல் இலங்கை போக்குவரத்து சபை ஈட்டுவரும் நாளாந்த வருமானம் அதிகரித்து வருவதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்தார்.

இ. போ. ச. வை முன்னேற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்தே இ. போ. ச. கூடுதல் வருமானம் ஈட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.

மே மாதம் இ. போ. ச. வின் ஒருநாள் வருமானம் 3 கோடி 87 இலட்சத்து 81 ஆயிரத்து 102 ரூபா. ஜுன் மாதமாகும் போது அந்தத் தொகை 4 கோடி 9 இலட்சத்து 68 ஆயிரத்து 896 ரூபாவாக அதிகரித்தது.

தற்பொழுது 4 கோடி 17 இலட்சத்து 69 ஆயிரத்து 131 ரூபா வருமானம் ஈட்டப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு புத்திஜீவிகளும் ஆய்வுகளில் ஈடுபடும் சூழல் பயங்கரவாத ஒழிப்பே காரணம் - ஜனாதிபதி


பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருப்பதன் பயனாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் புத்திஜீவிகளும் சுதந்திரமாக ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொழில் நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் கீழுள்ள தேசிய ஆராய்ச்சி சபை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வுக்கு இந்நாட்டில் உயர்ந்த மதிப்புள்ளது. இதனை யாவரும் அறிவர்.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்த இலங்கை ஆராய்ச்சியாளர்களும் இவ்வைபவத்தின் நிமித்தம் இங்கு வருகை தந்திருப்பதாக அறிகிறேன். இது இவ்வைபவத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. தாயகத்தின் மீது இவ்வாறு பற்றுக் கொண்டிருப்பவர்களை நாம் பாராட்டியாக வேண்டும். அதேநேரம் ஆய்வுகளை மேற்கொண்டு இன்று கெளரவம் பெறும் சகலருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். இது அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் பாரிய பரிசோதனை என்றால் மிகையாகாது. முதலாவது பரிசோதனையில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளிநாட்டிலிருந்து இங்கு வருகை தந்த கல்வியியலாளர் ஒருவர், இப்போது நாட்டின் உண்மையான சுதந்திரம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். இது எமக்கு ஒரு வகையில் பெருமையாகும்.

அறிவை தடைசெய்யவோ, மூழ்கடிக்கவோ முடியாது. இதனை நாமறிவோம். சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சிறந்த முறையில் உணர்ந்தவர்கள் ஆராய்ச்சியாளர்கள் தான் என நான் நம்புகிறேன். அறிவுத்துறையின் மேம்பாட்டுக்காக ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றை சுதந்திரமாக வெளியிடுவதற்கும் உரிமை இருப்பது அவசியம் எனக் கருதுகின்றேன். இதற்கு இப்போது எமக்கு சுதந்திர சூழல் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

சுதந்திர இலங்கை மீது நாம் பாரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றோம். அதனை நிறைவேற்ற வேண்டியது பெரும் பொறுப்பாகும். சுதந்திர இலங்கையைக் கட்டியெழுப்பிய பின்னர் இந்நாட்டில் பிறக்கும் விஞ்ஞானிகளுக்கு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

சில ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக இருந்த நிறுவனங்கள் இப்போது ஆஸ்பத்திரிகளுக்கு அறிக்கைகள் வழங்கும் நிறுவனங்களாக மாறியுள்ளன. இருப்பினும் அந்நிறுவனங்கள் பாரிய எதிர்பார்ப்புக்களுடனேயே ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலைமை குறித்து நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க, தேசிய ஆராய்ச்சி சபைத் தலைவர் பேராசிரியர் எரிக்கருநாயக்கா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்தோரை சந்திப்பதில் எம்.பிக்களுக்கு தடை இல்லை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு


இடம்பெயர்ந்த மக்கள் தங்கியு ள்ள முகாம்களுக்கும் மீளக்குடிய மர்ந்துள்ள பிரதேசங்களுக்கும் மக் கள் பிரதிநிதிகள் செல்வதற்கு விதிக் கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனை த்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் தற்போது எந்தத் தடையும் இன்றி சுதந்திரமாக சென்று வர முடியுமென்று பாது காப்பு விவகாரங்கள் மற்றும் அமை ச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27! நடைபெற்ற செய்தியாளர் மாநாட் டில் அமைச்சர் தகவல் தருகையில், நலன்புரி முகாம்களுக்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களின் மனங் களைக் குழப்பி திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அத னால், கட்டுப்பாடு விதிக்க வேண் டிய நிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் பாராளுமன்ற த்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. தற் போது அந்தக் கட்டுப்பாடு முற் றாகத் தளர்த்தப்பட்டுள்ளது. எவரும் சென்று வரலாம்’, என்று அறிவித் தார்.

ஆனால், அரச சார்பற்ற நிறுவனங் கள் அங்கு செல்வது மட்டுப்படுத்தப் பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட் டார். முன்பு அந்தப் பகுதிகளுக்குச் சொன்றவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலை உருவாக்கினார்கள்.

அதனால், சில வரையறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாக கூறிய அவர், தற்போது அவர்கள் வெறும் அவதானிப்பாளர்களாகச் சென்று வந்து அறிக்கைகளை வெளி யிட மாத்திரம் முடியாது. மீள் குடியேற்றத்திற்கான திட்டங்களுக் குப் பங்களிப்புச் செய்ய வேண்டும். மீள் குடியேற்ற அமைச்சில் இதற் கென பல்வேறு திட்டங்களும், பிரேர ணைகளும் உண்டு.

எனவே அங்கு சென்று விரும்பியவாறு உதவியைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

அதன டிப்படையிலேயே அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான அனுமதி வழங்கப்படும் “அவர்களின் கோணத்தில் அறிக்கை வெளியிட முடியாது” என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வரி ஏய்ப்பு செய்ய ரூ.1 கோடியை கல்லறையில் மறைத்து வைத்த வியாபாரி

அரசாங்கத்தை வரி ஏய்ப்பு செய்ய    ரூ.1 கோடியை கல்லறையில்    மறைத்து வைத்த வியாபாரிஏமாற்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக தாங்கள் சம்பாதித்த பணத்தை பல வழிகளில் மறைத்து வருவதை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்த பணத்தை தனது அத்தையின் கல்லறையில் மறைத்து இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் லண்டனை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்தது வருமானவரி துறையினருக்கு தெரிய வந்தது. எனவே அந்த நபரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, அவர் தான் வரி ஏய்ப்பு மோசடி செய்த 1 கோடி ரூபாயை தனது அத்தையின் கல்லறையில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். அந்த கல்லறை அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ளது.

எனவே தேவாலயத்தின் பாதிரியாரின் அனுமதி பெற்று அந்த கல்லறையை வருமானவரித்துறை இன்ஸ் பெக்டர்கள் தோண்டினர். அங்கு அவர் வரி ஏய்ப்பு செய்த பணம் இருந்தது. அத்துடன் அவர் மறைத்து வைத்திருந்த ரூ.35 லட்சம் மதிப்பு பங்கு சந்தை ஆவணங்களும் சிக்கியது.

விசாரணை நடத்தியதில் 20 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த பணத்தை அவர் கல்லறையில் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இங்கிலாந்தில் வரி ஏய்ப்பு செய்வது பெரிய குற்றம். இது கண்டுபிடிக்கப்பட்டதால் கூடுதலாக அபராத பணம் செலுத்த வேண்டியது இருக்கும் என வருமான வரித்துறை அதிகாரி டாவ்ஹார்னெட் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

27 ஜூலை, 2010

விண்வெளியில் பூமியை போன்று 140 கிரகங்கள்





விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத் திரங்கள் குறித்து அமெரிக் காவின் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிநவீன கெப்லர் விண்வெளி டெலஸ்கோப் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் விண்வெளியில் மறைந்து கிடக்கும் 706 புதிய கிரகங்களையும், 5 புதிய சூரிய மண்டலத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், தொடர்ந்து ஊடுருவி ஆராய்ச்சி செய்து பார்த்தபோது பூமியை போன்று 140 புதிய கிரகங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இங்கு பூமியை போன்று பாறைகள் நிலம் மற்றும் தண்ணீர் உள்ளன.

எனவே, இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கடந்த 6 வாரத்தில் கெப்லர் விண்வெளி டெலஸ் கோப் இந்த அதிசயங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து, பூமியை போன்று உள்ள கிரகங்களில் உயிர் வாழும் சாத்தியம் உள்ளதா? என கெப்லர் விண்வெளி டெலஸ் கோப் மூலம் ஆய்வு மேற் கொள்ளப்பட உள்ளது என பேராசிரியரும், விண்வெளி ஆராய்ச்சியாளருமான டிமிதர் சசெல்லோவ் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

டெஸ்ட் கிரிக்கெட்: 2வது நாள் ஆட்டம் முடிந்தது- இந்தியா முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்; இலங்கை 642 குவித்து டிக்ளேர்


.



இந்தியா- இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. “டாஸ்” வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க நாளில் இலங்கை ஆதிக்கம் செலுத்தியது. பரணவிதனா, சங்ககரா சதம் அடித்தனர். இந்தியாவின் பந்து வீச்சு மீண்டும் எடுபடவில்லை.

நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 2 விக்கெ இழப்புக்கு 312 ரன் எடுத்து இருந்தது. சங்ககரா 130 ரன்னுடனும், ஜெயவர்த்தனே 13 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள்.

சங்ககராவும், ஜெயவர்த்தனேயும் இந்திய பந்து வீச்சாளர்களை விளாசி தள்ளி ரன் குவித்தனர்.

கேப்டன் சங்ககரா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். 304 பந்துகளில் 27 பவுண்டரியுடன் அவர் 200 ரன்னை தொட்டார். இது அவரது 7-வது இரட்டை சதம் ஆகும்.

இதேபோல் மறுமுனையில் இருந்து ஜெயவர்த்தனேயும் பொறுப்புடன் ஆடினார். மதிய உணவு இடைவேளை வரை இந்திய பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் போனது மிகுந்த பரிதாபமே.

சங்ககரா, ஜெயவர்த்த னேவின் அதிரடியான ஆட்டத்தால் இலங்கை அணி ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்தது.

மதிய உணவு இடை வேளையின்போது இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 457 ரன் குவித்து இருந்தது. சங்ககரா 214 ரன்களிலும், ஜெயவர்த்தனே 71 ரன்னிலும் ஆட்டம் இருக்காமல் இருந்தார்.மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை ஷேவாக் பிரித்தார்.

சங்ககரா 219 ரன்னில் “அவுட்” ஆனார். அவர் 335 பந்துகளில் 29 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். 3-வது விக்கெட் ஜோடி 393 ரன் எடுத்தது.

சங்ககரா ஆட்டம் இழந்தபோது இலங்கை அணியின் ஸ்கோர் 466ஆக இருந்தது. ஜெயவர்த்தனே 80 ரன்னில் இருந்தார்.

அடுத்து ஜெயவர்த்தனேயுடன் சமரவீரா ஜோடிசேர்ந்தார். இருவரும் இந்திய பந்து வீச்சை துவசம் செய்தனர். ஜெயவர்த்தனே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

அவரைத் தொடர்ந்து சமரவீரா அரைசதம் அடித்தார். இதனால் இலங்கை அணியில் ஸ்கோர் 600 ரன்னை நோக்கி சென்றது. சதம் அடித்த ஜெயவர்த்தனே அதிரடியாக விளையாடினார். அவரும் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 174 ரன்னில் ஹர்பஜன் பந்தில் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்பிற்கு 642 ரன்னுடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சமரவீரா 76 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தார்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. சேவாக் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள். இருவரும் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.

இதனால் இந்தியா 8 ஓவரில் 50 ரன்னை கடந்தது. சிறப்பாக விளையாடி சேவாக் அரைசதம் அடித்தார். அவர் 50 பந்து சந்தித்து 9 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.

அப்போது இந்தியாவின் ஸ்கோர் 79 ரன்னாக இருந்தது. இந்தியாவின் ஸ்கோர் 95 ரன்னாக இருக்கும்போது 2வது நாள் ஆட்டம் முடிந்தது, ஆட்ட இறுதியில் சேவாக் 64 ரன்னுடனும், விஜய் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தியா நாளை தொடர்ந்து விளையாடும்.
மேலும் இங்கே தொடர்க...

பதினேழு தடவைகள் பிடியாணை; நான்கு நீதிமன்றங்களால் தேடப்பட்ட பெண் கைது!



பதினேழு முறை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் நேற்று (26ம் திகதி) மடக்கிப் பிடித்துள்ளனர்.

இப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நாட்டின் பல பகுதிகளிலும் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டவராவார். இவர் மீது கண்டி, பேலியாகொடை, ராகமை, புதுக்கடை ஆகிய நீதிமன்றங்களே பிடியாணை பிறப்பித்துள்ளன. இப்பெண் கைது செய்யப்பட்ட சமயம் அவரிடமிருந்து 22 போலி விசாக்கள், 15 போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகங்களின் அனுமதிப் பத்திரப் புகைப்படப் பிரதிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

தனியார் பஸ் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது


தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டது.

மேல் மாகாண தனியார் பஸ்களிடம் இருந்து அறவிடப்படும் பதிவுக் கட்டணங் கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்து இன்று நள்ளிரவு முதல் வேலை பகிஷ்க ரிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டிருந்தது. மாதாந்தப் பதிவுக் கட்டணத்தை ஆயிரம் ரூபாவாகவும் வருடாந்த பதிவுக் கட்டணத்தை 5 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்க மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்திருந்தது.

அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையையடுத்து மாதாந்த பதிவுக் கட்டணத்தை 100 ரூபாவினாலும் வருடாந் தப் பதிவுக் கட்டணத்தை 500 ரூபாவினாலும் உயர்த்த முடிவு காணப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம்



நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறை வேற்றும் வகையிலேயே அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் இறைமை, பாதுகாப்பு, மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இம்மாற்றம் ஏற்படுத் தப்படுமென தெரிவித்த ஜனாதிபதி, எவரதும் தனிப்பட்ட விருப்பு வெறுப் புக்கேற்ப இம்மாற்றம் அமையாது எனவும் தெரிவித்தார்.

அதேவேளை அரச சார்பற்ற அமைப்புக்கள் நாட்டைத் துண்டாடுவதற்கு உடன்படிக்கை மேற்கொண்டோரின் விருப்பத் திற்கேற்ப அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஹக்மன பிரதேச சபை கட்டடத் திறப்பு விழாவும் ஹக்மன நகர சபைக் கட்டடத் திற்கான அடிக்கல் நடும் வைபவமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று நடைபெற்ற, நகர சபைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்து அதனை யொட்டிய பொதுக் கூட்டத்தில் உரையாற் றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா உட்பட மாகாண அமைச்சர்கள், முக் கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான் மைக்கு ஆறு ஆசனங்களே தேவையான நிலையில் அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ள போதிய அதிகாரம் எமக் குள்ளது. எனினும் பல்தரப்பு கலந்துரையாடல்களுடன் இதனை மேற்கொள்வதையே நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இந்நாட்களில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறோம். நிறைவேற்று ஜனாதிபதியாக தனித்திருப்பதைப் போன்று நான் உணர்கிறேன். பாராளுமன்றத்திற்கு வருகை தந்து அங்கு என்ன நடக்கின்றது என்பதைப் பார்க்கவும் நான் ஆவலாயுள்ளேன. இதற்கேற்ற விதத்திலேயே மாற்றம் இடம்பெறுவது அவசியம்.

இப்போதெல்லாம் கட்சித் தாவுதலைத் தடைசெய்ய வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கட்சிக்குள் வருவதற்கும் போவதற்குமான சந்தர்ப்பங்கள் இருக்க வேண்டுமென நான் கருதுகின்றேன். கட்சி மாறுதல் இல்லாதிருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகள் உருவாகியிருக்க முடியாது என்பதை உணர வேண்டும்.

மக்கள் எம்மீது பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர். அந்த எதிர்பார்ப்பை நாம் பொறுப்புடன் நிறைவேற்றி வருகின்றோம். தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாக மட்டுமே இருந்த யுகம் மாற்றப்பட்டுள்ளது.

நாம் மஹிந்த சிந்தனையின் முதற் கட்டமாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் தொண்ணூறு வீதமானவற்றை நிறைவேற்றியுள்ளோம். இப்போது இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. நாம் மக்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் என்பதை உணர்ந்து அதிகாரிகள் செயற்பட வேண்டும்.

மக்கள் ஆதரவுடன் பெரும் பலத்துடன் அரசாங்கம் என்ற ரீதியிலும் கட்சி என்ற ரீதியிலும் நாம் முன்னோக்கிப் பயணிக்கின்றோம். மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி என்ற வகையில் எம்முடன் கைகோர்த்து செயற்பட சகலரும் முன்வரவேண்டும்.

நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்கால பரம்பரைக்காக நாட்டை அபிவிருத்தியிலும் சுபீட்சத்திலும் கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன (பிரதியமைச்சர்) :

ஹக்மன தேர்தல் தொகுதியிலிருந்து கடந்த தேர்தலில் 70.6 வீத வாக்குகள் ஜனாதிபதிக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

1994ம் ஆண்டிலிருந்து மாத்தறையில் ஐ. தே. கவில் வெற்றிபெற்று சரியான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்குப் பூரண பங்களிப்பு வழங்கினேன். அதனை ஏற்றுக்கொண்டுள்ள மக்கள் என்னை பாராளுமன்றத் தேர்தலில் முதலிடத்தில் வெற்றிபெறச் செய்தனர்.

ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை உருவாக்கும் நடவடிக்கையில் ஹக்மன அபிவிருத்திக்காக 14,600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் இப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம். இன்றேல் நிறைவேற்று பிரதமர் முறையாவது கொண்டுவரப்பட வேண்டும். மக்கள்தான் வாக்களிப்பர், அதற்காக எதிர்க்கட்சி பயப்படத் தேவையில்லை.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கில் கைத்தொழில் ஊக்குவிப்பு


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையாளர்களுக்கு உயர் தொழில் நுட்ப அறிவை வழங்கும் திட்டமொன்றை தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆரம்பித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலக மட்டத்தில் செயற்படும் விதாதா வள நிலையங் களினூடாக கைத்தொழிலாளர்களுக்கு தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுகிறது.

யோகட் கைத்தொழில், பேக்கரி கைத்தொழில், மரக்கறி சார் உணவு உற்பத்தி என்பவற்றிற்காக உயர் தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுவதாக அமைச்சு கூறியது. இதன் காரணமாக குறித்த துறைகளில் கைத்தொழில்களை ஆரம்பிக்க கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களினூடாக கண்டுபிடிக்கப்படும் புதிய தொழில் நுட்ப அறிவை விதாதாவள நிலையங்களினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கைத்தொழில் மற்றும் வர்த்தகங்கள் ஆரம்பிப்பதற்காக வழங்கப்படுகிறது. இதற்காக பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது.

யோகட், ஜாம், கோடியல், முறுக்கு வகை, பலகாரம், ஊதுபத்தி, மரக்கறி, பழவகை, கடதாசி உற்பத்தி, அரிசி சார் பேக்கரி கைத்தொழில், ஸ்கிரீன் பிரின்ட் தொழில் நுட்பம் என்பவற்றுக்கான அறிவு, வழிகாட்டல் என்பன தற்பொழுது சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழி லாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கில் கைத்தொழில் ஊக்குவிப்பு


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையாளர்களுக்கு உயர் தொழில் நுட்ப அறிவை வழங்கும் திட்டமொன்றை தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆரம்பித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலக மட்டத்தில் செயற்படும் விதாதா வள நிலையங் களினூடாக கைத்தொழிலாளர்களுக்கு தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுகிறது.

யோகட் கைத்தொழில், பேக்கரி கைத்தொழில், மரக்கறி சார் உணவு உற்பத்தி என்பவற்றிற்காக உயர் தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுவதாக அமைச்சு கூறியது. இதன் காரணமாக குறித்த துறைகளில் கைத்தொழில்களை ஆரம்பிக்க கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களினூடாக கண்டுபிடிக்கப்படும் புதிய தொழில் நுட்ப அறிவை விதாதாவள நிலையங்களினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கைத்தொழில் மற்றும் வர்த்தகங்கள் ஆரம்பிப்பதற்காக வழங்கப்படுகிறது. இதற்காக பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது.

யோகட், ஜாம், கோடியல், முறுக்கு வகை, பலகாரம், ஊதுபத்தி, மரக்கறி, பழவகை, கடதாசி உற்பத்தி, அரிசி சார் பேக்கரி கைத்தொழில், ஸ்கிரீன் பிரின்ட் தொழில் நுட்பம் என்பவற்றுக்கான அறிவு, வழிகாட்டல் என்பன தற்பொழுது சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழி லாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களை கண்டித்து வவுனியாவில் இன்று கடையடைப்பு

வவுனியா பிரதேசத்தில் பரவலாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற கொள்ளைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்து நிறுத்தக் கோரியும் வவுனியா வர்த்தகர் சங்கம் ஒரு நாள் அடையாள கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் அவர் பின்னர் கப்பமாகப் பணம் பெற்றுக் கொண்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவம் வவுனியா நகரப் பகுதியில் பரபரப்பையும் வர்த்தகர்கள் மத்தியில் அச்சத்துடன் கூடிய பதட்டத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலிலேயே வவுனியா வர்த்தகர் சங்கம் கடையடைப்பிற்கான அழைப்பை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வவுனியா வர்த்தகர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட காலமாக நடைபெற்ற யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதியான சுதந்திரமான சுமுகமான நிலைமை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மீண்டும் அமைதியைக் குலைத்து அசாதாரண சூழ்நிலை ஏற்படும் வகையில் ஒரு வருடத்திற்குப் பின்னர் கடந்த 23.07.2010 வெள்ளிக்கிழமை இரவு எமது வர்த்தகர்களில் ஒருவர் கப்பம் கோரி இனந்தெரியாதவர்களினால் வெள்ளை வானில் கடத்தப்பட்டார். யுத்தம் முடிவடைந்த நிலையில் நீண்ட காலத்தின் பின் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதைவிட நகருக்கு வெளியே பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பல களவு கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் வர்த்தகர்களும் பொது மக்களும் அச்சமின்றி பாதுகாப்பாக வாழ வழியேற்படுத்துவதோடு இப்படியான செயல்களில் ஈடுபடும் தீய சக்திகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பாதுகாப்பு தரப்பினரை வேண்டி நிற்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க நாம் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையை நடத்த தீர்மானித்துள்ளோம். அதனடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை பூரணமான கடையடைப்பு செய்து அனைத்து வர்த்தக உரிமையாளர்களும், ஊழியர்களும் எமது வர்த்தகர் சங்க அலுவலகத்தின் முன்பாக கூடி காலை 9 மணியில் இருந்து 11 மணி வரையில் அமைதியான முறையில் இரண்டு மணித்தியாலங்களை எமது எதிர்ப்பைத் தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு வர்த்தகர்களும், வர்த்தக ஊழியர்களும், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இங்கே தொடர்க...

ஸ்ரீகொத்தா முன் தீக்குளித்தமுதியவர் உயிரிழப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் முன்பாக தீக்குளித்த முதியவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

ஐ.தே.க தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை தீக்குளித்த காலி வெலிகமவைச் சேர்ந்த அறுபது வயது மதிக்கத்தக்க ரியன்ஸி அல்கம என்வர் எரிகாயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஐ.தே.கவின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் தீக்குளித்துக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற பொலிஸார் அவரது உறவினர்களைக் கண்டறிந்ததன் பின்னரே அவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட விடயம் தொடர்பில் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

26 ஜூலை, 2010

யாழ்ப்பாணத்தில் இந்திய வங்கியின் மேலும் ஒரு கிளை


undefined



இந்தியாவில் சென்னையைப் பிரதான தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கி யாழ்ப்பாணத்தில் அதன் கிளை ஒன்றை நிறுவ உள்ளது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த இந்தியன் வங்கி இயல்பற்ற சூழ்நிலை காரணமாக தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டது.

இலங்கையில் இடம்பெற்று முடிந்த உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த அகதிகளுக்கான இந்தியாவின் உதவிகள் இவ்வங்கிக் கிளை மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிய வருகின்றது.

இதேவேளை, ஏற்கனவே கொழும்பில் கிளையை கொண்டுள்ள இந்தியன் வங்கியின் கிளைகளை அடுத்த இரண்டு வருட காலத்தில் இலங்கையின் ஏனைய இடங்களிலும் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஸின் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கிளை தொடங்கப்பட்ட பிறகு கண்டியில் மேலும் ஒரு கிளை தொடங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே போல இந்தோனேசியாவில் மேலும் ஒரு பிரதிநிதி அலுவலகம் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளதகாவும் அவர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் மாவட்டத்தில் மீள் குடியேற்ற வேலைத்திட்டம் தொடர்கிறது





மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மீனவ கிராம மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வருவதோடு அவர்களுக்கான தொழில்துறை உபகரணங்களும் வழங்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட கடற் தொழில் உதவிப் பணிப்பாளர் சந்திர சேகரப் பிள்ளை பவாநிதி தெரிவித்தார்.

இந்நிலையில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்;ட அரிப்பு, சவேரியார் புரம், சிலாபத்துறை, கூலாங்குளம், கொக்குப்படையான், கொண்டச்சி குளம் ஆகிய 6 கிராமங்களிலும் 693 குடும்பங்களும், மாருதை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மோட்டை, விடத்தல் தீவு, கந்தாலன் பிட்டி, இலுப்பக் கடவை, அந்தோனியார் புரம், 3ஆம் பிட்டி, தேவன் பிட்டி ஆகிய 7 மீனவர் கிராமங்களிலும் 878 குடும்பங்கள் மீள்; குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கடற்தொழில் நீரியல்வள அமைச்சினால் கடற்தொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது
மேலும் இங்கே தொடர்க...

பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது





ருகுணு பல்கலைக்கழக மாணவனான சுசந்த அருண பண்டாரவின் மரணத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யும்படியான சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த மாணவர்கள் 6 பேரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கும் போது நுகேகொடையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்.

“ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் 4 பேரும் மேற்படி கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது விளக்கமறியலில் உள்ளனர். நாம் இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளோம். இது எமது கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது” என உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

எண்ணெய்க் கசிவு: 17 ஆயிரம் பேர் வேலையிழப்பு




அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவால் இந்த ஆண்டில் சுமார் 17 ஆயிரம் பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் பல மைல் தொலைவுக்கு எண்ணெய் படலம் காணப்படுவதால் மீன் பிடிப்பு மற்றும் அது தொடர்பான பணிகள் மற்றும் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடலில் ஏற்பட்ட இந்த மிகப் பெரிய எண்ணெய்க் கசிவால், ஏற்பட்டுள்ள சூற்றுச்சுழல் மற்றும் பொருளாதார பாதிப்புகள் பலகோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. தீ விபத்தில் எண்ணெய் எடுக்க பயன்படுத்திய இயந்திரம் கடலில் மூழ்கியது. பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 11 ஊழியர்களும் பலியாயினர். கடந்த ஏப்ரல் 20-ல் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

அன்று முதல் இம்மாதத் தொடக்கத்தில் கசிவு அடைக்கப்படும் வரை அந்த இடத்தில் இருந்து இடைவிடாமல் கடலில் எண்ணெய் கலந்து வந்தது. இப்போது சிறிதளவு எண்ணெய்க் கசிவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

எண்ணெய்க் கசிவால் அப்பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் செத்து மிதந்தன. படகுகளும் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இப்போது பாதிக்கப்பட்ட கடல்பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கனடாவில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி






கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.

கனடாவின் அல்பெட்டா மாநிலத்தில் வார இறுதி சர்வதேச விமான சாகச கண்காட்சி இடம்பெறவிருந்த வேளையில், அதற்கான பயிற்சியில் கப்டன் பிறைன் பெவ்ஸ் ஈடுபட்டிருந்தார்.CF-18 ரக தாக்குதல் விமானத்திலேயே இந்த சாகசப் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனை சற்றும் எதிர்பார்த்திராக விமானி சாதுரியமாக செயற்பட்டு விமானத்திலிருந்து பராசூட் மூலமாக எகிறி தப்பித்திருக்கிறார்.

சிறு காயங்களுக்கு மட்டுமே இலக்கான விமானி, அந்த விபத்துப்பற்றி விபரிக்கையில்… என் வாழ்நாளில் சற்றும் எதிர்பார்க்காமல் நடந்த விபத்தில் நான் செத்துப் பிழைத்திருக்கிறேன்.

இயந்திரத்தில் 'பொப்... பொப்... பொப்...' என சந்தம் வந்தபோது துரிதமாக செயற்பட்டு எனது அவதானத்தினை செலுத்தினேன். அப்பொழுது ஓர் இயந்திரத்தின் தீப்பற்றிக் கொண்டது.

உடனடியாக பராசூட் இருக்கையை இயக்கி தப்பித்துக் கொண்டேன். சில செக்கன்களில் உயிர் தப்பியமை இன்னமும் வியப்பாக இருக்கிறது என அவ்விமானி குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் புகலிடம் வழங்குவது சட்ட விரோத குடியேற்றத்திற்கு வழி:இலங்கை




சொந்த நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற உணர்வின் பேரில் அரசியல் புகலிடம் அல்லது அகதிகள் அந்தஸ்து வழங்கப்படுவதால் சட்டவிரோத மற்றும் ஒழுங்கீனமான குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவே அமையும் என்று இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டவிரோதமாக ஆட்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதையும் சிறு படகுகளில் பொருட்கள் கடத்தப்படுவதையும் தடுப்பதற்கு இலங்கை ஆழ்கடலில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வியட்னாமிய நகரான ஹனோயில் நடைபெற்ற 17ஆவது தென்கிழக்காசிய நாடுகள் சங்க பிராந்திய கருத்தரங்கில் உரையாற்றிய பிரதி அமைச்சர் குணவர்த்தன, ஆட்கள் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்படுவதையும் மக்களின் ஒழுங்கீனமான பிரயாணங்களையும் கட்டுப்படுத்த இச்செயல்கள் ஆரம்பிக்கப்படும் நாடுகளும் இடைத்தங்கல் நாடுகளும் இத்தகையோர் சென்றடையும் நாடுகளும் ஒளிவுமறைவற்ற கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாதுகாப்பு வலையமைப்பு, பிராந்திய கடற்பரைப்பை கண்காணித்தல் ஆகியன மட்டும் சட்டவிரோத ஆட்கடத்தலையும் சட்டவிரோத வர்த்தகத்தையும் கட்டுப்படுத்த போதாது என்றும் அவர் கூறினார்.

பயங்கரவாத இயக்கங்கள் எல்லைகளுக்கிடையிலான தொடர்புகளையும் நவீன தொழில்நுட்பங்களையும் இலகுவில் பயன்படுத்த வழி சமைப்பதால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் பிரதி அமைச்சர் முக்கியமாக எடுத்துக் கூறினார்.

எனவே, சட்டவிரோத புலம்பெயர் குழுக்களினாலும் அனுதாபிகளினாலும் நிதியளித்தல் உட்பட பயங்கரவாதிகளின் நாடுகளுக்கிடையிலான செயற்பாடுகளை முறியடிப்பதற்கு கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

கூட்டு நடவடிக்கை இல்லாமல் எந்தவொரு நாடோ பிராந்தியமோ இத்தகைய அச்சுறுத்தல்களிலும் இவற்றுடன் தொடர்புள்ள சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து முற்றாக விடுபட முடியாது என்று அவர் கூறினார்.

நாடுகளுக்கிடையே ஒன்றுக்கொன்று உள்விவகாரங்களில் தலையிடா கொள்கையை அனுசரித்து நடத்தல், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு, தேசிய அடையாளம் ஆகியவற்றை பரஸ்பரம் மதித்து நடந்து கொள்ள வேண்டியதன் அவசியதையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...