31 மே, 2010

கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்குச் சென்ற குடும்பஸ்தர் படுகொலை

கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் 10 ஆயிரம் ரூபாவிற்காக அடித்து நேற்று மாலை படுகொலை செய்யப்;பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கிளி;நொச்சியைச் சேர்ந்த 56 வயதுடைய சோமசுந்தரம் சுப்பிரமணியம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றுக் காலை கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்கு சென்றுவிட்டு மீண்டும் கிளிநொச்சி திரும்புவதற்காக அப்பகுதியிலுள்ள ஆலடிச் சந்தியில் பஸ்ஸிற்கு காத்துக் கொண்டிருந்த வேளை மது அருந்துவதற்காக அப் பகுதியில் வந்த இருவரிடம் மதுபானச்சாலை எங்கே என்று கேட்டுள்ளார். மதுபானச்சாலையைக் காட்டுவதாக அழைத்துச் மேற்படி இருவரும் அவரது தலையின் பின்புறமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு அவரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாவையும் அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சடலம் புங்குடுதீவுப் பகுதியில் உள்ள தென்தென்திடல் பிள்ளையார் கோவில் வீதியில் மீட்கப்பட்டது.

சடலம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காவற்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக