9 நவம்பர், 2009

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்குமிடையிலான பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை-

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்குமிடையிலான பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. இந்த பஸ் சேவைகளை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் பீ.ஏ.லிபினிஸ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தசூழல் காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்துகள் வவுனியாவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் தற்போது நாட்டில் தீவிரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த பஸ் சேவைகள் யாழ்ப்பாணம்வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு



நுகர்வுப் பொருட்கள் சிலவற்றின் மொத்த விற்பனை விலைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நுகர்வோர் சேவைகள் விவகார அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் இன்று கொழும்பில் நடைபெற்றது.

செய்தியாளர் மாநாட்டில் புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கத்திற்கும் நுகர்வோர் விவகார அமைச்சிற்கும ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

ஆறு மாதங்களுக்கு மாத்திரமே செல்லுப்படியாகும் இந்த ஒப்பந்தம் முதல் 3 மாத காலத்திற்கு பின்னர் உலகச் சந்தையில் விலை தளம்பலுக்கேற்ப மீள்பரிசீலனை செய்யப்படும் என நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சீனி, மைசூர்பருப்பு, பெரியவெங்காயம், சிறியவெங்காயம், உருளைகிழங்கு, வெள்ளைப்பூடு, பால்மா, ரின்மீன், செத்தல் மிளகாய் மற்றும் பாஸ்மதி அரசி ஆகியவற்றின் மொத்த விற்பனை விலைகளே இன்று நள்ளிரவுடன் குறைக்கப்படவுள்ளன.

இதன்படி, சீனி கிலோ ஒன்றின் மொத்த விலை 80 ரூபாவாகவும், மைசூர்பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 140 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் மொத்த விலை 65 ரூபாவாகவும், சிறிய வெங்காயம் கிலோ ஒன்றின் மொத்த விலை 75 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் மொத்த விலை 65 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளன.

அத்துடன் செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 195 ரூபாவாகவும், வெள்ளைப்பூடு கிலோ ஒன்றின் மொத்த விலை 206 ரூபாவாகவும், 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் மொத்த விலை 225 ரூபாவாகவும், ரின்மீனின் மொத்த விலை 149 ரூபாவாகவும், பாஸ்மதி அரசி கிலோ ஒன்றின் மொத்த விலை 85 ரூபாவாகவும் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் நுகர்வோர் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த பொருட்களுக்கான சில்லறை விலைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் அமுலுக்குவரும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சீனி 84 ரூபாவாகவும், ஒரு கிலோ மைசூர்பருப்பு 189 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 84 ரூபாவாகவும், ஒரு கிலோ சிறிய வெங்காயம் 86 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்
மேலும் இங்கே தொடர்க...
மன்னாரில் தொடர் மழை:மீள்குடியேற்றப்படும் மக்கள் அசௌகரியம்




மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் இருந்து மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இன்று கொட்டும் மழையின் மத்தியில் மன்னார் பிரதேச செயலகத்துக்கு மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள், வயோதிபர்கள் , கர்ப்பிணிப்பெண்கள் என 31 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் அடங்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னாரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையால் இவர்கள் கொண்டுவந்த பொருட்கள் நனைந்துள்ளன.மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலேயே அங்கிருந்து அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 2000 இற்கும் பேற்பட்ட மக்கள் இதுவரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதி - மக்கள் சந்திப்பு : இன்றிரவு நேரடி அஞ்சல்


மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி-மக்கள் சந்திப்பு, (ஜனாதிபதி ஜனஹமுவ) நிகழ்ச்சி அலரி மாளிகையில் இன்று இரவு 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, ஏ. எல். எம். அதாவுல்லா, பந்துல குணவர்தன, சம்பிக்க ரணவக்க, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், எம்.பி. விமல் வீரவன்ச ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, நிதியமைச்சு மற்றும் திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

தொலைக்காட்சி மற்றும் வானொலியில் இந்நிகழ்ச்சி நேரடியாக ஒளி, ஒலிபரப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பி.ச. உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் பலர் அரசாங்கத்தில்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள்,ரெலோ உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உள்ளிட்ட 26 பேர் ஜனாதிபதியை சந்தித்து சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டனர். இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை 5.40 மணியளவில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஏழு பேர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில அமைப்பாளர் உள்ளிட்ட ஏனைய இரு பிரதேச சபை உறுப்பினர்களும் ரெலோ இயக்க உறுப்பினர்கள் பதினொருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அங்கம் வகித்து ஐ.தே.க வில் போட்டியிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் கட்சி விலகியோரில் அடங்குவர்.

எதிர்க் கட்சிகளில் இருந்துகொண்டு தமது மக்களுக்கு சேவை செய்ய முடியாதென்றும் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லும் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதற்காகவே தாம் சுதந்திரக் கட்சியில் இணைவதாகவும் சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருடன் இன்னும் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அரசாங்தில் இணைந்துகொண்ட ஐ.தே.க மற்றும் த.தே.கூ உறுப்பினர்கள் விபரம்:

ஐ.தே.க

சுனில் சாந்த பெரேரா – முன்னாள் அமைப்பாளர் – சேருவில சந்தன கருணாதிலக்க – பிரதேச சபை உறுப்பினர் – கந்தளாய் சரத் லொரன்சுஹேவா – முன்னாள் அமைப்பாளர் – திருகோணமலை

த.தே.கூ

வி.சுரேஷ்குமார் – உபதலைவர் – உப்புவெளி பி.ச கே.வைரவநாதன் உறுப்பினர் – உப்புவெளி பி.ச டீ.பாலசுப்பிரமணியம் உறுப்பினர் – உப்புவெளி பி.ச எஸ்.கௌரி முகுந்தன் தலைவர் – திருகோணமலை ந.ச டீ.கந்தரூபன் தலைவர் – உப்புவெளி பி.ச யு.ரவிகுமார் – உறுப்பினர் – குச்சவெளி எஸ்.சிவகுமார் – உறுப்பினர் – புளியங்குளம் உப்புவெளி



மேலும் இங்கே தொடர்க...
இலங்கையில் குழப்பம்: சொல்கிறார் ரணில்

Latest indian and world political news information


சென்னை:""இலங்கையில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. தற்போது எதுவுமே சரியில்லை; அனைத்தும் குழப்பமாகவே இருக்கிறது,'' என்று இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் தெரிவித்துள்ளார்.இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே நேற்று மாலை கொழும்பில் இருந்து டில்லி செல்லும் வழியில் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:டில்லியில் இந்திய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். கடந்த அக்டோபர் 30ம் தேதி வரை இலங்கை முகாம்களில் இருந்த தமிழர்கள் இரண்டரை லட்சம் பேர் முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களில் குடி அமர்த்தப் பட்டுள்ளனர். இது, சர்வதேச அமைப்பு அளித்துள்ள அறிக்கை.

இன்றைய நிலவரப்படி, எனக்கு எந்த தகவலும் தெரியாது. இலங்கையில் தற்போது எதுவுமே சரியில்லை; அனைத்து விஷயங்களும் குழப்பமாகத் தான் இருக்கிறது.இவ்வாறு ரணில் தெரிவித்தார். பத்திரிகை நிருபர்கள் மேற்கொண்டு எழுப்பிய கேள்விகளுக்கு, எந்த பதிலும் அவர் கூறவில்லை. சென்னையில் இருந்து கிங் பிஷர் விமானம் மூலம் மாலை 6.30 மணிக்கு டில்லி சென்றார்.

மேலும் இங்கே தொடர்க...
வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றவென குரோஸியாவிலிருந்து மேலும் ஐந்து இயந்திரங்கள் கொள்வனவு-

வடக்கில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் குரோஸியா நாட்டிலிருந்து கண்ணிவெடிகளை அகற்றும் இயந்திரங்கள் ஐந்தினைக் கொள்வனவு செய்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதற்காக 25மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சினால் வழங்கப்படவுள்ளன. வடக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் மிக வேகமாக இடம்பெற்றுவரும் நிலையில் அந்தப் பணிகளை மேலும் இலகுபடுத்தும் நோக்கிலேயே மேலும் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்றும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இங்கே தொடர்க...
இலங்கையர்கள் 78பேரையும் இலங்கைக்கு நாடு கடத்த வேண்டுமென ஆஸி. செனற்சபைத் தலைவர் தெரிவிப்பு

-

ஓசியானிக் வைகிங் என்னும் அவுஸ்திரேலியக் கப்பல்மூலம் இந்தோனேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர்கள் 78பேரும் மீளவும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலிய செனற்சபைத் தலைவர் பானர்ஸ் ஜோய்ஸ் தெரிவித்துள்ளார். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறிந்து அவ்விடத்திற்கே திருப்பியனுப்ப வேண்டுமென்பதுடன், இப்படியாக வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை மட்டுப்படுத்தும் நோக்கில் சட்டங்கள் மேலும் வலுவானதாக மாற்றம் செய்யப்பட வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். இந்தோனேசியக் கடற்பரப்பில் அவுஸ்திரேலியக் கடற்படையினரால் மீட்கப்பட்ட இவர்களை இந்தோனேசியாவிற்கு அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கடந்த இருவாரங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி இதுவரை கைகூடவில்லை. இந்நிலையில் தாம் அவுஸ்திரேலியா தவிர்ந்த வேறு நாடுகளுக்கு செல்ல விரும்பவில்லையென அவர்களும் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...