29 ஆகஸ்ட், 2009


கருணாநிதி இலங்கை தமிழர் விடயத்தில் கவலை








கருணாநிதி கவலை , சென்னையில் சனிக்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இலங்கையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையில், அந்தப் பிரச்சினையில் தீவிர கவனம் செலு்த்துமாறு பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் இங்கே தொடர்க...
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கக் கூடாது : கோத்தபாய
முறியடிப்பட்ட பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக் கூடாதென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

'ரீ 623 சயு ரல' என பெயரிடப்பட்ட ரோந்துக் கப்பல் ஒன்றை நேற்று உத்தியோகபூர்வமாக கடற்படையினரிடம் கோத்தபாய ராஜபக்ஷ கையளித்தார்.

திருகோணமலை, கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற இது தொடர்பான நிகழ்வில், கடற்படை அதிகாரிகள் மத்தியில் பாதுகாப்புச் செயலாளர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.



பயிற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டினுள் ஊடுருவுதல், மற்றும் ஆயுத கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பணிகளைக் கடற்படையினர் முனைப்புடன் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் அங்கு வலியுறுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...

பள்ளிவாசல் பாங் ஒசையை தடை செய்யப்போவதில்லை - இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையில் தமிழர் என்றும் சிங்களவர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் இனவாத அரசியல் என்பது இனிமேல் உகந்தது அல்ல என இலங்கை ஜ்னாதிபதி மகிந்த ராஜபக்ஷ் அக்கரைப்பட்டில் முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பட்டில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்த அவர், இந்நாட்டில் சிறுபான்மை மக்கள் என்று ஒருவரும் கிடையாது என்றும், மக்கள் அனைவரும் இந்த நாட்டை நேசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முப்பது வருடங்கள் நாட்டை பீடித்து இருந்த பயங்கரவாதத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். முஸ்லிம்கள் பள்ளிவாசலில் ஒலிக்கும் பாங் ஒசையை தான் தடை செய்ய போவதாக எதிரிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என்றும் கேட்டு கொண்ட அவர், முஸ்லிம்கள் தன் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இங்கே தொடர்க...
வடக்கில் முன்னர் வாழ்ந்த மக்களே குடி ஏற்ரபடுவார் ; சிங்களவர் தமிழர் என்று இல்லை : ஊடகத்துறை
அமைச்சர்
வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள்" என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெள்ளியன்று தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை ஸ்ரீ.ல.சு.க. மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருந்த கருத்து ஒன்றுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பொறாமை மற்றும் வைராக்கியம் காரணமாகவே இவ்வாறான கூற்றுக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் தெரிவித்துள்ள தகவல்களை அரசாங்கம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது.

வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள்.

உண்மையில் அதுதானே செய்யவேண்டிய வேலை? அப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.

மாறாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கூறுவது போன்று புதிய குடியேற்றங்களை மேற்கொள்ளும் எந்த திட்டங்களும் எமக்கு இல்லை என்பதனை திட்டவட்டமாக கூறுகின்றேன். அதேபோன்று வன்னி மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்புக்களை அபகரிக்கும் எந்தவிதமான எண்ணமும் இல்லை என்பதனையும் தெரிவிக்கின்றேன்" என்றார்.

மீள் குடியேற்றம் குறித்து மங்கள சமரவீர...

வியாழனன்று நடைபெற்ற ஊடகவையலாளர் மாநாட்டில் ஸ்ரீ.ல.சு.கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில்,

"மன்னார் பகுதியில் அமைந்துள்ள புதுக்குடியிருப்புப் பகுதியில் இதுவரையிலும் ஏனைய பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 50 சிங்கள குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது விடயம் உண்மையா எனத் தெரியவில்லை. இது தொடர்பில் நாம் அரசிடமே வினா எழுப்புகின்றோம். மேலும் இப்பகுதிக்கான மீள்குடியேற்றத்தில் 15 சிங்கள குடும்பங்கள், 15 தமிழ் குடும்பங்கள், 15 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்ற உள்ளதாகவும் மேலும் அங்கு இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற சூழ்ச்சி போன்றதே" என்று குறிப்பிட்டிருந்தார்
வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள்" என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெள்ளியன்று தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை ஸ்ரீ.ல.சு.க. மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருந்த கருத்து ஒன்றுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பொறாமை மற்றும் வைராக்கியம் காரணமாகவே இவ்வாறான கூற்றுக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் தெரிவித்துள்ள தகவல்களை அரசாங்கம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது.

வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள்.

உண்மையில் அதுதானே செய்யவேண்டிய வேலை? அப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.

மாறாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கூறுவது போன்று புதிய குடியேற்றங்களை மேற்கொள்ளும் எந்த திட்டங்களும் எமக்கு இல்லை என்பதனை திட்டவட்டமாக கூறுகின்றேன். அதேபோன்று வன்னி மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்புக்களை அபகரிக்கும் எந்தவிதமான எண்ணமும் இல்லை என்பதனையும் தெரிவிக்கின்றேன்" என்றார்.

மீள் குடியேற்றம் குறித்து மங்கள சமரவீர...

வியாழனன்று நடைபெற்ற ஊடகவையலாளர் மாநாட்டில் ஸ்ரீ.ல.சு.கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில்,

"மன்னார் பகுதியில் அமைந்துள்ள புதுக்குடியிருப்புப் பகுதியில் இதுவரையிலும் ஏனைய பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 50 சிங்கள குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது விடயம் உண்மையா எனத் தெரியவில்லை. இது தொடர்பில் நாம் அரசிடமே வினா எழுப்புகின்றோம். மேலும் இப்பகுதிக்கான மீள்குடியேற்றத்தில் 15 சிங்கள குடும்பங்கள், 15 தமிழ் குடும்பங்கள், 15 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்ற உள்ளதாகவும் மேலும் அங்கு இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற சூழ்ச்சி போன்றதே" என்று குறிப்பிட்டிருந்தார்
மேலும் இங்கே தொடர்க...
இராணுவ வெற்றியிலிருந்து சமாதானத்தை கொண்டு வருவது நாட்டு தலைவர்களின் கடமை-
இந்திய ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல்


மகத்தான இராணுவ வெற்றிகள் சமாதானத்தைக்கொண்டு வரவில்லை என்பதை வரலாறுகள் காண்பித்து நிற்கின்றன என இந்திய இராணுவத்தின் துணைத் தளபதியாக முன்னர் பதவி வகித்தவரும் தற்போது சென்னையைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிலையத்தின் தலைவராக திகழ்பவருமான ஓய்வுபெற்ற இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் வீ.ஆர். ராகவன் தெரிவித்தார்.

இராணுவத்தினர் ஈட்டியுள்ள மகத்தான வெற்றியிலிருந்து நீண்ட காலமாக நாடி நிற்கின்ற சமாதானத்தை கொண்டு வருவது நாட்டுத் தலைவர்களதும் பிரஜைகளதும் வகிபாகமாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். கொழும்பில் நேற்று ஆரம்பமான, "யுத்தத்தில் வெற்றியீட்டியதிலிருந்து சமாதானத்தை வெற்றி கொள்வது; இலங்கைச் சமூகத்தை யுத்தத்திற்குப் பின்னர் மீளக் கட்டியெழுப்புதல்' என்ற தொனிப் பொருளிலான இருநாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆரம்ப உரையை ஆற்றியபோதே அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கினை உபாயக் கற்கைகளுக்கான பிராந்திய நிலையம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பிரதம அதிதியாக இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டார். இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர்கள், கல்விமான்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் வீ.ஆர். ராகவன் இலங்கையின் இராணுவ வெற்றி குறித்து கருத்து வெளியிடுகையில், ஆயுத மோதல்களின் நிறைவானது மனிதப் பாதுகாப்பை உறுதி செய்யும் நீண்ட பயணத்தினை ஆரம்பித்து வைத்துள்ளது. இராணுவ வெற்றியினால் நாடு பாதுகாப்பாக இருப்பதாக உணரலாம். உங்கள் நாட்டின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக உணரலாம். உங்களது பிரஜைகளும் பாதுகாப்பாக இருப்பது இன்றியமையாதது. புகழ்பெற்ற இராணுவ சிந்தனையாளரான கார்ல் வொன் க்ளோஸ்விற் ""யுத்தத்தின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்'' என்பது குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

மோதல்களின் நோக்கம் வெற்றி எனக் கூறுவோமானால் அது குறுகிய பார்வை கொண்ட ஒரு கூற்றாகவே அமைந்து விடும். மாறாக யுத்தங்களதும் மோதல்களதும் நோக்கமானது வெறுமனே வெற்றியை மாத்திரமின்றி சமாதானத்தைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எம் மத்தியில் பல உதாரணங்கள் உள்ளன. மத்திய கிழக்கில் அரபு, இஸ்ரேல் மற்றும் பல உதாரணங்கள் உள்ளன. அங்கெல்லாம் சிறப்பான இராணுவ வெற்றிகள் ஈட்டப்பட்டன.

ஆனால், அவை சமாதானத்தைக் கொண்டு வரவில்லை. சிறப்பான இராணுவ நடவடிக்கையில் வெற்றியீட்டியதன் மூலமாக வரலாற்றில் இலங்கை நாடு வரலாற்றுமுக்கியத்துவமிக்க உச்சத் தருணத்தில் உள்ளது. இலங்கை இராணுவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்தியாவில் இருந்து நாம் மிகுந்த வியப்புணர்வுடன் அவதானித்து வந்தோம். 20 வருட காலப் பகுதியில் இராணுவத்தினர் எப்படியான நிலையில் இருந்து இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளனர். எப்போதுமே போராடுவதற்கு தயாரான குணாம்சம் கொண்ட இளமையான நவீனகரமான இராணுவமாக மோதலில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை கொண்ட இராணுவமாக அவர்கள் மாற்றம் பெற்றுள்ளனர். ஆயுதப் படையினர் சிறப்பான பணியைச் செய்து முடித்துள்ளனர். அந்த வெற்றியிலிருந்து நாம் அனைவருமே நீண்ட காலமாக நாடி நிற்கின்ற சமாதானத்தை கொண்டு வருவது நாட்டுத் தலைவர்களதும் பிரஜைகளதும் தற்போதைய வகிபாகமாக இருக்க வேண்டும். அதனை எவ்வாறு நாம் சாதிக்கப் போகின்றோம் என்பது எமக்கு முன்பாகவுள்ள கேள்வியாகவுள்ளது.

உச்சக் கட்டப் பாதுகாப்பு என்பது மக்களின் பாதுகாப்பே

உச்சக் கட்டப் பாதுகாப்பு என்பது நாட்டின் பிரஜைகளது பாதுகாப்பே! தற்போது இந்தியாவிலும்கூட தேர்லலொன்றுக்கு முன்பாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படியாக கருத்துக் கணிப்புகளை நடத்துபவர்களிடம் மக்களுக்கு மிகுந்த கரிசனைக்குரிய விடயங்கள் யாது? அவர்கள் உள்ளடக்கும் பத்து விடயங்களில் ஒன்றாக தேசியப் பாதுகாப்பு என்கிற விடயத்தையும் உள்ளடக்கும் படியாக நாம் கேட்டிருந்தோம். அப்படியாக கருத்துக் கணி ப்புகள் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தடவையிலும் இந்தியப் பிரஜைகள் தமது கரிசனைக்குரிய விடயங்களடங்கிய பட்டியலில் தேசியப் பாதுகாப்பு என்பதை மிகவும் கடைசி நிலையிலேயே குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு அவர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அக்கறை கொண்டிருக்கவில் லை என்பது அர்த்தமாகாது. அவர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்தியா பலமிக்கதாகவுள்ளது. எமது நாட்டை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. எமது நாட்டின் பாகங்களை நாம் இழக்கப் போவதில்லை. எம்மிடம் மிகச் சிறந்த ஆயுதப் படையினர் உள்ளனர் என்பது தொடர்பில் இந்தியப் பிரஜைகள் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு என்பது இராணுவ பலமல்ல.

அவர்களைப் பொறுத்தவரையில் பாதுகாப்பு என்பது சட்டம், ஒழுங்கு, ஊழல், மோசடியற்ற தன்மை, கல்வி, சுகாதாரம் அவர்களது சிறார்களின் எதிர்காலம், தொழில் வாய்ப்பு என்பவையே பாதுகாப்பு. அவை இல்லையென்றால் தாம் பாதுகாப்பாக இல்லை என்பதே அவர்களது உணர்வாகவுள்ளது. அது உங்களைப் பொறுத்தவரையிலும் பொருந்தக் கூடிய உண்மையாகும். என்னைப் பொறுத்த வரையும் உண்மையாகும். அதனால் தான் சமாதானம் என்பதன் அர்த்தம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். இலங்கையில் இந்த மகத்தான வரலாற்று முக்கியத்துவமிக்க இராணுவ வெற்றியைத் தொடர்ந்து நாங்கள் எப்படிப் பயணிக்கப் போகின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...
கே.பி.யை விசாரிப்பதற்கு இந்திய மத்திய புலனாய்வுக் குழு அடுத்த மாதம் கொழும்பு வரும்




இந்த மாத ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசைக் கோரும் நாடுகடத்தல் கோரிக்கை ஒன்றை விடுப்பதென இந்தியா தீர்மானித்துள்ளது.

1991ஆம் வருட ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் உள்ள பாரிய சதித்திட்டம் குறித்து அவரை விசாரிப்பதற்காக இந்திய மத்திய புலனாய்வுக் குழு ஒன்று அடுத்த மாதத்தில் கொழும்புக்கு விஜயம் செய்ய இருக்கிறது.

மத்திய புலன்விசாரணை பணியகத்தின் கீழ் இயங்கும் பல் ஒழுக்காற்று கண்காணிப்பு பிரிவு கே.பி.யின் விசாரணை குறித்து கவனம் செலுத்தி அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ராஜீவ் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு மேலும் ஒரு வருடகால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை விசாரணைக் காலம் கடந்த மே மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து, விசாரணை நீடிப்புக்கான கோரிக்கை இதுவரை பரிசீலனையில் இருந்துள்ளது.

எனினும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி கே.பி. கைது செய்யப்பட்ட பின்னர் மேற்படி விசாரணைக் காலத்திற்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கே.பி.யை இலங்கை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

'தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கான அரசியல் தீர்வு திட்டம் அவசியம்' - லியாம் பொக்ஸிடம் கோரிக்கை

லியாம் பொக்ஸ்"
லியாம் பொக்ஸ்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பி்னர் லியாம் பொக்ஸ் அவர்களிடம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து செயற்படத்தக்க வகையிலான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போரினால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களையும் உடனடியாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்ட வேண்டும் என்றும் யாழ் மாவட்டத்தி்ன் நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழுவினர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த லியாம் பொக்ஸ், நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் உள்ளடங்கிய நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழுவினரையும், யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஸையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...

"தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்" -இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவு


பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக விரைவாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முடிவுக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு எதிராக சாட்சிகள் இருப்பின், வழக்குத்தொடரவோ அல்லது சாட்சிகள் இல்லாதபட்சத்தில் அவர்களை விடுதலை செய்யவோ ஒரு அவசர வேலைத்திட்டத்தை நீதியமைச்சின் செயலாளருடன் சேர்ந்து தயாரிக்குமாறும் சட்டமா அதிபருக்கான உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளோவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஜே. ஏ. பிரான்ஸிஸ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு இன்று எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பது நீதியற்ற செயல் என்று பிரதம நீதியரசர் அசோக என். டி . சில்வா தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல்கள் குறித்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...