செட்டிக்குள
வலயம் 04 நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1600 குடும்பங்களைச் சேர்ந்த 5000 பேர் இன்று புதன்கிழமை பலவந்தமான செட்டிக்குளம் கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட இருந்தனர்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கத்தின் தலையீட்டை அடுத்து, மாற்றம் நிறுத்தப்பட்டது.
செட்டிக்குள வலயம் 04 நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களை கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றி, பின்னர் ஒரு மாத காலத்தினுள் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றுவதாக இராணுவம் தெரிவித்திருந்தது.
ஆனால் மேற்படி நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களுக்கு வேறு நலன்புரி நிலையங்களுக்குச் செல்ல விருப்பம் இருக்கவில்லை.
தங்களை இடமாற்றும்போது, பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகள், வேலை வாய்ப்புகள் இல்லாது போய்விடும் என அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் அவர்களின் கூற்றை இராணுவ அதிகாரிகள் செவிமடுக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கத்தின் கவனத்திற்கு இதுவிடயத்தைக் கொண்டு வந்தனர்.
அவர் இதுதொடர்பாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் பேசி, மக்களின் இடமாற்றத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வலயம் 04 நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1600 குடும்பங்களைச் சேர்ந்த 5000 பேர் இன்று புதன்கிழமை பலவந்தமான செட்டிக்குளம் கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட இருந்தனர்.எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கத்தின் தலையீட்டை அடுத்து, மாற்றம் நிறுத்தப்பட்டது.
செட்டிக்குள வலயம் 04 நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களை கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றி, பின்னர் ஒரு மாத காலத்தினுள் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றுவதாக இராணுவம் தெரிவித்திருந்தது.
ஆனால் மேற்படி நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களுக்கு வேறு நலன்புரி நிலையங்களுக்குச் செல்ல விருப்பம் இருக்கவில்லை.
தங்களை இடமாற்றும்போது, பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகள், வேலை வாய்ப்புகள் இல்லாது போய்விடும் என அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் அவர்களின் கூற்றை இராணுவ அதிகாரிகள் செவிமடுக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கத்தின் கவனத்திற்கு இதுவிடயத்தைக் கொண்டு வந்தனர்.
அவர் இதுதொடர்பாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் பேசி, மக்களின் இடமாற்றத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


மன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப் படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை கடும் எதிர் ப்பை தெரிவித்தமையினால் சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
சரத் பொன்சேகாவின் பதவிகளைப் பறித்து ஓய்வூதியத்தையும் நிறுத்தும் அளவிலான தீர்ப்பொன்றை இராணுவ நீதிமன்றம் வழங்கியிருப்பதன் மூலம் முழு இராணுவத்துறையும் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இராணுவ நீதிமன்றத்தின் வழக்கு விசாரøணகளின் அனைத்து அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் வலியுறுத்தினார்.
ல் பொது மக்கள் பகுதிகளிலிருந்து இராணுவப் பிரசன்னம் படிப்படியாக அப்புறப்படுத்தப்படுமென்றும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்படுமென்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.