31 அக்டோபர், 2009

புகலிடம் கோருவோரை அழைத்துச் செல்ல அவுஸ்திரேலியாவுக்கு ஒருவார காலக்கெடு- இந்தோனேசியா அறிவிப்பு

இந்தோனேசிய கடற்பரப்பிலுள்ள 78 இலங்கை அகதிகளை அங்கிருந்து அழைத்துச் செல்ல இந்தோனேசியா, அவுஸ்திரேலியாவுக்கு ஒருவாரகால அவகாசம் வழங்கியுள்ளது என்று இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய சுங்கக் கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட மேற்படி அகதிகளின் விவகாரத்தினால்,ஆட்சிக்கு வந்து ஒரு வருடமே பூர்த்தி அடைந்த அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் மீது அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முடியாதென அவுஸ்திரேலியா கடந்த புதன்கிழமை வலியுறுத்திக் கூறியது. விசாரணைக்காக அகதிகள் இந்தோனேசியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அது தொடர்பில் இந்தோனேசியாவுடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இந்தோனேசியாவின் றியாவ் தீவிற்கு அருகில் அகதிகளுடன் சென்றுள்ள அவுஸ்திரேலிய ஓசானிக் வைக்கிங் கப்பல் நவம்பர் மாதம் 6ஆம் திகதி மட்டுமே அங்கு தரித்து நிற்க அனுமதிக்கப்படும் என்று இந்தோனேசிய வெளிநாட்டமைச்சு பேச்சாளர் ரேகு பெஸாஸயா நேற்று தெரிவித்துள்ளார். இந்த காலக்கெடுவுக்குள் அவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் அல்லது இந்தோனேசிய கடற்பரப்பிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேசிய வெளிநாட்டமைச்சர் மார்டி நதலேகாவா வியாழக்கிழமை ராய்ட்டர் செய்தி சேவைக்கு அளித்த பேட்டி ஒன்றில், இலங்கைத் தமிழ் அகதிகளை என்ன செய்வது என்பதை தீர்மானிப்பது அவுஸ்திரேலியாவை பொறுத்தவிடயம் என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...
ஐ.நா.வின் சான்றிதழை அடுத்தே முகாம்களிலுள்ள அனைத்து தமிழ் மக்களும் மீள்குடியமர்த்தப்படுவர்- அமைச்சர் ஆறுமுகன் தெரிவிப்பு;

- கண்ணிவெடிகளை அகற்றுவது, மனிதநேய அடிப்படையிலான உதவிகளைச் செய்வது குறித்து ஐ.நா. அமைப்பு சான்றிதழ் அளித்த பின்னரே இலங்கை முகாம்களில் உள்ள ஒருலட்சத்து 86ஆயிரம் தமிழர்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அதேசமயம், கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் அங்கேயுள்ள பிரச்சினை எனவும் அவர் கூறியுள்ளார். இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றும் பணிகள் குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முதலமைச்சர் கருணாநிதியை அவரது கோபாலபுரத்திலுள்ள இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசுகையில், இலங்கை முகாம்களில் 3 இலட்சம் தமிழர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், 1.86 இலட்சம் தமிழர்களே உள்ளனர். தமிழகத்தில் இருந்து எம்.பி.க்கள் குழு வருவதற்கு முன்பே, 24 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழக எம்.பி.க்கள் குழு வந்து சென்ற பின்னர், இதுவரை 57 ஆயிரம் தமிழர்கள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எம்.பி.க்கள் குழுவின் வருகைக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்களை வாழ்விடங்களுக்கு அனுப்பும் பணி இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ராஜபக்ஷ கொடுத்த வாழ்த்துச் செய்தியையும், அங்கு நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் குறித்தும் முதல்வர் கருணாநிதியிடம் விளக்கினேன்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இந்தியக் குழு ஈடுபட்டு வருகிறது. மேலும் ஒரு குழுவை அனுப்புவதாக இந்திய அரசு கூறியுள்ளது.

இலங்கைத் தமிழர்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு அனுப்ப, ஐ.நா.விடம் இருந்து சான்றிதழ் பெறுவது அவசியம். "தமிழர்களின் வாழ்விடங்களில் கண்ணிவெடிகள் ஏதுமில்லை என்றும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள், வருமானத்துக்கான வழி போன்றவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன" எனவும் அகதிகள் நல்வாழ்வுக்கான ஐ.நா. அமைப்பின் அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும்.

இப்போது, 1.86 இலட்சம் தமிழர்களின் வாழ்விடங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் பிரச்சினையாக உள்ளது. குடியமர்த்தப்பட்ட பிறகு, அவர்கள் தொழில் செய்யவோ, விவசாயம் செய்யவோ உதவி செய்கிறோம்.

இலங்கையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மேலும் ரூ.500 கோடி தருவதாக இந்திய அரசு கூறியுள்ளது. இதற்கான திட்டத்தை இலங்கை அரசின் சார்பில் கொடுக்க இருக்கிறோம். எந்தெந்த திட்டங்களுக்கு இந்தப் பணத்தை செலவிடுவது என்பது குறித்து விவாதிக்க இலங்கை அதிகாரிகள் குழு இந்தியா வர உள்ளது என்று ஆறுமுகன் தொண்டமான் கூறினார்

அதேவேளை ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் அகதிகளான மக்கள் ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு மாற்றப்படுகின்றனரே தவிர அவர்களது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை என்று கூறப்படுகின்றதே எனக் கேட்டபோது அமைச்சர் பதிலளிக்கையில், நானும் ஒரு தமிழன் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த இடங்களை பார்வையிட்டேன். நீங்கள் அங்கு சென்று பார்க்காமல் எம் மீது குற்றம் சாட்டுகின்றீர்கள் என்று பதிலளித்தார்.

இதேவேளை உங்கள் அரசு அங்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லையே என மற்றொரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது, ஏன் இல்லை கலைஞர் தொலைக்காட்சி குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்தார்களே, அவர்கள் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இல்லையா? என்றும் பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதலமைச்சர் கருணாநிதிக்கு ஏதேனும் விசேட செய்திகளை அனுப்பி வைத்தாரா எனக் கேட்டபோது மீள்குடியேற்றம் தொடர்பில் முதலமைச்சருக்கு எடுத்து விளக்குமாறு கூறினார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானுக்கு ரூ. 11 ஆயிரத்து 500 கோடியை நிதி உதவியாக வழங்க அமெரிக்கா இணக்கம்

பாகிஸ்தானுக்கு 2010 ஆம் ஆண்டு க்கான இராணுவ நிதி உதவியாக ரூ. 11 ஆயிரத்து 500 கோடியை அமெ ரிக்கா வழங்க இருக்கிறது. இதற் கான அனுமதியை அமெரிக்க ஜனா திபதி ஒபாமா வழங்கி இருக்கிறார்.

அமெரிக்க இராணுவத்துக்கு 2010 ஆம் ஆண்டுக்கான 34 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட் மசோதா வில் ஒபாமா நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். இந்த பட்ஜெட் டில் பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி வழங்குவதற்காகவும் நிதி ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி யாக 11,500 கோடி ரூபாய் வழங்கு வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதற்கும் சேர்த்துத்தான் அவர் அனுமதி கொடுத்து இருக் கிறார்.

இந்த உதவியில் 2 அம்சங்கள் உள் ளன. ஒன்று, கூட்டணி ஆதரவு நிதி, 2 வது தீவிரவாத தடுப்பு நிதி. கூட் டணி ஆதரவு நிதி என்பது கடந்த காலத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவ தற்காக பாகிஸ்தான் செலவழித்த தொகையை ஈடுகட்டும் வகையில் வழங்கப்படுவது. இதற்காக 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அடுத்தது தீவிரவாதத்தை ஒடுக் குவதற்காக அமெரிக்கா அளிக்கும் நிதி ஆகும். இதற்காக 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த நிதியை வழங்குவதோடு அதைப் பெறுவதற்கு ஒரு நிபந்தனையையும் அமெரிக்கா விதித்துள்ளது. இந்த நிதியை வேறு பயன்பாட்டுக்காக (இந்தியா வுக்கு எதிரான இராணுவ நடவடிக் கைக்காக ஆயுதங்களை குவிப்பதற் காக) திசை திருப்பக்கூ¡டது. அதன் மூலம் இராணுவ சமன்நிலை பிறழ வகை செய்யக்கூடாது என்பது அதன் நிபந்தனை ஆகும்.

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி உதவியை அந்த நாடு, இந்தியா வுக்கு எதிரான போருக்காக மரபு ரீதியான ஆயுதங்களை வாங்கி குவி ப்பதற்காக பாகிஸ்தான் பயன்படுத் துவதாக இந்தியா கருதுகிறது. இந் தியாவின் இந்த அச்சத்தை கருத்தில் கொண்டு தான் இந்த நிபந்த னையை அமெரிக்கா சேர்த்துள்ளது.

இந்தியாவின் அச்சம் நியாயமானது தான் என்பதை பாகிஸ்தானின் முன் னாள் ஜனாதிபதி முஷர்ரப்பின் சமீ பத்திய பேட்டி உறுதிப்படுத்தி உள் ளது. தன் பதவிக்காலத்தில் அமெரி க்கா கொடுத்த நிதி உதவியைக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக இராணுவ பலத்தை பெருக்கிக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிபந்தனையை பாகிஸ்தான் கடைப்பிடிப்பதோடு மட்டும் அல் லாமல், நிதி திசை திருப்பப்படவி ல்லை என்று ஜனாதிபதி ஒபாமா நட்சாட்சி பத்திரம் கொடுத்தால் தான் பாகிஸ்தானுக்கு பணம் கிடைக்கும்.

180 நாட்களுக்கு ஒருமுறை இந்த பணம் பாகிஸ்தானுக்கு கிடைப்ப தற்கு முன்பாக இராணுவ மந்திரி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னி லையில் தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தான் பாடுபட்டு வருகிறது என்றும் சான்றிதழ் வழங்க வேண்டும். அதோடு ஜனாதிபதி ஒபாமாவும் 180 நாட்களுக்கு ஒரு முறை பணம் சரியாகத்தான் செலவழிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் இங்கே தொடர்க...

தாய்நாட்டைக் கட்டியெழுப்ப சகல இலங்கையரும் நாடுதிரும்ப வேண்டும்

நேபாளத்தில் ஜனாதிபதி அழைப்பு

சுதந்திரமடைந்துள்ள தாய்நாடு உங்களை வரவேற்கத் தயாராகவுள்ளது. தாய்நாட்டைக் கட்டியெழுப்ப வெளிநாடுகளிலுள்ள சகல இலங்கையர்களும் நாட்டுக்குத் திரும்ப வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேபாளத்திலிருந்து பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேபாளத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந் நாட்டில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்தபோதே இத்தகைய அழைப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி:-

தாய் நாடு தற்போது முழுமையாக மீட்கப்பட்டு சகல இன, மத மக்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மீள நாடு திரும்பி தாய்நாட்டைக் கட்டியெழுப்ப உரிய பங்களிப்பினை வழங்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்படி சந்திப்பு நேபாளம் காத்மண்டு நகரில் இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை யைச் சேர்ந்த வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு மேலும் தெரிவிக்கையில்:

நான் கடந்த முறை நேபாளத்திற்கு வரும்போது இலங்கையில் தாய்நாட்டை மீட்கும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எனினும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட நாட்டின் தலைவராக நான் இம்முறை நேபாளம் வந்துள்ளேன். தாய்நாட்டை பாரிய அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதே எனது அடுத்தகட்டச் செயற்பாடு. அந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு வெளிநாடுகளில் வாழும் சகல இலங்கையர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

தமது அறிவு, திறமை, உழைப்பு ஆகியவற்றை தாய்நாட்டின் எதிர்கால நலனுக்காக உபயோகப்படுத்த சகல இலங்கையர்களும் அணிதிரள வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் எமது பெருமளவிலான படை வீரர்கள் பலியாகியுள்ளதுடன் பெருமளவிலானோர் அங்கவீனமாகியுமுள்ளனர். இத்தகைய தியாகங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் நாடு முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கப்பட வேண்டும்.

“கிழக்கின் உதயம்” கருத்திட்டத் தின் மூலம் கிழக்கிலும் “வடக்கின் வசந்தம்” கருத்திட்டத்தின் கீழ் வடக் கிலும் தற்போது பாரிய அபிவிருத்தி கள் இடம்பெறுகின்றன. யுத்தத்தி னால் இடம் பெயர்ந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்தும் பணிகளும் துரித ப்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி களை ஏந்திய வடக்கு சிறுவர்கள் தற் போது புத்தகங்களை ஏந்தி பாட சாலை செல்லும் நிலை உருவாக்கப் பட்டுள்ளது. பயங்கரவாதத்தினால் உருக்குலைக்கப்பட்ட அவர்களது எதிர்பார்ப்புக்கள் இன்று நிறைவேறி வருகின்றன.

நாடு பிளவுபட்டிருந்தால் அங்கு ஒருபோதும் தேசிய ஒற்றுமை நிலவ முடியாது. இன்று ஐக்கிய இலங்கையில் சகல இனமும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இலங்கையர் கெளரவமான இனமாக மதிக்கப்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, நிமல் சிறிபால டி சில்வா, திஸ்ஸகரலிய த்த ஜனாதிபதியின் மேலதிக செய லாளர் காமினி செனரத் ஆகியோ ரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

30 அக்டோபர், 2009

ஜனாதிபதி நாளை திருப்பதி பயணம் : ஆந்திராவில் வரலாறு காணாத பாதுகாப்பு






இந்திய மீனவர் மீது தாக்குதல் : கடற்படைப்
பேச்சாளர் மறுப்பு

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

இந்திய ஊடகங்களில் வெளியானது போன்று இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனக் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்கத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் 40 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்களது உபகரணங்கள் சேததப்படுத்தப்பட்டதாகவும் 'டைம்ஸ் இந்தியா' செய்தி வெளியிட்டிருந்தது.

பிடிக்கப்பட்ட மீன் வகைகளை படையினர் மீண்டும் கடலில் எறிந்ததாகவும், ஒரு படகு முழுமையாக சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தாக்கப்பட்ட மீனவர்கள் நீந்தி இந்தியாவை அடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை எனவும், கடற்படையினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுவதாகவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ திருப்பதி கோவிலுக்கு நாளை செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அவர் சிறப்பு விமானம் மூலம் கொழும்பிலிருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நாளை காலை 11.00 மணிக்கு வருகிறார். பின்னர் அவர் வாகனம் ஒன்றில் திருப்பதி மலைக்குச் செல்வார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அவர் மதியம் 1.30 மணிக்கு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ராஜபக்ஷவின் வருகைக்கு இங்குள்ள தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் அவருக்கு வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜபக்ஷ செல்லும் வழி நெடுகிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...
ராஜரட்னத்தின் பிணைத் தொகையைக் குறைக்குமாறு கோரிக்கை

, 100 மில்லியன் டொலர்களில் இருந்து 25







உட்சந்தை வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னத்தின், பிணை அபராதத் தொகையை, 100 மில்லியன் டொலர்களில் இருந்து 25 மில்லியனாகக் குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பங்கு உட்சந்தை வணிகத்தில் பல பில்லியன் டொலர்களை மோசடி செய்த பேர்னாட் மடோப் என்பருக்கு, 10 மில்லியன் டொலர்களே அபராதம் அறவிடப்பட்டமை இதற்காகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவரான ராஜ், குற்றவாளியாகக் காணப்பட்டாலும் அவருக்கு 10 வருடத்துக்கும் குறையாத தண்டனையே வழங்கப்படும் என அவருடைய சட்டத்தரணி ஜோன் டௌட் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ராஜரட்னத்தின் பிணைக்காக அசாதாரண நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டுள்ள மொடப்புக்கு, 150 வருடகால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ராஜ் ராஜரட்னத்துக்கான பயணத்தூரமும், நியூயோர்க் நகருக்குள் 175 கிலோமீற்றர் தூரம் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பிறந்த ராஜ் ராஜரட்னம், சுமார் 1.3 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுடன், உலகின் 549ஆம் இடத்தை வகிக்கும் கோடீஸ்வரராவார்.

அவர் நியூயோர்க் நகரில், 17.5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான மாளிகையில், தமது மனைவியுடன் 21 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையில் ராஜ் ராஜரட்னம் தமது தவறை இதன் பின்னர் திருத்திக் கொள்வார் எனச் சட்டத்தரணி டெளட் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
கடலில் மூழ்கி இளைஞர் மரணம் : பொலிஸ் உத்தியோகத்தர் கைது










நேற்று பம்பலப்பிட்டி கடலுக்குள் குதித்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞரின் சடலம் சற்று நேரத்திற்கு முன்னர் கரை ஒதுங்கியது.

இத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

சடலம் கரையொதுங்கிய இடத்திற்குச் சென்ற இவ்விளைஞரின் சகோதரர் சடலத்தை அடையாளங் காட்டினார்.

இவ்விளைஞரைத் தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரைக் கைது செய்வதற்கும் ஏனையோரை அடையாளம் காண்பதற்கும் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சற்று முன்கிடைத்த செய்தி

சற்று முன்கிடைத்த செய்தியின்படி இந்த இளைஞரைத் தாக்கியதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் குழு கைது செய்துள்ளது.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்ட குழு, இவரை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வைத்துக் கைது செய்ததாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் இடம்பெற்றபோது கடற்கரைக்குச் சென்றதாகக் கூறப்படும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 10 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கரையோரப் பாதையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் நேற்றுப் பகல் வேளையின் போது, வீதியில் செல்லும் வாகனங்களுக்குக் கல் எறிந்துள்ளார்.

இதன் காரணமாக இரண்டு வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. ரயில் ஒன்றுக்குக் கல் எறிந்ததில் அதில் பயணித்த சிலரும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் சத்தமிடவே அவர் தப்பிப்பதற்காக கடலில் குதித்துள்ளார்.

பின்னர் அவர் மீண்டும் கரை திரும்ப முயற்சித்த போதும், அதனைத் தடுத்த பொலிஸார் அவரைக் கட்டைகளால் தாக்கினர்.

இந்தச் சம்பவம் நீடித்துக்கொண்டிருந்ததால் கரை திரும்ப முடியாத அந்த இளைஞர் கடலுக்குள்ளேயே செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்.

இதன் போது அவர் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மரணமானார் எனக் கூறப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...
கண்டி வைத்தியசாலையில் இரண்டு மருந்து குப்பிகளில் கண்ணாடி துண்டுகள் கண்டுபிடிப்பு
கண்டி போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை நோயாளர் ஒருவருக்கு ஏற்றப்படவிருந்த ஊசி மருந்து குப்பியில் கண்ணாடி துண்டுகள் இருக்கின்றமை கண்டு பிடிக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி சி.குணதிலக்க தெரிவித்தார்.

வைத்தியசாலையின் 64ஆம் இலக்க வார்ட்டில் இரண்டு மருந்துக் குப்பிகளில் இவ்வாறு கண்ணாடி துண்டுகள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் தாதியர்கள் வைத்தியசாலை உயர்மட்ட நிர்வாகத்திற்கு அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த கண்ணாடித் துண்டுகள் காணப்படுகின்ற மருந்துக் குப்பிகளைப் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவித்தன.

மேலும், தங்காலை பிரதேசத்திலும் வைத்தியசாலை ஒன்றில் மருந்து குப்பியில் கண்ணாடி துண்டுகள் இருந்தமையை நேற்று முன்தினம் வைத்தியசாலை நிர்வாகம் கண்டு பிடித்தது. இதனையடுத்து குறித்த மருந்துக்குப்பிகள் அம்பாந்தோட்ட மாவட்ட வைத்திய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

குறித்த மருந்து குப்பி வகைகளை விநியோகித்துள்ள ஆறு நிறுவனங்களின் பிரதிநிதிகளை முக்கிய விசாரணை ஒன்றுக்கு சுகாதார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை அழைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சுத் தகவல்கள் தெரிவித்தன.

ரவி கருணாநாயக்க எம்.பி.

அதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறுகையில், "சுகாதார அமைச்சர் ஏதோ ஊசி ஒன்றை உட்செலுத்திக் கொண்டவர்போன்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பில் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டால் விளம்பரங்களை நிறுத்தி விடுவதாக அமைச்சர் அச்சுறுத்துகின்றார். நாட்டில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை" என்றார்.

சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகையில், "நியாயமான முறையில் சிக்கல்களின்றி சிகிச்சை பெறும் எண்ணத்துடனேயே நோயாளர்கள் அரசாங்க வைத்தியசாலைகளை நாடுகின்றனர். ஆனால், அவ்வாறான அடிப்படை உரிமை கூட இன்று மறுக்கப்படுகின்றது. எனினும் அரசாங்கம் மௌனம் சாதிக்கின்றது. சுகாதார அமைச்சர் என்ன கூறுகின்றார் என்று தெரியவில்லை" என்றார்.

அநுர பிரியதர்ஷன யாப்பா

நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவிக்கையில்,

"சுகாதார அமைச்சு ஒரு நோய்க்காக மருந்துகளை கொள்வனவு செய்வதில்லை. இது பாரிய ஒரு வேலைத்திட்டம். இதன்போது ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது என்பதற்காக முழு சுகாதார தொகுதியையும் குறை கூறமுடியாது. எனினும் சம்பந்தப்பட்ட மருந்துக் குப்பிகளை விற்பனை செய்த நிறுவனங்களிடம் விசாரணை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இருநூறு மற்றும் ஆயிரம் என அதிகளவான கட்டில்கள் உள்ள வைத்தியசாலைகள் இலங்கையிலேயே அமைந்துள்ளன என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் அபாயம்
- இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக பி.பி.சீ உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்திர தீவுகளுக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் அவுஸ்திரேலிய கப்பலில் குறித்த இலங்கையர்கள் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆள் அடையாள சோதனைகளை நடத்துவதற்கு இலங்கை அகதிகள் போதிய ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் நாடு கடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என இந்தோனேஷிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய, குறித்த அகதிகள் விவகாரத்தை கவனிக்க இந்தோனேஷியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கை அகதிகள் தொடர்ந்து கப்பலிலிருந்து வெளியேறி இந்தோனேஷியாவுக்குள் செல்ல மறுப்பு தெரிவித்தால் சிக்கல் நிலை உருவாகக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களின் ஆள் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவர்களுக்கு உதவிகளை வழங்க முடியும் என இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் டெக்கு பெஸியாஸா தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பு நவம்பர் 03ம் திகதி அறிவிக்கப்படவுள்ளது-

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஸ்தாபித்துள்ள பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி எதிர்வரும் நவம்பர் 03ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான நிகழ்வு ஸ்ரீஜயவர்தனபுர நாடாளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெறவுள்ளதாக ஐ.தே.கட்சி பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது கூட்டமைப்பில் இணைந்து கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளதுடன், ஐக்கிய தேசிய முன்னணியின் பத்து அரசியல் கொள்கைகள் அறிவிக்கப்படுமென்றும் அவர் கூறியுள்ளார். புதிய கூட்டணியில் இணையும் அரசியல் கட்சித் தலைவர்களிடையிலான சந்திப்பு இன்றுகாலை இடம்பெற்றதையடுத்து மேற்குறித்த விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...
முகாமிலுள்ள இடம்பெயர்ந்தோர் தொகை 1லட்சத்து 79ஆயிரமாக குறைப்பு-

வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை 1லட்சத்து 79ஆயிரமாக குறைத்துள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். தற்போது வவுனியா அகதிமுகாம்களில் தங்கியுள்ள மக்களை மீளக் குடியமர்வுக்காக அனுப்பி வருகின்றோம். இப்போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டார்கள். ஏனைய மாவட்டங்களான மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மக்களைப் படிப்படியாக அனுப்பிக் கொண்டிருக்கிறோம். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மக்களில் இதுவரை அகதிமுகாம்களில் இருந்தவர்கள் தற்போது மீளக் குடியமர்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தரவுகளின்படி தற்போது அகதி முகாம்களிலுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1லட்சத்து 79ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அரசஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...

29 அக்டோபர், 2009

நாட்டைவிட்டு வெளியேறுகிறார் நிஷாந்த முத்துஹெட்டிகம
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேபாளம் விஜயம்










ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட குழுவினர் நேபாளத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது,நேபாள ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய குழுவினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் தென்மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட நிஷாந்த முத்துஹெட்டிகம நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ளார் என சற்று முன்னர் கிடைத்த செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

அங்கிருந்து அவர் கருத்து தெரிவித்த போது,

நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இருப்பினும் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்து விட்டேன். சுதந்திரமாக வாழ்வதற்காகவே நான் நாட்டை விட்டு வெளியேறுகின்றேன். இது வரை வாழ்ந்த அரசியல் வாழ்க்கை போதும்" என்று தெரிவித்தார்.

இவர் லண்டன் செல்கிறார் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
67 பவுண் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் : இரு இலங்கையர் மீது விசாரணை

கொழும்பிலிருந்து சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட 67 பவுண் தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக இலங்கை பெண் உட்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் பயணித்தோரை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுந்தரம் (வயது 37) என்பவரிடம் சந்கேத்தின் பேரில் சுங்க இலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது சுந்தரம், அதிகாரிகளிடம் முன்னுக்கு பின் முரணாகப் பேசினார். இதையடுத்து அவரிடம் இருந்த சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் எதுவும் இருக்கவில்லை.

சுந்தரத்தை அதிகாரிகள் சோதனையிட்ட போது, கழுத்தில் புத்தம் புதிய தங்கச்சங்கிலி ஒன்றை அணிந்திருந்ததைக் கண்டனர். இது பற்றி கேட்டபோது, சுற்றுலாவாக சென்னைக்கு வந்ததாகவும், இந்தச் சங்கிலியைக் கழுத்தில் அணிந்து கொண்டு விமான நிலையத்தில் உள்ள ஒரு நபரிடம் கொடுத்தால் பணம் தருவதாக ஒருவர் கூறினார் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் அணிந்திருந்த சங்கிலியின் எடை 40 பவுண் என்று தெரிய வந்தது.

மேலும் அதே விமானத்தில் வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷினி (35) என்ற பெண் கைகளில் அதிகமான வளையல்களை அணிந்து வந்திருந்தார். சுமார் 27 பவுண் தங்க வளையல்களை இவர் கடத்தி வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மொத்தம் 67 பவுண் மதிப்புள்ள சங்கிலி, வளையல் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

இது பற்றி தர்ஷினி, சுந்தரம் ஆகியோரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...
மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தும் நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு


மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு துரிதமாக அனுப்பிவைக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இடம்பெயர்ந்து அகதிகளாயுள்ள சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரில் அடுத்த சில வாரங்களுக்குள் சுமார் 40 ஆயிரம் பேரை இலங்கை அரசாங்கம் மீள் குடியேற்றவுள்ளதாக தெரிவித்துள்ளதை நாம் வரவேற்கின்றோம். மேலும், ஆயிரக்கணக்கானோர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

இந்த நிலைமைகளை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அமெரிக்க தூதரகம் நேற்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

"மக்களை விடுவிப்பதும் அவர்கள் தாமாக தங்கள் சொந்த இடங்களுக்கு செல்வதும் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்கு உதவுமென அமெரிக்கா உறுதியாக நம்புகின்றது. மனிதாபிமான உதவிகள் மற்றும் நிலக்கண்ணிவெடி அகற்றல் ஆகியவற்றுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி வருகின்றது.

யு.என்.எச்.சி. ஆர் மீள்குடியமரும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் உலக உணவுத்திட்டத்தின் ஊடாக ஆறுமாதங்களுக்கு உலர் உணவு வகைளை வழங்குகின்றது.

மேலதிக உதவிகளை இலங்கைக்கு வழங்குவது குறித்தும் அமெரிக்கா ஆலோசித்து வருகின்றது.

கடந்த இரண்டு வருடங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவது உட்பட, இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளின் அடிப்படையில் 87 மில்லியன் டொலர்ககளை அமெரிக்கா செலவிட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
தடுத்துவைக்கப்பட்டிருந்த 66 இலங்கை அகதிகள் விடுதலை- யு.என்.எச்.சி.ஆர். பொறுப்பேற்பு


தடுப்பு முகாம் ஒன்றிலிருந்து 66 இலங்கை அகதிகள் குடிவரவு அதிகாரிகளினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயத்திடம் இவர்கள் கையளிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள், குழந்தைகள் உட்பட 66 பேர் இவ்வாறு பஸ்வண்டிகளில் ஏற்றப்பட்டு நேற்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களை நாடொன்று பொறுப்பேற்கும் வரை ஐ.நா. அலுவலகத்தின் பாõதுகாப்பில் இருப்பார்கள் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 105 இலங்கையர்கள் கடந்த செப்டெம்பர் முதல் மலேசியாவின் தென் மாநிலமான ஜோஹோரிலுள்ள தடுப்புமுகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமை காரணமாகவே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

இவர்களில் 6 பேர் கடந்த வாரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதுடன் தங்களை யு.என்.எச்.சி.ஆர். அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் தங்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரியிருந்தனர். இவர்களுள் 66 பேருக்கான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் ஏனையோர் தொடர்பான விசாரணைகள் விரைவில் நடைபெறுமெனவும் குடிவரவு பிரதி இயக்குநர் அம்ரான் அஹமட் தெரிவித்துள்ளார். இந்த 105 பேரில் 17 பேர் மீது குடிவரவு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவருமே சிறந்தமுறையில் கண்காணிக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த அகதிகள் தொடர்பில் துரிதமான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை விடுதலை செய்தமைக்கு அதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலய வெளியுறவு அதிகாரி, மலேசிய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ளோரை விரைவாக விடுதலை செய்ய சாத்தியமான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
அரசுடன் மென்மை போக்கை கடைப்பிடிக்கின்றன தமிழ்கட்சிகள் என்று குற்றஞ்சாட்டுகிறார் முன்னைநாள் மீன்பிடி அமைச்சு ஆலோசகர் சுரேஸ் பிரேமசந்திரன்!


தமிழ்கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் அரசின் நடவடிக்கைகளை கண்டிக்காமல், மென்மை போக்கை கடைப்பிடிப்பதாக முன்னைநாள் மண்டையன் குழுவின் தலைவரும், பின்னர் மீன்பிடி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக இருந்தவருமான தற்போதைய தமிழ்கூட்டமைப்பு பா. சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார்.

பதவிக்காக மண்டியிட்டு தமிழ் கூட்டமைப்பில் இணைந்தவர்தான் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் என்ற ஒடுகாலி. இவரை தமிழ்கூட்டமைப்பில் இணைத்து கொள்வதற்கு அவ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய தமிழ்கட்சிகள் விரும்பாதபோதும், மற்றுமொரு ஒடுகாலியான செல்வம் அடைக்கலநாதனின் காலில் விழுந்து மண்டியிட்டு; கூட்டமைப்பில் இணைந்து கொண்டவர்தான் இந்த சுரேஷ்.

.பி.ஆர்.எல்.எவ் பொது செயலர் அமரர் பத்மநாபா கொலைக்கு பிரதான காரணியாக இருந்தவரே இந்த பிரேமச்சந்திரன். அதன் நண்றிக்கடனாகவே பின்னர் புலிகளுடன் இணைந்து அவர்களுக்க சேவகம் செய்தவர். இன்று மற்றைய தமிழ்கட்சிகளை பார்த்து அரசுடன் மென்மைபோக்கு கடைப்பிக்கின்றனர் என்று குற்றச்சாட்டு சொல்வதற்கு இவருக்கு எந்த தகுதியும் இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தமிழ் மக்களுக்காக எதுவுமே செய்யாமல் இந்தியாவிலம் வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் இருந்துவிட்டு உள்ளாட்சி தேர்தலுக்காக மஹிந்தவின் காலில் மண்டியிட்டு வந்தவர்தான் இந்த குறும் நோக்கம் கொண்டவர்தான் இந்த சுரேஸ் பிரேமச்சந்திரன். வன்னியில் அகோர யுத்தம்; இடம்பெற்ற நிலையில் சொத்துக்களையும்,
சொந்தங்களையும் இழந்த நிலையில் வவுனியா நோக்கிவந்த அந்த மக்களுக்காக ஒரு போத்தல் தண்ணீரோ அல்லது ஒரு நேர உணவு கூட கொடுக்க வக்கில்லாத இந்த சுரேஸ் பிரேமச்சந்திரன். மக்களின் அவலத்தில் அல்லும் பகலும் பக்கதுணையாய் இருந்து செயற்பட்ட தமிழ்கட்சிகளான புளொட் போன்ற கட்சிகளை விமர்சிப்பதற்கு இந்த சந்தர்ப்பவாத அரசியல் நடாத்தும் கோடரிகாம்புக்கு எந்த முகாந்திரையும்
கிடையாது.

வசதி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம். தனது குடும்பத்தை பாதுகாத்து கொள்வதும், சொத்து சேகரித்து கொள்வதுமே இவரது கொள்கை. இந்தியாவில் பத்மநாபா புலிகளால் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது துணைவியார் ஆனந்தி பெயரில் தமிழகத்தில் இருந்த வீட்டினை போலி கையெழுத்து போட்டு வித்தவர் இந்த சுரேஸ் ஆவர்.

இந்திய பெண்மணியாக ஆனந்தி அவர்கள் இருந்தபோதும், பத்மநாபா பெயரில் அறக்கட்டளை அமைப்பை கட்டியமைப்பதற்காகவே மேற்படி வீட்டை ஆனந்தி அவர்கள் வைத்திருந்தார். இந்நிலையில்தான் மேற்படி வீட்டை சுரேஸ் திருட்டுத்தனமாக அபகரித்துக் கொண்டார். கண்ணியமான பெண்மணியாக இருந்தபடியால் ஆனந்தி அவர்கள் சட்டநடவடிக்கை எடுக்க கூடிய நிலையில் இருந்தும் தனது கண்ணியத்தை
வெளிப்படுத்தியுள்ளார். இது மட்டுமல்ல கொழும்பு வத்தளை பகுதியில் உள்ள .பி;ஆர்.எல்.எவ் அமைப்பின் பெயரில் வாங்கப்பட்ட வீட்டை கபளீகரம் செய்து கொண்டவர்தான் இந்த சுரேஸ் என்ற சுரெஸ் பிரேமச்சந்திரன்.

இதுமட்டுமா கடந்த உள்ளாட்சி தேர்தல் நிதியாக வெளிநாடுகளில் இருந்து புலிகளால் அனுப்பி வைக்கப்பட்ட 1 கோடி ரூபாயில் சிறு தொகையை தமிழ்கூட்டமைப்புக்கு செலவழித்துவிட்டு மிகுதி நிதியை தனது பொக்கற்றுக்குள் போட்டுக்கொண்டவர்தான் இந்த ஈனப்பிறவி சுரேஸ் பிரேமச்சந்திரன்.

இவருக்கு தமிழ்மக்களின் விடுதலை பற்றியோ புலிகளின் போராட்டத்தை குறைகூறுவதற்கோ அல்லது மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் கட்சிகளை விமர்சிப்பதற்கு எந்தவித அடிப்படை தகுதியுமற்றவர். தமிழ் கூட்டமைப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகி இவர் மக்களுக்கு செய்த சேவை என்றால். மனைவி பிள்ளையை கனடாவுக்கு அனுப்பியது மட்டுமல்லாமல் அங்கே அவர்களுக்கு நிரந்தர
வதிவிடவுரிமையயை பெற்றுகொண்டு பின்னர் இந்தியாவுக்கு அழைத்து முன்னைநாள் இந்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மூலம் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கல்லூரியில் மகளுக்கு அனுமதி பெற்றதுதான் இவர் பாராளுமன்ற உறுப்பினராகியதன் பலன்.


குருபரன்
பிரித்தானியா

மேலும் இங்கே தொடர்க...

28 அக்டோபர், 2009

28.10.2009 தாயகக்குரல் 25

இலங்கையில் முதலில் நடைபெறப் போகும் தேர்தல் ஜனாதிபதி தேர்தலா? அல்லது பொதுத் தேர்தலா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற யோசனைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தேர்தல்கள் உரிய காலத்தில் நடைபெறுவதானால் முதலில் நடைபெற வேண்டிய தேர்தல் 2010 ஏப்ரலில் பாராளுமன்றத் தேர்தலாகும்.

ஜனாதிபதி தேர்தல் 2011 பிற்பகுதியில் நடைபெறவேண்டும். ஆனால் யுத்தத்தில் புலிகளை அரசாங்கம் வெற்றிகொண்டதால் ஜனாதிபதியின் செல்வாக்கு உச்சமடைந்த நிலையில் 2010 ஜனவரியில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என்ற கருத்து மேலோங்கியிருந்தன. ஆனால் தென்மாகண சபைத் தேர்தலுக்குபின்னர் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடக்குமா அல்லது பொதுத் தேர்தல் முதலில் நடக்குமா என்ற சந்தேகங்களை செய்தி ஊடகங்கள் ஏழுப்பியிருந்தன. இந்த சந்தேகங்களுக்கு விடை 15ம் திகதி நடைபெறும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மகாநாட்டில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் 2010 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலையும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தலையும் நடத்துவதையே விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால்; இரண்டு தேர்தல்களும் ஒரே தினத்தில் நடைபெறக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அது தொடர்பாக ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன யாப்பா தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெறும் பட்சத்தில் மிகவும் பலவீனப்பட்டுள்ள நிலையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியால் மகிந்த ராஜபக்ஷாவுக்கு பலமான போட்டியை ஏற்படுத்தமுடியாது. எனவேதான் எதிர்கட்சிகளை இணைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்து அந்தக் கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் முயற்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில்தான் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது கூட்டுப்படை பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்கட்சி கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவார் என்ற செய்திகள் வெளிவந்தன. சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வருவாரா இல்லையா என்பது தெரியாத நிலையில், இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் வேலையை இராஜினாமா செய்தோ, ஓய்வு பெற்ற பின்னரோ தேர்தலில் போட்டியிடுவதை யாரும் தடுக்கமுடியாது எனவும் சரத் பொன்சேகா அரசியலுக்கு வந்தால் தங்களுக்கு பேராபத்து என்பதாலேயே அவர்மீது அரசாங்கம் அவதூறு கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் ரணில் தெரிவிக்கிறார். இராணுவத்தினரை முதல் தடவையாக தென்மாகாண சபைத்த தேர்தலில் போட்டியிட வைத்தது அரசாங்கமே எனவும் ரணில் தெரிவிக்கிறார். இன்னொரு பக்கம் புதிய ஹெல உறுமய கட்சி முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறது. படையினருக்கு தலைமை தாங்கி யுத்தத்தில் வெற்றி பெற்ற இராணுவத் தளபதிக்கு நாட்டுக்கு தலைமைதாங்கி வழி நடத்த ஏன் முடியாது எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்கட்சி கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியிருந்த செய்தி குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு எதிர்கட்சிகளின் கூட்டணியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் பட்டியலில் முன்னாள் நீதியரசர் சரத் என்.டி.சில்வாவும் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலில் எந்தக்கட்சி சார்பில் யார் நிற்கிறார் என்பதல்ல பிரச்சினை. ஜனாதிபதி வேட்பாளர் தமிழ் மக்கள் பிரச்சினையில் என்ன தீர்வை முன்வைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். எதிர்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகள் அல்லது பொது வேட்பாளரை ஆதரிப்பதாக கூறும் கட்சிகளின் பொதுவான கோட்பாடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதுதான் .இந்தக் கூட்டணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணையப்போவதாகவும் செய்திகள் வெளி வந்தன. ஆனால் முஸ்லிம் காங்கிரசுடன் ஒரு உடன்பாட்டுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இனப்பிரச்சினை தொடர்பாக கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தக் கூட்டை ஆதரிக்கும் சில கட்சிகள் இனப்பிரச்சினையில் இனவாதப் போக்கை கொண்டவர்கள். இவர்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது திருத்தத்தை அமுல் படுத்தப்படுவதைக்கூட எதிர்ப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிக்கக்கூடாது என கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தப்போகும் வேட்பாளரையே ஆதரிக்கப்போகிறார்களோ என்ற சந்தேகத்தை உருவாகியுள்ளது.
இதற்கிடையே தமிழ் முஸ்லிம் கட்சிகளிடையே ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றது.

இந்த கூட்டமைப்பு தேர்தலை நோக்கமாக கொண்டதல்ல என்றும் சிறுபான்மையினரின் பலத்தை எடுத்துக் காட்டுவதற்கும் இரு சமூகங்களினதும் உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக்கொள்வதற்குமான கூட்டமைப்பாகவே இருக்கும் எனவும் தேர்தல் இரண்டாம் பட்சமே எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தை ஜனநாயக வழிகளிலேயே மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான கூட்டமைப்பு ஏற்படுதல் அவசியமே. ஆனால் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்தால் மட்டும் போதாது. மக்களும் இணையவேண்டும். அப்போதுதான் தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும்.

மேலும் இங்கே தொடர்க...
கெப். கொலராடோ கப்பல் நிவாரணப்பொருள் விநியோகம் தொடர்பில் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் வவுனியா அரசஅதிபர் சந்திப்பு-
ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமென ஐ.தே.கட்சி தெரிவிப்பு-

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஐ.தே.கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அக்கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது இக்கூட்டமைப்பில் 04 பிரதான கட்சிகள் மற்றும் 20 அமைப்புகள் தம்முடன் கைகோர்த்து நிற்கின்றன. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவதே இந்தப் பொதுக் கூட்டமைப்பின் பிரதான நோக்கமாகும். ஜே.வி.பி உள்ளிட்ட ஏனைய கூட்டமைப்புகளிலுள்ள உறுப்பினர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதுடன், அமைச்சர்களின் எண்ணிக்கையை 35ஆக குறைப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தமும் கொண்டுவரப்படும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியுள்ளார்.


இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் இன்று வவுனியா அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கெப் கொலராடோ கப்பலின் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். கெப் கொலராடோ கப்பலின் 884தொன் நிவாரணப் பொருட்கள் இடம்பெயர்ந்தோர்க்காக அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 31ம் திகதி கெப் கொலராடோ கப்பலில் இந்தப்பொருட்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் சில மாதங்களின் பின்னர் இப்பொருட்கள் கடந்த சனிக்கிழமையன்று துறைமுக அதிகாரசபையினால் விடுவிக்கப்பட்டது. இதனையடுத்து அவை வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்நிவாரணப் பொருட்களின் தர நிர்ணயம் தொடர்பில் இலங்கை தர நிர்ணய சபை இன்று அறிக்கை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இங்கே தொடர்க...
ஏ9 பாதையின் ஊடான அம்புலன்ஸ் சேவைகள் இன்றுமுதல் ஆரம்பம்-
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதிருந்தால் பிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருந்திருப்பாரென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிப்பு-

தொழிற்சங்க போராட்டம் என்ற பெயரில் ஜே.வி.பியானது அரசியல் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறதென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது இந்த நாட்டில் இல்லாதிருந்திருந்தால் பிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருந்திருப்பார். 2004ம் ஆண்டில் பதவியில் இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பல அமைச்சுக்களை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின்கீழ் பெற்றுக்கொண்டார். அவ்வாறு செயற்பட்டிருக்காவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சிபீடத்தில் இருந்திருக்கும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை காரணமாக யுத்தத்தின்போது வெற்றிகரமான தீர்மானங்களை செயற்படுத்த முடிந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் குறைபாடுகள் இருக்குமாயின் அவற்றைத் திருத்திக் கொள்ளவேண்டும். இதற்காக புத்திஜீவிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.9 பாதையின் ஊடான அம்புலன்ஸ் போக்குவரத்து சேவைகள் இன்றுமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தீவிர சிகிச்சைகளுக்காக கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு தரைவழியின் ஊடாக அழைத்துவர முடிந்துள்ளது. இந்த சேவையின் முதற்கட்டமாக சென்ற். ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒருதொகுதி நோயாளர்கள் இன்று அழைத்துவரப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை வந்துள்ள இந்திய இராணுவக் குழு - கோத்தபாயா சந்திப்பு

சர்வதேச விசாரணைகளுக்கு இணங்கியுள்ளமை ஒரு மாயை:மனித உரிமைகள் கண்காணிப்பகம்




விசாரணைகளைத் தவிர்க்கும் பொருட்டு இலங்கை அரசாங்கம் மாயையான சூழலைத் தோற்றுவித்து, சர்வதேச போர்க் குற்றம் தொடர்பான விசாரணைகளுக்கு இணங்கியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி - மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமானமற்ற போர் சட்ட முறைகளுக்கு எதிரான யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் கடந்த 22 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

யுத்த காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி, 7000 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், 13,000 இற்கும் அதிகமான மக்கள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் போர்க் காலத்தில் பொது இடங்களான வைத்தியசாலைகள் மற்றும் பொது நிலையங்களை இலக்கு வைத்து எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்தமை வெளிப்படையான உண்மை. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் செய்மதிப்படங்களும் உறுதி செய்திருந்தன.

இந்த நிலையில், அவற்றுக்கு எதிராக சர்வதேசத்தின் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச ரீதியாக வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் அவற்றை நிராகரித்து வந்த இலங்கை அரசாங்கம், தற்போது அதனைத் தவிர்ப்பதாக உள்நாட்டு பக்கச் சார்பான நிபுணர்களை நியமித்து விசாரணை நடத்துவதாகவும், உண்மை நிலையினை நீதியான முறையில் சர்வதேச விசாரணைக் குழுவே கண்டறியும் எனவும் மனித உரிமைகளுக்கான ஆசிய பிராந்திய செயற்பாட்டாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்


வந்துள்ள உயர் கட்டளை கற்கைநெறியை பயிலும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

பிரிகேடியர் மொனி சன்டி தலைமையில் 14 அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழுவில் இந்தியாவின் இராணுவ மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் அடங்குகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...
புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் வவுனியாவில் கைது


மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோரில் 66 இலங்கையர்கள் விடுதலை

தடுத்து வைக்கப்பட்டிருந்த 66 இலங்கையர்களையும் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட அனைவரையும் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய (யுன்.என்.எச்.சிஆர்)அதிகாரிகளிடம் குடிவரவு அதிகாரிகள் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இவர்கள் அனைவரும் நாடொன்றுக்கு செல்ல அனுமதிக்கப்படும் வரை, அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இன்று இரு பஸ்களில் ஏற்றி தலைநகர் கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உரிய பயண ஆவணங்கள் இன்றி மலேசியாவில் தங்கியிருந்த 105 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு கடந்த செப்டெம்பர் மாதம் முதல் மலேசியாவின் தென் மாநிலமான ஜொகூரிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து யு.என்.எச்.சி.ஆர். தமக்கு அகதி அந்தஸ்து தர வேண்டுமென கோரி, கடந்த வாரம் முதல் ஆறு பேர் உண்ணாவிரதமிருந்தனர்.இவர்களுள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் மேலும் 21 பேரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில குடிவரவு உதவி பணிப்பாளர் அம்ரன் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்தமைக்காக யு.என்.எச்.சி.ஆரின் வெளிவிவகார உறவுகளுக்கான அதிகாரி ஜன்ரே இஸ்மாயில் மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையோரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் தாம் மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்

பாதுகாப்புப் பிரிவினருக்கு உளவுத் தகவல்களை வழங்கும் போர்வையில் மறைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதாக தெரிவித்து பொலிசாருடன் இணைந்து செயற்பட்ட இந்நபர், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிவனேசராஜா வினோத்குமார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக் கடற்படையினர், இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகளில் குறித்த நபர் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த குறித்த நபர் தாமாகவே புலிகள் பற்றிய தகவல்களை வழங்குவதாக தெரிவித்துப் பொலிஸாரிடம் சரணடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இவர் வழங்கிய உளவுத் தகவல்கள் போலியானவை எனப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிங்களவர் ஒருவரைப் போன்று நடித்து இவர் தெற்கில் தகவல்களைத் திரட்டியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...

27 அக்டோபர், 2009

அரச வங்கிகள் கடன் வட்டி வீதங்களை 8 - 12 வீதம் வரை குறைக்க வேண்டும் - ஜனாதிபதி பணிப்பு













அரசாங்க வங்கிகளின் மூலமாக வழங்கப்படும் கடனுக்கு அறவிடப்படும் வட்டி வீதங்களை 8 12 வீதம் வரை குறைக்குமாறு நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைமை அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் இதுவரை காலமும் 15% முதல் 22 % வரை அறவிடப்பட்ட 8 வீதத்திற்கும் 12 வீதத்திற்கும் இடையில் அறவிடப்படும் இந்த நடைமுறை நாளை புதன்கிழமை முதல் அமுல்படுத்தப்படும்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரச வங்கிகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரச வங்கிகளின் பிரதானிகளுடன் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வட்டி வீதத்தை குறைப்பதன் மூலமாக கடன்பெறுவோர் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்வதுடன் தவணைகளும் குறைவடையும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாயம், சுற்றுலாத்துறை, கைத்தொழில் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட நடுத்தர துறைகளான நிர்மாணத்துறைகளை மேம்படுத்தவேண்டும்
மேலும் இங்கே தொடர்க...
இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுப்பொருட்களை கொள்ளையிட்டவர்கள் கைது-
நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களில் இதுவரை 58ஆயிரம் பேர் மீள்குடியமர்வு-

நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களில் இதுவரையில் 58ஆயிரம் பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் இதனைத் தெரிவித்துள்ளார். மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு ஆறுமாத காலத்திற்குத் தேவையான உணவுப்பொருட்கள் சமையல் பாத்திரங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தலா 25ஆயிரம் ரூபா வீதம் அவர்களின் வங்கிக் கணக்கில் இடப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் எஞ்சியுள்ள மக்கள் எதிர்வரும் இருமாத காலத்திற்குள் முற்றாக மீள்குடியமர்த்தப்படுவர். கிளிநொச்சி, முல்லைத்தீவில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு 14 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்ட ஒருதொகுதி உணவுப்பொருட்களை கொள்ளையிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை இன்றுஅதிகாலை கைதுசெய்துள்ளதாக ஹபரணைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். ஹபரணை வீதியினூடாக வந்த சந்தேகத்திற்கிடமான லொறியொன்றினை பொலீசார் சோதனையிட்டபோதே இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது மூதூர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொருட்களே களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹபரணைப் பொலீசார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இங்கே தொடர்க...
சென்னை விமான நிலையத்தில் வைத்து மூன்று இலங்கையர்கள் கைது-
செட்டிகுளம் முகாமிலிருந்த மன்னாரைச் சேர்ந்த 52குடும்பங்கள் அனுப்பிவைப்பு-

வவுனியா செட்டிகுளம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் நேற்று மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 52 குடும்பங்களைச் சேர்ந்த 147பேர் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலுப்பைக்குளம் அழைத்துச் செல்லப்பட்டுள்ள மக்களில் இதுவரை 1500ற்கும் மேற்பட்டவர்கள் மன்னார் மாவட்டத்திலுள்ள அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் வைத்து மூன்று இலங்கையர்கள் இன்றுகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் போலிக் கடவுச்சீட்டுடன் கொழும்பு செல்லும் விமானமொன்றில் பயணிப்பதற்கு முயற்சித்த வேளையிலேயே தமிழகம் கியூபிரிவு பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபிரிவு பொலீசார் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் இங்கே தொடர்க...
கிளிநொச்சியில் விரைவில் தமிழர்கள் குடியமர்வு

http://www.virakesari.lk/news/admin/images/landmine200.jpg
புலிகளின் நிர்வாகத் தலைநகராக விளங்கி வந்த கிளிநொச்சியில் விரைவில் மீண்டும் தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு அதிகாரி எமல்டா சுகுமார் தெரிவித்தார். இலங்கை வட பகுதியில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த கடும் போரை அடுத்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்கள் கடும் துயரப்படுவதாக இலங்கை அரசுக்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இலங்கை சென்ற திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவிடம் விரைவில் தமிழர்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று அதிபர் ராஜபட்ச உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து அடுத்த சில தினங்களிலேயே குடியமர்த்தும் பணிகள் தொடங்கியது. விரைவில் கிளிநொச்சியிலும் குடியமர்வு நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான சண்டைக்குப் பின்னரும் கிளிநொச்சி நகரத்தில் பல இடங்களில் கட்டடங்கள் சேதமடையாமல் அப்படியே இருப்பதைப் பார்க்க முடிகிறது. வீடுகள் பல சேதமடையாமல் நல்ல நிலையில் இருப்பதை நாங்கள் பார்த்தோம் என்று கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதி அரசு நிர்வாகியான எமல்டா சுகுமார் தெரிவித்தார். அரசு முகாம்களிலிருந்து அழைத்து வரப்படும் தமிழர்களை முதலில் தாற்காலிகமாக குடியமர்த்துவதற்காக இரண்டு கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளோம். மாலவி மத்திய கல்லூரி, யோகபுரம் மத்தியக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் முதல் கட்டமாக குடியமர்த்தப்படுவார்கள். மக்களை குடியமர்த்துவதற்கு முன்பாக அனைத்து வீடுகளும் பள்ளிக் கட்டடங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். நல்ல நிலையில் உள்ள கட்டடங்களில் மட்டுமே குடியமர்த்தப்படுவார்கள் என்றார். கிளிநொச்சிப் பகுதியில் உள்ள ஜெயபுரம், பூநகரி, முலங்காவில், நஞ்சிக்குடா ஆகிய இடங்களில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள். இங்கு மட்டும் மொத்தம் 25 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவார்கள் என்று எமல்டா சுகுமார் கூறினார்.

இந்தப் பகுதிகளில் அமைக்கப்படும் தாற்காலிக முகாம்களில் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் 100 குடும்பங்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்றார் அவர். மறு குடியமர்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக ராணுவ அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்று அவர் கூறினார். இந்த மக்களை விரைவில் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. அதனால்தான் தாமதமாகிறது என்று அவர் கூறினார். இந்தப் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், நீர் நிலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், பாலங்கள் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அரசு உரிய நிதி ஒதுக்கி உள்ளது என்றார் அவர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் புதுமத்தளன் ஆகிய இடங்களைப் பார்வையிட்டோம். அங்கு கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. இது தொடர்பாக அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார். புதுக்குடியிருப்பு மற்றும் புதுமத்தளன் ஆகிய பகுதிகள் ஆபத்தான பகுதிகள் என்று ராணுவம் அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
வன்கூவர் சிறையிலுள்ள இலங்கை அகதிகள் தம்மை விடுவிக்கக் கோரிக்கை




- வன்கூவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 75 பேரும், நேற்றைய தினம் தம்மை விடுவிக்குமாறு, கனேடிய குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் கோரியதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பலரின் அடையாளங்களை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுவதால், அவர்களை அடையாளப்படுத்த முடியாதிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அவர்களின் அநேகமானவர்களை சந்தித்ததாக கூறிய கனேடிய வழக்கறிஞர் ஒருவர், அவர்கள் அனைவரிடமும் தகுந்த அடையாள ஆவணங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் அந்த அகதிகளில் ஒருவர் குடிவரவு அதிகாரிகளிடம் தமது இலங்கை கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் என்பவற்றை வழங்கியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவரிடம் இருந்து இந்திய கடவுச்சீட்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரின் உண்மையான விபரங்கள் எதனையும் உறுதிப்படுத்த முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அகதிகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...
யுத்தத்தின் பின் இலங்கை நிலவரம் : ஐரோப்பிய ஒன்றியம் ஆராயும்


மேனிக்பாமிளிருன்ட்னிக்பாமிலிருந்து 147 பேர் மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திற்கு மாற்றம்



பின்னரான இலங்கை நிலவரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஆராய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 29,30ஆம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாடு நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

காலநிலை மாற்றம், பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உலகப் பிரச்சிகைள் குறித்து இந்த மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஈரான், பொஸ்னியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் நிலவரம் குறித்தும் இலங்கை யுத்தத்தின் பின்னரான நிலவரம் குறித்தும் ஆராயப்படவுள்ளது.

ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாத வரையிலும் இலங்கை ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைக் கோர முடியாது என ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கை விவகாரப் பொறுப்பாளர் பெர்னார்ட் செவாஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனித உரிமை மீறல் விசாரணை உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாத நிலையில் சலுகைத் திட்டங்களை இலங்கை கோரக் கூடாது.

ஜீ.எஸ்.பி. சலுகைத் திட்டம் வழங்கும் போது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சில நிபந்தனைகள் காணப்படுகிறது.

சலுகைத் திட்டத்தை வழங்க வேண்டுமாயின் விசாரணை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான பின்னணியில் சலுகைத் திட்டத்தை நீடிக்குமாறு கோரும் எந்தவொரு உரிமையும் இலங்கைக்கு இல்லை.

இந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாவிட்டால் சலுகைத் திட்டம் தேவையில்லை என எந்த நேரத்திலும் இலங்கை அறிவிக்க முடியும்.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகள் தொடர்பில் நன்கு அறிந்து கொண்டதன் பின்னரே இலங்கை இந்தத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தது.

ஐரோப்பிய ஒன்றிய சட்டதிட்டங்களைப் பின்பற்றும் நாடுகள் மட்டுமே இந்த சலுகைத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். பேச்சுவார்த்தைகளின் மூலம் சமரசம் செய்து கொள்ள முடியாது." என்றார்


மெனிக்பாம் நலன்புரி நிலைஅயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் நேற்று மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தவர்களில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் இவ்வாறு அழைத்து வரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நலன்புரி நிலையத்திர்கு அழைத்து வரப்பட்ட மக்களில் இதுவரை 1500 இற்கும் மேற்பட்டவர்கள் மன்னார் மாவட்டத்திலுள்ள அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...
அகதிகளை இந்தோனேஷிய முகாமில் ஒப்படைக்கத் தீர்மானம் : ஸ்டீபன் ஸ்மித்




செல்ல முயற்சித்த வேளையில், இந்தோனேஷியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 78 இலங்கையர்களைச் சிங்கப்பூருக்கு அருகிலுள்ள இந்தோனேஷியத் தடுப்பு முகாமொன்றில் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்தோனேஷியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கைத் தமிழர்களை மனித நேய அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இந்தோனேஷிய அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்தோ. மாகாண ஆளுநர் மறுப்பு

அதே வேளை, இந்தோனேஷிய, ரியோ தீவுகள் மாகாண ஆளுநர் இஸ்மெத் அப்துல்லா இலங்கையரை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளதாக பிறிதொரு செய்தியில் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...


மன்னாரில் இருந்து அடம்பன் கிராமத்துக்கு கடந்த 22ஆம் திகதி முதல் புதிதாக போக்குவரத்து சேவை
நாடாளுமன்ற - ஜனாதிபதி தேர்தல்கள் ஒரே தினத்தில் : அரசு அறிவிப்பு



தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தத் தீர்மானிக்கப்படுள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கைப் பிரகடனத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது


மன்னாரில் இருந்து அடம்பன் கிராமத்துக்கு கடந்த 22ஆம் திகதி முதல் புதிதாக போக்குவரத்து சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 22 ஆம் திகதியன்று மாந்தை மேற்குப் பகுதியில் மக்கள் மீள குடியமர்த்தப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து இம்மக்களின் நலன்கருதி உடனடியாகப் போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை பஸ் ஒன்றே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.நாளாந்தம் மன்னாரில் இருந்து காலை 8.00 மணிக்கும், மாலை 3.00 மணிக்கும் இரண்டு சேவைகள் இடம்பெறுகின்றன. இப்பஸ் சேவை உயிலங்குளம் சோதனைச் சாவடியூடாக அடம்பன் சென்றடையுமென தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...
நல்லாட்சியை இலக்காகக் கொண்டு வளமான கூட்டணியை களமிறக்குவோம்- ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச கூறுகிறார்

ஜனநாயகம், நல்லாட்சி, தேசிய சமாதானம் மற்றும் தேசிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட வளமான கூட்டணியொன் றை எதிர்வரும் தேர்தல்களின் போது களமிறக்குவோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பிற்கான நடவடிக்கைகளை ஐ.தே.க. செயல்வடிவில் காட்டினால் மாத்திரமே அதனை பொதுமக்கள் நம்புவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே சோமவன்ச அமரசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, தற்போதைய அரசாங்கத்தின் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டதனாலும் ஜனநாயக விரோத செயற்பாடுகளும் காணப்பட்டமையால் எதிர்கால அரசியலுக்காக வளமான ஒரு கூட்டணி அமைப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே கலந்தாலோசித்து உள்ளோம்.

முடிவுகள் எடுப்பதே தவிர புதிதாக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டியதில்லை. எமது கூட்டணியின் நோக்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு மற்றும் நல்லாட்சி என்பவையேயாகும். ஐ.தே.க வினால் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராக தற்போது ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐ.தே.க வினர் குரல் கொடுக்கின்றனர். ஆனால் ஜே.வி.பி அப்போதே இம்முறையினை எதிர்த்து போராடியது.

எவ்வாறாயினும் ஐ.தே.க.வின் மீது பொதுமக்களுக்கோ ஏனைய அரசியல் கட்சிகளுக்கோ நம்பிக்கை ஏற்பட வேண்டுமாயின் எதிர்ப்புக்களை வார்த்தைகளில் வெளிப்படுத்தாது செயல்வடிவில் காண்பிக்க வேண்டும். நிச்சயமாக எதிர்வரும் தேர்தல்களின் பின்பு நாட்டில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டு நல்லாட்சியே ஏற்பட வேண்டும். ஆனால் மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்த இந்த அரசாங்கம் முயற்சிப்பது மக்கள் ஆணையை மீறும் செயலாகும்
மேலும் இங்கே தொடர்க...
படகை தீ வைத்து எரிக்கப்போவதாக இலங்கை அகதிகள் அச்சுறுத்தல்



மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை படகு மக்கள் தாங்கள் கிறிஸ்மஸ் தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்படாத பட்சத்தில் தங்கள் படகை தீ வைத்து கொளுத்தப் போவதாக எச்சரித்துள்ளனர் என இந்தேõனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதி கிட்டுமா? கிட்டாதா என்ற காரணத்தினால் ஆத்திரமடைந்துள்ள இவர்கள் தற்பொழுது தங்களுக்கு அனுமதி கிடைக்காது போனால் படகை கொளுத்துவதைத் தவிர வேறு வழி இல்லையென கூறியுள்ளதாக மனித உரிமை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிலிருந்தும், கிறிஸ்மஸ் தீவை நோக்கி 30 அடி நீளமான மரக் கப்பலொன்றில் இம்மாத ஆரம்பத்தில் சுமார் 260 அகதிகள் சென்று கொண்டிருந்த நிலையில் இந்தோனேஷிய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் அவர்களின் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், மெராக் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இவர்களுக்குத் தேவையான உணவுகள், மருந்து வகைகள் என்பன சர்வதேச அமைப்பொன்றினால் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, குறித்த படகு மக்கள் படகை கைவிட்டு தற்காலிக குடியிருப்புகளுக்கு வருவதற்கு சம்மதிப்பார்களேயாயின் அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுமென சட்ட மற்றும் மனித உரிமைகள் திணைக்களத்தின் அதிகாரி பொப்பி புடியஸ்வத்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, படகிலுள்ள பெரும்பாலானவர்கள் சுவாசித்தல் மற்றும் தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் படகுக்குள் சனநெரிசல் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அகதிகள் இந்தோனேஷியா கடற்கரைப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் குறித்து இந்தோனேஷியாவே கவலை கொள்ள வேண்டுமென அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

அமெ. இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக ஆராய சுயாதீன குழு

ஒருவாரத்துக்குள் ஜனாதிபதியால் நியமனம்

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம், அதன் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விரைவில் அறிவிக்கவுள்ளார். இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பாக ஆராயவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒரு வார காலப் பகுதிக்குள் சுயாதீனக் குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார். காங்கிரஸ¤க்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப் பகுதிக்குள் இடம் பெற்ற சம்பவங்களில் எந்தவொரு இடத்திலும் போர் விதிகளை மீறியமைக்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இல்லையெனவும் அவை சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட வில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை சாதகமாக அமைந்த போதிலும் இதனை பகடைக்காயாக உபயோகித்து சில அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் அரசியல் இலாபம் தேட முனைத்துள்ளன.

இவ்வாறான அமைப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி அறிக்கை தொடர்பாக ஆராயவென சுயாதீனக் குழு நியமிக்கப்படவுள்ளது. இக்குழு பக்கச் சார்பற்ற முறையில் அதனை ஆராய்ந்து ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.

குழு முன்வைக்கும் அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஜனாதிபதியி னால் விரைவில் அறிவிக்கப்படும்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம் மாநாட்டில் அமைச்சருடன் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, ஜெனீவாவின் முன்னாள் உயர்ஸ்தானிகரும் புதுடில்லியின் புதிய உயர்ஸ்தானிகராக பதவியேற்க விருப்பவருமான பிரசாத் காரியவசம் உள்ளிட்ட ஐவர் கலந்து கொண்டனர்.

அறிக்கையின் முன்பக்க அட்டையில் “காங்கிரஸ¤க்கு சம்பவங்கள் தொடர்பான அறிக்கை” என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் போர் குற்றங்கள் தொடர்பாக விபரிக்கப்படவில்லை.

இதன் மூன்றாம் பக்கத்தில் இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றதற்கான எந்த சாட்சியங்களும் இல்லையென தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் வெளியிட்ட தவறான கருத்துக்களை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் இலங்கையில் போர்க் குற்றம் இடம் பெற்றிருப்பதாக விவாதத்தினை முன்னெடுத்திருக்க வேண்டுமெனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.

சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட சதியின் விளைவாகவே காங்கிரஸ¤க்கு இலங்கை அரசாங்கம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கை மீது மட்டுமன்றி ஈராக், ஜோர்டான், பாகிஸ்தான், மெக்சிக்கோ உள்ளிட்ட பல நாடுகள் குறித்தும் காங்கிரஸ், இராஜாங்க திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதெனவும் அமைச்சர் சமரசிங்க கூறினார்
மேலும் இங்கே தொடர்க...
உடுவில் மகளிர் கல்லூரி அதிபராக மீண்டும் திருமதி.சிராணிமல்ஸ்

உடுவில் மகளிர் கல்லூரி அதிபராக மீண்டும் இன்று முதல் முன்னாள் அதிபர் திருமதி.சிராணிமல்ஸ் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்று கல்லூரிக்கு சமூகமளித்த சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பொது மக்களினால் புதிய அதிபர் மற்றும் அமைச்சருக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வில் போதகர்கள், பொதுமக்கள், பழைய மாணவர்கள்,மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இங்கே தொடர்க...
மனித உரிமை-பாதுகாப்பு தொடர்பில் இலங்கை-ரஷ்யா இடையில் ஒப்பந்தம் இன்று கைச்சாத்து
ஆந்திர எல்லையோர பகுதியில் 17

இலங்கை மீனவர்கள் கைது











ஆந்திர எல்லையோர பகுதியில் 17

இலங்கை மீனவர்கள் கைது


கடலோர காவல் படையினர் ஆந்திர எல்லையோர பகுதியில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 17 பேரைக் கைது செய்தனர்.

கைதான 17 பேரும் 3 படகுகளில் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவர் எனவும் அவர்களிடம் இருந்து 1500 கிலோ மீன் பறிமுதல் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகின்றது.

கைதான இலங்கை மீனவர்கள் 17 பேரும் காசிமேடு மீன்பிடித் துறைமுகப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்த சூழலையடுத்துத் தற்போது அமைதி நிலவுகிறது.

இந்தச் சூழ்நிலையில் இன்னுமொரு பயங்கரவாதம் உருவாகாமலும் மனித உரிமை பாதுகாப்பையும் நோக்கமாகக் கொண்டே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இன்று இது தொடர்பாக இடம்பெற்ற வைபவத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லகம தெரிவித்தார்.

மேற்படி வைபவம் இன்று காலை வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது ஒப்பந்தம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சுற்றுலாத்துறை, மனித உரிமை என்பன தொடர்பாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கி வி. லவ்ரோவ் உடன் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது
மேலும் இங்கே தொடர்க...