28 பிப்ரவரி, 2011

விமானப்படைத் தளபதியாக எச்.டி.அபேவிக்ரம பதவியேற்பு




இலங்கை விமானப்படைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் எச்.டி.அபேவிக்ரம இன்று திங்கட்கிழமை காலை உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

கொழும்பிலுள்ள விமானப்படை தலைமையகத்தில் இந்த பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு முன்னர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக விமானப்படை தளபதியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

எச்.டி. அபேவிக்ரம கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார். 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி விமானப்படையில் இணைந்த இவர் 30 வருட அனுபவம் வாய்ந்தவராவார்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் வன்முறை சம்பவங்கள் 159 ஆக அதிகரிப்பு


வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட இறுதி தினத்திலிருந்து இதுவரையில் நாடளாவிய ரீதியில் 159 தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறை சம்பவங்களினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் 31 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் வன்முறை சம்பவங்கள் மேலும் தொடரும் நிலைமையே தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வாகாது : ஜே.வி.பி. தெரிவிப்பு


இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமை தீர்வாகாது. கடந்த 25 வருடகால கொள்கையில் எவ்விதமான மாற்றமும் கிடையாது.

நாட்டை பிரிக்காமல் சமஷ்டியில் தீர்வு பெற்றுக்கொண்டுள்ள உலக நாடுகளை இலங்கை முன்னுதாரணமாகக் கொள்வதே சிறந்தது என்று ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாடு அடைந்த சுதந்திரமோ, சமாதானமோ எவரையும் சென்றடையவில்லை. தங்கத்தையும் பணத்தையும் திருடியவர்கள் இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை திருடுகின்றனர் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், உலக நாடுகளில் சமஷ்டி முறை ஒரு நாட்டை இரண்டாக பிரிப்பதற்கும் பிரிக்காமல் இருப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பி. வலியுறுத்தும் சமஷ்டி முறைமை இலங்கையை துண்டாடுவதற்கல்ல. மாறாக பல்வேறு சமூக, அரசியல் காரணிகளால் பிரிந்துபோயுள்ள தமிழ், சிங்களம் என்ற இரு சமூகத்தை இணைப்பதற்கே ஆகும்.

1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.வி.பி.யின் ஸ்தாபகரும் தலைவருமான றோஹண விஜேவீர இலங்கையின் தேசியப் பிரச்சினை தொடர்பாக நூல் ஒன்றை வெளியிட்டார். அந்நூலில் நேரடியாகவே பெடரல் என்ற சமஷ்டி முறைமை தேசியப் பிரச்சினைக்கான தீர்வு ஆகாது. ஏனெனில் அத்தீர்வினால் அதிகாரப் பகிர்வு பொதுமக்களிடையே சென்றடையாது என்று தெரிவித்திருந்தார்.

அதே கொள்கையையே ஜே.வி.பி. கடந்த 25 வருடகாலமாக கொண்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் பொதுமக்கள் எதிர்பார்த்த நிவாரணங்களோ அபிவிருத்தியோ கிடைக்கவில்லை. மாறாக வறுமை மேலோங்கி பொதுமக்கள் பாரியளவு பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஜே.வி.பி.யின் வருடாந்த சம்மேளன மாநாட்டில் உரையாற்றிய அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணமுடியும் என்று கூறியிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

எரிபொருள் நிரப்பும் நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கை

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் நவீனமயப்படுத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமன்றி இதர தரப்பிற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் நவீனமயப்படுத்தப்படும் என்று பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் பெற்றோலியத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி மீண்டும் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாக்கப்பட்ட 107 எரிபொருள் நிரப்பும் நிலையங்களையும் நவீனமயப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட ஏற்பாடுகளின் பிரகாரம் பிணையாளர்கள் வசம் இருக்கின்ற எரிபொருள் நிரப்பும் நிலையங்களை நவீனமயப்படுத்துவதற்கும், அதற்காக அவர்களுக்கு நிதிவசதிகள் தேவையேற்படின் அதனை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரதேச சபைகளுக்குள்ள நிறைவேற்று அதிகாரம் வேண்டும்: மாவை சேனாதிராஜா


பாராளுமன்ற உறுப்பினர்களைவிட பிரதேச சபைகளுக்கு அதிக நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது. பிரதேச சபைகளின் ஊடாக மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எனவே எமது மக்களின் அடிப்படைத் தேவைகளை மக்களின் பிரதிநிதிகளே நிறைவேற்றக் கூடிய இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியடையும் வகையில் வேட்பாளர்கள் செயற்பட வேண்டும் என வவுனியா மாவட்ட பிரதேச சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் மத்தியில் உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வவுனியா நெல்லி ஸ்டார் விடுதியில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் வவுனியா நகரசபைத் தலைவருமாகிய ஜி.ரி.லிங்கநாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டத் தலைவர் டேவிட் நாகநாதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அங்கு மேலும் தெரிவித்ததாவது:

பல்வேறு சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் அரசு இப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றது. முதலில் மாதம் இருதடவைகள் பேச்சுக்கள் நடத்தப்படும் என கூறினார்கள். ஆனால் அதன்படி நடக்காவிட்டாலும் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பேச்சுக்களில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் அர்த்தமுள்ளதாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதற்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படுவதற்கும் இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூடிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பாதுகாப்புத் தொடரணி வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

பொலிஸ் ஜீப் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி, பின்னர் வீதியோரத்திலிருந்த கடையொன்றிலும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள் மூவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பெல்மதுளை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கதிர்காமம் பிரதேசத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த சேவா வனிதா பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த பொலிஸ் வாகனமே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மேற்படி பொலிஸ் ஜீப் பெல்மதுளை, சன்னஸ்கம பிரதேசத்தில் வீதியால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதியதுடன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியோரத்திலிருந்த கட்டிடங்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். காயமடைந்த 3 பொலிஸ் அதிகாரிகளும் பொதுமக்கள் இருவரும் பிரதேசவாசிகளின் உதவியுடன் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

கருணாநிதி அத்துமீறி மீன்பிடிக்கையில் இந்தியாவிடம் கையேந்துகிறது இலங்கை

இலங்கை கடலில் கருணாநிதி அத்துமீறி மீன் பிடிக்கையில் இந்தியாவிடம் தேங்காய்க்கு கையேந்தி அரசாங்கம் காத்திருக்கின்றது. தேர்தலின் பின்னர் அனைத்து துறைகளிலும் விலை அதிகரிப்பு இடம் பெறும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

பொது மக்கள் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். சட்டவிரோத சுவரொட்டிகளைஅகற்ற பொலிஸாருக்கு நிதி வழங்கப்படவில்லை. ஆனால் அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுக அங்குரார்ப்பண நிகழ்வில் இடம் பெற்ற மயிலாட்டத்திற்கு ஒரு கோடியே 82 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று கொழும்பில் இடம் பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே விஜித ஹேரத் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

தற்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உட்பட போக்குவரத்து. மின்சாரம், பரீட்சைகள் கட்டணம். பதிவுக் கட்டணம் என பலவற்றிலும் அரசாங்கம் கட்டண உயர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எரிபொருள் நிலையங்கள் 5 ரூபாவால் கட்டண அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்படாது வீண் பிரச்சினைகளையே தோற்றுவித்து வருகின்றது.

இந்தியா இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்களை பிடித்துச் செல்கின்றது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ, கடல் வளத்தை பாதுகாக்கவோ செயற்படாது இந்தியாவிலிருந்து தேங்காய் கொள்வனவு செய்யப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. இதனை தெங்கு அபிவிருத்தி அமைச்சர் மறுத்து வருகின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டில் மீண்டும் ஒருமுறை வன் முறை ஏற்படவோ அல்லது பிரி வினை ஏற்படவோ ஒரு போதும் இடமளிக்கமாட்டேன்.


அனைவரும் தமக்கிடையிலான பேதங்களை மறந்து இலங்கை, பொருளாதாரத்திலும் சமூக ரீதியி லும் சுபீட்சமடைய ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் முதலாவது பாரா ளுமன்றத்தின் உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பி னர்களில் ஒருவருமான எச். ஸ்ரீ நிஸ்ஸங்கவின் ஞாபகார்த்த நிகழ்வு வெள்ளவத்தையில் உள்ள ஸ்ரீ நிஸ்ஸங்க மன்றத்தில் கடந்த சனிக் கிழமை நடைபெற்றது. இதில் கல ந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கூறிய வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி அவர்கள் மேலும் கூறியதாவது:- நாட்டில் வெவ்வேறு சமயங்களையும் இனப் பிரிவுகளையும் சேர்ந்துள்ள மக்கள் வாழுகிறார்கள். அவர்கள் அனைவரும் இலங்கைத் தாயின் பிள்ளைகளாவர்.

பிரிவினைகள் எம்மைக் கட்டுப்படுத்திவிட் டால் எமது உண்மையான ஆற்றலைத் தெரிந்துகொள்ள முடியாது. நாம் பிரிவினை மோதல் என 30 ஆண்டுகளைக் கழித்துவிட்டோம். இனிமேல் இலங்கையரான நாம் அனைவரும் அமைதியையும் இன ஒற்றுமையையும் தேட வேண்டும்.

தாய்நாட்டின் தேவைக்கு ஏற்றவகையில் செயற்பட வேண்டியது அனைத்து இலங்கையர்களினதும் பொறுப்பாகும்.

கடந்த காலத்தில் தேசாபிமானிகள் மிகுந்த அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் செயற்பட்டனர். அவர்கள் சென்ற பாதையில் நாட்டை இட்டுச்செல்ல வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

எமக்கு உள்ள சவால்களையிட்டு நாம் தளர்ந்து விடக்கூடாது. மிகவும் கஷ்டத்துடன் கிடைத்த ஜனநாயகத்தையும் மக்கள் உரிமைகளையும் சுதந்திரத்தையும் இழக்க முடியாது. சவால்களுக்கு முகம்கொடுத்து நாட்டை நிரந்தர சமாதானம் மற்றும் சுபீட்சத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும்.

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒன்றுசேர்ந்து உதவ வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் அங்கு குறிப்பிட்டார்.

எச். ஸ்ரீ நிஸ்ஸங்க பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அவர் நாட்டை நேசித்த அரசியல்வாதி என்றும் மக்கள் ஆதரவையும் மதிப்பையும் பெற்றவராக அவர் திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார்.

அமரர் ஸ்ரீ நிஸ்ஸங்கவின் வீட்டிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆரம்பிப்பது தொடர்பான முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் அங்கு ஞாபகமூட்டினார்.

இந்த நிகழ்வையடுத்து ஸ்ரீ நிஸ்ஸங்க நூதனசாலையை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் மாயா மாவத்தையை எச். ஸ்ரீ. நிஸ்ஸங்க மாவத்தை என்று பெயரும் மாற்றினார்.

ஸ்ரீ நிஸ்ஸங்க ஞாபகார்த்த உரையை முன்னாள் பாராளுமன்ற செயலாளர் ஆற்றினார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் அத்துமீறல் எல்லை தாண்டினால் படகு உரிமம் ரத்தாகுமென இந்தியா எச்சரிக்கை

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் சம்பவங்கள் தொடர்வதாக யாழ் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக யாழ். மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்தார்.

எனினும், முன்னர்போன்று அதிக எண்ணிக்கையான தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது சற்றுக் குறைவடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தியக் கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் எரி பொருள் மானியம், படகு உரிமம் என்பன இரத்துச்செய்யப்படும் என இந்தியக் கடற்படையினர் எச்சரித்து ள்ளனர்.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதா பட்டினத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இந்தியக் கடல் எல் லையைத் தாண்டிச் சென்றுள்ளனர். இதனை ராடர் கருவிகள் மூலம் கண்காணித்த இந்தியக் கடற் படையினர் எல்லைதாண்டிய மீன் பிடிப் படகுகளின் உரிமையாளர் களை அழைத்துப் பேச்சுவார்த்தை யொன்றை நடத்தியிருந்தனர்.

இந்தியக் கடற்படை கொமா ண்டர் பிஜாரானியா தலைமையில் இந்தியக் கடற்படைத் தளத்தில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றதா கவும், எல்லைதாண்டும் மீனவர்க ளுக்கு அரசாங்கத்தால் வழங்கப் படும் எரிபொருள் மானியம், படகு உரிமம் என்பன இரத்துச்செய்ய ப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள் ளதாகவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

லிபியாவில் மேலும் பதற்றம்; உயிரிழப்புக்கள்: ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்: பல நகரங்கள் கிளர்ச்சியாளர் வசம்

லிபியாவுக்கு எதிராகப் பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளும் ஏகமனதாக வாக்களித்திருக்கும் நிலையில் லிபியாவிலி ருந்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் துனீசியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாத்திரம் 10 ஆயிரம் பேர் துனீசியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர் களில் பல பெண்கள் கைக்குழந்தைகளுடன் சென்றிருப்பதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. லிபியாவில் பல நகரங்களில் போராட்டம் விஸ்தீரனமடைந்திருக்கும் நிலையில் இதுவரை போராட்டங்கள் நடைபெறாதிருந்த திரிபோலி நகரை நோக்கியும் வன்முறைகள் பரவிவருகின்றன.

தொடரும் வன்முறை களால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. தேவைப்படும் பட்சத்தில் தனது ஆதரவாளர்களுக்கும் ஆயுதங்களை வழங்கத் தயார் என கடாபி அறிவித்திருக்கும் நிலையில், வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. லிபியத் தலைவர் கடாபி நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான சூழ்நிலை தோன்றியிருப்பதாக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துள்ளன.

எனினும். தமது ஆட்சி தொடர்ந்தும் நீடிக்கும் என்று லிபியத் தலைவர் கடாபியின் மகன் சய்வ் தெரிவித்துள்ளார். லிபியாவில் தற்பொழுது காணப்படும் நிலை சுமூகமாக்கப்பட்டு தமது ஆட்சி நீடிக்குமென்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, லிபியாவில் தோன்றியிருக்கும் வன்முறைகளைப் கட்டுப்படுத்தி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு லிபியாவின் முன்னாள் நீதி அமைச்சர் தலைமையில் பெங்காசியில் உருவாக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசாங்கத்துக்கு அமெரிக்கா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டக் காரர்கள் தமது ஆர்ப்பாட்டங்களைக் கைவிட எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை கடாபியும் கைவிடாதநிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப் பட்டுள்ளது. இதற்கிடையில் லிபிய நகரங்கள் யாவும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பெங்காசியில் உருவாக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு இராணுவத்தினரின் ஆதரவுடன் செயற்படும் கிளர்ச்சியாளர்கள் திரிபோலி நகரிலிருந்து 30 மைல் தொலைவில் உள்ள சாவியா நகரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்திற்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத் திற்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை தூத்துக்குடியில் இருந்து ஆரம்பமாகின்றது. 500 பயணிகளை அவர்களின் பொதிகளுடன் மிகவும் சிறந்த முறையில் ஏற்றிச் செல்லக் கூடிய வசதிகளைக் கொண்ட இந்த கப்பலை இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகின்றது.

தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள பாரிய களஞ்சிய சாலையொன்றை பயணிகளின் தங்குமிடமாக மாற்றியமைத்துள்ளார்கள். இங்கு பொதிகளை சோதனையிடல், சுங்க பரிசோதனைகள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கரும பீடங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இப்போதைக்கு கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் நடைபெறும் கப்பல் சேவை விரைவில் இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் 2 வது கப்பல் சேவையாக விஸ்தரிக்கப்படும். பல்லாண்டு காலமாக இராமேஸ்வரத்துக்கும் தலை மன்னாருக்கும் இடையில் நடைபெற்று வந்த பயணிகள் கப்பல் சேவை 80 ஆம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் பயணிகள் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டது.

கொழும்பு துறைமுகத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான இடைவெளி 282 கிலோ மீற்றர் ஆகும். இது 152 கடல் மைல்களாகும். கொழும்பிலிருந்து தூத்துக்குடி செல்ல 10 முதல் 12 மணித்தியாலங்கள் எடுக்கும். ஆரம்ப கட்டத்தில் இரு தேசங்களுக்கும் இடையில் வாரத்திற்கு 2 கப்பல் சேவைகள் இடம்பெறும். பின்னர் வாரத்திற்கு 3 ஆக அதிகரிக்கப்படும்

இலங்கை கப்பல் போக்குவரத்து கூட்டுத்தாபனம் 500 முதல் 600 வரையிலான பயணிகளையும் பயணிகள் ஒவ்வொருவரின் 100 கிலோகிராம் பொதிகளையும் உடன் எடுத்துச் செல்வதற்கான வசதிகளையும் கொண்ட கப்பல்களை வாங்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

பயணிகள் போக்குவரத்திற்கான கப்பல் கட்டணங்கள் விமான கட்டணங்களை விட கணிசமான அளவு குறைவாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

235 சபைகளுக்கு குறிப்பிட்ட திகதியில் தேர்தல்: 22க்கு பின் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தேர்தலின் பின் பரிசீலனை


235 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் குறிப்பிட்ட அதே தினத்தில் நடைபெறும் என வும் எக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாதென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களுக் கான நியமனப் பத்திரம் தொடர்பாக 22ம் திகதிக்கு பிறகு தாக்கல் செய்யப் பட்ட வழக்குகள் தேர்தல் நடைபெற்றதன் பின்னரே பரிசீலிக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். தேர்தல்கள் திணைக்களம் சுயாதீனமற்ற முறையில் சில கட்சி களுக்கு சார்பாக செயற் படுவதாகவும் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றது என்ற கருத்தை ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பியினர் கூறும் போலியான கூற்றுக்களை முற்றாக நிராகரிப்பதாக தேர்தல்கள் செயலகத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.

தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல்கள் சட்டத்திற்கு அமைவாகவே செயற்படு கின்றார்.

எதிர்காலத்திலும் தேர்தல் சட்டத்திற்கு அமைவாகவே முடிவுகள் எடுக்கப்படும் எனவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினம் மார்ச் மாதம் 8-9 ம் திகதிகளில் நடைபெறுவதற்காக விண்ணப்பங்கள் இம்மாதம் 25ம் திகதி அனுப்பப்பட்ட தாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல்கள் சட்டம் தொடர்பாக சகல கட்சிகளின் செயலாளருக்கும் வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்பாகவும் அதன் பின்னரும் கடிதம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளளோம். எனினும், 35 க்கு குறைந்த வயதுடைய இளைஞர்கள் தொடர்பாகவும் தேர்தல் சட்டம் தொடர்பாகவும் பல தடவைகள் அவர்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளோம். அவ்வாறான நிலையில் தேர்தல்கள் ஆணையாளர் சில கட்சிகளுக்கு சார்பாக செயற்படுகின்றாரென்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாததென அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

27 பிப்ரவரி, 2011

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சு நடத்தத் தயாராகிறது அரசு




புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்தியுள்ளதாக அரச தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாகக் கொண்டிருக்கும் எண்ணக்கருவை மாற்றுவதற்காக புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் முதலீட்டு ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக அரச தரப்பு பேச்சாளர் கூறியுள்ளார்.

தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பேச்சுவார்த்தைக்கு சமாந்திரமாக புலம்பெயர்ந்த தமிழர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் படக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொளவது குறித்தும் கருத்துகள் பரிமாற்றிக்கொள்ளபடவுள்ளதாக அறியவருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பேச்சுவார்த்தை விபரங்களை வெளியிட அரசு-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது எதைப்பற்றி பேசுகின்றோம். என்ன கோரிக்கையை வலியுறுத்துகின்றோம் என்று ஏதும் கூற முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சந்திப்பு நடக்கும் அதுபற்றி எதுவும் கூற இயலாது என அரச தரப்பும் கூறுகின்றன.

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களைத் தெரிவிக்குமாறு கேசரி வார இதழின் சார்பில் கேட்டபொழுதே இரு தரப்பினரும் இவ்வாறு பதில் அளித்தனர்..

தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக இருதரப்பினராலும் பேசப்படவுள்ள விடயங்கள் குறித்து தமிழ் மக்களுக்கே அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக இல்லை என்பதே முக்கியமான விடயமாகும்..

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் சந்திப்பானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே இடம்பெற்று வருவதுடன் அரசாங்க தரப்பில் முன்னாள் பிரதமரான ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமையில் அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் அடங்குகின்றனர்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பேச்சுவார்த்தைக்கு சமாந்திரமாக புலம்பெயர்ந்த தமிழர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வது குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளதாக அறியவருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கோரி 52 ஆயிரம் கையோப்பங்கள் சேகரிப்பு:மன்னிப்பு சபை


இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தி 52,000 மக்கள் கையொப்பமிட்டுள்ள தாக அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்பதை வலியுறுத்தி அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த மே மாதம் உலகளாவிய ரீதியில் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தது. கடந்த 26 வருடங்களாக நடைபெற்ற போரில் இரு தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அது தெரிவித்திருந்தது.

தனது கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக மக்களிடம் இருந்து கையெழுத்துக்களையும் அது சேகரித்து வந்திருந்தது. தற்போது 52,000 கையெழுத்துக்களை சேர்த்துள்ள நிலையில் அதனைக் கடந்த செவ்வாய்க்கிழமை (22) ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஒரு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (22) அனைத்துலக மன்னிப்புச்சபையின் இலங்கை விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜேலந்தா பொஸ்ரர் மற்றும் வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் ஆகியோருடன் மேலும் சிலர் ஐ.நா அலுவலகத்திற்குச் சென்று பொதுமக்கள் கையொப்பமிட்ட ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு திருமலையில் இலங்கை விசேட அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரின் தந்தையே மனோகரன் ஆவார். தமது விண்ணப்பம் தொடர்பில் ஐ.நா விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் எனவும், உரிய விசாரணைக்குழு அமைக்கப்படும் வரையில் தமது நடவடிக்கை தொடரும் எனவும் அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் ஐ.நா. அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

அனைத்துலக மன்னிப்புச்சபையின் இந்தக் கோரிக்கையில் இதுவரை அமெரிக்கா இணையவில்லை என்பதால், அவர்களிடம் கோரிக்கை விடுக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளின்டனுக்கு கடிதங்களை எழுதுமாறு தமிழ் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் ஓயப்போவதில்லை என வைத்தியர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

26 பிப்ரவரி, 2011

பான் கீ மூனிற்கும் இலங்கைக்குமிடையில் உடன்படிக்கைகள் ஏற்பட்டுள்ளனவா? இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனும் ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிதி சவேந்திர சில்வாவும் சந்தித்துக் கொண்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

பான் கீ மூன் சவேந்திர சில்வாவை சந்திக்கும் முதல் முறை இதுவா? என இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு சபையின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்ஸ் கீ பதில் வழங்கவில்லை.

இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் ஏதேனும் உடன் படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பேச்சாளர் ஐக்கிய நாடுகளின் செயலகத்தில் இது தொடர்பிலான விளக்கமளிப்பை பான் கீ மூன் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த மாத இறுதியுடன் பான் கீ மூனினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பதவிக் காலம் நிறைவடைகிறது.

ஏற்கனவே அது தமது பதவிக் காலத்தை நீடித்துக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் கால நீடிப்பை மேற்கொள்ளுமா? என செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய பேச்சாளர் இது தொடர்பில் குறித்த நிபுணர் குழு தீர்மானித்த பின்னர் தமக்கு அறிவிக்கும் என பேச்சாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் அதனை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜூலை கலவரத்தை அரசுடன் இணைந்து நடத்திய சக்திகள் இன்று மனித உரிமை குறித்து பேசுகின்றன: டலஸ்


ஜூலைக் கலவரத்தை அரச அனுசரணையுடன் நடத்தி, தமிழ் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சக்திகள் இன்று தமிழர்களின் மனித உரிமை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றன என்று இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அøமச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

யுத்தம் இடம்பெற்ற 30 வருட காலப்பகுதியில் நீங்கள் இழந்த உயிர்களைத்தவிர ஏனைய அனைத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடனுள்ளது என்றும் அவர் கூறினார்.

யாழ். கொக்குவிலில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்லூரியை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து அமைச்சர் டலஸ் உரையாற்றுகையில், தமிழ் மக்களின் கலாசார தலைநகரான யாழ்ப்பாணத்தில் உங்கள் முன் உøயாற்றக் கிடைத்தமை எனது பாக்கியம் எனக் கருதுகிறேன். பெப்ரவரி 25 என்ற இன்றைய தினம் முக்கியமான ஒரு நாளாகும். 1974 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் யாழ் பல்கலைக்கழகம் திறந்துவைக்கப்பட்டது. இலங்கை வரலாற்றிலேயே அன்றைய தினத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துமிக்க தினமாக இன்றைய நாள் பதிவு செய்யப்படுகின்றது.

தேசிய முகாமைத்துவ நிறுவனத்தின் கிளை நிறுவனம், இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய இரு பெரும் கல்வியகங்கள் இன்று உங்கள் மண்ணில் காலடி பதிக்கின்றன. யுத்தம் இடம்பெற்ற கடந்த 30 வருடங்களில் யாழ் மண்ணுக்கு உயர்தரம் வாய்ந்த தொழில்நுட்பமோ அல்லது நவீன தொழில்நுட்ப விடயங்களோ வரவில்லை.

அதற்குப் பதிலாக பயங்கரம், பயம், அச்சம், வேதனை, கண்ணீர், சந்தேகம், மந்தபோஷணம், பதற்றமான வாழ்வு ஆகியவையே உங்களுக்கு கிடைத்தன.

ஆனால் இந்த 30 வருட காலப்பகுதியில் நீங்கள் இழந்த உயிர்களைத்தவிர ஏனைய அனைத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடனுள்ளது. ஏனைய பிரதேசங்களை விட இப்பகுதி மக்கள் கல்வியை மதிப்பவர்கள்.

அதனால்தான் யுத்தத்தில் எரிந்துகொண்டிருந்த காலத்திலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியைப் பெற்றுக் கொடுத்தீர்கள்.

நாம் பெற்றுக்கொண்ட அனுபவம் தொடர்பான படிப்பினையைப் பெற்றுக் கொள்ளவே முயற்சிக்கின்றோம். அதனை நினைத்து கண்ணீர்விட்டுக் கொண்டிருக்க முடியாது. வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ், உங்களுக்கு தேசிய முகாமைத்துவ நிறுவனத்தின் கிளை நிறுவனம், இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி என்பவற்றை விட மேலும் தரம்வாய்ந்த கல்வி நிறுவனங்களும் இங்கு வரப்போகின்றன. பட்டங்களை வழங்கும் கல்வியகங்கள் இங்கு வரப் போகின்றன.

எமது அரசாங்கம். நடைமுறைச் சாத்தியமான அரசாங்கமாகும். வெறுமனே பேசிக் கொண்டும் கூட்டங்களை நடத்திக் கொண்டும் காலத்தை வீணடிப்பதற்கும் நாம் தயாரில்லை. மக்களின் தேவை எதுவோ அதுவே அரசாங்கத்தின் தேவை என்பதில் உறுதியாகவுள்ளோம்.

வரலாற்றில் இப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் பல விடயங்களை திசை மாற்றி விட்ட சக்திகள் இன்று வேறுபல முகம்களில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசுகின்றன. 1983 இனக்கலவரத்தை அரச அனுசரணையுடன் நடத்தி ,தமிழ் மக்களை அழிவுக்குட்படுத்திய சக்திகள் இன்று தமிழர்களின் மனித உரிமை பற்றிப் பேசுகின்றன.

யாழில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் வாக்குகளை கொள்ளையடித்து, மக்களுக்கு வாக்குகள் மீதிருந்த நம்பிக்கையை சிதறடித்த சக்திகள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகின்றன.

திறந்த பொருளாதாரத்தைப் பயன்படுத்தி யாழ் குடாநாட்டின் விவசாயத்தை நசுக்கிய சக்திகள் இன்று யாழ் விவசாயத்துறை குறித்து இப்போது பேசிக் கொண்டிருக்கின்றன.

உலகின் தலைசிறந்த நூலகமான யாழ் நூலகத்தை எரித்த சக்திகள் இப்போது இம் மக்களின் கல்வி கலாசாரம் தொடர்பாக பேசுகின்றன.

அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் இங்கு நான் ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன். ஜனாபதி தலைமையிலான அரசாங்கம் மக்களின் பயம், அச்சம், சந்தேகத்தைப் போக்கி நாம் அனைவரும் ஒரே இலங்கையின் இனமாக முன்வந்து வாழ்வதற்காக செயற்படும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் எம்.பி. பதவி நீக்கத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்பு



முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா தனது பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கியதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு மே மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதியரசர்களான ரஞ்சித் சில்வா, ஏ.டபிள்யூ ஏ. சலாம், உபாலி அபேரட்ண ஆகியோரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் மேன்முறையீட்டு மனுவினை விசாரணைக்கு எடுக்கக்கூடாது என சட்டமா அதிபர் ஆட்சேபம் தெரிவித்த போதிலும், நீதியரசர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்ததுடன் வழக்கினை விசாரிப்பதற்கான திகதியினையும் அறிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

புலனாய்வுத்துறையினரினால் கைது செய்யப்பட்டவர்களில் மூவர் விடுதலை

மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் புலனாய்வுத்துறையினரினால் கைது செய்யப்பட்ட 05 தமிழர்களில் மூவரை கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்துள்ளார்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் மன்னார் பேசாலை கிராமம் 7 ஆம் வட்டாரத்தினைச்சேர்ந்த ஜெயராஜ் பெனோ பெல்டானோ,8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்தவர்களான அருள் சீலன் மெறான்டா,மற்றும் சந்தியோகு மெசனட் குருஸ் ஆகியோரவர்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். அலுவலகத்திற்கு மூடு விழா

இருபது வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாண அலுவலகம் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது.

எவ்வாறிருந்தபோதும் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள தேவைகள் தொடர்பான உதவிகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஐ.சி.ஆர்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் அலுவலகம் 21 வருட சேவையின் பின்னர் மூடப்படுகின்றது. செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவைகள் தொடர்பான வரலாற்றில் இதுவொரு முக்கிய கணப்பொழுதாகும்.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வலுவிழந்தோருக்கும் அங்கவீனர்களான மக்களுக்கும் உதவுகின்ற யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்துக்கான ஆதரவைத் தொடர்ந்தும் ஐ.சி.ஆர்.சி. வழங்கும்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கமானது, சார்பு உறுப்புகளையும், நடமாடும் உபகரணங்களையும் உற்பத்தி செய்வதற்கான பொலிப்புறொப்பலீன் போன்ற மூலப்பொருட்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் இந்த நிலையத்துக்கு வழங்குகின்றது.

சிறைச்சாலைகளிலும் ஏனைய இடங்களிலும் உள்ள நபர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையிலான குடும்பத் தொடர்புகளைப் பேணும் நோக்குடைய செஞ்சிலுவையின் குடும்ப சந்திப்புகளுக்கு வசதியளிக்கும் திட்டமானது, இதற்கு பின்னர் கொழும்பிலுள்ள ஐ.சி.ஆர்.சி. அலுவலகத்தின் மூலமும் வவுனியாவிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளை மூலமும் மேற்கொள்ளப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

அவசரகாலச்சட்டமானது கே.பி.க்கு எதிராக ஏன் பயன்படுத்தப்படவில்லை:

புலிச் சந்தேகநபர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டமானது கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதனுக்கு எதிராக ஏன் பயன்படுத்தப்படவில்லை. அவசரகாலச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் சிறையிலடைத்து வைக்கப்பட்டிருக்கும் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காமையானது மீண்டும் ஒரு பயங்கரவாதத்துக்கான வழியாகவே அமையும் என்று ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன சபையில் தெரிவித்தார்.

யுத்தம் இல்லை, பயங்கரவாதம் இல்லை. புலிகளும் இல்லை. அப்படியானால் அவசரகால சட்டம் மட்டும் எதற்காக என்று கேள்வியெழுப்பிய அவர் அனைத்து இன மக்களும் சகோதரத்துடனும் சமாதானத்துடனும் வாழ வேண்வும் என்று அரசு கூறுவது பேச்சளவில் மட்டுமேயொழிய நடைமுறையில் இல்லை. என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஜனநாயக தேசியக் கூட்டணியினால் கொண்டுவரப்பட்ட அவசரகாலச்சட்டம் தேவையற்றது என்பது தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்திலேயே ஜயலத் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறக் கூடாது என்று பிரதமர் கூறுகிறார். அதில் ஐக்கிய தேசியக் கட்சியாகிய நாம் இணங்குகின்றோம்.

இங்கு சில விடயங்கள் அரசுக்கு புலப்படாதிருக்கின்றது. இதனை வெளிப்படுத்த வேண்டியது எதிர்க்கட்சியான எமது பொறுப்பாகும். இன்று அவசரகாலச் சட்டம் அவசியம் தானா என்ற கேள்வியெழுந்திருக்கின்றது. அவசரகாலச் சட்டத்தின் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா? மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா? வடக்காக இருந்தாலும் தெற்காக இருந்தாலும் இந்த அவசரகாலச் சட்டத்தை மக்கள் விரும்புகின்றனரா? நாம் இதனைக் கூறுவதை அரசாங்கம் ஏன் வெறுப்புடன் நோக்க வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கு மக்களின் நிலைமைகள் சீர் செய்யப்பட்டுள்ளனவா?, பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா? மக்களைப் பாதுகாப்பதற்கான நிலைமைகள் காணப்படுகின்றனவா? இன்று புலிப் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்கள் இல்லை.

அப்படியானால் இந்த அவசரகாலச் சட்டம் எதற்காக வேண்டும். இதனை நிறைவேற்றுவதால் அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு இருக்கின்ற தேவை என்ன? கே.பி. அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர். இவர் தொடர்பில் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளை எழுப்பியிருக்கின்றோம்.

புலி உறுப்பினர்கள் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அவசரகாலச் சட்டம் ஏன் குமரன் பத்மநாதன் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது தான் எமது கேள்வியாகும். ஆயுதம் மீட்கப்படுவதாகவும் தேடுதல்களை நடத்துவதற்கும் இந்த அவசரகாலச் சட்டம் தேவைப்படுவதாக அரசாங்கம் காரணம் கூறுகின்றது. மேற்போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சாதாரணசட்டம் போதுமானதாக இல்லையா? சாதாரண சட்டங்களால் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதா என்று கேட்கிறோம்.

பிழை எங்கு இருக்கின்றது? வாக்குகள் எண்ணுகின்ற நிலையங்களில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் விலகிக்கொள்வார்களேயானால் அங்கு சட்டம் இருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலின் போது இந்த நிலைமை கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றது. அதன்போது நானும் தாக்கப்பட்டு அங்கிருந்து துரத்தப்பட்டேன். இவ்வாறான தேவைகளுக்குத்தான் அவசரகாலச் சட்டம் பாவிக்கப்படுகின்றது.

தற்போது அவசரகாலச் சட்டத்தைப் பாவித்தே மாநகர சபைகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்திருக்கின்றது. ஆனால் அவசரகாலச் சட்டத்தினூடாக மக்களின் உரிமைகள் பறிக்கப்படவில்லை என்று கூறுகின்றார். ஆனால் இந்த தேர்தல்களை ஒத்திவைத்திருப்பதன்மூலம் மக்களின் வாக்குரிமை இந்த அவசரகாலச் சட்டத்தின் மூலம் பறிக்கப்பட்டுள்ளது.

இன்று வடக்கு பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி தனிக் கட்சியாக போட்டியிடுகின்றது. அங்கு எமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தோம். ஆனால் வடக்கின் பெரும்பகுதிகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையும் இன்றி முல்லைத்தீவில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள அனைத்து மக்களும் இன்றுவரையில் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இதனாலேயே இங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் பெரிதாக கூறிய விடயம் தான் வடக்கு மக்கள் அனைவரும் மீள் குடியமர்த்தப்பட்டுவிட்டனர் என்பதாகும். ஆனால் அவ்வாறு இல்லை. இதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த சிறிய தேர்தலினூடாக ஜனாதிபதியை மாற்ற முடியாது. அரசாங்கத்தை மாற்ற முடியாது, இது கிராமப்புறங்களை கட்டியெழுப்புவதற்கான தேர்தலாகும். இவ்வாறான தேர்தலை ஒரே தடவையில் நடத்துவதற்கு ஏன் அரசாங்கத்தினால் முடியாது இருக்கின்றது. அவசரகாலச் சட்டத்தைப் பாவித்து ஏன் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். அரசாங்கத்துக்கு முழுமையான அதிகாரங்கள் இருக்கின்ற நிலையில் ஏன் இவ்வாறு ஒத்திவைக்க வேண்டும். ஏன் முல்லைத்தீவின் அப்பாவி மக்களின் உரிமைகளைப் பறிக்கவேண்டும் என்று கேட்க விரும்புகிறேன்.

இன்று வடக்கில் இராணுவ நிர்வாகம் தேவையில்லை. அங்கு சிவில் நிர்வாகமே தேவையாக இருக்கின்றது. அனைத்து இனங்களும் சமத்துவமாக சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். அதுவே அரசாங்கத்தின் கொள்கை என்று பிரறதமர் கூறுகின்றார். இதனை நாம் முழுமையாக விரும்புகின்றோம். ஆனால் வடக்கில் இன்று ஜனநாயகம் இல்லை.

சிறுவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. புலி சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டம் செயற்படுவதில்லை. குற்றம் இழைத்திருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் தவறே இல்லை. ஆனால் அவசரகாலச் சட்டத்தை பாவித்து அவர்களை சட்டத்துக்குள் நிறுத்தாது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை மீண்டும் ஒரு பயங்கரவாதத்துக்கு வழிவகுக்கும். நான் இவ்வாறு பேசுவதால் என் மீது புலி முத்திரை குத்தப்படலாம். அது பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில் மனித உரிமைகளுக்காக என்றும் குரல் கொடுப்பேன். அரசாங்கம் கூறுவதெல்லாம் பேச்சளவிலேயே இருக்கின்றன என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கில் மக்கள் மத்தியில் பீதி அவசரகால சட்டத்தை நீக்குவது அவசியம்: அநுரகுமார திசாநாயக்க

வடக்கில் இடம்பெறும் செயற்பாடுகள் ஜேர்மனி நாசி இராணுவத்தின் செயற்பாட்டை விடவும் மோசமானவையாகும். அங்கு குடும்பத்துடன் படையினர் புகைப்படம் எடுத்து வீடுகளில் மாட்டி வைத்து படத்தில் இருப்பவர்களை விட கூடுதலாக இருப்போரை கைது செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறை அந்த மக்களை மிகமோசமான நிலைக்கு தள்ளி விடும் என்று ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்குவது ஆபத்தானது. அவசரகாலச்சட்டம் பாராளுமன்ற பிரதிநிதிகளின் பின்னால் வருவதற்கு முன்னர் அவற்றை நீக்குவதற்கு தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யுத்தம் நிறைவடைந்து 20 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் நாட்டை சாதாரண சட்டத்தின் கீழ் நிர்வகிக்காமல் தொடர்ந்து அவசரகாலச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்க வேண்டிய தேவை என்ன?

இலங்கையிலும் உலகத்திலும், அரசாங்கத்திற்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு இராணுவச் செயற்பாடு, மனிதனால் இன்றேல் இயற்கையான முறைமையில் தொற்றுகின்ற தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு, சிவில் குழப்பங்களை கட்டுப்படுத்தல், பொருளாதார நெருக்கடி மற்றும் வேøலநிறுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தல் ஆகிய நான்கு காரணங்களை அடிப்படையாக கொண்டே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது.

கடந்த நான்கு வருடங்களாக யுத்தத்தை காரணம் காட்டி அதனை அடிப்படையாக கொண்டு பாதுகாப்பு அமைச்சருக்காக பிரதமர் ஒவ்வொரு மாதமும் அவசரகாலச்சட்டத்தை நீடித்துக் கொள்வதற்கு சபையின் அனுமதியை கோரிநின்று அறிக்கையும் சமர்ப்பித்து இழப்பீடுகள், மீட்கப்பட்ட., கைப்பற்றப்பட்ட விபரங்களுடன் புள்ளி விபரங்களையும் சமர்ப்பிப்பார்.

1948 ஆம் ஆண்டிற்கு பின்னர் 1953 ஆம் ஆண்டில் ஹர்த்தால், 1958 இல் சிவில் குழுப்பங்கள், 1959 இல் பண்டாரநாயக்க படுகொலை, 1980 இல் ஐ.தே.க.வின் வேலைநிறுத்தம் இவற்றை அடிப்படையாக வைத்துகொண்டே அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போதெல்லாம் மேலே கூறப்பட்ட நான்கு காரணங்களும் முன்வைக்கப்பட்டன.

சிவில் குழப்பங்கள், அராஜகம், இயற்கை அனர்த்தங்கள் இல்லையென்றால் தொடர்ந்து அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது ஏன்? நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் இந்தச் சட்டத்தை நீடிக்கின்றதா? இல்லை. மாறாக அரசாங்கம் தனது அரசியலை முன்வைக்கவும் எதிர்மறையான அரசியலில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தவுமே இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றது. இது யோக்கியமானது அல்ல.

சாதாரண சட்டத்தின் கீழ் சாட்சி நீதிவான் நீதிமன்ற நீதிவானின் முன்னிலையிலேயே சாட்சியளிப்பார். ஆனால், அவசரசாலச் சட்டத்தின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் முன்னிலையிலேயே சாட்சியம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. நபர்களை கைது செய்வதற்கும் அரசியல் செயற்பாட்டை முடக்குவதற்குமே இந்த சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படும் ஒருவரை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தாது 48 மணிநேரம் இந்த சட்டத்தின் கீழ் தடுத்துவைக்க முடியும். இந்த செயற்பாடு அடிப்படை உரிமையை மீறுகின்ற செயற்படாகும்.

நீதிவான் அனுமதியின்றி ஒருவரை 90 நாட்களுக்கு தடுத்து வைக்க முடியும். அதற்கான அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் நீதிவானின் முன்னிலையில் ஆஜர்படுத்தி மேலும் ஆறு மாதங்களுக்கு தடுத்துவைப்பதற்கான உத்தரவு பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு தடுத்து வைப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் சுயாதீனமான அரச அதிகாரி இல்லை. நேரடியாகவே அரசியல் நியமனத்தின் மூலமாக நியமிக்கப்பட்டவர்.

களனி, கொழும்பு தொகுதிகளில் அரசியல் கூட்டங்களில் உரையாற்றுகின்றார். அவரினால் தான் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது என்று விவாதிக்கட்டும். அது தவறில்லை. ஆனால், அரசியல் கூட்டங்களில் ஏறுகின்ற அதிகாரி ஒருவருக்கு கையொப்பம் இடுவதற்கான அதிகாரத்தை கொடுப்பதா? லங்கா ஈ நியூஸ் பத்திரிகை ஆசிரியருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அச்சுறுத்தல் விடுத்தார். அதன் பின்னர் எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இன்றி கைதுசெய்யப்பட்ட அவர் தடுத்து வைக்கும் உத்தரவின் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டு எவ்விதமான வழக்குகளும் இன்றி விடுவிக்கப்பட்டார்.

சட்டம் சாதாரண சட்டமாக இன்மையினால் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அடிப்படை உரிமை அப்பட்டமாக மீறப்படுகின்றது. அதுமட்டுமின்றி எதிரணியின் அரசியலை முடக்குவதற்கும் உண்மையை எழுதும் ஊடகங்களை அடக்கி எழுதுவோரை கைதுசெய்வதற்கும் இந்த அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

நீதிமன்றத்தின் அனுமதியை பெறாமல் வீட்டிற்குள் புகுந்து தேடுதலை நடத்த முடியாது. சோதனைக்கு உட்படுத்த முடியாது. ஆனால், எவ்விதமான உத்தரவையும் பெறாமல் படையினர் வாகனங்கள், வீடுகளுக்குள் உள் நுழைந்து சோதனையிடுகின்றனர். இவ்வாறான அதிகாரம் வடக்கு, கிழக்கிலேயே உபயோகிக்கப்படுகின்றது. யுத்தம் முடிவடைந்துள்ள நிலையிலும் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். கடத்தல், அச்சுறுத்தல், கைது மற்றும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பயப்பீதியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அங்கு சுதந்திரம் மற்றும் சாதாரண வாழ்க்கையை வேகப்படுத்த வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவினை பெறாது உறுப்புரையினை மீறியே செயற்படுத்தப்படுகின்றது.

அரசியலமைபின் பிரகாரம் பேச்சு, எடுத்து உரையாற்றுதல் மற்றும் மக்களை சேர்க்கும் உரிமை இருக்கின்றது. அது அடிப்படை உரிமையாகும். எனினும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் சொத்துக்களை கைப்பற்ற முடியும் அரசுøடமையாக்கவும் முடியும். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. எனினும் அடிப்படை உரிமை அதில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர்களிடமிருந்து காணியை சுவீகரிப்பதற்கு 72 நாள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். மேன்முறையீடுகளுக்கு பின்னர் காணி உரிமையாளரின் எதிர்ப்பின்றி காணியை சுவீகரிக்க வேண்டும். அந்த முறைமை இன்று பின்பற்றப்படுவதில்லை.

பெற்றோர், பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என காணி உரிமை கலாசாரம் அதுவும் அவுஸ்திரேலியா, பிரித்தானியாவில் இல்லாத காணி கலாசாரம் இங்கு மட்டுமே இருக்கின்றது. எந்தவித முன்னறிவித்தலும் இன்றி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தில் காணியை சுவீகரிக்க முடியுமாயின் பாராளுமன்றம் எதற்கு? வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு அதில் 1202 வீடுகளில் பாதுகாப்பு படையினர் இருக்கின்றனர் என அரசாங்கமே ஒத்துக்கொண்டுவிட்டது.

அதுவும் தமிழ் மக்களின் வீடுகளை சுவீகரித்தமை சாதாரண சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விடயமாகும். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. சாதாரண சட்டத்தின் கீழ் நாட்டை நிர்வகிக்க முடியும். வடக்கில் சிவில் நிர்வாகம் இல்லை. யுத்தம் இடம்பெற்ற இடத்தில் சிவில் நிர்வாகத்தினை உருவாக்குவதற்கு காலம் தேவை.

ஆனால், 20 மாதங்கள் என்ன நடந்தது? யுத்தம் இராப்போசனம் இல்லை. நாம் பிரார்த்தனை செய்தாலும் இதுதான் நடைபெறும் என்று நினைத்திருந்தாலும் நினைப்பதை விடவும் கூடுதலாக இடம்பெறும். யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பு தொடர்பில் மக்கள் அச்சம் கொண்டிருப்பர்.

வடக்கில் இராணுவத்தினர் காலையில் ரோந்து செய்வது, மக்கள் பயணிக்கும் போது பல்குழல் பீரங்கிகள் பயணிப்பது, மாணவர்கள் பாடசாலைக்கு செல்கின்ற வேளையில் இராணுவ டிரக் வண்டிகள் பயணிப்பது உளவியல் ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலமாக மக்களை சாதாரண வாழ்க்கைக்கு கொண்டு வரமுடியாது. உள்ளூராட்சி மன்றங்களில் அரசாங்கத்தின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு நாங்கள் எதனையும் செய்ய முடியாது. வடக்கில் ஒடுக்கப்பட்ட மக்கள் வழமைக்கும் சாதாரண வாழ்க்கைக்கும் திரும்புகையில் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக அவர்களை பயன்படுத்தக் கூடாது. பல கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும். வாக்குரிமையை பாதுகாக்கவில்லை என்றால் மக்கள் சாதாரண வாழ்க்கைக்கு எப்படி திரும்புவர்? சட்டத்தை திருத்தியிருக்கலாம். வடக்கில் தேசிய நிலைமையினை கருத்தில் கொண்டு விசேட ஏற்பாடுகளை கொண்டு வந்திருக்கலாம். வடக்கில் தேர்தலில் போட்டியிடும் ஜே.வி.பி. வேட்பாளர்கள் கைது செய்யப்படுகின்றனர்; அச்சுறுத்தப்படுகின்றனர். பழைய முறைமையிலிருந்து மீளமுடியவில்லை என்றால் வடக்கில் அல்ல, இங்கு அச்சுறுத்தவும் அங்கு சிவில் நிர்வாகத்தை உருவாக்க வழிசமைக்கவும்.

நல்லூர் கோப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மாவட்ட செயலாளருக்கு தெரியாமல் படையினர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து 100 ரூபாவையும் பெற்றுக்கொண்டு அதில் ஒரு பிரதியை படைமுகாமிற்கு கொண்டுசெல்வதுடன் மற்றொன்றை வீட்டின் முன்னால் தொங்க வைத்துவிட்டு செல்கின்றனர். படையினர் தேடுதல் நடத்தும்போது புகைப்படத்தில் இருப்பவரை விட ஒருவர் கூடுதலாக இருந்தால் அவரை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

ஜேர்மனியில் நாசிக இராணுவம் செய்ததை விடவும் இது மிக மோசமான நடவடிக்கையாகும்.இதனால் அங்குள்ள மக்கள் எவ்வாறான மன உளைச்சலுக்கு முகம்கொடுப்பர். பாதுகாப்பு படையினருக்கு அவசரகாலச் சட்டத்தின் கீழ் விசேட அதிகாரத்தை கொடுத்து சிவில் நிர்வாகத்தை இல்லாது வைத்துள்ளது. இது அத்தியாவசியமானது அல்ல.

சிரச ஊடக நிறுவனத்தின் மீது கல்லெறிந்தவர்களை ஊடகங்கள் படம்பிடித்து காண்பித்தவேளையில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால், அதேமுகங்களை கொண்ட சுவரொட்டிகள் களனி தொகுதியில் கை கூப்பிய நிலையில் மதில்களில் ஒட்டிவிடப்பட்டுள்ளன.

மக்கள் பிரதிநிதிகள் தாக்கப்படுகின்றனர். அவர்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. ஆனால், அச்சட்டத்தின் கீழ் எதிர்க்கட்சியினரும், ஊடகங்களும் தாக்கப்படுகின்றன.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தனிநபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடு கேள்விக்குறியாகியுள்ளது என்பதுடன் அவசரகாலச் சட்டம் (உங்களுக்கு) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பின்னால் வருவதற்கு முன்னர் அவற்றை நீக்குவதற்கு தீர்மானிக்க வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் இடைக்கால தடை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் 17 ஆம் திகதி நடத்தாது ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த 19 சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போதே இந்த இரு மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலை 17 ஆம் திகதி நடத்த வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பதற்குப் பதிலாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு எனும் சொல் பயன்படுத்தப்பட்டமையினாலேயே 19 சபைகளுக்கான வேட்புமனுக்களும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் நிராகரிக்கப்பட்டிருந்தன.

கடந்த வாரம் அக்குரஸ்ஸை, அக்மீமனை, மொனறாகலை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையும் ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

லிபிய தூதரகத்தில் 400க்கும் அதிகமான இலங்கையர் தஞ்சம்: விமானம், கப்பலில்; அழைத்து வருவதில் அரசாங்கம் தீவிரம்

இந்தியாவின் உதவியை பெறவும் நடவடிக்கைலிபியாவின் திரிபோலி நகரிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையரை நாட்டிற்கு அழைத்துவர துரித நேரடி நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, லிபியாவில் சீன நிறுவனமொன்றில் தொழில் புரிந்த 36 இலங்கையர்களை சீன நிறுவனம் கிரேக்க நாட்டுக்கு கப்பல் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளது. இவர்களையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விமான டிக்கட்டுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அனுப்பவுள்ளது.

சுமார் 400 க்கும் மேற்பட் டோர் தற்போது லிபியாவின் திரிபோலி நகரிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கான விமான டிக்கட்டுகளை வழங்கவும் பணியகம் ஆயத்தமாக உள்ளது என தூதுவர் சுதந்த கணேகல ஆராய்ச்சி கூறினார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் அல்லது கட்டார் எயார் சேவைக்கு சொந்தமான விமான மொன்று அல்லது வேறு விமானமொன் றையாவது வாடகைக்கு அமர்த்தி இலங்கையரை அழைத்துவர முடியுமா என்பது பற்றியும் ஆராய்ந்து வருகிறோம் எனக் கூறிய அமைச்சர் டிலான், திரிபோலி விமான நிலையத்தில் தரையிறக்குவது பிரச்சினையாக உள்ளது என்றும் கூறினார்.

மேலும் லிபியாவில் எகிப்தின் எல்லையில் தொழில் புரியும் இலங்கையரை எல்லையினூடாக எகிப்துக்குள் பாதுகாப்பாக அழைத்து வர முடியுமா என்பது பற்றி ஆராயுமாறு எகிப்திலுள்ள இலங்கை தூதருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் அவசர தேவை நிமித்தம் எகிப்து தூதருக்கு 2 மில்லியன் ரூபாவும் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

மேலும் லிபியாவிலுள்ள இலங்கையரை கொண்டுவர கப்பல் ஒன்றை அனுப்புவது தொடர்பாக வெளிவிவகார அமைச்சும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் ஆராய்ந்து வருகிறது எனக் கூறிய அமைச்சர் டிலான், இந்தியாவும் தமது நாட்டு பிரஜைகளை லிபியாவிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக கப்பலொன்றை லிபியாவின் மோல்டா துறைமுகத்துக்கு அனுப்புகிறது. இந்தியர்களுடன் எமது இலங்கையரையும் அதே கப்பலில் அழைத்து வருவதற்கான முயற்சியிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

தொழில்வாய்ப்புக்காக இலங்கையரை லிபியாவுக்கு அனுப்பிய வேலைவாய்ப்பு முகவர்களையும் அமைச்சர் டிலான் அழைத்து தற்போதைய லிபிய நிலைமை பற்றியும் ஆராய்ந்ததுடன் இலங்கையரை திருப்பி அழைக்க முகவர்களின் பங்களிப்பும் தேவை என்பது பற்றியும் கூறினார்.

லிபியாவில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட இலங்கையர் தொழில் புரிந்து வருவதாகவும் இவர்கள் தொடர்பான கணக்கெடுப்புகள் எடுக்கப்படுவதாகவும் பணியகத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

2015ம் ஆண்டுக்குள் பால்மா இறக்குமதி முற்றாகத் தடை * மாற்றுத் திட்டங்கள் தயாரிப்பு

உள்ளூரில் தன்னிறைவு காணும் திட்டம் இறக்குமதிச் செலவு தினமும் 2 மில். டொலர்2015ம் ஆண்டிற்குள் பால் மா இறக்குமதி முற்றாகத் தடைசெய்யப்படுமென மில்கோ நிறுவனத் தலைவர் சுனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய அதற்கான மாற்றுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்து அவற்றில் தன்னிறைவு காணும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு பால் மா இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு வருகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டுமென தெரிவித்த அவர், 2015ம் ஆண்டிற்குள் பால்மா இறக்குமதி முற்றாக நிறுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற மெளபிம லங்கா மன்றத்தின் சூரியசிங்க சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மில்கோ நிறுவனத் தலைவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில் :

உலகில் பெருமளவிலான நாடுகள் தமது உற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளன. அவுஸ்திரேலியா போன்ற

பால் உற்பத்தி நாடுகள் தற்போது பால் மாவைத் தவிர்த்து பசும் பாலை உபயோகத்திற் கொள்வதைப் பழக்கமாக்கிக் கொண்டுள்ளன. எமது நாட்டிலும் பசும்பாலை முழுமையாக பாவனைக்குக் கொண்டுவரும் நிலை விரைவில் உருவாக்கப்படும் எனவும் அவர் மேலும்
மேலும் இங்கே தொடர்க...

வடக்கை அபிவிருத்தி செய்வதில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்பாடு ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பாராட்டு

மோதல்கள் இடம்பெற்ற வடபகுதியில் உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தெற்காசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு நேற்றைய தினம் கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தது. முன்னாள் மோதல் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாகச் சந்தித்து அவர்களின் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்துகொண்டதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜீன் லம்பெர்ட் கூறினார்.

வடபகுதியில் பாடசாலைகள், வீதிகள், நீர்விநியோகம், மின்விநியோகம், உள்ளிட்ட உட்கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது இலங்கை விஜயத்தின்போது இலங்கை சபாநாயகர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், வடபகுதி அரசாங்க அதிபர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந் ததாகவும் அவர் தெரிவித்தார். வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளின் எதிர்காலத் திட்டங்களை உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்டதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் ஆரம்பித்திருக்கும் பேச்சுவார்த்தைகளைத் தாம் வரவேற்பதாகவும், இப்பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்று எட்டப்படவேண்டுமென்றும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜீன் லம்பெர்ட் மேலும் கூறினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரும் கலந்துகொண்டிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

களுத்துறை கடலில் மூழ்கி பிரான்ஸ் பிரஜை பலி






களுத்துறை கடலில் நீராடச் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார். வடக்கு களுத்துறை ஹோட்டலொன்றில் தங்கியிருந்த இவர், ஹோட்டலுக்கு பின்பக்கமாக உள்ள கடலில் நீராடிய போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 52 வயதான சார்ள்ஸ் ரொபட் என்பவரே இவ்வாறு இறந்துள்ளதோடு, பிரேத பரிசோதனையின் பின்னர் இவரின் சடலம் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.

இறந்தவரின் சடலத்தை பிரான்ஸ் நாட்டுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

‘‘தப்பபிப்பிராயம்’ உருவாகாது முஸ்லிம் தமிழர் நடந்துகொள்ள வேண்டும்

இலங்கை நான்கு மதம் களையும் இரண்டு மொழிகளையும் கொண்ட நாடு புத்தம் ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவம் இவை மாதங்கள் ஆனால் இலங்கையில் மொழி இரண்டு இது எமது கருத்து


சிங்கள, தமிழ் மக்களைப் போலவே முஸ்லிம்களும் நாட்டுப்பற்றுள்ளவர் களாகச் செயற்பட்டு பிறந்த மண்ணுக்கு விசுவாசமாக நடக்க வேண்டும். பிறந்த நாட்டை நேசிக்குமாறு நபி (ஸல்) அவர்களும் போதித்துள்ளார்கள். விளையாட்டுத் துறையாக இருந்தாலும் நமது நாட்டுக்கே நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடை யிலான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக் கிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது இந்திய முஸ்லிம்கள் இந்தியாவையே ஆதரிக்கின்றனர். பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டிகளின் போது பங்காதேஷ் நாட்டவர் பங்களாதேஷணுக்கே ஆதரவு தெரிவிக்கின்றனர்.

வேறுநாடுகளுடன் நாம் நட்புறவு வளர்க்கலாம். ஆனால், விளையாட்டுக் காகவாவது முஸ்லிம்கள் வேறு நாட்டை ஆதரிக்கக் கூடாது. இலங்கையையே ஆதரிக்க வேண்டும்.

எந்த விதத்திலும் எம்மீது ஏனையவர்கள் தப்பபிப்பிராயம் சொல்லாத வகையில் நடக்க வேண்டியது. இக்காலகட்டத்தில் மிக முக்கியமாகும். சகல முஸ்லிம்களும் இதனை கருத்திற்கொண்டு செயற்படுமாறு கோருகிறோம்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, மற்றும் முஸ்லிம் அமைப்புகள், பள்ளிவாசல்கள் என்பனவும் இதனை தெளிவாக விளக்கியுள்ளன எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நீதி அமைச்சர் ஹக்கீம், பிரதம நீதியரசர், பொலிஸ் மா அதிபர் நேற்று சந்திப்பு வடக்கு, கிழக்கு நீதிமன்ற செயற்பாடுகள் பற்றி ஆராய்வு



வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் விரிவுபடுத்தப்பட வுள்ளன. வடக்கு, கிழக்கு நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் கருமமாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு நேற்று உச்ச நீதிமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற போதே மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

நீதிமன்ற பணிகளை மேலும் செயற்திறன்மிக்கதாக மேற்கொள்ளுவது மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை என்பன குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவிக்கிறது.

இந்த சந்திப்பு உச்சநீதிமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக நீதிமன்றங்கள் ஆரம்பிப்பதற்குத் தேவையான கட்டடங்களை பெறுவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கிழக்கில் வாகரை, கலுவாஞ்சிக்குடி, கிண்ணியா மற்றும் ஏறாவூர் நீதிமன்றங்களை துரிதமாக மீள ஆரம்பித்தல், ஈச்சிளம்பற்று, கிளிவெட்டி ஆகிய இடங்களில் நீதிமன்றங்களை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களை ஆராய்தல், கிழக்கில் நீதிபதிகளுக்கு விடுதி வசதி அளித்தல் என்பன குறித்தும் இங்கு முக்கியமாக ஆராயப் பட்டது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மற்றும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நீதி மன்றங்களில் குற்றவியல் வழக்கு களை விசாரிப்பதற்கு ஏதுவாக பொலிஸ் அத்தியட்சகர்களை நீதிபதி களாக நியமிப்பது பற்றியும் விரி வாக ஆராயப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் நீதிமன்றங்கள் ஆரம்பி ப்பது குறித்து குறித்த பிரதேச பொலிஸ் நிலையங்களை அறிவூட்டவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒலுவி லில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்குப் பதிலாக நிரந்தர பொலிஸ் நிலையமொன்றை அமைப் பது குறித்தும் இங்கு கவனம் செலு த்தப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்க ளில் தமிழ் மொழியில் பணியாற்ற க்கூடிய பொலிஸாரை ஈடுபடுத்துவ தற்கான வழிவகைகள் பற்றியும் கவனத்தில் எடுக்கப்பட்டது.

தமிழ் மொழியில் பணியாற்றக்கூடிய சுமார் 2 ஆயிரம் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் இங்கு தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தமிழ் மொழியில் பணியாற்றும் பொலிஸார் மேலும் நியமிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நியமனம் வழங்கப்பட்டு ள்ள பொலிஸாருக்கு (6) இடங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இத்தாலியில் ஆயுத முனையில் கொள்ளை இலங்கையர் மூவர் கைது

இத்தாலி நாட்டில் ஆயுத முனையில் கொள்ளையொன்றில் ஈடுபட்ட இலங்கையர் மூவர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நடுத்தர வயதில் இருக்கும் இலங்கையர் இருவரும், இளைஞர் ஒருவரும் சேர்ந்தே ஆயுத முனையில் கொள்ளையடிக்க முயன்று மாட்டிக் கொண்டுள்ளதாக இத்தாலியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

மூவரும் சேர்ந்து ஆயுதங்களுடன் பார்மசி ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை மிரட்டிப் பெருந்தொகைப் பணத்தைக் கொள் ளையடிக்க முயன்ற போதே வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

25 பிப்ரவரி, 2011

லிபியாவிலுள்ள இலங்கையரை திருப்பி அழைக்க விசேட ஏற்பாடு


லிபியாவில் பணியாற்றும் இலங்கையர் களை நாட்டுக்கு அழைத்துவர கப்பலொன்று அனுப்பிவைக்கப்பட்டி ருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.தனியான விமானத்தில் அழைத்து வரஅரசாங்கம்நடவடிக்கை

லிபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான கப்பலொன்று அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டிலான் பெரேரா தொடர்ந்தும் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

லிபியாவிலுள்ள இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்தின் ஊடாக இத்தாலிய எல்லையில் வைத்துக் கையளிக்கப்படுவார்கள் என்றும் அவர்களை அழைத்து வருவதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் அரசாங்கம் தயாராகவுள்ளது. அங்குள்ள நிலைமைகளை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

பாராளுமன்றில் அமைச்சர் டிலான்


திரிபோலியைத் தவிர சகல விமான நிலையங்கள் பூட்டு; மோல்டாவுக்கு கப்பல் அனுப்ப தீர்மானம்

லிபியாவில் உள்ள 344 இலங்கை பணியாட்களை நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா கூறினார். இவர்கள் இன்று அல்லது நாளை விமானம் மூலம் இலங்கையை வந்தடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் தொடர்பில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில், உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :-

லிபியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையையடுத்து பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை திருப்பி அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 37 பணியாட்கள் கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவர். லிபியா தூதரகத்தில் 200 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களை விமானம் மூலம் நாட்டுக்கு திருப்பி அழைத்து வர உள்ளோம். விமானம் கிடைக்காவிட்டால் தனியான விமானம் ஒதுக்கி அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

திரிப்போலி விமான நிலையம் தவிர ஏனைய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், கப்பல் மூலம் மோல்ட்டா அல்லது லிபியாவை அண்டிய நாட்டுக்கு அவர்களை அழைத்து வந்து அங்கிருந்து நாட்டுக்கு கொண்டுவர உள்ளோம். 107 பேர் எம்முடன் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களை லிபிய தூதரகத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களையும் இரண்டு தினங்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வருவோம். லிபியாவில் உள்ள பணியாட்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான விமான டிக்கெட்டுகளுக்கான நிதி தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. லிபியாவில் 1200 இலங்கை பணியாட்கள் உள்ளனர். அனைவரும் அரசியல் நெருக்கடியினால் பாதிக்கப்படவில்லை. நாடு திரும்ப விருப்பமானவர்கள் மீள அழைத்து வரப்படுவர்.

அங்குள்ள இலங்கையரை பாதுகாக்கவும் நாட்டுக்கு அழைத்து வரவும் சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அரசியல் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு ள்ள இலங்கையர் குறித்து ஆராய 24 மணி நேரமும் இயங்கக் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அவசரகால சட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்வுக்கு பாதிப்பில்லை சகல உரிமைகளையும் தமிழரும் அனுபவிக்க வேண்டும்: அரசின் இலக்கு






அவசரகால சட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும், நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்காகவே அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் டி. எம். ஜயரட்ண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அவசியமில்லையென பாதுகாப்புப் படையினர் உத்தரவாதமளிக்கும் பட்சத்தில், அதனை நீக்கிவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் பிரதமர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திசாநாயக்க சபையில் முன்வைத்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்த பிரதமர், நாட்டின் ஏனைய பகுதி மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் தமிழ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகிறது எனவும், குறிப்பாக அம்மக்களின் கெளரவத்தைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. எம்.பி. அநுர குமார திசாநாயக்க அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனக் கோரி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை முன்வைத்தார்.

இதன் மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்து அநுரகுமார திசாநாயக்க எம்.பி. முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் டி. எம். ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவித்ததாவது:

அநுர குமார திசாநாயக்க எம்.பி. எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை இலக்காக வைத்தே அவசரகால சட்டம் என்ற போர்வையில் சபையில் உரையாற்றியுள்ளார். அது மட்டுமல்ல, 1971ம் ஆண்டிலிருந்து தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பி.யினர் இப்போது வடக்கு, கிழக்கு மக்களுக்காக பரிந்து பேசுகின்றனர் என்றால் அது விந்தையே.

ஊடக சுதந்திரம் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் அவர் தமதுரையில் குறிப்பிட்டார். அது இத்தேர்தல் காலத்தில் ஊடகங்களின் ஆதரவை அதிகமாக பெற்றுக்கொள்வதற்காகவே என்பதை சகலரும் அறிவர்.

அவசரகால சட்டம் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அதிலிருந்த சில கடுமையான சரத்துக்கள் அண்மையில் நீக்கப்பட்டன. தற்போது சாதாரண சட்டமே அதில் நடைமுறையிலுள்ளது.

அண்மையில்கூட சில பிரதேசங்களில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. புலி உறுப்பினர்கள் 5000 பேர் தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கி தொழில்களைப் பெற்றுக்கொடுப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களை நாம் எதிரிகளாகப் பார்க்கவில்லை.

யுத்தம் முடிவடைந்த போதும், நாட்டில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு அவசரகால சட்டம் எவ்வகையிலும் காரணமல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ எத்தகைய சம்பவங்களிலும் சம்பந்தப்படவில்லை. அதேபோன்று ஊடகங்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை.

அவசரகால சட்டத்தினால் பிரயோசனம் பெறுவதற்கு அரசு ஒருபோதும் நினைக்கவில்லை. நாட்டில் சகலரும் எவ்வித பயமும் அச்சமும் இன்றி சுதந்திரமாக வாழும் சூழலை ஏற்படுத்துவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

வேறு நாடுகளில் தினமும் ஆயிரக்கணக்கான மனிதப் படுகொலைகள் நடைபெறுகின்றன. எனினும் எமது மக்களில் 100ற்கு 94 வீதமானோர் படிப்பறிவுள்ளவர்கள். எத்தகைய பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கக்கூடிய வாய்ப்பு இங்குள்ளது.

அநுரகுமார திசாநாயக்க எம்.பி. செய் நன்றி மறந்து பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் சட்டமா அதிபரையும் குற்றஞ்சாட்டுகிறார் என்றார் பிரதமர்.
மேலும் இங்கே தொடர்க...

மீனவர் பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் நிரந்தர தீர்வு





கடற்றொழில் தொடர்பான பிரச்சினைக்கு இரு நாடுகளுக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறினார். இது தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் கூட்டுக்குழுவொன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,மீனவர் தொடர்பான பிரச்சினையின் போது இரு நாட்டுக்குமிடையிலான நல்லுறவின் அடிப்படையில் கெளரவமாகவே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பூரண விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான முழு அதிகாரம் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற கடல் எல்லை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு எமது கடற்படை படகுகள் எதுவும் செல்லவில்லை.

இந்திய மீன்பிடிப்படகுகளை சந்திக்க நேரிட்டால் எமது கடற்படையினர் மனிதாபிமானமாகவே செயற்பட்டு வந்துள்ளனர்.

யுத்தம் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக வடக்கு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அந்த நிலை மாறியுள்ளது. வடபகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப ஆரம்பித் துள்ளனர்.

மீன்பிடி பிரச்சினை தொடர்பில் நாம் இந்திய வெளியுறவுச் செயலாளருடன் பேச்சு நடத்தி வருகிறோம். மனிதாபிமான ரீதியில் இதற்கு தீர்வு காண முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன்பிடிப்பது தொடர்பில் நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும். இதற்கு தற்காலிக தீர்வு காண்பது நல்லதல்ல. பல தடவைகள் இரு நாடுகளும் பேச்சு நடத்தியுள்ளன.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய தெளிவான அரச இயந்திரம் உள்ளது. இதனூடாக இரு நாடுகளும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உள்ளோம்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல்: சகல பிரதேசங்களிலும் ஐ.ம.சு.மு அமோக வெற்றிபெறும்





கிராமிய மக்களாலேயே தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக நடத்தப்படுகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறும் என முன் னணியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற முன்னணியின் செய்தியாளர் மாநாட்டிலேயே முன்னணியின் தலைவர்களான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க, அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒன்றாக ஒரே நேரத்தில் நடத்துவதையே அரசாங்கம் விரும்புகிறது. விட்டுவிட்டு நடத்தவோ, கட்டம் கட்டமாக நடத்துவதோ அரசின் எண்ணமில்லை.

தேர்தல்கள் பின்போடப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது முதலாவது மாநாட்டை எதிர்வரும் 28ம் திகதி அனுராதபுரத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டால் அதற்கெதிராக நீதிமன்றம் செல்வது தவறு என ஜே. வி. பி.யினர் கூறுகின்றனர். தேர்தல் ஆணையாளர் என்ன முடிவை எடுக்கிறாறோ அதனை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஐ. ம. சு. மு. வினதும் ஐ. தே. க. வினதும் சுயேச்சை குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவுடன் அவை அமைதியாக இருந்துவிட வேண்டும் என ஜே. வி. பி. கூறுகிறது. ஆனால் முன்பு ஒருமுறை ஜே. வி. பி.யின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் ஜே. வி. பி. யினரே அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றது.

இந்த ஞானம் ஏன் அன்று ஜே. வி. பி.யினருக்கு வரவில்லை. ஜே. வி. பி.யினருக்கு இன்று இனங்காண முடியாத அரசியல் நோய் ஒன்று பீடித்துள்ளது. ஐ. ம. சு. முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் திஸ்ஸமகாராம, ஹோமாகம, எம்பிலிப்பிட்டிய போன்ற இடங்களில் ஓரளவேனும் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளலாம் என்ற நட்பாசையுடன் இருந்த அவர்களுக்கு நாம் நீதிமன்றம் சென்றது அச்சத்தை கிளப்பிவிட்டிருக்கிறது. அவர்கள் கோட்டைகள் சரிந்து விடுவது நிச்சயம்.

ஐ. தே. க. வின் தலைவர் இன்று நாட்டிலேயே இல்லை. தேர்தல் காலத்தில் நிற்கும் தமது வேட்பாளர்கள் பற்றி அவருக்கு அக்கறை இல்லை. வேட்பாளர்களும் விரக்தியடைந்த நிலையில் இருக்கிறார்கள். ஐ. தே. க.வில் சஜித் பிரேமதாசா உட்பட 50 வீதமானவர்கள் ஐ. ம. சு. மு.வுக்கே வாக்களிக்கவுள்ளனர். மீதமானவர்கள் வாக்களிப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்வார்கள்.

எதிர்வரும் 17ம் திகதி தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் ஐ. ம. சு. மு. அமோக வெற்றி! ஐ. தே. க. 10ஆவது தடவையாகவும் தோற்றது! ஜே. வி. பி.யின் திஸ்ஸ மகாராம கோட்டையும் சரிந்தது!!! என்ற பிரதான தலைப்பை தாங்கிய செய்திகள் வெளிவரும் என்றும் விமல் வீரவன்ச கூறினார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிராமிய மக்கள் நிச்சயமாக ஐ. ம. சு. முன்னணிக்கே ஆதரவை வழங்குவார்கள்.

அரசாங்கத்தை அச்சுறுத்தவோ, அல்லது அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவோ பாடம் புகட்ட வேண்டும் என்றோ மக்கள் எண்ணவில்லை.

குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம், வீதிகள் உள்ளிட்ட உட்கடமைப்பு வசதிகளையும் கிராம மட்டத்திலிருந்து பெற்றுக் கொடுப்பதே உள்ளூராட்சி தேர்தல்களின் நோக்கமாகும். அம்மக்களுக்கு தெரிந்த ஒரு பிரதிநிதியை அவர்களாகவே தெரிவு செய்வதற்காக ஒரு சந்தர்ப்பம் கமநெகும, மகநெகும, திவிநெகும போன்ற திட்டங்களின் ஊடாக கிராமங்களிலிருந்து நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கமாகும். எனவே, இதனை உறுதி செய்யும் வகையில் மக்கள் அரசுக்கு நிச்சயமாக வாக்களிப்பார்கள் என்றும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் திட்டம்






திருகோணமலையில் பாரிய கைத்தொழில் பேட்டையொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்பொழுது அதிகரித்திருக்கும் வெளிநாட்டு முதலீடுகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் அனைத்து உட்கட்டுமான வசதிகளுடன் கூடிய வலயமொன்றைத் திருகோணமலையில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாரிய தொழில்துறை வலயமொன்றை அமைப்பதாயின் துறைமுக வசதிகள் அவசியம் என்பதால் திருகோணமலை சம்பூரில் தொழில்பேட்டையொன்றை அமைப்பதற்கும், இதற்கு 97 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பை ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். நிலக்கரி சூழை,இரும்பு உருக்குச் சூழை, பாரிய இயந்திரங்களைப் பொருத்தக்கூடிய வலயமொன்றை மிஷேல் பல்தேசிய நிறுவனம் அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து உருவாக்குவதற்கான திட்டமொன்றும் தயாரிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய இந்த வலயம் தொடர்பான தகைமைகாண் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்தார். இந்த வலயத்தின் முதற்கட்டத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான தொழில்பேட்டையால் இயற்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இவ்வாறு அமைக்கப்படவிருக்கும் பாரிய தொழில் பேட்டையானது சுற்றாடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவகையில் அமைக்கப்படும். உலக நாடுகள் தற்பொழுது எதிர்நோக்கியிருக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளான உணவுப் பிரச்சினை மற்றும் சூழல் மாசடைதல் ஆகியவற்றில் இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது என்றார்.

இதேவேளை, முதலீட்டுச் சபையால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சில திட்டங்கள் காலதாமதமடைவதாக முதலீட்டாளர்கள், பலர் விசனம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர், சில திட்டங்களில் காலதாமதம் காணப்படுகிறது. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றார்.

இதுவரை காலமும் எந்தவொரு நிறுவனமும் இலங்கையில் ஒரு ரூபாவைக்கூட முதலிட முன்வரவில்லை. ஆனால், நாட்டில் அமைதிநிலை தோன்றிய பின்னரே முதலீடுகள் அதிகரித்துள்ளன. கடந்த 18 மாதங்களாகவே இவ்வாறான பிரச்சினைகள் ககாணப்படுகின்றன. நாளாந்தம் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படும். இவற்றைத் தீர்ப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது எஎன்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

உலக கிண்ண கிரிக்கெட்; இசைக் கருவிகளை எடுத்துச் செல்ல தடை





இலங்கை- பாகிஸ்தான் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்க கெத்தாராம விளையாட்டரங்கிற்குள் செல்லும் ரசிகர்கள் இசைக்கருவிகள் (ரம்பர்ட்) எடுத்துச் செல்வதனால் அதற்காக முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும்.

071-8687768 (நிஷாந்த) என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சுராஜ் தந்தெனிய தெரிவித்தார்.

கிரிக்கெட் அரங்கிற்குள் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், வெற்றியை கொண்டாடுவதற்காகவும் ரசிகர்கள், ஆரவாரம் செய்யும்போது இசைக்கருவிகளை (ரம்பர்ட்) இசைத்தும் தமது உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள்.

இதற்காக ரம்பர்ட் ஒன்றை எடுத்து செல்வ தானால் முன்கூட்டியே குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அனுமதி பெற வேண்டும்.

அனுமதி கோரும் நபர் தொடர்பாக ஆராய்ந்த பின்னரே ரம்பர்ட் எடுத்துச் செல்ல அனுமதி பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

உலக கிண்ணம்: ஆர். பிரேமதாச மைதானத்துக்கு கடும் பாதுகாப்பு





இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளதால் மாளிகாவத்தை பிரேமதாச அரங்கிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நேற்றுத் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப்படை, எம். எஸ். ரி. போன்ற சிறப்பு பாதுகாப்புகள் வழங்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சங்கராஜ மாவத்தை, வின்சன்ட் பெரேரா மாவத்தை, பபாபுள்ளே மாவத்தை, பிரதீபா மாவத்தை, ஜும்மா மஸ்ஜித் ரோட், மாளிகாவத்தை லேன், ஸ்டேஸ் ரோட் போன்ற வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

0 ரூபா, 100 ரூபா, 500 ரூபா டிக்கட் பெற்றுக் கொண்டுள்ளவர்கள் பிரதீபா மாவத்தை சந்தி வழியாக கெத்தாராம அரங்கிற்குள் பிரவேசிக்கலாம்.

மேலும் 50 ரூபா, 100 ரூபா டிக்கெட் பெற்றுக்கொண்டுள்ளவர்கள் ஜும்மா மஸ்ஜித் வீதி வழியாக சென்று பி.1 மற்றும் பி.2 என்ற நுழைவாயில் ஊடாக கெத்தாராம அரங்கிற்குள் செல்லலாம்.

250 ரூபா, 500 ரூபா டிக்கெட் பெற்றுக் கொண்டவர்கள். புதிய போதிராஜ மாவத்தையூடாக சென்று கெத்தாராம அரங்கிற்குள் பிரவேசிக்க முடியும். உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் உத்தியோகபூர்வ அதிகாரிகள், அலுவலர்கள், ஊடகத்துறை என அடையாளமிடப்பட்ட வாகனங்கள் மற்றும் 5000 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை கொண்ட அனுமதி சீட்டை கொண்டவர்கள் பாபாபுள்ளே மாவத்தை ஊடாக சென்று அரங்கிற்குள் பிரவேசிக்கலாம் என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

கடலுக்கு குளிக்க சென்ற களுவாஞ்சிக்குடி மாணவன் மரணம்







பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி களுவாஞ்சிக்குடி கடலில் குளிக்கச் சென்ற கோபாலரத்தினம் ரவிகுமார் (வயது 18) என்ற க. பொ. த (சா/த) வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி நேற்று காணாமல் போயுள்ளார்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் மீனவர்களும் சடலத்தைத் தேடும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் எட்டுப் பேர் டியூசன் செல்வதாகக் கூறி களுவாஞ்சிக்குடி கடலுக்கு நேற்று குளிக்கச் சென்றுள்ளனர்.

குளித்துக்கொண்டிருந்தபோது குறிப்பிட்ட மாணவன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

24 பிப்ரவரி, 2011

இந்தியா உறுதியளித்த 50 ஆயிரம் வீடுகளில் எத்தனை குடிமனைகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன: கூட்டமைப்பு கேள்வி




இந்தியாவினால் உறுதியளிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அந்த வீட்டு பயனாளிகளின் பட்டியலை 50 வருடங்களுக்குள் தயாரித்து முடித்து விடுவீர்களா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான எம். சுமந்திரன் கேள்வி எழுப்பினார். இந்தியாவினால் கையளிக்கப்பட்ட 500 உழவு இயந்திரங்களில் 76 மட்டுமே கையளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டிருக்கும் 100 உழவு இயந்திரங்கள் தென்னிலங்கைக்கு நகர்த்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கே இந்த உழவு இயந்திரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற உற்பத்தி வரி, நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், விஷம்போல வாழ்க்கைச் செலவு அதிகரித்து செல்கின்ற நிலையில் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான கட்டமைப்புக்களை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். வாழ்க்கைச் செலவு உயர்ந்து கொண்டே செல்லும்.

இது எவருடைய குற்றமும் அல்ல, எனினும் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

விலையை கட்டுப்படுத்துவதற்கான நிதிக் கொள்கையை அரசாங்கம் கொண்டிருந்தால் மக்கள் அதிருப்தியடைய மாட்டார்கள். உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்கையில் அதனை சிறிய நாடொன்றினால் கட்டுப்படுத்த முடியாது.

எனினும் நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான அம்சங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டவிதிகளின் பிரகாரம் வாகனங்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. தீர்வையும் குறைக்கப்பட்டுள்ளது. வீதிகளில் வாகனங்கள் குவிந்திருக்கின்ற நிலையில் தீர்வை குறைக்கப்பட வேண்டுமா? மக்களின் அத்தியாவசிய தேவைகளில் இது அதிமுக்கியமானதா? தாழ்ந்த மட்டத்தில் இருக்கின்ற மக்கள் வாழ்க்கைச் செலவு போராட்டத்தில் திண்டாடி கொண்டிருக்கின்ற நிலையில் வாகன இறக்குமதி தீர்வை குறைப்பின் ஊடாக எவ்விதமான நன்மையும் இல்லை.

விவசாய உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் உணவு பொருட்களின் விலைகளும் விஷம்போல ஏறியுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழைகள் ஏழைகளாகவும் பணவசதி படைத்தோர் வசதி படைத்தவர்களாகவும் இருக்கின்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும். எனினும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டவிதிகள் மற்றும் ஏற்பாடுகளின் மூலமாக எவ்விதமான வாய்ப்புகளும் இல்லை.

நீண்ட யுத்தத்திற்கு பின்னரான பாதுகாப்பு நிலைமையில் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் மக்களின் குறைகளை அரசாங்கம் வார்த்தைகளின் மூலமாக நிவர்த்திக்க முயற்சிக்கின்றது. வடக்கு கிழக்கில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதாக கூக்குரல் இடுகின்றது. அதற்கு பாலங்களும் வீதிகளும் சான்று பகருகின்றன.

இவையெல்லாம் பிரச்சினை இல்லை. முன்னுரிமையான அம்சங்களுக்கே முன்னுரிமையளிக்க வேண்டும். குடியிருப்பதற்கு வீட்டு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

யுத்தத்தினால் 2,50,000 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இடிந்துபோன குடிமனைகளை கட்டமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இல்லை. ஆறு கம்புகளை நாட்டி தகரங்களை கூரையாக அமைப்பது குடிமனைகள்?

இந்தியா 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் ஒரு வீட்டையேனும் கட்டிக்கொடுப்பதற்கு முன்வரவில்லை. தாராள மனம் நிறைந்த இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். ஆனால் அந்த வீடுகளில் எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினையாகும்.

1000 பயனாளிகளின் பட்டியலை தயாரிப்பதற்கு ஒருவருடம் தேவைப்பட்டுள்ளது. முழுமையான பட்டியலை 50 வருடங்களில் தயாரித்து முடித்து கொள்வீர்களா?

இந்தியா வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா அரியாலையில் சொற்ப வீடுகளை நிர்மாணிப்பதற்கு அடிக்கல்லை நாட்டி வைத்தார். ஏனைய ஒரு வீட்டுக்கேனும் அடிக்கல் நாட்டப்படவில்லை.

வடபகுதி மக்களுக்கென 500 உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. எனினும் அதில் 100 உழவு இயந்திரங்கள் கஜு கூட்டுத்தாபனத்திற்கும் 100 இயந்திரங்கள் தெங்கு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டுள்ள 100 உழவு இயந்திரங்கள் தென்னிலங்கைக்கு நகருகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 38 இயந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான ஒழுங்கீனங்கள் ஏன்? ஏனையவற்றை தென்னிலங்கைக்கு ஏன் நகர்த்துகின்றீர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி கூறிய அதிபாதுகாப்பு வலயம் எங்குள்ளது?




விபரங்கள் வர்த்தமானி அறிவிப்பில் இல்லை சபையில் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிப்பு வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், அந்த அதியுயர் பாதுகாப்பு வலயம் எங்கு இருக்கின்றது எனக் கேள்வி எழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பலாலி உள்ளிட்ட அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானி அறிவிப்பில் இல்லை என்றும் சுட்டிக்காட்டியது.

அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் அளவு தற்போது குறைக்கப்பட்டிருக்கின்றது அது எங்கிருக்கின்றது என்பதை யாழ்ப்பாணம் போய்த்தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்த அரசாங்கம் கண்ணிவெடிகளில் பயணிப்பதற்க கூட்டமைப்பு ஆசைப்படுகின்றதா? என்றும் கேள்வி எழுப்பியது.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று கூடியது சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது கூட்டமைப்பின் எம்.பி.யான அ.விநாயகமூர்த்தி கிளிநொச்சி உட்பட வடக்கில் பாதுகாப்புப் படையினர் தங்கியிருக்கும் தனியார் வீடுகள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை. அவ்விடங்கள் உண்மையான உரிமையாளருக்கு எப்போதும் மீளவும் ஒப்படைக்கப்படும் உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார்.

கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 1129 தனியார் காணிகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என்பன இராணுவத்தினரால் பாவிக்கப்படுகின்றன. வடக்கில் பாதுகாப்பு படைகளும் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் பாதுகாப்பு படைமுகாமை நடத்திச்செல்ல வேண்டியிருப்பதனால் உரியவர்களுக்கு அவற்றை ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை.

சுமார் 129 தனியார் காணிகள், நிறுவனங்கள் மற்றும் வீடுகள் கடற்படையினரால் பயன்படுத்தப்படுகின்றன. 35 வரையான தனியார் காணிகளும் பலாலிஅதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குரிய இலங்கை விமானப்படைத் தளத்திற்குள் இருக்கும் 32 தனியார் வீடுகளும் அதற்குரிய காணிகளும் விமானப் படையினரால் பயனபடுத்தப்படுகின்றன. அதில் இரண்டு அரிசி ஆலைகளும் அடங்குகின்றன.

விமானப்படை வன்னி விசேட நடவடிக்கை பிரிவு தலைமையகத்துக்குரிய விமக்ஷினப் படையினரால் பயன்படுத்தப்படும் பிரதேசத்துக்குள் தனியார் வீடுகள் இல்லை என்பதுடன் ஏழு வகையான தனியார் காணிகள் இருக்கின்றன.

இதேவேளை, இராணுவத்தினரால் பாவிக்கப்பட்ட சிவில் மக்களுக்கு உரிய 472 தனியார் வீடுகள், இடங்கள் மற்றும் நிறுவனங்கள் பொதுமக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மிகுதியில் பெரும்பாலானவை பொது மக்களினால் தங்களது விருப்பத்தின் பேரிலேயே பாவனைக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

மற்றொரு பகுதி காணிகள் வீடுகள் போன்றவற்றின் அடையாளம் உறுதி செய்யப்படாததுடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கு கோரிக்கையும் விடப்படவில்லை. கேக்ஷிரிக்கை விடுத்ததும் மீளவும் ஒப்படைக்கப்படும்.

இதேநேரம் சில நிறுவனங்கள் மற்றும் வீடுகள் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருப்பதனால் பாதுகாப்பு படைமுகாம்கள் இயங்கிவருவதனால் அவற்றை ஒப்படைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்படவில்லை.

கடற்படை முகாம்களை இயங்க வைப்பது அவசியம் என்பதனால் அந்த முகாமை ஸ்தாபிப்பதற்கு பொருத்தமான இடத்தை பிரதேச செயலாளர்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விமானப்படையினரால் பாவிக்கப்பட்டு வரும் வன்னிப் பிரதேசத்துக்குள் வீடுகள் இல்லை என்பதுடன் அதற்குரிய தனியார் காணிகள் அடுத்த 3 மாத காலத்திற்குள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஒப்படைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.

இதனிடையே குறுக்கு கேள்வியொன்றை எழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான சுமந்திரன், வடக்கில் அதியுயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன,. அந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் எங்கு இருக்கின்ற எனக் கேள்வி எழுப்பினார்.

“அக்கேள்விக்கு பதிலத்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, 20 வருடங்களாக இருக்கும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அது எங்கு இருக்கின்றது என்பதை யாழ்ப்பாணம் போய் தான் பார்க்க வேண்டும் என்பதுடன் ஜனாதிபதி அவ்வாறானதொரு அறிவித்தலை விடுவிக்கவில்லை என்றாலும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் அளவு குறைக்கப்பட்டு வருவதாகவே அவர் கூறியிருக்கின்றார்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான விபரங்கள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்றார்.

குறுக்கிட்ட சுமந்திரன் எம்.பி. குறிப்பாக பலாலி உள்ளிட்ட பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானி அறிவித்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

மீண்டும் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகளின் பிரகாரம் அது வர்த்தமானி அறிவித்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. எனினும், தற்போது அதியுயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்பட்டு வருவதுடன் அதனுள் இருந்த 472 தனியார் காணிகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றார்.

இதனிடையே குறுக்கிட்ட விநாயகமூர்த்தி எம்.பி. ஆனையிறவுக்கு அப்பால் இருக்கின்ற பிரதேசங்களில்? என்று மற்றுமொரு கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ், கண்ணி வெடிகளில் பயணிக்க வேண்டுமா? என விநாயகமூர்த்தி எம்.பி.யை பார்த்து கேள்வி எழுப்பினார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் பாதுகாப்பு வலயங்கள் 1/3 ஆக குறைப்பு : கடற்படையினரின் பயன்பாட்டிலுள்ள காணிகள் மூன்று மாதத்தில் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு


வடக்கில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் 1/3 ஆக குறைக்கப்பட்டுள்ளதோடு படிப்படியாக பொதுமக்களின் காணிகள், வீடுகள் மீள கையளிக்கப்பட்டு வருவதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வன்னிப் பிரதேசத்தில் கடற்படையினர் பயன்படுத்தும் தனியார் காணிகள் 3 மாத காலத்தினுள் மீள உரியவர்களிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வடக்கிலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி அ. விநாயகமூர்த்தி பிரதமரிடம் கேட்டிருந்த கேள்விக்கு பிரதமர் சார்பாக அமைச்சர் தினேஷ் பதிலளித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

வடக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சுமார் 1129 ஐ பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துகின்றனர். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் 32 தனியார் வீடுகள் மற்றும் காணிகளும் இரண்டு அரிசி ஆலைகளும் உள்ளன.

வன்னி விமானப்படையினர் பயன்படுத்தும் பிரதேசத்தில் தனியார் வீடுகள் கிடையாது. ஆனால் 7 தனியார் காணிகள் உள்ளன.

இராணுவத்தினர் பயன்படுத்திய பொதுமக்களின் 472 காணிகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என்பன பொது மக்களிடம் மீள ஒப்படைக்கப்பட் டுள்ளதோடு சிலர் தமது சுயவிருப்பத்தின் பேரில் தமது இடங்களை படையினருக்கு வழங்கியுள்ளனர். சிலர் தமது வீடுகளுக்கான உரித்தினை உறுதிசெய்யவில்லை. மீளப்பெற விண்ணப்பிக்கவுமில்லை. அவர்கள் விண்ணப்பித்தால் மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சில வீடுகள், நிறுவனங்கள் என்பன அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ளதாலும் அப்பகுதிகளில் முகாம்கள் உள்ளதாலும் அவற்றை மீள வழங்க முடிவு செய்யப்படவில்லை. அங்குள்ள இராணுவ முகாமை நிறுவ பிரதேச செயலாளர்கள் மூலம் காணிகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

20 வருடங்களாக வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக முன்னெடுக்கப்பட்டன. அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள வீடுகள் படிப்படியாக மீள கையளிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தமது நிலங்களுக்கு திரும்பியுள்ளனர். 1/3 பகுதியாக அதி உயர் பாதுகாப்பு வலயம் குறைக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் மிதிவெடிகள் உள்ளன. மிதிவெடிகளால் எந்த ஒரு குடிமகனும் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் அங்கு நேரில் சென்று உண்மை நிலையை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இங்கே தொடர்க...

துரோகிகளை உருவாக்கும் இடங்களாக சிறைச்சாலைகள் இருக்கக் கூடாது

* சிறை முறைகேடுகளை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவு

* 88 வீதமானோர் தூக்குத்தண்டனைக்கு வலியுறுத்தல்சமூகத் துரோகிகளை உருவாக்கும் இடங்களாக சிறைச்சா லைகள் இருக்கக் கூடாது என தெரிவி த்த ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிறைச் சாலைகளில் இடம் பெறு கின்ற முறை கேடு களைக் கட்டுப்படுத்து வதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை அமைக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குற்றவாளிகள் நல்வழிக்குக் கொண்டுவரப்பட வேண்டுமேயொழிய அவர்கள் சமூகத்தின் மீது குரோதம் மிக்கவர்களாக உருவாகக் கூடாது.

குற்றவாளிகளை சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியவர்களாக மாற்றியமைக்கும் முறையை வலுப்படுத்த வேண்டும். இதனூடாக நாட்டுக்கு நன்மை பயக்கக் கூடியவர்கள் உருவாகுவார்கள். சிறைகள் சமூகத் துரோகிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் இடங்களாகத் திகழ வேண்டும். மாறாக திருடர்களையும், கொள்ளைய ர்களையும் உருவாக்கும் இடங்களாக இருக்கக் கூடாது.

இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட தடுப்புக்காவல் கைதிகள் வரையான சகலரும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் செயலாற்றும் வகையில் பொருத்தமான வேலைத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இக்கூட்டத்தின் போது ஆலோசனை வழங்கினார்.

இதேநேரம், சிறைகளில் இடம்பெறுகின்ற முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக விஷேட பொலிஸ் பிரிவொன்றை அமைக்குமாறும், சிறைக் கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக விசேட வேலைத் திட்டத்தைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கி னார்.

இப்போது சிறைக் கைதிகள் எவரும் நாட்டின் பொருளாதாரத்திற்கு எதுவிதமான பங்களிப்பையும் செய்வதில்லை. ஆனால் அரசாங்கம் ஒரு சிறைக்கைதிக்கு மாதத்திற்கு 9000 ரூபா முதல் 10,000 ரூபா வரை செலவிடுவதாக இக்கூட்டத்தின்போது சுட்டிக் காட்டப்பட்டது.

அதேநேரம் குற்றவாளிகளை சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியவர்களாக மாற்றியமைக்கும் முறைமையின் கீழ் கடந்த சில வருடங்களுக்குள் 405 மில்லியன் ரூபாவை மீதப்படுத்த முடிந்ததாகவும் இக்கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வின் படி இலங்கையில் 88 சதவீதமானவர்கள் தூக்குத் தண்டணை முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளனர்.

மரண தண்டனை செயற்படுத்தப்படாத தால் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கொலை குற்றங்களுடன் தொடர்புடைய 334 பேர் விசேட கவனிப்புடன் சிறையில் இருக்கின்றார்கள்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தேசிய கண் வங்கி இன்று ஜனாதிபதியினால் திறப்பு * சிங்கப்பூர் மூன்று கோடி ரூபா நிதி * உயர் தொழில்நுட்பம்

இலங்கையில் முதல் முறையாக அமைக்கப்படும் தேசிய கண் வங்கி இன்று (24) மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.

சிங்கப்பூரின் உயர் தொழில்நுட்பத்தின் கீழ் அமையும் தேசிய கண் வங்கியின் மூலம் நோயாளர்களுக்கு கோர்னியா விழி வெண் படலம் பொருத்தப்படும்.

இலங்கையில் உள்ள நோயாளர்களுக்கு மட்டுமன்றி முழு உலகத்திலும் உள்ள கண் நோயாளர்களுக்கு உதவும் இந்த கண் வங்கி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட் டலின் கீழ் தேசிய கண் வைத்தியசாலையில் இந்த வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் அமையும் தேசிய கண் வங்கிக்காக சிங்கப்பூர் அரசாங்கம் மூன்று கோடி ரூபா நிதியை வழங்கியுள்ளது.

ஐந்து வருட திட்டத்தின் கீழ் செயற்படும் தேசிய கண் வங்கியின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் மேம்படுத்தலுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் உதவி ஒத்தாசை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது.

தேசிய வைத்தியசாலையில திடீரென உயிரிழக்கும் நோயாளர்களின் கண்கள் புதிய கண் வங்கியின் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். 6 மணி நேரத்துக்குள் இந்த கண் வில்லைகளை பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால் இவ்வாறான திட்டத்தை முன்னெடுத்திருப்ப தாக அவர் மேலும் கூறினார்.

கண்ணின் வெண் படலத்தில் குறை ஏற்பட்டால், சத்திர சிகிச்சை மூலம் வெண் படலத்தை அகற்றி அதனை மாற்றியமைக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை இலகுவாக்கும் வகையில் அவசியமான படலத்தை பெற உதவுவதே இதன் நோக்கமாகும் என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய கண் வைத்தியசாலையின் கண்காணிப்பில் உள்ள படலம் இலங்கையின் கண் சத்திரசிகிச்சை இடம்பெறும் கராபிட்டிய, திருகோணமலை மற்றும் ஏனைய எந்தவொரு வைத்தியசாலையிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

கொழும்பு கண் வைத்தியசாலையில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய கண் வங்கியின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே, சிங்கப்பூர் கண் வைத்தியசாலையின் கண் வங்கியின் பணிப்பாளர் பேராசிரியர் டொனல்ட் பேன், விசேட கண் வைத்தியர் சரித் பொன்சேகா ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்குபற்றினர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐரோப்பிய ஒன்றியம்: பயங்கரவாதிகள் பட்டியலில் மீண்டும் புலிகள் உள்ளடக்கம்

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டிருக்கும் பயங்கரவாதிகளின் பட்டியலில் புலிகள் இயக்கத்தின் பெயர் மீண்டும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி உருவாக்கிய பயங்கரவாத அமைப்புக்களைத் தடைசெய்யும் சட்டத்திற்கமைய புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப் பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட 26 அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் தாம் தடைசெய்யப்பட்டமைக்கான காரணங்களைக் கோர முடியுமென்று 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்த போதும் எந்தவொரு அமைப்பும் அதற்கான கோரிக்கையை விடுக்க வில்லையென்றும் ஐரோப்பிய ஒன்றியத் தின் சஞ்சிகையில் மேலும் குறிப்பி ட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

யானைகள் ஊருக்குள் நுழைவதற்கு மின்வேலிகள் தடையாக இருக்காது


மனிதனுக்கும் யானைக்கும் இடையி லான ஜீவமரணப் போராட்டத்துக்கு பிரதான காரணமாக மனிதனே இருந்து வருகிறான். யானைகளின் வாசஸ்தலத் தில் மனிதன் குடியேற்றங்களை அமைத்து வருவதனால்தான் யானைகள் காடுகளை அண்டியுள்ள தங்களின் வாசல்பூமியில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் ஊடுருவி பயிர்களை அழித்தும், வீடுகளை உடைத்தும் சில சந்தர்ப்பங்களில் மனிதனையும், மனித உயிர்களையும் பழிவாங்குகிறது.

இதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்திருப்ப தாகப் பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே இந்தத் தகவலை வெளியிட்டார்.

யானைகள் கிராமங்களுக்குள் ஊடுருவி வருவதைத் தடுப்பதற்கான மின்வேலிகள் இன்று ஒரு தடையாக இருக்கவில்லையென்றும் அடர்ந்த காடுகளில் மரங்கள் உயரத்தில் இருப்பதனால் யானைகளுக்கு இலை குழைகளை இலகுவில் பறித்து சாப்பிட முடியாதிருப்பதனால், அவை கிராமங்களுக்குள் நுழைந்து உணவைத் தேடுகின்றன என்று தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தேனீக்களை வளர்ப்பதன் மூலமும், போகன்விலா மற்றும் எலுமிச்சை செடிகளை நாட்டுவதன் மூலம் யானைகள் கிராமங்களுக்கு வருவதை மக்கள் தடை செய்து வருவதாகக் கூறினார்.

யானைகள் எங்கள் நாட்டின் ஒரு தேசிய செல்வமாகும். அவை மனிதனுக்கு சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தினாலும், அது எமது நாட்டின் மரபுரிமையின் சின்னமாக விளங்குகிறது. அதனைக் காப்பாற்றுவது அவசியம் என்று வலியுறுத்தினார். யானைகளை விரட்டியடித்து கொல்வதில் ஆர்வம்காட்டும் விவசாயிகள் யானைகள் அடித்து இறப்பவர்களைவிட விஷப் பாம்பினால் மரணமடையும் மக்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதை மறந்துவிடுகிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.

யானையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த அமைச்சர் காட்டுப் பன்றிகளைப் பற்றித் தனது கவனத்தைத் திருப்பினார். எங்கள் நாட்டிலுள்ள சட்டம் ஒரு விநோதமான சட்டமாகும். காட்டுப் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியை சாப்பிடுவதை சட்டம் குற்றமாகக் கருதவில்லை. ஆனால், காட்டுப் பன்றி இறைச்சியை விற்பனை செய்வதையோ அல்லது அந்த இறைச்சியை வீடுகளில் வைத்திருப்பதையோ தண்டனைக்குரிய குற்றமாக சட்டம் கருதுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விறுவிறுப்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஒரு தடவை வனவிலங்கு காவலர்கள் ஒரு யானையை பிடித்து ஒரு காட்டில் விட்டபோது, அந்த யானை தான் பிடிபட்ட தூரத்திலிருந்து இருந்த இடத்திற்கு உடடினயாகத் திரும்பிவிட்டது என்று கூறி இரண்டு கால் யானைகளும் இதைத்தான் செய்கின்றன என்று சிரித்தார்.

இன்னுமொரு சுவையான சம்பவத்தையும் ஜனாதிபதி கூறினார். வனவிலங்கு சரணாலயத்திலுள்ள அதன் பொறுப்பதிகாரியின் காரியாலயத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்த ஒரு நபர் அங்கிருந்த தொலைபேசியில் இலக்கத்தைச் சுழற்றி அந்த அதிகாரியின் மனைவியுடன் ஏதோ புரியாத மொழியில் பேசியதைக் கேட்ட அந்த மனைவி பதற்றமடைந்து விட்டாராம்.

விசாரணை செய்து பார்த்த போது மறுமுனையில் தொலைபேச்சில் பேசியது ஒரு மனிதன் அல்ல என்பது தெரியவந்தது. காட்டிலுள்ள ஒரு குரங்கே இந்த சேஷ்டையைப் புரிந்திருக்கிறது என்று ஜனாதிபதி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...