11 பிப்ரவரி, 2010

488 பொலிஸ் நிலையங்களில் தேர்தல் கண்காணிப்புப் பிரிவு - காமினி நவரட்ன



பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலுமுள்ள 488 பொலிஸ் நிலையங்களிலும் தேர்தல் கண்காணி ப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவொ ன்று இன்று முதல் ஆரம்பிக்கப்ப டும் என சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவி த்தார்.

அத்துடன் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை உள்ளடக் கிய 75 தேர்தல் நடவடிக்கை அலு வலகங்களும் இயங்கும் என தேர் தல் நடவடிக்கைகளுக்கு பொறுப் பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரி வித்தார். அத்துடன் பொலிஸ் நிலைய மட்டத்தில் 413 தேர்தல் முறைப்பாட்டுக்கென விசேட பிரிவுகளும் நிறுவப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்று மட்டத்தில் நிறுவப்படும் விசேட கண்காணிப்பு நிலையத்தின் பணிகள் யாவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம், மாவட்ட பொலிஸ் அலுவலகம், பிரதேச பொலிஸ் நிலையம் என்ற மட்டத்தில் பணிகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்


வடக்கு, கிழக்கில் புதிய கிளைகள்;
சுயதொழிலை ஊக்குவிக்க இலங்கை வங்கி கடன் திட்டம்



வடக்கு, கிழக்குப் பகுதிகளில் புதிய கிளைகளைத் திறப்பதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே இயங்கி வந்த கிளைகளைப் புனரமைப்பதுடன், புதிதாக 30 கிளைகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வட பகுதியில் வங்கிச் சேவையை மேம்படுத்து முகமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவென எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) யாழ்ப்பாணத்திற்குச் செல்வதாக வங்கியின் தலைவர் கூறினார்.

இலங்கை வங்கியின் எதிர்காலத் திட்டங்கள், இலக்குகள் குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று (11) முற்பகல் கொழும்பிலுள்ள வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மேலும் விளக்கமளித்த விக்கிரமசிங்க, யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு 5 பில்லியன் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

ஐம்பதினாயிரம் முதல் இரண்டரை மில் லியன் வரை கடன் பெற்றுக் கொடுக்கப் பட்டுள்ளது. மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட தொழிற்துறையினருக்கு அவர் களின் தொழில் முயற்சியை மேம்படுத்த கடன் வழங்கப்பட்டுள்ளது.

வடபகுதி மக்கள் தாமாகவே முன்னேற முடியும். அவர்கள் இலங்கை வங்கியை ஒரு வாகனமாகப் பயன்படுத்தி அபிவிருத்தி நோக்கி பயணிக்க முடியும். புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகள் நிலவிய காலகட்டத்திலும் வன்னியில் இலங்கை வங்கியின் கிளைகள் இயங்கின.

கிளி நொச்சி, மல்லாகம், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இயங்கிய கிளைகளை மீளத் திறப்பதுடன் புதிய கிளைகளையும் ஆரம்பிக்கவுள்ளோம். தற்போது வடக்கில் 30 கிளைகளும் கிழக்கில் 34 கிளைகளும் உள்ளன.

மேலும் 30 கிளைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றோம். இலங்கை வங்கி கடந்த 60 ஆண்டு காலமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகிறது. வங்கியின் வளர்ச்சிக்கு வடபகுதி மக்கள் பாரிய பங்களிப்புகளை நல்கியுள்ளார்கள். எதிர்காலத்திலும் அவர் களின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.



ஜி
.எஸ்.பி சலுகை நீக்கப்படலாமென்ற பயப்பிராந்தி அவசியமற்றது




ஆடைக் கைத்தொழில் துறை முக்கியஸ்தர்கள் கருத்து; புதிய உலக சந்தை வாய்ப்பை தேடுமாறும் வேண்டுகோள்
மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஜி. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படலாம் என்று இலங்கையில் காணப்படும் பயப்பிராந்தி அவசியமற்றது. இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் புதிய உலக சந்தை வாய்ப்புகளை தேடிப்பெற வேண் டும். நேற்று முன்தினம் கொழும்பு ஹில்டன் ஹோட்டல் அரங்கில் இடம்பெற்ற சர்வதேச ஆடைத் தொழில் கண்காட்சி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போது அங்கு உரையாற்றிய ஆடைக் கைத்தொழில் துறை முக்கி யஸ்தர்களினால் இக்கருத்து முன்வைக்கப் பட்டது.

செம்ஸ் குளோபல் நிறுவனத்தின் தலைவரும் குழும முகாமைத்துவ பணிப்பாளருமான மெஹ்ரூன் இஸ்லாம் இது தொடர்பாக தெரிவிக்கையில், ஜி. எஸ்.பி. பிளஸ் சலுகை சுனாமி அனர்த்தத் தின் பின்னர் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒன்றெனவும் இச்சலுகை இல்லா விட்டால் வேறு வழியே கிடையாது எனக் கருதுவது தவறான அணுகுமுறை எனவும் குறிப் பிட்டார்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, தென்னாபிரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் என நாம் முயற்சி செய்யாத பல ஆடை ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புகள் உலகெங்கும் உள்ளன. இச் சந்தைகளில் ஊடுருவி புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் முன்வர வேண்டும். நமது ஆடை உற்பத்தித் தரம் உயர் மட்டத்தில் பேணப்படுவதாகவும், தரம் கொண்டதாகவும், உலக நாடுகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாகவும் இருக்குமானால் புதிய சந்தை வாய்ப்புகளை பெறுவதில் சிரமம் இருக்காது.

இவை மட்டுமன்றி, பெற்றுக் கொள்ளும் கட்ட ளை களை உரிய நேரத்தில் முடித்து சரியான தருணத்தில் அனுப்பி வைத்தல், வாக்குறு தியை காப்பாற்றுதல் என்பனவற்றிலும் ஆடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்று மதியாளர்கள் நம்பகமாக நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் ஜி. எஸ். பி. சலுகையை இழப்பது பற்றி கவலை கொள்ள வேண்டியிருக்காது. இலங்கை ஏற்றுமதியாளர்கள் முயற்சிகளை கைவிட்டு விடக்கூடாது.

இவ்வாறு இங்கு ஊடகவியலாளர் களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மெஹ்ரூன் இஸ்லாமும் ஏனைய பிரமுகர் களும் பதிலளிக்கையில் தெரிவித்தனர்.

ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை இலங்கை இழக்கலாம் என்ற கருத்து நிலவும் காலக் கட்டத்தில் சர்வதேச நாடுகள் கலந்து கொள்ளும் ஆடைத் தொழில் கண்காட்சி கொழும்பில் நடத்தப்படுவது எவ்வாறு சாத்தியமானது என்ற கேள்விக்கு பதிலளிக் கையில், ஆடைத் தொழில்துறையில் இலங்கை சாதகத்தன்மைகளுடன் இருப்ப தையே இது எடுத்துக்காட்டுவதாக இங்கு பதில் அளிக்கப்பட்டது.

கொழும்பு டீ.ஆர். விஜேவர்தன மாவ த்தையில் அமைந்துள்ள கண்காட்சிக் கூடத்தில் எதிர்வரும் மார்ச் 4ம் திகதி முதல் 6ம் திகதி வரை மூன்று பிரிவுகளாக இந்த இலங்கை ஆடை உற்பத்தித்துறை கண்காட்சி நடைபெறுகிறது. சுமார் இருபது நாடுகளில் இருந்து இருநூறு முதல் 500 சர்வதேச பார்வையாளர்களும் கொள்வனவாளர்களும் இந்த இலங்கை ஆடைத் தொழில்துறை கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.


தகவல், ஊடகத்துறை அமைச்சு ஜனாதிபதியால் பொறுப்பேற்பு

தகவல், ஊடகத்துறை அமைச்சை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப் பேற்றுள்ளார். தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா விடுத்த வேண்டுகோளையடுத்தே ஜனாதிபதி மேற்படி அமைச்சைப் பொறுப்பேற்றுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, எதிர்வரும் பாராளுமன் றத் தேர்தலில் நான் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளேன். அதற்கு கால அவகா சம் தேவைப்படுகிறது. அதனால் அமைச்சுப் பதவியில் இருந்து விடுவிக்குமாறு ஜனா திபதியை கோரியுள்ளேன். அதற்கு ஜனா திபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் ஊடக அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்கிறார். எனவே அமைச்சரவை முடிலுவுகளை அறிவிக்கும் இந்த ஊடகவிய லாளர் மாநாடு நான் பங்குபற்றும் இறுதி ஊடகவியலாளர் மாநாடாகக் கூட இருக் கலாம். எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஊடகவியலாளர்கள் அடங்களான சகல தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன் என்றார்.


அரசியல் என்பது சண்டித்தனமோ பழிவாங்குதலோ அல்ல




நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கையை ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி
அரசியல் என்பது சண்டித்தனமோ பழிவாங்குதலோ அல்ல. மக்களைப் பயமுறுத்தி அரசியல் நடத்திய யுகத்தை இம்முறை ஜனாதிபதித் தேர்தலோடு நாட்டிலிருந்தே தம்மால் ஒழிக்க முடிந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை நகரில் நேற்று நடைபெற்ற நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க் கையை ஆரம்பிக்கும் மக்கள் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எழுபதுகளில் தமது அரசியல் வாழ்க்கைக்கு ஆசீர்வாதம் வழங்கிய மக்கள் மத்தியில் தற்போது தமது புதல்வரின் அரசியல் வாழ்க்கை ஆரம்ப நிகழ்வில் கருத்துக்களைப் பரிமாறக்கிடைத்தமை தமக்குக் கிடைத்த பாக்கியமெனவும் ஜனாதிபதி குறிப் பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் கூறியதாவது: எவருக்கும் அரசியல் செய்யக் கூடிய உரிமைகள் உள்ளது. எனினும், நாட்டை மீண்டும் பயங்கரவாதி களுக்குக் காட்டிக்கொடுப்பதற்கோ நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைப்பதற்கோ எவருக்கும் உரிமை கிடையாது.

2500 வருடங்கள் பெளத்த உபதேசங்களால் போதிக்கப்பட்ட நன்றியுணர்வுடைய மக்கள் வாழும் இந்த நாட்டில் எப்போதும் வாய்மையே வெல்லும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ; சகல இன, மத, சமூகங்களையும் கொண்ட இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொண்டு இந்நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்ப ணிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, ஆசியாவிலேயே சிறந்த நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அம்பாந்தோட்டை மக்களுடன் இணைந்து தாமும் அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் தெரிவித்த அவர்; தமது அன்பான தாயாரின் நிழலில் கல்விக் கண் திறந்து முதலெழுத்தைப் படித்தது போல் தந்தையாரின் அரவணைப்பிலிருந்து அரசியல் அரிச்சுவடியைக் கற்பதனைத் தாம் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுக்கு முன்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தங்காலை நகரில் அமைந்துள்ள பீ. ஏ. ராஜபக்ஷவின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்த சமரவீர உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையருடன் அமைச்சர் சமரசிங்க சந்தித்துப் பேச்சு




இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தின் முன்னேற்றம் மற்றும் அதனை பேணுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள், அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (10) ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனிதம் பிள்ளையை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இலங்கையில் மனித உரிமைகளை பேணுவதை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் தேசிய செயற்பாட்டு திட்டமொன்றை வகுப்பதில் முன்னேற்றம் காட்டப் பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு நடை பெற்ற மனித உரிமைகள் சபை கூட்டத்தில் இடம்பெற்ற உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் மீளாய்வு நடவடிக்கைகளின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியின் வெளிப்பாடே இந்த தேசிய செயற்பாட்டு திட்டமாகும்.

இந்த செயற்பாட்டு திட்டத்தின் முதலாவது நகலை பூரணப்படுத்துவது தொடர்பாக இதுவரை எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை மற்றும் அடுத்த கட்டமாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை ஆகியவை பற்றி அமைச்சர் விளக்கமாக கூறினார்.

குறிப்பிட்ட செயற்பாட்டு திட்டம் மேலும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படு வதுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தில் ஆலோசிக்கப்பட்டு மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமென்று அமைச்சர் கூறினார். இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தின் முன்னேற்றம் மற்றும் அதனை பேணுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள், அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (10) ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனிதம் பிள்ளையை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இலங்கையில் மனித உரிமைகளை பேணுவதை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் தேசிய செயற்பாட்டு திட்டமொன்றை வகுப்பதில் முன்னேற்றம் காட்டப் பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு நடை பெற்ற மனித உரிமைகள் சபை கூட்டத்தில் இடம்பெற்ற உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் மீளாய்வு நடவடிக்கைகளின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியின் வெளிப்பாடே இந்த தேசிய செயற்பாட்டு திட்டமாகும்.

இந்த செயற்பாட்டு திட்டத்தின் முதலாவது நகலை பூரணப்படுத்துவது தொடர்பாக இதுவரை எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கை மற்றும் அடுத்த கட்டமாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை ஆகியவை பற்றி அமைச்சர் விளக்கமாக கூறினார்.

குறிப்பிட்ட செயற்பாட்டு திட்டம் மேலும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படு வதுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்தில் ஆலோசிக்கப்பட்டு மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமென்று அமைச்சர் கூறினார். அரசியல் எல்லைகளுக்கு அப்பால் பரந்துபட்ட ஆதரவை பெறும் வகையில் அனைத்துத் தரப்பினரும் இணங்கக் கூடிய ஆவணமொன்றை தயாரிப்பதே இதன் நோக்கமென்று அமைச்சர் குறிப்பிட்டதுடன் பூரணப்படுத்தப்பட்ட இறுதி நகல் அமைச்சரவைக்கு அதன் கருத்துரை மற்றும் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வரவேற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனிதம் பிள்ளை நாட்டில் மனித உரிமைகளின் நிலை மோதல்களின் பின்னரும் தேர்தலின் பின்னரும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


தேர்தலில் போட்டியிட்டதற்காக
பொன்சேகாவுக்கு விசேட சலுகைகள் வழங்க சட்டத்தில் இடமில்லை




வாதங்களை முன்வைக்கவும்,
தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு
செய்யவும் சட்டத்தில் இடமுண்டு


நாட்டில் கலவரம் வெடிக்கும் என்பதாலோ அரசியல் காரணங்களுக்காகவோ சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டத்தினை அமுல்படுத்தாமல் இருக்க முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமனாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதற்காக அவருக்கு விசேட சலுகை எதனையும் வழங்க சட்டத்தில் இடமில்லையென ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, நாட்டில் அமுலில் உள்ள சட்டத்தின் பிரகாரமே சரத் பொன்சேகா மீது இராணுவ நீதிமன்றத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ சட்டம் 1949 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்படுத்தப்படுகிறது. இராணுவ ஒழுக்கவிழுமியங்களை பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் நோக்கமோ தலையீடோ கிடையாது. இந்த வழக்கில் தமது தரப்பு சாட்சியங்களையும் ஆவணங்களையும் முன்வைக்கவும் அரச தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும் பொன்சேகா தரப்புக்கு அவகாசம் உள்ளது.

இங்கு மனித உரிமை மீறல் தொடர்பாக எதுவித பிரச்சினையும் எழாது. பொன்சேகா தரப்பிற்கு தமது தரப்பு வாதங்களை முன்வைக்க முழுமையான அனுமதியும் வழங்கப்படும். தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவும் சட்டத்தில் இடமுள்ளது. பொன்சேகாவை பழிவாங்கும் நோக்கத்துடன் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரா ணுவத்தில் இருந்த போது செய்த தவறு கள் தொடர்பிலேயே இராணுவ சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவை கைது செய்ததால் நாட் டில் கலவரம் வெடிக்கும் என்பதாலோ குழப்பம் ஏற்படும் என்பதாலோ சட்டத்தை அமுல்படுத்தாதிருக்க முடியாது.

ஜனாதிபதிக்கும் வெளிநாட்டுத் தூதுவர் களுக்கும் எதிராக மாத்திரமே வழக்குத் தொடர்வதற்கு சட்டத்தில் இடமில்லை. பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு விசா ரணையில் அரசியல் தலையீடு எதுவும் இடம்பெறாது. இராணுவம் சுயாதீனமாகவே இந்த விசாரணைகளை முன்னெடுக்கிறது.

பொன்சேகா விவகாரத்தை பூதாகரமாக்கி அரசியல் லாபம் பெற எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

இலங்கை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் தவறான கருத்தை உருவாக்கவும் இலங்கையை மோசமான நாடாக காட்டவும் முயற்சி செய்யப்படுகிறது. இலங்கையுடனான கொடுக்கல் வாங்கலை யும் ஜி.எஸ்.பி. சலுகையையும் நிறுத்தவும் முதலீடுகளை தடுக்கவும் பொருளாதார ரீதியில் இலங்கையை மட்டந்தட்டவும் சதி செய்யப்படுகிறது. இந்த நோக்கங்களை அடைய ஒருபோதும் இடமளியோம் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா, ஜனநாயகத்தை பாதுகாப்பது அரசாங் கத்தின் மட்டுமன்றி எதிர்க் கட்சியினதும் பொறுப்பாகும். ஆனால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டை சுமத்த சில நாடுகள் முயற்சி செய்கின்றன. இதற்கு சாட்சி வழங்க பொன் சேகா தயாராகிறார். ஆனால் இராணுவ ரகசியங்களை ஓய்வுபெற்ற பின்னரும் வெளியிட முடியாது என்றார்.


ஜெனரல்
பொன்சேகாவின் மருமகன் நாட்டை விட்டு வெளியேறத் தடை




சரத் பொன்சேகாவின் மருமகன் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல முடியாத வகையில் தடை செய்யுமாறு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன, குடிவரவு-குடியகல்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஹைகோர்ப் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் விவகாரததில் தனுனவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனுன இரகசியமான முறையில் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றதாகவும், அதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, தனுன திலகரட்ன கோரிய முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக கோரப்பட்ட முன் பிணை மனு கோரிக்கையை கோட்டே நீதவான் நிராகரித்துள்ளார்




ஜெனரல் சரத் கைது : இந்திய காங்கிரஸ்-பாரதீய ஜனதா கட்சிகள் விமர்சனம்



முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவருமான ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக, இந்திய அரசின் சார்பில் இதுவரை கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியும் அந்தக் கைது நடவடிக்கை குறித்து விமர்சித்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதேசிகன் கூறும்போது, "யார் குற்றம் செய்திருந்தாலும், அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்படக்கூடாது" என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை எதி்ர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.




தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் 16ம் திகதிமுதல் 22ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும்-

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 16ம்திகதி முதல் 22ம் திகதிவரை தபால்மூலம் வாக்களிப்போரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமணசிறி தெரிவித்துள்ளார். தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை நிறுவன அதிகாரிகளின் ஊடாக மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தபால்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களின் பெயர்ப் பட்டியல்கள் அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலகங்களிலும் காட்டிப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மகரகமவில் ஜெனரல் கைதினைக் கண்டித்த ஆர்ப்பாட்டம்மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்-

ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து இன்றையதினம் பிற்பகல் 3.00மணியளவில் கொழும்பு புறநகரான மகரகமை நகரில் ஆர்ப்பாட்டமொன்று ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் நடத்தப்பட்டது. ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கப்படும் வரை நாட்டில் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருப்பதாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் மகரகமையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது பொலீசார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டத்தைக் கலைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் சரத்பொன்சேகாவை விசாரிக்க ஐந்துபேர் கொண்ட குழு-

கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய 5பேர் அடங்கிய விசாரணைக் குழுவொன்றை நியமிக்கவுள்ளார். இந்த விசாரணைக் குழுவில் கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் உள்ளடங்குவதாக உயர்பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளின்போது தமது சார்பில் சட்டத்தரணி அல்லது இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரியொருவரை பொன்சேக்கா தெரிவுசெய்ய முடியும். சரத் பொன்சேக்காவுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதேவேளை போர்குற்றங்கள் குறித்து தான் சாட்சியமளிக்க போவதாக பொன்சேக்கா விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்து தொடர்பாகவும் இராணுவ அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்திவருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் சில யுத்த தோல்விகள் குறித்தும் சில சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இராணுவ நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உட்டுபடுத்தப்பட்டிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் போட்டியிடுவது பற்றி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடனும் ஈ.பி.டி.பி.யுடனும் அரசு பேச்சு-

தஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடனும் ஈ.பி.டி.பி.யுடனும் நேற்றுமுதல் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள சகல கட்சிகளும் இம்முறை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. வட பகுதியில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுட னும், கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாக கிழக்கு முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனுடனும் பேசவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை 20லட்சம்பேர் வரையில் பார்வையிட்டனர்-நிதியமைச்சர்

- கண்டி பள்ளேகலயில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்த கிட்டத்தட்ட 20லட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மஹிந்த சிந்தனை கொள்கையின்கீழ் அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தி தொடர்பாக மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்கியிருந் ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அடுத்த தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பதுளை மாவட்டத்தில் நடத் துவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பள்ளேகலயில் நடைபெற்ற கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தவதற்கு உதவிய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் வாக்களிப்புக்கென இடம்பெயர்ந்தோரின் விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் ஆரம்பம்-

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 17ம் திகதிவரை சமர்ப்பிக்க முடியுமென்று தேர்தல்கள் செயலக ஆலோசகர் பந்துல குலதுங்க தெரிவித்துள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் 14மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 08ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காகவும் 2008ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பே பயன்படுத்தப்படுவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. பொதுத்தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 16ம் திகதிமுதல் 22ம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ராஜபக்சேவுக்கு சுஷ்மா சுவராஜ் கோரிக்கை



இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவை கொலை செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பீபீஅண்டை நாடான இலங்கையில் இத்தகைய சம்பவம் நடைபெறுவதை, மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவினால் ஏற்றுக் கொள்ளமுடியாதுபீபீ என்று கூறியுள்ளார்.



சந்திரயான் மீண்டும் சாதனை


அகமதாபாத்: சந்திரயான் மூலம் அனுப்பப்பட்ட ‘எம்-3’ கருவி, நிலவில் மெக்னீசிய வகை பாறைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. நிலவில் நீர் மூலக்கூறு இருப்பதை கண்டுபிடித்த சந்திரயானுக்கு இது அடுத்த வெற்றியாக கருதப்படுகிறது. சந்திரயான் ‘எம்&3’ (மூன் மினராலஜி மேப்பர்) என்ற கருவியை நாசா அனுப்பியிருந்தது. நிலவில் தண்ணீர் இருப்பதை இக்கருவி கண்டுபிடித்தது. இந்நிலையில், மெக்னீசிய தனிமம் அதிகம் உள்ள பாறைகள் நிலவில் இருப்பதை ‘எம்&3’ கருவி தற்போது கண்டுபிடித்துள்ளது. சந்திரயான் தொடர்பாக அகமதாபாத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானி கார்லே பீட்டர்ஸ் தெரிவித்தார். சந்திரயான் பயணத்தின் அடுத்த சாதனையாக இது கருதப்படுகிறது.


பதவிக்காக மக்களை துன்புறுத்த வேண்டாம்: ராஜபக்சேவுக்கு புத்த துறவிகள் கண்டனம்


அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சரத்பொன்சேகாவை இலங்கை அரசு திடீரென கைது செய்துள்ளது. அவர் எங்கு சிறை வைக்கப்பட்டு இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பொன்சேகா மனைவி அனோமா கூறியுள்ளார். பொன்சேகா கைதுக்கு ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளன. இலங்கையில் சக்தி வாய்ந்தவர்களாக கருதப்படும் புத்த துறவிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மகாநாயகர் என்று அழைக்கப்படும் புத்த துறவி சித்தார்த்த சுமங்கல தேரா இதுபற்றி கூறியிருப்பதாவது, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்தது ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டுக்கு சேவை செய்த ராணுவ அதிகாரியை கைது செய்த விதம் மிகவும் மோசமானது. தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களை பிரச்சினைக்கு உட்படுத்தி வருகிறது. ராஜபக்சே அரசு நாட்டுக்கு நல்லதை செய்யும் என்று எதிர்பார்த்து தான் நாங்கள் அவருக்கு வாக்குகளை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அரசு அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மக்கள் அரசின் நடவடிக்கைக்கு எதிராக சாத்வீக முறையில் தங்கள் எதிர்ப்பை வெளியிட வேண்டும். அதிபர் தேர்தலில் அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள் சிலர் வீடுகளில் இருந்து வெளியேறி காடுகளில் வசிப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. இது கவலை தருகிறது என்று கூறியுள்ளார். உருகம புத்தரகித்த தேரா எனும் இன்னொரு புத்த துறவியும் சரத் பொன்சேகா கைதை கண்டித்து உள்ளார். அவர் அரசு தங்கள் எதிர்ப்பாளர்களை விரோதிகளாக நடத்துவதாக கூறியுள்ளார்.


10.02.2010 தாயகக்குரல்

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து ஜனாதிபதி பதவி ஏற்கும் காலம் 2010 நவம்பர் 19ம் திகதி என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்து பொது தேர்தல் அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டபடி பாராளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டதாக அரசாங்கவர்த்தமானி தெரிவிக்கின்றது. வர்த்தமானி அறிவித்தலின்படி
பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறும். வேட்புமனு தாக்கல் இம்மாதம் 19 திதி முதல் 26ம் திகதி வரை இடம்பெறும். பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட முன்னமே பிரதான கட்சிகளின் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டன. வேட்பாளர்களை கட்சிகள் அறிவிக்கமுன்னரே வேட்பாளர் என சிலருடை தேர்தல் சுவரொட்டிகள் தலைநகரெங்கும் காணப்படுகின்றன.


ஜனாதிபதி தேர்தலில் இரு வேறு அணிகளாக செயற்பட்ட கட்சிகளின் கூட்டு பொதுத் தேர்தலில் தொடருமா என்பது சந்தேகமே. குறிப்பாக எதிர்கட்சிகள் கூட்டாக போட்டியிடுவதானால் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் அவர்களிடையே முரண்பாடு காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சின்னமான அன்னமா? அல்லது பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானையா பொது தேர்தல் சின்னம் என்பதுதான் எதிர்கட்சிகளிடையே தோன்றியுள்ள இழுபறி நிலைக்கு காரணமாகும்.

யானைச் சின்னத்திலேயே பொது தேர்தலைச் சந்திக்க வேண்டும் என ரணில் தெரிவிக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும்பாலோர் யானைச் சின்னத்தையே வலியுறுத்துகின்றனர். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.). ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு(மங்கள சரவீர), ஜனநாயக மக்கள் முன்னணி;(மனோ கணேசன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன பொது சின்னமாக அன்னத்திலேயே போட்டியிடுவதை விரும்புகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடுவது என தீர்மானித்தால் ஜே.வி.பி.; மணிச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கிறது. ஜனநாயக மக்கள் முன்னணி;, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் யானைச் சின்னத்திலே போட்டியிட்டிருந்தன. எனவே அவர்கள் அன்னத்தில் கேட்பதற்கு ஆதரவு தெரிவித்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் சில இடங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையில் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இருப்பதால்;; வடக்கு கிழக்கில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் சில விட்டுக்கொடுப்புக்களை செய்யலாம்.
கிழக்கில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலிலும் மாகாணசபை தேர்தலிலும் ;பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டது. வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி. வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிட்டது. பொது தேர்தலில் தனித்த போட்டியிடப்போவதாக ஈ.பி.டி.பி. மற்றும் த.ம.வி.பு. ஆகியன அறிவித்திருந்தபோதிலும் மேற்படி இரு கட்சிகளும் அரசாங்கத்தின் அழுத்தத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்ட ஸ்ரீ காந்தாவும் அவரது சகாக்களும்; சுயேட்சையாக போட்டியிடலாம். இன்னும் சில கட்சிகள் தேர்தல் தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை இன்னமும் வெளியிடவில்லை. பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் எதிர்கட்சி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் இரவு இராணுவப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக இருந்தபோது ராணுவ விதிகளை மீறிய குற்றசாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவருடைய கைது தொடர்பாக பலரும் பல்வேறுபட்ட கருத்துக்களை சாதகமாகவும், பாதகமாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வு பெற்ற நிலையிலும் இராணுவச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவராவார். ஓய்வு பெற்ற ஆறு மாதங்களுக்குள் அவர் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சுக்கு பூரண அதிகாரமுண்டு. இதன் அடிப்படையிலேயே சரத் பொன்சேகா ராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கிறார்.

அண்மையில் சரத் பொன்சேகா பி.பி.சி. செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயார் எனத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே சரத் பொன்சேகாவை இலங்கை அரசு கைது செய்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.
பயங்கரவாதக் குழுவிடம் இருந்து இந்த நாட்டை காப்பாற்றிய படையினருக்கு துரோகம் இழைப்பது தொடர்பில் சரத் பொன்சேகா உறுதியாக இருந்தார் என்பது பி.பி.சி. செய்தி சேவைக்கு சரத் பொன்சேகா அளித்த பேட்டியில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகிவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவின் கைது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என்று எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிமசிங்கா தெரிவித்துள்ளார். ஐ. நா., அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் சரத் பொன்சேகா கைது குறித்து கவலை தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா ராஜாங்க திணைக்கள பேச்சாளர் பிலிப் குறோலி, எந்த நடவடிக்கையும் இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைவானதாக இருக்கவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

சரத் பொன்சேகா கைது உள்நாட்டு சட்டவிதிமுறைகளுக்கு அமையவே இடம் பெற்றிருப்பதா கூறும் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம இவ்விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடுகள் தலையிடமுடியாது என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் அனைத்து விதமான விமர்சனங்களையும் முற்றாக நிராகரிப்பதாக தேர்தல் ஆணையாளர் கடந்த மூன்றாம் திகதி பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் மோசடிகள் தொடர்பான சர்ச்சை குறைய இப்போது எதிர்கட்சிகள், சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டதை கருவாக வைத்து அரசுக்கெதிரான போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இந்த விவகாரம் சூடுபிடிக்குமா? புஸ்வாணமாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...