4 ஏப்ரல், 2010

புத்தளம் மக்கள் நன்கு சிந்தித்து தமது வாக்கையளிக்க வேண்டும் பிரதியமைச்சர் பாயிஸ்


“நடைமுறையிலுள்ள மாவட்ட தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உருவாக்கத் தவறிவந்துள்ள புத்தளம் கெளரவத்தோடு ஒருபாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உருவாக்கிக் கொள்வதற்கான அரிய சந்தர்ப்பமும், இறுதிச் சந்தர்ப்பமும் உருவாகியுள்ளது; அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்தான் புத்தளத்தின் வளமான எதிர்காலம் தங்கியுள்ளது.”

இவ்வாறு பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் புத்தளம் வெட்டுக்குளம் வீதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் :-

“22 வருட கால அரசியல் வெறுமையிலிருந்து புத்தளத்தை மீட்டெடுப்பது என்பது முக்கியமான விடயம். ஆயினும் ஆளும் கட்சியின் முலம் ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்றெடுப்பது அதைவிட முக்கியமான ஒன்றாகும்.

இப்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கட்சியைச் சேராத எந்த ஒரு அரசியற் தலைமைத்துவத்தாலும் ஒரு பிரதேசத்துக்கு எந்த அபிவிருத்தியையும் செய்துவிட முடியாது.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு பெற்ற மாணவர் யாழ். பல்கலையில் சேர்ப்பு 7ம் திகதி உபவேந்தரால் பொறுப்பேற்பு



புனர்வாழ்வளிக்கப்பட்ட பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் புதன்கிழமை முதல் தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிருப்பதாக புனர்வாழ்வு முகாம்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் அன்றைய தினம் புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து தமது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்களை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்கவிருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்கள் வழமை போல் பல்கலைக்கழகத்தில் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர முடியுமெனவும் பிரிகேடியர் கூறினார்.

யாழ்ப்பாண புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்களுக்காக எதிர்வரும் 07ஆம் திகதி புதன்கிழமை சித்திரை புதுவருடப் பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தெல்லிப்பளையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொள்ளவிருக்கும் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின் தமது குடும்பத்தாருடன் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும் மாணவர்களை பொறுப்பேற்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த முதலாம் திகதி புனர்வாழ்வு நிலையங்களிலிருந்த 1365 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வ மாக தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதில் 43 பேர் பல்கலைக்கழக மாணவர்களாவர். இவர்களுள் 12 பேர் மோதல்களின் போது அங்கவீனமடைந்தவர்களெனவும் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

மோதலின் இறுதி கட்ட நடவடிக்கையின் போது படையினரால் மீட்கப்பட்ட இளைஞர், யுவதிகள் புனர்வாழ்வளிக்கப் பட்ட பின்னர் தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை ஏனைய புனர்வாழ்வு நிலையங்களிலும் புதுவருட பிறப்பு கொண்டாட்டங்களை நடத்த ஏற்பாடாகி வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க பல அனுசரணையாளர்கள் முன்வந்திருப்பதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சட்டத்தின் முன் அனைவரும் சமம்; நான் கூட சிறையில் இருந்தவன்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ






சட்டதிற்கு முன் அனைவரும் சமமானவர்களே. அந்த சட்டத்தில் தலையிட நான் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (3ம் திகதி) தெரிவித்தார்.

பொதுத் தேர்தலின் நிமித்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐ. ம.சு. மு. மாவட்ட மட்டத்தில் நடத்திய பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று கொஸ்வத்தை, புத்ததாச விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்று கையில் :-

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 18 லட்சம் மேலதிக வாக்குகளால் என்னை வெற்றிபெறச் செய்வதற்கு பங்களிப்பு செய்த உங்களுக்கு முதற்கண் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அன்று என்னை நீங்கள் வெற்றி பெறச் செய்திராவிட்டால் இன்று நான் 2 ஞ் 2 கூட்டிலோ அல்லது 2 ஞ் 6 குழியிலோதான் இருந்திருப்பேன். நான் 2 ஞ் 2 கூட்டில் இருந்திருக்கின்றேன். ஆனால் அங்கு தொலைபேசி வசதி இருக்கவில்லை. எனது தாயார் சுகவீனமுற்றிருந்த போதிலும் அவரது இறுதிக் கிரியைகளுக்காகவே என்னை இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அதுவும் கைவிலங்கு போட்டே அழைத்துச் சென்றனர்.

அன்று ஜனநாயகம் செத்திருந்தது. அந்த நிலை இப்போது இல்லை. நாம் ஜனநாயக விழுமிய நெறிகளின் படி தேர்தல்களை நடத்துகின்றோம். ஜனாதிபதித் தேர்தலைக் கூட இரு வருடங்களுக்கு முன்னரே நடத்தினோம். நாம் இந்த நாட்டின் மனித உரிமைகளுக்காக கதைத்தவர்கள் மட்டுமல்லாமல் அதனை பாதுகாக்கவும் செயற்பட்டவர்கள்.

சட்டத்திற்கு முன் சகலரும் சமம். அன்று உச்ச நீதிமன்ற வரையறைகளுக்கும் அப்பால் சென்று தீர்ப்புக்கள் வழங்கப்பட்ட போதிலும், நாம் பொறுமையுடன் செயற்பட்டோம். நான் உச்ச நீதிமன்ற செயற்பாடுகளில் தலையிட விரும்பாத ஜனாதிபதியாவேன்.

ஜனநாயகத்தைப் போன்று சட்டமும், நீதியும் பாதுகாக்கப்பட வேண்டுமென நான் உறுதியாக நம்புகின்றேன். யுத்தம் நடைபெற்ற போதிலும் நாம் அபிவிருத்தி வேலைத் திட்டங்களைக் கைவிடவில்லை. எமக்கு உலகளாவிய நெருக்குதல் ஏற்பட்டது. உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நெருக்குதல்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். எமது தாய் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் சிலர் குழுக்களாக இணைந்து செயற்பட்டனர். அவற்றின் முன்பாக நாம் சளைத்துவிடவில்லை. தற்போதைய அரசியல் யாப்புப் படி தவறு செய்தால் ஜனாதிபதி தவிர பிரதமர், உச்ச நீதிமன்ற நீதியரசர் உட்பட சகலரும் தண்டனைக்கு உட்பட வேண்டியவர்கள். மக்களுக்கு ஒரு நீதியும், அபேட்சகர்களுக்கு இன்னொரு நீதியும் கிடையாது. இந்த நாட்டில் சக்திபடைத்தவர்கள் முதல் சாதாரண ஏழைகள் வரையும் சகலருக்கும் சட்டம் ஒன்று தான். அந்த சட்டத்தில் தலையிட நான் தயாரில்லை.

உணவுக்காக கடன் வாங்கும் கொள்கை எம்மிடம் கிடையாது. ஆனால் கடந்த கால ஆட்சியாளர்கள் உணவுக்காகப் பெற்ற கடனை இன்றும் வட்டியுடன் திருப்பி செலுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்நாட்டு மக்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பை நாம் உள்ளூர் விவசாயிகளிடம் வழங்கியுள்ளோம்.

இதனடிப்படையில் விவசாயிகளை ஊக்குவிக்கவென உரமானியம், நீர்ப்பாசன வசதி உள்ளிட்ட எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.

நாம் செயல்திறன் மிக்கவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம்.

அதனால் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களியுங்கள். அதன் பின்னர் மூன்று விருப்பு வாக்குகளையும் பாவியுங்கள் என்றார். இக்கூட்டத்தில் ஐ. ம. சு. மு.யின் கொழும்பு மாவட்ட அபேட்சகர்களான அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், தினேஷ் குணவர்த்தன, பாட்டலி சம்பிக்க, முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச, சுதர்மன் ரதலிய கொட, துமிந்த சில்வா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டு கண்காணிப்பாளர் பணி ஆரம்பம்; 19பேர் களத்தில்


பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இலங்கை வந்திருக்கும் 19 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திரு ப்பதாக சுதந்திர தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெப்ரல் அமைப்பின் சார்பாக தாய்லாந்து, ஜப்பான், மலேசியா, இந்தியா, மியன்மார், இங்கிலாந்து ஆகிய ஆறு நாடுகளிலிருந்து 16 பேர் இலங்கை வந்திருப்பதாக அதன் நிறைவேற்றுப் பணிப் பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இவர்கள் இருவர் வீதம் எட்டுக் குழுக்களாக வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கண் காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, சி. எம். ஈ. வி. அமைப்பு இங்கிலாந்து, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து மூன்று வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக வரவழைத்திருப்பதாக அதன் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, சுமார் 15 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கென 565 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள் ளன. இதன்படி, பெப்ரல் அமைப்பு 11,000 க்கும் மேற்பட்டோரை உள்ளூர்க் கண்காணிப்பாளராகப் பயன் படுத்தவுள்ளது. அதேநேரம், சீ. எம். ஈ. வி. சுமார் நான்காயிரம் பேரை ஈடுபடுத்தவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுக்கு எதிராக 2வது புதிய இராணுவ நீதிமன்றம்




ஜனாதிபதியினால் நியமனம்;

இரு நீதிமன்றங்களின் அமர்வுகள் நாளை



முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் அடங்கிய இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தை புதிதாக நியமித்துள்ளார்.

இந்த நீதிமன்றத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் எம். பி. மீரிஸணும், உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் எஸ். டபிள்யூ. எல். தவுளகள, மேஜர் ஜெனரல் எம். ஹதுருசிங்க ஆகியோரும் இந்த நீதிமன்றத்தின் நீதிபதி அட்வகேட்டாக கடற்படையைச் சேர்ந்த ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோவும் புதிதாக நியமிக்கப்பட்டு ள்ளனர்.

இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் அமர்வும், ஏற்கனவே கூடிய முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வும் நாளை 6ம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது.

இராணுவக் கொடுக்கல் வாங்கல்கள், மற்றும் இராணுவ விதிமுறைகளை மீறியமை என்று குற்றச்சாட்டு தொடர்பாகவே இந்த இரண்டாவது நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுக்வுள்ளது.

ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சென்ற மார்ச் மாதம் 17ம் திகதி கூடிய போது அதன் அமர்வுகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதணையடுத்து மீண்டும் புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றம் நாளை மீண்டும் கூடவுள்ளது என்று இராணுவ தலைமையகம் தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு: ஆதரவு திரட்ட கட்சிகள் இறுதிநேர பிரயத்தனம்

மித்தெனியவில் ஐ. ம. சு. முவின் இறுதிக் கூட்டம்

ஸ்ரிக்கர் ஒட்ட கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி

பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இறுதிக்கட்ட தேர்தல்பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

பிரதான கட்சிகளின் முக்கிய கூட்டங்கள் பிரதான நகரங்களில் நடத்தப்படவுள்ளன. ஐ. ம. சு. முன்னணியின் இறுதிக் கூட்டம் இன்று மித்தெனியவில் நடைபெற உள்ளது. ஜனாதிபதி தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இது தவிர அமைச்சர்கள் தலைமையிலான முக்கிய கூட்டங்களும் பல மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளன.

இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியும் இன்று பலபிரசாரக் கூட்டங்களை நடத்த உள்ளது. ஐ. தே. முன்னணியின் இறுதிக் கூட்டம் இன்று மாலை கொழும்பு பஞ்சிகாவத்தையில் நடைபெறும். ஜனநாயக தேசிய முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் ஜே. வி. பி. தலைவர்கள், மற்றும் அநோமா பொன்சேகா ஆகியோரின் தலைமையில் கம்பஹாவில் நடைபெற உள்ளது. இதேவேளை தேர்தலுக்கான ஏற்பாடுகள் யாவும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது.

தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் நாளை (6) முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்கவுள்ளதோடு 7ஆம் திகதி வாக்குப் பெட்டிகள் எடுக்கச் செல்லப்பட உள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் குலதுங்க தெரிவித்தார். இம்முறை தேர்தலில் வெற்று வாக்குப் பெட்டிகளுக்குள் ‘ஸ்ரிக்கர்’ ஒன்றை ஒட்ட கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. அவ்வாறு ‘ஸ்ரிக்கர்’ ஒட்ட விரும்பும் பிரதிநிதிகள் தேர்தல் தினம் காலை 6.30 மணிக்கு முன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்குமாறு கேட்கப்படுகின்றனர். அதன் பின்னர் வாக்குப் பெட்டிகள் ‘சீல் வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

சில தொகுதிகளில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால் அந்தப் பகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மேலதிக வாக்களிப்பு நிலைய அதிகாரி ஒருவரை உதவியாக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரின் வாகனம் தீக்கிரை


காத்தான்குடிப் பகுதியில் இன்று அதிகாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாதர் அணிக்கான கிழக்கு மாகாண அமைப்பாளரான ஜனாபா ஸ்ல்மாஹம்ஸாவின் பிரசார வாகணம் எரித்து நாசமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பொலிஸ் விசாரணைகள் நடைப்பெற்று வருகின்றன.

சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான குறித்த வாகணம் காத்தான்குடி சேர்மன் இப்றாகிம் சதுக்கத்திலுள்ள குறித்த மாநகர் அமைப்பாளரின் வளவில் அதிகாலை ஒரு மணியளவில் நிறுத்திவைத்து விட்டு உறக்கத்தில் இருந்த வேளை இனம் தெரியாத குழுவினரால் எரித்து முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றது.

குறித்த மாதர் அமைப்பாளர் இப் பகுதியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் பிரபல வேட்பாளரும் முன்னாள் அமைச்சரின் சகோதரியென்றும், இத் தேர்தலில் அவருக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்து வருபவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாகனம் எரியுண்ட இடத்தில், கைவிடப்பட்டுச் செல்லப்பட்டுள்ள இரு சோடி ஆண்பாதணிகளை காத்தான்குடி பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இதனை வைத்து மோப்ப நாய்களைக் கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய எதிர்பார்ப்பதாக பாதுகாப்பு வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றது.

இச் சம்பவம் தொடர்பாக மட்டகளப்பு பொலிஸ் அத்தியட்சர் ஜே.ஏ மார்கின் அறிவுறுத்தலுக்கமைய காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கிழமை முழுவதும் கடைகளை திறக்குமாறு கோரிக்கை




சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கிழமை முழுவதும் அனைத்து கடைகளையும் திறக்குமாறு யாழ்ப்பாண வணிகர் கழகம் கடை உரிமையாளர்களிடன் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் பொருட்கள் கொள்வனவில் மக்கள் அதிகளவில் ஈடுபடுவார்கள்.வ் இதற்காக யாழ்ப்பாணத்தின் அனைத்து வணிக நிறுவனங்களும் கிழமையின் அனைத்து தினங்களும் திறந்து வைத்திருக்குமாறு யாழ்ப்பாண வணிக நிறுவனம் அறிவித்தள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஈரான் மீது தடை: இந்தியா உதவியை கோருது அமெரிக்கா







பாதுகாப்பு கவுன்சில் மூலமாக ஈரான் மீது தடை விதிக்க, வளர்ந்து வரும் நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, அமெரிக்கா கேட்டுக் கொண் டுள்ளது.'ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது' எனக் கூறி, அதன் மீது பொருளாதார தடை விதிப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இதற்கு சீனா ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென வலியுறுத்திய அமெரிக்கா, தற்போது இந்தியாவின் ஒத்துழைப்பையும் கேட்டுள்ளது.

ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா இடையிலான, பல கோடி ரூபாய் மதிப் புள்ள எரிவாயு பைப்லைன் தொடர்பான பேச்சு வார்த்தையை மீண்டும் இந்தியா துவங்க உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த, அமெரிக்க பொது விவகாரங்கள் துறை துணை அமைச்சர் பி.ஜே. கிரவுளி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஈரான் விவகாரத்தில் ஒவ்வொரு நாடும், குறிப் பாக வளர்ந்து வரும் நாடுகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இம்முயற்சிக்கு சர்வதேச அளவில், அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, ஈரான் மீது விதிக்கப்படும் தடைக்கு, கீழ்படிய அந்நாட்டை வற் புறுத்த வேண்டும். இந்தியா உட்பட பல நாடுகள், ஈரானுடன் பொருளாதார உறவுகள் ஏற்படுத்திக் கொள்வது கவலையளிக்கிறது. அவ்வாறான உறவுகளை பின்பற்ற, இது சரியான தருணம் அல்ல.இவ்வாறு கிரவுளி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லை, கிளிநொச்சி, மன்னார் செல்வோருக்கென வவுனியாவிலிருந்து 55 பஸ்கள்


இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க வவுனியாவில் 48 சாவடிகள்




மெனிக்பாம் நிவாரணக் கிராமம் உட்பட வவுனியா நகருக்குள் இடம்பெயர்ந் துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 48 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி பகுதிகளுக்குச் சென்று வாக்களிப்பதற்கு ஏதுவாக 55 பஸ் வண்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களுக்கு வாக்களிக்க வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக தெரிவத்தாட்சி அதிகாரி தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் பகுதிகளைச் சேர்ந்த வவுனியா நகரிலுள்ள இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் அந்தந்த பகுதிக்குச் சென்று வாக்களிப்பதற்காக தேர்தல் தினத்தன்று காலை 6.00 மணிக்கு காமினி மகா வித்தியாலயத்திலிருந்து புறப்படும் பஸ் வண்டிகளில் செல்ல முடியும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாயின் அவர்கள் வாக்களிக்க வுள்ள வாக்குச் சாவடியின் விபரம், இடம்பெயர்ந்த வாக்காளர்களாக பதிவு செய்ததற்கான ஆவணம் என்பவற்றுடன் பஸ் வண்டிகளூடாக செல்ல முடியும். ஒவ்வொரு பஸ் வண்டியிலும் தெரிவத் தாட்சி அதிகாரியினால் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவர் செல்வார்.

வவுனியா நகருக்குள்ளும் இடம்பெயர்ந்த வாக்காளர்களை அழைத்துச்செல்வதற்கு எனவும் 77 தனியார் பஸ் வண்டிகளை சேவையிலீடுபடுத்த தெரிவத்தாட்சி அதிகாரி பீ. எம். எஸ். சார்ள்ஸ் திட்டமிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களாக விண்ணப்பிக்குமாறு விடுத்த அறிவித்தலின் பின்னர் விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட, விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கும் மீண்டும் விண்ணப்பிக்க முடியும் என அறிவித்ததன் பின்னர் சுமார் 3700 பேர் இதுவரையில் மேலதிகமாக பதிவு செய்துகொண்டுள்ளனர்.

இவர்களுக்கென விசேட டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்களிக்கச் செல்லும் போது இந்த டோக்கன்களையும் எடுத்துச் செல்லலாம். வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்காதவர்கள் வவுனியா தபாலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் குறிப்பாக மெனிக்பாம், மற்றும் வவுனியா நகரிலுள்ளவர்கள் வாக்களிப்பதற்காகத் தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு ஆளடையாள அட்டை இல்லையெனில் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள விசேட அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்.

குறிப்பாக 2009 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் 2009 டிசம்பர் மாதம் 19ஆம் திகதி வரையில் வழங்கப்பட்ட 1,50,000 முதல் 2,38,326 வரையிலான தொடரிலக்கம் கொண்ட பொலிஸாரினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வாக்களிப்புக்காக பயன்படுத்தலாம்.

இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களுக்கு மெனிக்பாம் வலயம் – 2 இல் ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் 16 வாக்குச் சாவடிகளும், வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் 32 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு – மன்னார் - கிளிநொச்சி செல்ல வேண்டியவர்கள் காலை 6.00 மணிக்கு முன்னதாக வவுனியா காமினி மகா வித்தியாலயத்துக்கு வரவேண்டும்.

வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வலய கட்டளையிடும் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள், வன்னி மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

வளமான எதிர்காலம் உருவாக ஒன்றுபடுவோம் – ஜனாதிபதி





இலங்கை நாடு எமது தாய்நாடு, இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒரு தாய் பெற்ற மக்களாக வாழுதல் வேண்டும். இந்த நாட்டில் இனிமேல் சிறுபான்மை என்று ஒன்றில்லை. எமது தேசத்தின் மீது அன்பு காட்டுகின்ற எல்லோரும் ஓரினமே.

இவ்வாறு ஓட்டமாவடிப் பாலத்தினை திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி அமீர்அலி அரங்கில் இடம்பெற்ற வேளை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி தலைமையில் இடம்பெற்ற இப்பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

இந்த நாட்டில் இனிமேல் இன மத குல பேதங்கள் இருக்கக் கூடாது. நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் பட்ட கஷ்டங்கள், துயரங்கள் எனக்குத் தெரியும். அப் பயங்கரவாத நிலை இனிமேல் இந்த நாட்டில் இல்லை. எல்லா இன மக்களும் இனி பாதுகாப்பாக வாழ முடியும். நாம் எல்லோரும் சகோதரர்கள்.

இன ரீதியான அரசியல் நோக்கம் தேவையற்றது. மாறாக வளமான எதிர்காலம் உருவாகப் பாடுபட வேண்டும். நீங்கள் என்னை நம்பினால் நான் உங்களை நம்புவேன். நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டியது எனது கடமை. போலி வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டேன். சொல்வதைச் செய்வேன்.

உங்கள் பகுதி விவசாய நடவடிக்கைகளு க்கு உரிய வசதிகளை வழங்குவேன். 30 வருட கஷ்ட நிலை மீண்டும் வர வேண்டுமா? உங்கள் பிரதேசம் இன்னும் முன்னேற ஒன்றுபடுங்கள்
மேலும் இங்கே தொடர்க...

சுயேச்சைக்குழு 15, 18 தேசிய காங்கிரசுக்கு ஆதரவு

பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஊடகவியலாளரான எம்.எம்.எம்.நூறுல் ஹக்கை தலைமை வேட்பாளராக கொண்டு போட்டியிடும் சுயேட்சை அணி 15 தேசிய காங்கிரஸிற்கு தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை அக்குழுவினர் வெளியிட்டனர். மேலும் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் தேசிய காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவிடம் தலைமை வேட்பாளர் நூறுல்ஹக் வழங்கி வைத்தார்.

இந்த இணைப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த தேசிய முஸ்லிம் கவுன்சில் தவிசாளரும் ஊடகவியலாளருமான அஸ்லம் எஸ். மெளலான, எமது சுயேட்சை அணி ஏனைய பத்தோடு பதினொன்றாக இல்லாமல் ஒரு இலட்சய பயணத்தை நோக்கியதாக செயற்படுகிறது.

எமது அணியின் முழு மூச்சாக இருப்பது சாய்ந்தமருது பிரதேசத்துக்கான தனி பிரதேச சபையை உருவாக்குவ தாகும்.

இந்த மாவட்டத்தின் சக்தியாக விளங்கும் தேசிய காங்கிரஸ் கட்சி தலைமைத்துவத்துடன் பேசிய போது அவர் எமது கோரிக்கை நியாயபூர்வமாக ஏற்று தமக்கு உறுதியுரை வழங்கியுள்ளார். அதனையிட்டே எமது சுயேற்சை குழு- 15 அவருக்கு ஆதரவு வழங்குவதுடன் அவருடைய மூன்று வேட்பாளர்களினதும் வெற்றிக்கு முழுமையாக உழைக்கும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த பத்திரிகையாளர் மாகாநாட்டின் போது மேலும் ஒரு சுயேற்சை குழுவான அப்பிள் இனத்தில் இல- 38 ல் போட்டியிடும் தலைமை வேட்பாளரும் முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அணி அமைப்பாளருமான ஆசீக் குழுவினரும் தேசிய காங்கிரஸணுக்கு தமது ஆதரவை தெரிவித்து அறிக்கைவிட்டதுடன் தேசிய காங்கிரஸ் தலைமையுடன் இணைந்து கொண்டன.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் முன்னாள் புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும் வீடுகள்






யாழ்ப்பாணத்தில் படையினர் நிர்மாணித்துள்ள வீடு களில், புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்க ளின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களின் விதவை மனைவியர் மற்றும் மிகவும் வறிய நிலையில் உள்ள வர்களுக்கு முன்னுரிமை வழங்கி குடும்பங்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். படைப் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள் தினகரனுக்குத் தெரிவித்தனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மீளக் குடியமரச் சென்றவர்களுக்காக வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் பிரதேசங்களில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

2006ஆம் ஆண்டு பல்வேறு காரணங்கள் நிமித்தம் வன்னிக்குச் சென்று பாதை மூடியதால் சிக்குண்டவர் கள், இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து கடந்த வருட இறுதியில் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று ள்ளனர். அவ்வாறானவர்களுக்கு யாழில் சொந்தக் காணி இருந்தும் நிரந்தரமான குடியிருப்பு இல்லை. இவர்களைத் தேர்ந்தெடுத்தே இராணுவத்தினர் வீடுகளை நிர் மாணித்துள்ளனர்.

இந்த வீடுகள் நேற்று மூன்றாம் திகதியிலிருந்து பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. கடந்த முதலாம் திகதி இந்த வீடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பிரதாயபூர்வமாகக் கையளித் திருந்தார்.

இராணுவத்தினர் நிர்மாணித்து வரும் சுமார் 700 வீடு களுள் 450 வீடுகள் வரை முழுமையாக நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவு ஊர்வலங்கள், பேரணிகளுக்கு 7 தினங்களுக்கு தடை






2010 பொதுத் தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் நாளை 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றன. இன்று 4ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர் தல் பிரசாரங்களுக்கென பயன் படுத்தப்பட்டுவரும் பெனர்கள், கட்அவுட்டுகள், போஸ்டர்கள், கொடிகளை அகற்றும் நடவடிக் கைகளை கடுமையாகச் செயற்படு த்துமாறு பொலிஸாருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தல் முடிவடை ந்து ஏழு நாட்களுக்கு ஊர்வலங் கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங் கள் நடத்துவதும் தடைசெய்யப் பட்டுள்ளதாக தேர்தல்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

நாளை நள்ளிரவு முதல் பாது காப்பு மற்றும் தீவிர கண்காணி ப்புப் பணிகளுக்கென நியமிக்கப் பட்டுள்ள 2584 நடமாடும் பாது காப்பு பிரிவுகளும் செயற்பட ஆர ம்பிக்கவுள்ளன.

இதேவேளை தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தும் இதுவரை வாக்களிக்காதவர்கள் இருப்பின் தவறாது உடனடியாக வாக்களிக்குமாறும், எதிர்வரும் எட்டாம் திகதி மாலை 4.00 மணி க்கு வாக்குச் சீட்டுகள் யாவும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

19,500 முப்படையினரும், 58,700 பொலிஸ் மற்றும் விசேட அதிர டிப் படையினரும் இன்று முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத் தப்படவுள்ளனர்.

இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் வேட்பாளர்கள் அனைவரும் தமது பிரதான தேர்தல் பிரசார அலுவலகத்தைத் தவிர்ந்த ஏனைய அலுவலகங்களை மூடிவிட வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகள், வாக்கெண் ணும் நிலையங்கள், வாக்குப்பெட் டிகள் எடுத்துச் செல்லும் வாக னங்கள் என்பவற்றுக்கும் பாதுகா ப்பு வழங்கப்படுகிறது. வாக்கா ளர் அட்டைகள் இதுவரை கிடை க்காதவர்கள் தபாலகங்களில் வாக் காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தேர் தல் திணைக்களம் அறிவிக்கிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைவிட பொதுத் தேர்த லுக்கு பாதுகாப்பு நடவடிக்கை கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டிலுள்ள 413 பொலிஸ் பிரி வுகளும் உஷார் நிலையில் வைக் கப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள் தாம் வாக்க ளிக்கும் வாக்குச்சாவடியைத் தவிர வேறு வாக்குச் சாவடிக்கு செல் வதாயின் வேட்பாளருக்குரிய ஆள டையாள அட்டையுடன் மட்டுமே செல்லமுடியும் என்றும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...