26 நவம்பர், 2009

40 ஆயிரம் சபபெட்டிகளை ஏற்ற முடியாமையால் தனியே விமானம் ஏறினார் குதிரை கஜேந்திரன்!


புலிகளின் தமிழ் தேசிய கூட்டமைப்பு(TNA) மூலம் பாராளுமன்றத்திற்குள் கால்பதித்த செல்வராஜா பத்மநாதன் என்ற குதிரை கஜேந்திரன்(பலக்லைகழகத்திற்கு இன்னுமொருவர் மூலம் பரீட்சை எழுதி உட்புகுந்தமையால் இவரை குதிரை கஜேந்திரன் என்று சக மாணவர்கள் அழைப்பதினால்தான் இவருக்கு குதிரை கஜேந்திரன் என்ற பட்டம் கிடைத்தது) அன்று பா.உ பதவியேற்பின்போது யுத்தம் ஒன்றை அரசு திணித்தால் யாழ்ப்பாணத்தில் இருந்து 40,000க்கு மேற்பட்ட சபபெட்டிகள் கொழும்புவரும் என்று பாராளுமன்றத்தில் முழக்கமிட்டிருந்தார்.

பின்னர் இவர் கூறிய சவப்பெட்டிகளை அரசு வன்னியில் தயாராக்கியபோது அங்கிருந்து தப்பித்து ஜரோப்பாவில் தஞ்சமடைந்தவர்தான் இந்த கஜேந்திரன். இன்று பதவி பறிபோகும் காலம் நெருங்கிவரும் நிலையில், மாவீரர்தினத்தில் பங்கு கொள்ளாமல் 40,000 சபபெட்டிகளை ஏற்றமுடியாமலும் கொழும்பு நோக்கி விமானம் ஏறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
நன்றி நெருப்பு
மேலும் இங்கே தொடர்க...
யாழ். இணுவிலில் இளம் குடும்பஸ்தர் சந்தேகத்தில் கைது


இணுவில் பகுதியில் இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரை பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு இவருடைய வீட்டில் வைத்து, கொழும்பில் இருந்து வந்திருந்த இரகசியப் பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து மீள்குடியேற்றத்திற்காக இவர் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டிருந்தார்.

கடந்த காலத்தில், யாழ்ப்பாணம் இணுவிலில் இடம்பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...
நடைமுறை சாத்தியமான அரசியல் தீர்வை எட்ட உடன்படுவோம் : டக்ளஸ் தேவானந்தா


படிப்பினைகளாக ஏற்று சம்பந்தப்பட்ட தமிழ் தலைமைகள் யாவும் நடைமுறை சாத்தியமான வழிமுறையில் நின்று எமது மக்களுக்கான அரசியல் தீர்வினை எட்டுவதற்கு உடன்பட்டு வரவேண்டும். இந்த எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும் மட்டுமே நான் சுவிஸ் மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தேன்."

இவ்வாறு ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமது கட்சியின் ஊடகங்களுக்கான விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :

"நடந்து முடிந்த சுவிஸ் மாநாடு தமிழ்ப் பேசும் கட்சிகளுக்கிடையில் ஒரு பொது நிலைப்பாட்டை எட்டுவதற்கான ஓர் ஆரம்பம் மட்டுமே.

தமிழ் பேசும் கட்சிகளுக்கு மத்தியில் ஓர் ஐக்கியத்தை உருவாக்கும் நோக்கில் சுவிஸில் நடந்து முடிந்த மாநாடு, தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒரு பொது நிலைப்பாட்டை எட்டுவதற்கான ஆரம்ப நிகழ்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அந்த மாநாட்டில் தீர்க்கமான முடிவுகள் எதையும் கூட்டாக எட்ட முடியவில்லை.

எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள இவ்வாறான மாநாடுகளில் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினை குறித்த நடைமுறை சாத்தியமான தீர்க்கமான முடிவுகளுக்கான முயற்சிகளை நோக்கிச் செல்லலாமென நான் நம்புகிறேன்.

இவ்வாறான மாநாடுகளின் நிகழ்ச்சி நிரல் என்பதை ஏற்பாட்டாளர்கள் தயாரிப்பதை விடுத்து, அதில் கலந்துகொள்ளும் அரசியல் கட்சிகளின் தலைமைகளே தயாரிக்க வேண்டும். பிறநாடுகளில் தயாரிக்கப்பட்ட இவ்வாறான நிகழ்ச்சி நிரல்கள் ஏற்கனவே தோல்வி கண்டுள்ளன.

தடையற்ற சுதந்திர சூழ்நிலை

கடந்த காலங்களில் இது போன்ற முயற்சிகளுக்கு புலிகளின் தலைமை பிரதான தடையாக இருந்து வந்திருக்கின்றது. ஆனால் தற்போது அவ்வாறான தடைகள் இல்லாத சுதந்திரமான நிலை உருவாகி உள்ளது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் கடந்த காலங்களில் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்ப் பேசும் அரசியல் தலைமைகள் பலவும் நடைமுறைக்குச் சாத்தியமான வழிமுறையினை ஏற்று செயற்பட்டிருக்கவில்லை.

எட்ட முடிந்த அரசியல் இலக்கு நோக்கி செல்வதற்கு கற்பனைக்கு எட்ட முடியாததும், வெறுமனே சலசலப்பு காட்டுவதற்கும் மட்டுமான வெறும் சுயலாபங்களுக்கான எதிர்ப்பு அரசியலையே நாம் முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.

இதன் காரணமாகவே எமது மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் யாவும் பயனற்றுப் போயிருப்பதோடு எமது மக்களை இன்று அவலங்களுக்குள் சிறைப்பட்டிருக்கவும் நிர்ப்பந்தித்திருக்கிறது.

கடந்த கால அனுபவங்களைப் படிப்பினைகளாக ஏற்று சம்பந்தப்பட்ட தமிழ்த் தலைமைகள் யாவும் நடைமுறை சாத்தியமான வழிமுறையில் நின்று எமது மக்களுக்கான அரசியல் தீர்வினை எட்டுவதற்கு உடன்பட்டு வரவேண்டும்.

மக்கள் நலன்நாடி சிந்திப்போம்

இத்தகைய எதிர்பார்ப்புகளோடும், நம்பிக்கையோடும் மட்டுமே நான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தேன். இந்த மாநாட்டை ஓர் ஆரம்பத் தளமாகக் கொண்டு சக தமிழ்ப் பேசும் தலைமைகள் யாவும் எமது மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து நடை முறைக்கு சாத்தியமான விடயங்கள் குறித்து எதிர்வரும் மாநாடுகளில் தீர்க்கமான முடிவுகளுக்கு வர வேண்டும்.

இல்லாவிட்டால் எமது மக்கள் தொடர்ந்தும் அரசியல் உரிமைகள் அற்றவர்களாகவும், அவலங்களைச் சுமப்பவர்களாகவுமே இருப்பார்கள்.

வன்னியில் இருந்தும், அதி உயர் பாதுகாப்பு வலயங்களினாலும் வெளியேறிச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட எமது மக்களை மீளக்குடியமர்த்துவது, அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை முன்னெடுத்தல், அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டோ, அன்றி சரணடைந்த நிலையிலோ தடுத்து வைக்கபட்டிருக்கும் புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு மற்றும் புனர்வாழ்வு அளிப்பது- காணாமற்போனவர்கள் தொடர்பில் உண்மையினை அறிய ஒரு சுதந்திரமான குழுவினை அமைத்தல் மற்றும் நடைமுறை சாத்தியமான வழிமுறையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஆரம்பிப்பதில் இருந்து தொடங்கி சுயாட்சியை நோக்கிய இறுதி இலக்கை எட்டுவது போன்ற அரசியல் தீர்வு குறித்த விடயங்களையும் இலங்கை அரசாங்கத்திடம் நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக அளப்பரிய அர்ப்பணங்களைக் கடந்த காலங்களிலும் நாம் ஆற்றியிருந்தோம்.

இன்றைய சமகால சூழலுக்கு ஏற்றவாறு சுயநிர்ணய உரிமை குறித்து தடைகள் இன்றி அரசியல் தீர்வு நோக்கி எம்மால் முன்னேற முடிந்திருக்கின்றது.

பயணத்தைத் தொடர்வோம்

மக்களின் மகிழ்ச்சியே எமது மகிழ்ச்சி. அதற்காக நாம் நடைமுறை சார்ந்து நின்று, எடுத்த பயணத்தைத் தொடர்ந்தும் நடத்தியே முடிப்போம்.

சம்பந்தப்பட்ட தமிழ்ப் பேசும் தலைமைகள் யாவும் நடைமுறை சாத்தியமான வழிமுறைக்கு வருவதற்கான சந்தர்ப்பம் இன்னமும் இருக்கின்றது.

எமது மக்களின் மகிழ்ச்சி கருதி கடந்த காலங்களில் நாம் சந்தித்திருந்த கசப்பான அனுபவங்களை மறந்து, ஐக்கியத்திற்கான எமது கதவுகளைத் தொடர்ந்தும் திறந்து வைத்திருக்கின்றோம்." இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை தங்கம் கொள்வனவு



நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை 10 தொன் தங்கம் கொள்வனவு செய்துள்ளது. இந்தத் தகவலை சர்வதேச நாணய நிதியம் வாஷிங்டனில் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கிக்கு இந்தத் தங்கங்கள், 375 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

உலக பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொள்ளவும், வருமானத்துறையில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவுமே இந்த தங்கக் கொள்வனவு இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்று 1170 டொலர்களாக அதிகரித்துள்ளது.

அதேவேளை இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த இலங்கை மத்திய வங்கி, தங்கக் கொள்வனவு என்ற விடயத்தை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
அடுத்த சில மணித்தியாலங்கள் எனது வாழ்வின் அதி முக்கியத்துவம் வாய்ந்த காலம்: பொன்சேகா
சில மணித்தியாலங்கள் எனது வாழ்வின் அதி முக்கியத்துவம் வாய்ந்த காலமாக இருக்கும் என்று ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவரும் எனக்கு எதிராகச் செயற்படுகிறார்கள். அரசியலில் எதிர்ப்பது மட்டுமன்றி, நான் ஊடகங்களுடன் தொடர்புவைப்பதையும் அவர்கள் விரும்பவில்லை என்றும் ஜெனரல் பொன்சேகா கூறியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது:

"மக்களை எமக்கு எதிராக திருப்பிவிட அவர்கள் முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்கள். நவம்பர் மாதம் 22ஆம் திகதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை விட்டு வெளியேறுமாறு அவர்கள் கேட்டனர். இதுவரை என்னால் மாற்று வீடு ஒன்றை தேடிக்கொள்ள முடியாததால் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கின்றேன்.

என்னை ஒரு வெளியாரைப் போன்று நடத்துகிறார்கள்.

40 வருடங்கள் சேவையாற்றிய பின் கனத்த இதயத்துடன் இராணுவத்தை விட்டு வெளியேறுகிறேன். எனது பாதுகாப்பைக் குறைப்பதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்த பின்னர் எனது உயிருக்கு ஆபத்து எதிர்நோக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் எனது பாதுகாப்புக்கு 600 வீரர்கள் தரப்பட்டது. அவர்களை 25 ஆக குறைத்த போது நான் அதனை ஆட்சேபித்தேன். அதனால் பாதுகாப்பு வீரர்கள் 70 ஆக அதிகரிக்கப்பட்டனர்.

எனது அலுவலகத்தை விலக்கிக் கொண்டாலும் எனது வீட்டை மாத்திரம் பாதுகாக்கவே 70 பேர் போதாது. பொது வைபவங்களுக்கு நான் செல்லும் போது எனக்கு மேலதிக பாதுகாப்பு தேவை.

இராணுவ தளபதி என்ற வகையில் பல தடவைகள் இந்திய உயர் அதிகாரிகளுடன் எனக்கு தொடர்புகள் இருந்தன. இரு நாடுகளும் நல்ல உறவுமுறையை பேணி வருகின்றன. நான் இந்தியா மீது பெருமதிப்பு வைத்திருக்கின்றேன். ஊடக விரோத போக்கை கடைப்பிடிப்பதாக பல்வேறு தரப்பினரும் என்னை விமர்சிக்கின்றனர்.

எப்பொழுதுமே நான் ஊடக சுதந்திரத்தை ஆதரிப்பவன். ஊடகங்கள் மக்களை தவறான வழியில் இட்டுச்சென்ற சந்தர்ப்பங்கள் உண்டு. அந்த சந்தர்ப்பங்களில் அதனை சுட்டிக்காட்டி நான் அவற்றின் தவறினை திருத்திக் கொண்டேன். நான் ஊடக விரோதி என்பது வெறும் பிரசாரமேயாகும்.

முதலில் அனைவருக்கும் ஜனநாயக உரிமை கிடைக்கச் செய்வேன். இலங்கை ஊழல் அற்ற நாடாக இருக்க வேண்டும். நீதியான சமுதாயம், ஊடக சுதந்திரம், மத ஜனநாயகம், அயல் நாடுகளுடன் நல்லுறவு, மனித உரிமை பேணல் ஆகியன குறித்தும் கவனம் செலுத்தப்படும்
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்னமும் முடிவில்லை -கூட்டமைப்பு


நடமாட்டம் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு போலியானது. தேசியத்தையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கு கைக்கொள்ளப்பட்டுள்ள காய் நகர்த்தலே இதுவாகும். முகாம்களுக்குள் சுதந்திரம் என்று கூறுகின்ற அரசாங்கம், அவர்கள் தமது சொந்த வீடுகளுக்குச் செல்வதற்கு ஏன் சுதந்திரம் வழங்க மறுக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் எந்தத் தீர்மானத்திற்கும் வரவில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். எது எப்படியிருப்பினும் இடம்பெயர்தலுக்கு வழிவகுத்த அரசாங்கம், மீள்குடியேற்றத்தையும் வாழ்வியல் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தியதன் பின்னர் தேர்தலுக்கு செல்வதே சிறப்பானதாக அமையும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், சுதந்திர நடமாட்டம் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தல் ஆகியவை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

தேர்தல்களில் வாக்களிப்பது என்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும். இது அனைவருக்கும் பொதுவானது. ஆனாலும் வன்னித் தமிழ் மக்களை இடம்பெயர வைத்த அரசாங்கமே அவர்களது வாக்களிக்கும் உரிமையைப் பறித்துள்ளது. தமிழ் மக்கள் இடம்பெயரவில்லை. அவர்கள் அரசாங்கத்தினால் இடம்பெயர்க்கப்பட்டவர்கள். இடம்பெயர்க்கப்பட்ட மக்களை அகதிகளாக முகாம்களுக்கு முடக்கி வைத்திருந்த அரசாங்கம், தற்போது மீளக்குடியமர்த்துவதாகவும் முகாம்களில் எஞ்சியுள்ள மக்களுக்கு டிசம்பர் முதலாம் திகதி முதல் சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுவதெல்லாம் தேர்தல்களை மையமாகக் கொண்டவையாகவே கருத முடிகின்றது.

அவல நிலைக்குள்ளான எமது மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு வழிவகுப்பதற்கு அரசாங்கத்திடம் உண்மையான அக்கறை எதுவும் இல்லை. அது இருந்திருந்தால் முகாம்களுக்குள் சுதந்திரம் என்று கூறுகின்ற அரசாங்கம், அவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கும் தமது தொழில்களை மேற்கொள்வதற்கும் தங்களது சுதந்திரமான வாழ்க்கையை உறுதி செய்து கொள்வதற்கும் ஏன் அனுமதி வழங்க முடியாதிருக்கின்றது. இது அரசாங்கத்தின் போலியான நடவடிக்கை.

நாட்டு மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்கு அரசாங்கம் கைகொள்கின்ற மிகவும் கேவலமானதும் அப்பட்டமானதுமான செயற்பாடுகளே இவையாகும்.

இடம்பெயர்ந்தவர்கள் தமிழராக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்கள் அனைரும் தங்களது சொந்த இடங்களில் உடனடியாக மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலியுறுத்தலாக அமைந்துள்ளது. அந்த மக்கள் அவர்களது சொந்த வீடுகளுக்கு செல்வதை அரசாங்கம் மறுக்கவும் கூடாது. அரசாங்கம் அறிவித்திருக்கின்ற சுதந்திரமான நடமாட்டம் என்பதன் பொருள் அவர்கள் தமது சொந்த வீடுகளுக்கு செல்வது தமது வாழ்வியல் தேவைகளை தாமே சுதந்திரமாக நிறைவு செய்து கொள்வதுமாகும். மாறாக முகாம்களுக்குள் சுதந்திரம் என்பது முழுமையானதாக ஆகிவிட முடியாது. இதனைக் கருத்திற் கொண்டே அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

தற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களின் வாக்குகளும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றன. வாக்களிக்கும் உரித்துடைய தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தல்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நன்றாக அறிவார்கள். கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நாம் எந்தவொரு தீர்மானத்திற்கும் வரவில்லை. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நாட்டில் இல்லாத காரணத்தால் அவர் நாடு திரும்பியதும் கட்சி கூடி ஆராயவுள்ளது. அதன் பின்னரே தீர்மானமொன்றுக்கு வரமுடியும் என்றார்
மேலும் இங்கே தொடர்க...