15 நவம்பர், 2009

அதிபர் ராஜபட்சவுக்கு, ஜெனரல் பொன்சேகா எழுதிய காட்டமான கடிதம் வருமாறு:



இலங்கையில் ராணுவத்தின் மூலம் தாம் ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என அச்சத்தாலேயே தம்மை ராணுவத் தளபதி பதவியில் இருந்து ராஜபட்ச நீக்கியதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ராணுவம் ஈடுபட்டால் உதவ வேண்டும் என இந்தியாவிடம் ராஜபட்ச கோரியிருந்ததாகவும் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.விடுதலைப் புலிகளுடனான போருக்குப் பிறகு ராணுவத் தளபதி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பொன்சேகா, முப்படைத் தளபதி என்ற கௌரவப் பொறுப்புக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இந்தப் பதவியிலிருந்து நேற்று அவர் ராஜிநாமா செய்துள்ளார்.அரசுக்கு அவர் எழுதிய ராஜிநாமா கடிதத்தில், பல்வேறு அமைப்புகளின் தவறான வழிகாட்டலால், ராணுவம் ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என்கிற முடிவுக்கு ராஜபட்ச வந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிகரமாகச் செயல்பட்ட ராணுவத்தை இப்படிச் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தம்மை வருந்தச் செய்திருப்பதாகவும் அந்தத் கடிதத்தில் பொன்சேகா தெரிவித்துள்ளார்

என்னால்தான் வெற்றி: "என்னுடைய தலைமை, தொலைநோக்குப் பார்வை, வழிநடத்தல் காரணமாகத்தான் விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றிகொள்ள முடிந்தது என்று கூறினால் அது மிகைப்படுத்தல் அல்ல என்பது உங்களுக்கே தெரியும். அதிபர் பதவி வகிக்கும் நீங்கள் அளித்த அரசியல் ரீதியான ஆதரவும் அந்த வெற்றிக்குக் காரணம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்.


"விடுதலைப் புலிகளை இந்த ஆண்டு மே மாதம் வெற்றி கண்ட பிறகு நீங்கள் பேசிய பேச்சும், நடந்துகொண்ட விதமும் ராணுவத்தின் மீதும், என் மீதும் நீங்கள் நம்பிக்கை இழந்து வருகிறீர்கள் என்பதை நன்றாகவே உணர்த்தியது.

திடீர் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வேன் என்று கருதியே என்னை தரைப்படை தலைமை தளபதி பதவியிலிருந்து ஜூலை மாதம் விலக்கினீர்கள்.


தயார் நிலையில் இந்திய ராணுவம்: இலங்கை ராணுவம் திடீர் புரட்சியில் ஈடுபடும் என்று அஞ்சி, அப்படி ஏதும் நடந்தால் துணைக்கு உடனே விரைந்துவந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று அக்டோபர் 15-ம் தேதி இந்திய ராணுவத்துக்குத் தூது அனுப்பி அவர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி கூறினீர்கள். இதைவிட எங்களுக்கு வேறு என்ன அவமானம் வேண்டும்.


மிகத் திறமைவாய்ந்த, ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்க ராணுவங்களில் இலங்கையும் ஒன்று என்று நாங்கள் பெற்றிருந்த புகழைச் சீர்குலைக்கும் வகையில் உங்களுடைய செயல் அமைந்துவிட்டது.


புலிகளுக்கு எதிரான போரை தீரத்துடனும் திறமையாகவும் வழிநடத்தினேன் என்பதற்காக இலங்கையின் ஒவ்வொரு ராணுவ வீரனும் என்னை, தங்களுடைய வீர தளபதியாக ஏற்றுக்கொண்டு விசுவாசம் காட்டியதால் உங்களுக்கு என் மீதும், ராணுவத்தின் மீதும் சந்தேகம் வந்தது.


ராணுவத்துக்கு வலு கூடுவது குறித்து நீங்கள் அஞ்சினீர்கள். அதை தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வெளிப்படையாகவே கூறினீர்கள். நெருக்கடியான நேரத்தில் ராணுவத்தைப் புகழ்ந்து பேசிவிட்டு பிறகு நம்பிக்கை இல்லாமல் பேசியது கண்டு நான் வருந்தினேன்.


என்னை முப்படைகளின் தலைமை தளபதியாக நியமித்தபோது மிகவும் சக்திவாய்ந்த பதவியாகத்தான் இருக்கும் என்று நம்பினேன். முப்படைகளின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு ""ஒருங்கிணைப்பாளர்''தான் நான் என்பதை பின்னர் உணர்ந்து கொண்டேன்.


""மூன்று படைகளுக்கும் கட்டளை பிறப்பிக்கும் பதவி உங்களுக்கு என்றால், உங்களுடைய பதவிதான் மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துவிடும்'' என்று பாதுகாப்பு அமைச்சரும், உங்களுடைய சகோதரருமான கோத்தபய ராஜபட்சவும் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.


எனக்கு அடுத்தபடியாக ஜெனரல் ஜகத் ஜெயசூரியாவை ராணுவத் தளபதியாக நியமித்தீர்கள், நான் பரிந்துரைத்தவரை நிராகரித்தீர்கள். ஜகத் ஜெயசூரியா மீது விசாரணை நடைபெறும் விவகாரம் ஒன்று இருக்கிறது என்று தெரிந்தும் அவருக்குப் பதவி தந்தீர்கள். இதனால் ராணுவத்தில் ஒழுங்கும் நேர்மையும் சீர்குலைய ஆரம்பித்திருக்கிறது.


வெறும் சோற்றுப்பட்டாளமாக இருந்த ராணுவம், வீரம் செறிந்த போர்ப்படையாக என் தலைமையில் மாறியது. இப்போது மீண்டும் பழைய கதை ஆரம்பித்துவிட்டது. ராணுவத்திலிருந்து ஓய்வு பெறுகிறவர்களும் விட்டு ஓடுகிறவர்களும் அதிகரித்துவிட்டார்கள். புதிதாகச் சேருகிறவர்களைவிட விட்டு ஓடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.


மக்களுக்கு சமாதானத்தை அளிக்கத் தவறிவிட்டது அரசு; சிறுபான்மைச் சமூகமான தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட அரசு நிறைவேற்றவில்லை. அரசு உரிய வகையில் திட்டமிடாததால் தமிழர்கள் வாழும் சூழல் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. முகாமில் இருக்கிறவர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்களுடன் போய் தங்கிக்கொள்ள அனுமதித்திருக்க வேண்டும். தமிழர்களின் அன்பையும் ஆதரவையும் பெறும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை. இது இப்படியே தொடர்ந்தால் நமது ராணுவத்தின் வெற்றியே அடையாளம் இல்லாமல் பாழாகிவிடும். தமிழர்கள் மீண்டும் கிளர்ந்து எழுவார்கள். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.


உரிமைகள் மறுப்பு: போரினாலும் அதன் பிறகு அரசு காட்டும் மெத்தனமான நிர்வாகத்தாலும் மக்களுடைய பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. அரசில் ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடுகின்றன. அரசுப் பணம் கோடிக்கணக்கில் விரயமாகிறது. பத்திரிகைககளின் கருத்துச் சுதந்திரமும், ஜனநாயக உரிமைகளும் காலில்போட்டு நசுக்கப்படுகின்றன' என்று கடிதத்தில் எழுதியிருக்கிறார் பொன்சேகா.

மேலும் இங்கே தொடர்க...
அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே வேறுபட்டுள்ள மக்களின் நியாயமான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியுமென இந்திய நிதியமைச்சர் தெரிவிப்பு-

இராணுவ ரீதியான வெற்றி அடையாளப்பட்ட நிலையில் அரசியல் அரங்கில் அனைத்துத் தரப்பினரும் பங்கு கொள்ளவும் நன்மைகளைப் பெறவும் கூடிய வெற்றியொன்றை அடைய வேண்டியுள்ளதாக இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற லக்ஸ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த உரையின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியல்தீர்வு திட்டமொன்றை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே இன, மத அடையாளங்களால் வேறுபட்டுள்ள மக்களின் நியாயமான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியுமென்றும் அவர் கூறியுள்ளார். மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களில் பல்லாயிரக் கணக்கானோர் மீள்குடியமர்த்தப்பட்டமையை தாம் வரவேற்பதாகவும், இதுபோன்றதொரு தருணத்தில் இலங்கைக்கு இந்தியா உதவத் தயங்கவில்லையென்றும் இந்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வடக்கின் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக 500கோடி இந்திய ரூபாய் வழங்க தாம் அறிவித்துள்ளதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
பெற்ற வெற்றிகளை விமர்சிக்காது அதனை சர்வதேச சமூகம் பாடமாகக் கொள்ள வேண்டுமென பாதுகாப்புச்செயலர் வலியுறுத்தல்-

பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பவர்களின் பிரச்சாரங்களை ஏற்கவேண்டாமென பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்நாட்டிற்கு எதிராக தொடர்ந்தும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாட்டை மேற்கொள்ளும் நாடுகள் இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்நாட்டிற்கும் பிரச்சினைகளும் சவால்களும் இருப்பதாக தெரிவித்த அவர், தம்மால் பெறப்பட்ட வெற்றிகளை விமர்சிக்காது அதனை சர்வதேச சமூகம் பாடமாகக் கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் முனைப்பான முறையில் செயற்படுவதாக குறிப்பிட்ட அவர், சகல இலங்கையர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைத் தவிர்த்துக் கொள்ளமுடியுமென்றும் கூறியுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
தேர்தல் குறித்து விரைவில் அறிவிப்பேன் - ஜனாதிபதி









தேர்தலையா
, பொதுதேர்தலையா முதலில் நடாத்துவது என்பதையும் அதற்கான தினம் பற்றியும் தாம் விரைவில் அறிவிப்பதாக ஜனாதிபதி சற்றுமுன்னர் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 19வது தேசியமாநாடுகெத்தாராமையில் சற்று முன்னர் முடிவடைந்தது.எதிர்வரும்தேர்தல்குறித்துஇன்றுஅறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் ஜனாதிபதி மேற்படி கருத்தை தெரிவித்தார்

இன்று மாலை நடைபெறவுள்ள இம்மாநாட்டின் பொருட்டு கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கை அண்மித்த வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 35 நாடுகளில் பிரதிநிதகள் மற்றும் இராஜதந்திரிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்

மேலும் இங்கே தொடர்க...
சீனாவை கட்டுப்படுத்த முற்படமாட்டோம்* சொல்கிறார் அதிபர் ஒபாமா


Top global news update


டோக்கியோ:"சீனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிலும் அமெரிக்காஈடுபடாது' என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று ஜப்பான் சென்றார். டோக்கியோவில்நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:

உலகளவில் சீனாவின் பங்கு அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது. அந்நாட்டுடனான, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளைவலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். எனினும், அந்நாட்டின் அனைத்துசெயல்பாடுகளையும் அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாது.அனைத்து மக்களின் மதம் மற்றும்கலாசாரம் தொடர்பான அடிப்படை கருத்துக்கள் குறித்து பேசவும் தயக்கம் காட்டாது.

சீனாவின் வளர்ச்சியை கண்டு, அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எதிலும் அமெரிக்கா ஈடுபடாது.அணு ஆயுதசோதனை மற்றும் அது தொடர்பான திட்டங்களால், அமெரிக்காவையும் மற்ற நாடுகளையும் வட கொரியா அச்சுறுத்தமுடியாது. வட கொரியாவின் அச்சுறுத்தலுக்கு அமெரிக்கா பயப்படாது.

இது தொடர்பான எங்கள் நடவடிக்கைகளை வெறும் வார்த்தையால் மட்டுமல்லாது, செயல்கள் மூலமும்வெளிப்படுத்துவோம். புவி வெப்பமயமாதலை தடுக்க, வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு ஒபாமா பேசினார்.தனது பேச்சின்போது, திபெத் விவகாரம் குறித்து அவர் எந்த கருத்தையும்தெரிவிக்கவில்லை.

மேலும் இங்கே தொடர்க...
சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் : ஜனாதிபதி பிரதிபா நம்பிக்கை

புதுடில்லி : ""சந்திரனுக்கு ஆளில்லாத விண்கலமான சந்திரயான்-1 அனுப்பிவைக்கப்பட்டது. விரைவில், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும்திட்டம் செயல்படுத்தப்படும்,'' என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நம்பிக்கைதெரிவித்தார்.

டில்லியில், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டசர்வதேச வர்த்தக கண்காட்சியை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் நீண்ட காலபயணம் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்கள் கண்காட்சிக்குவைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்கூறியதாவது: சந்திரனுக்கு, ஆளில்லாத விண்கலமான சந்திரயான்-1யை நாம்அனுப்பி வைத்தோம். விரைவில், சந்திரனுக்கு விண்கலத்தில் மனிதர்களைஅனுப்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

என்ற நம்பிக்கை உள்ளது.

எதிர்காலம், புதிய கண்டுபிடிப்புகள், புதிய கருத்துக்கள் மற்றும் புது முயற்சிகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். அந்த திசையிலேயே பயணிக்கவும், இந்தியாவை அறிவும், நிபுணத்துவமும் நிறைந்த நாடாக உருவாக்கவும் நாம் தயாராக வேண்டும். பொருளாதார சீர்த்திருத்தங்கள், நாட்டின் பொருளாதாரத்தை உலகுடன் ஒருங்கிணைத்துள்ளது. பல வெளிநாட்டு கம்பெனிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு, சாதகமான இடமாக இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது.

உலகின் மற்ற நாடுகளுடன், நமது பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில்(ஆசியான்) இடம்பெற்றுள்ள 10 நாடுகள் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுடன், இந்தியா சமீபத்தில் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட்டது. நம் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தினால், அடுத்த ஐந்தாண்டுகளில், 27.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு பிரதிபா கூறினார். வர்த்தக கண்காட்சியில், பொதுமக்கள் பார்வைக்காக, "தினமலர் ஸ்டால்' ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது

மேலும் இங்கே தொடர்க...
இராணுவப்புரட்சி தொடர்பாக சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுப்பு


இராணுவப்புரட்சி ஒன்று இடம்பெறலாம் என்ற எச்சரிக்கையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சசி தருர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இராணுவப்புரட்சி ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி இந்திய படையினர் விழிப்புடன் வைக்கப்பட்டனர் என கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகா தமது பதவி ஓய்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இவ்வாறான வேண்டுகோளின் அடிப்படையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டனர் என்று சரத் பொன்சேகா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவலை இந்திய அமைச்சர் மறுத்துள்ளார். இது அடிப்படையற்ற செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
இலங்கைத் தமிழர்களின் புகலிட கோரிக்கையின் எதிர்காலம் ஐ.நா.வின் கையில்:பிரதமர் கெவின் ரூட்


தமிழர்களின் புகலிட கோரிக்கையின் எதிர்காலம் ஐ.நா.வின் அகதிகளிற்கான உயர்ஸ்தானிகராலயத்தின் கையில் உள்ளது என அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி வந்த 78 தமிழர்களை அவுஸ்திரேலியக் குழுவினர் தடுத்து நிறுத்தி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும் இந்தோனேஷிய அரசாங்கம் இவர்களை ஏற்கமறுத்துவரும் நிலையில் 78 பேருக்கும் கொள்கை அளவில் புகலிடம் தர அவுஸ்திரேலியா ஒப்புக் கொண்டது.12 வாரங்களுக்குள் 78 பேரையும் குடியேற்றம் செய்யவும் அது முன்வந்தது.

இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலிலிருந்து 22 தமிழர்கள் நேற்று வெளியேறியுள்ளனர்.ஏனைய 56 பேரும் கப்பலிலேயே உள்ளனர். 22 பேரையும் தான்சுங் பினாங்கில் உள்ள குடியேற்றப் பிரிவு மையத்திற்கு இந்தோனேசியா அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் 78 பேரின் எதிர்காலம் ஐ.நா. அகதிகளிற்கான உயர்ஸ்தானிகராலயத்தின் கையில் உள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கெவின் ரூட் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," அனைத்து அரசியல் புகலிடம் கோரும் தமிழர்களின் கோரிக்கையை மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும், முறைப்படியும் நாங்கள் அணுகுவோம்.

இருப்பினும் தனி நபர்களின் புகலிடக் கோரிக்கை குறித்து முதலில் கவலைப்பட வேண்டியது ஐ.நா. அகதிகளிற்கான உயர்ஸ்தானிகராலயம் தான்.. இரண்டாவது அகதிகளை ஏற்பது தொடர்பாக ஐ.நா. பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள 15 நாடுகளுடையதாகும்.இந்த முறைப்படி இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை நாங்கள் அணுகுவோம்" என்றார்

இடம்பெயர்ந்துள்ள மக்களை பார்வையிட த.தே.கூட்டமைப்புக்கு அனுமதி




பிரதேசத்திலுள்ள இடைத் தங்கல் முகாம்களுக்கும் ,இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள பிரதேசங்களுக்கும் செல்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அனுமதியளித்துள்ள அரசாங்கம் போக்கு வரத்து வசதிகளையும் வழங்க முன்வந்துள்ளது.

இதன் பிரகாரம் நாளை திங்கட்கிழமை வவுனியா ,மன்னார் ,கிளிநொச்சி ,துணுக்காய் ஆகிய இடங்களுக்கு அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதிநிதிகளும் அழைத்துச் செல்லப்படவிருக்கின்றார்கள்.

ஏற்கனவே ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பிலும் இடம்பெயர்ந்துள்ள மக்களையும் ,மீளக் குடியமர்ந்த மக்களையும் பார்வையிட ஏற்பாடுகளை செய்து தருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தது.

வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 10 பேர் இக்குழுவில் இடம்பெறவிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை காலை 7.00 மணிக்கு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானப்படை விமானம் மூலம் வவுனியா புறப்பட்டுச் செல்லும் இவர்கள் வவுனியா விமானப்படை தளத்திலிருந்து ஹெலிக்கொப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

முதலில் மன்னார் பகுதிக்கு விஜயம் செய்யும் இவர்கள் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன் துணுக்காய் பகுதிக்கும் விஜயம் செய்வர்.

கிளிநொச்சி பகுதிக்கும் செல்லும் இவர்கள் வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் செல்லவுள்ளனர். திங்கட்கிழமை காலை முதல் மாலைவரை இப்பகுதிக்கு விஜயம் செய்யும் கூட்டமைப்பினர் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுடனும் உரையாடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இது தொடர்பாக தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
கப்பலிலிருந்து வெளியேறிய 78இலங்கையர்கள் பின்டன் தீவுக்கு அனுப்பிவைப்பு-

அவுஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம்கோரிச் சென்றிருந்த 78இலங்கையர்களில் 22பேர் அவர்கள் தங்கியுள்ள கப்பலிலிருந்து நேற்று வெளியேறியுள்ளனர். இந்த 22இலங்கையர்களில் அரசியல் புகலிடம் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிங்கப்பூருக்கு பின்டன் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்டன் தீவிலுள்ள அவுஸ்திரேலிய முதலீட்டினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தஞ்சன்பினான் என்ற நிலையத்தினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதேவேளை அவுஸ்திரேலியாவின் அரசியல் புகலிடம் எதிர்பார்த்துச் சென்ற ஏனைய 56இலங்கையர்களும் தொடர்ந்தும் ஓசியானிக் வைகிங் கப்பலில் தங்கியுள்ளனர். இவர்கள் கப்பலிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் நான்கிற்கும் ஆறிற்குமிடையிலான வாரங்களுக்குள் அவர்களுக்கு தங்குமிடம் பெற்றுக்கொடுக்க அவுஸ்திரேலிய அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்தோனேசிய தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...


தேசிய சிறுநீரக மாற்று சிகிச்சை நிலையம் கொழும்பு மாளிகாவத்தையில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம். ரூ. 450 மில். செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் 111 படுக்கை வசதிகள் உள்ளன. அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஏ. எச். எம். பெளசி மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர் றிஸ்வி ஷெரீப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சு.க தேசிய மாநாடு இன்று கொழும்பில்

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலிருந்தும் ஒரு இலட்சம் பிரதிநிதிகள்
35 வெளிநாட்டு பிரமுகர்களும் பங்கேற்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய மாநாடு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் நடைபெறுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இத்தேசிய மாநாட்டில் கலந்துகொள்கின்றன.

இன்று மாலை 3.00 மணிக்கு கொழும்பு, கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெறும் தேசிய மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட சுமார் ஒருலட்சம் பேர் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், 35 நாடுகளிலிருந்து நேசக்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். ஏற்கனவே, பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ளனர்.

இதேநேரம், கெத்தாராம விளையாட்டரங்கு உட்பட மாநாடு நடைபெறும் பகுதியைச் சூழவுள்ள பகுதிகளிலும் சுமார் 3000 பொலிஸார் பாதுகாப்பு கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் முதல் முறையாக சுதந்திரமாக நடத்தப்படுகின்ற தேசிய மாநாட்டில் முதல் முறையாக வடக் கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் பெருந்தொகையான தமிழ் மக்கள் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வன்னியிலிருந்து மூவினங்களை யும் சேர்ந்த 1000 சு. க. ஆதரவாளர்கள் கட்சியின் அமைப்பாளர் சுமதிபால தலைமையில் கலந்துகொள்கின்றனர்.

தேசிய மாநாட்டைமுன்னிட்டு போக்குவரத்து பொலிஸார் விசேட போக்குவரத்து ஒழுங்குகளைச் செய்துள்ளனர்.

“இனி நாம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப் பொருளின் கீழ் நடைபெறும் இத் தேசிய மாநாடு மிக முக்கியம் வாய்ந்தது என ஸ்ரீல.சு.க. முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீல.சு.க மாவட்ட அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்குதல் உட்பட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன. நாட்டு மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய முக்கிய அறிவித்தல்களையும் ஜனாதிபதி இந்த மாநாட்டின் போது அறிவிப்பாரென அறிவிக் கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாகவும் ஜனாதிபதி இந்த மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலா? அல்லது பொதுத் தேர்தலா? முதலில் நடத்துவதென ஜனா திபதி இன்று அறிவிப்பார்.

ஸ்ரீல.சு.க வில் இணைந்து கொண்டு உப தலைவராகப் பதவியேற்றுக் கொண் டுள்ள அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தலைமையில் முதல் முறையாக சுமார் 4000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கிலிருந்தும் முதல் முறையாக பெருந்திரளானோர் கலந்து கொள்கின்றனர்.

கடந்த சில தினங்களாக மாவட்ட மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தேசிய ஒற்றுமை, பொருளாதாரம், அரசியல் தொடர்பில் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் தயா ரிக்கப்பட்ட ஆலோசனைகள் மாநாட்டில் முன்வைக்கப்படுமென அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீல.சு.க வின் தேசிய மாநாட்டுக்கு ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு தலைநகரில் எந்தவொரு வீதியும் மூடப்படமாட்டாது.

இன்று காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசல் காணப்படும் வீதிகள் எவை என்பது பற்றியும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வீதிகளினூடாக செல்லவேண்டாம் என பொலிஸார் தெரிவிக்கவில்லை. எனினும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுவதால் மாற்றுவழிகளை பயன்படுத்த முடியும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இங்கே தொடர்க...
14.11.09
நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அதிசய நாக சிலை! மட்டக்களப்பு மாவட்டத்தில்



மாவடிவேம்பு எனும் கிராமத்தில் நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் (10.11.2009) மாலை 4.00 மணியளவில் ஓர் அதிசயம் இடம்பெற்றுள்ளது.

சிறுமியாக மனித உருவில் தோன்றிய நாகபூசணி அம்பாள் ஏனைய சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடியதாகவும் பின்னர் பெரியோர் அவதானித்ததும் ஆலமரத்திற்கு கீழே சென்று, நாகத்தின் உருவில் சிலையாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. பி.ப. 5.00 மணிவரையும் அச்சிலைக்கு இதயத்துடிப்பு இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அதன் வால்பகுதி மரத்தில் உள்நுழைந்திருப்பதுடன் வெளியே தலைப்பகுதி மாத்திரம் காணப்படுகின்றது. நேற்றிலிருந்து பலர் புதிதாகத் தோன்றிய இந்தச் சிலையைப் பார்வையிட்டு வருகின்றார்கள்.
போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள் : ஐ.தே.முன்னணிக்கு மல்வத்த பீடாதிபதி அறிவுரை


"மக்களின் நலன்கருதி வேறுபட்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்திருப்பதை வரவேற்கும் அதேவேளை, பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதை அரசியல் கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கு ஆசி வழங்கிய கண்டி மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியினர் தமது கொள்கை விளக்கக் கோவையினை மல்வத்த பீடாதிபதியிடம் இன்று சனிக்கிழமை காலை கையளித்து ஆசிபெற்ற பின்னரே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகள் இணைந்து கொழும்பிலிருந்து வாகனத் தொடரணியாக கண்டிக்குச் சென்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

"மாகாண சபைகளினூடாக மக்களுக்கு உரிய சேவைகள் ஆற்றப்படுவதில்லை என்பதே எனது கருத்தாகும். நாட்டுக்கு நிறைவேற்று அதிகாரமில்லாத மக்கள் பலம் கொண்ட ஆட்சி பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இது எனது சொந்த அபிப்பிராயமாகும்.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வதற்கு அரசியல் தலைவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்" என பீடாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

"நாட்டில் மனித உரிமைகளுக்கு இடமில்லை. பொருளாதாரம் நாளுக்கு நாள் அபிவிருத்தியில் குறைந்து வருகிறது. சுதந்திரமான ஜனநாயக நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே நாம் ஒன்றிணைந்தோம்.

நாட்டின் அபிவிருத்திக்காகவும் மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம்" என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

கொழும்பிலிருந்து தொடரணியாகச் சென்ற மேற்படி குழுவினர், இன்று காலை 9.00 மணியளவில் கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மல்வத்த பீடத்துக்குச் சென்றனர்.

கண்டி செல்வ விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதோடு கண்டி மீரா மக்காம் முஸ்லிம் பள்ளிவாசல், கண்டி மறைமாவட்ட ஆயர் இல்லம் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று அவர்கள் வழிபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில தங்கம் கடத்த முயன்றவர் கைது


பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் தப்பிச் செல்ல முயன்ற 45 வயதான இந்தியப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்கள விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த விமானம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் தரையிறங்கியவுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நடமாடியதைக் கண்ட அதிகாரிகள் அந்நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அவரிடம் சுமார் 1 கிலோகிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளதாக சந்தேக நபர் அதிகாரிகளிடம் கூறியுள்ளதுடன் தப்பிச்செல்லவும் முயன்றுள்ளார்.

இவர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் எமது இணையத்தளத்திற்குவா தெரிவித்தார்.
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில தங்கம் கடத்த முயன்றவர் கைது


இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் தப்பிச் செல்ல முயன்ற 45 வயதான இந்தியப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்கள விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த விமானம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் தரையிறங்கியவுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் நடமாடியதைக் கண்ட அதிகாரிகள் அந்நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அவரிடம் சுமார் 1 கிலோகிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளதாக சந்தேக நபர் அதிகாரிகளிடம் கூறியுள்ளதுடன் தப்பிச்செல்லவும் முயன்றுள்ளார்.

இவர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் எமது இணையத்தளத்திற்குவா தெரிவித்தார்.
கடிதம் பகிரங்கமானது நெறிமுறைகளுக்கு முரண்-அமைச்சர் சமரசிங்க



கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதம் கிடைத்துள்ளது. சீருடையில் எழுதியிருக்கின்ற கடிதத்தை ஜனாதிபதி வெளியிட்டிருக்கமாட்டார். அந்தக் கடிதத்தை ஜெனரல் பகிரங்கப்படுத்தியிருந்தால் அது நேர்மையற்றது. நீதி நெறிமுறைகளுக்கு முரணானது என மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், ஜெனரல் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திற்கு பதிலளிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். அக்கடிதம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு எனக்கு அதிகாரமும் இல்லை, அக்கடிதம் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தால் அது நேர்மையற்றது.

கடிதத்தின் பிரதியொன்று என்னிடமும் இருக்கின்றது. எனினும் ஜனாதிபதி பதிலளித்ததன் பின்னரே கடிதம் தொடர்பில் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்கமுடியும் என்றார்
20 வருடங்களுக்கு முன் கைதிகள் கொல்லப்பட்ட அதே தினத்தில் திட்டமிட்ட தாக்குதல் - இடதுசாரி முன்னணி கண்டனம்


இருபது வருடங்களுக்கு முன்பதாக அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்ட அதே தினமான நவம்பர் 13ஆம் திகதி (இன்று) நேற்று வெள்ளிக்கிழமையன்று தமிழ் அரசியல் கைதிகள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் என இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை அதிகாரிகளால் மறைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

கொழும்பு வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பாக கூறுகையிலேயே சமல் ஜயநித்தி இவ்வாறு தெரிவித்தார். இத்தாக்குதலானது ஏதேச்சையாக நடைபெறவில்லை. நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கடமைபுரிந்த சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் தங்கியுள்ள சிறைக் கூடத்திற்கு சென்று மிகக் கேவலமான முறையில் நிந்தித்துள்ளனர். இவ்வாறு ஏன் எம்மை நிந்திக்கின்றீர்கள் எனக் கேள்வி கேட்ட போதே சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளாலும் பெரும்பான்மை இன கைதிகளாலும் தமிழ் அரசியல் கைதிகள் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.

இத் தாக்குதலில் 8 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.நாட்டில் இனவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு நாட்டுக்குள்ளும் பாதுகாப்பில்லை; சிறைச்சாலைக்குள்ளும் பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளது.1970 1980 களில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இன்று ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது. என்ன காரணம்? வேறொன்றும் அல்ல தமிழர் என்பதே காரணமாகும். இருபது வருடங்களுக்கு முன்பதாக இதே தினத்தில் தான் அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்டனர் என்பதையும் இத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றும் சமல் ஜயநித்தி தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...