19 நவம்பர், 2010

சிறுமிமீது பாலியல் துஷ்பிரயோகம் : தந்தை கைது, மாமன் தலைமறைவு!

ஐந்து வருடமாக, தொடர்ந்து 13 வயதான சிறுமியை, அவரது தந்தையும் மாமனும் சேர்ந்து கொடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்தமை குறித்த் தகவலைத் தங்காலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் மாமா தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் அயலில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே குறித்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி சிறுமியின் தாய் தெற்காசிய நாட்டில் பணிப்பெண்ணாகத் தொழில்புரிகிறார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர், இன்று தங்காலை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
மேலும் இங்கே தொடர்க...

குவைத்தில் ஊசி ஏற்றப்பட யுவதி குறித்து சட்ட நடவடிக்கை

குவைத் நாட்டில் ஊசியேற்றப்பட்டுத் துன்புறுத்தலுக்குள்ளான வி.இலட்சுமி தொடர்பாக மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி.எஸ்.ரணவக்க தெரிவித்தார்.

குருநாகல், இம்பாகமுவ என்ற இடத்தைச் சேர்ந்த இலட்சுமி என்பவரது உடலிலிருந்து சத்திர சிகிச்சை மூலம் ஒன்பது ஊசிகள் எடுக்கப்பட்டன.

குருநாகல் வைத்தியசாலையில், டாக்டர் எஸ்.ராஜமந்திரி இவரது உடலிலிருந்து இந்த ஊசிகளை எடுத்தார்.

இன்னமும் ஐந்து ஊசிகள் அகற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இதே நிலை ஏற்பட்டு, அந்நாடு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக இலங்கையும் கவனம் செலுத்தி வருவதாக ரணவக்க மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்குப் பல்கலை மாணவர் 14 பேருக்கு இன்று முதல் ஒரு வருட கற்கைத் தடை

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 14 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஒரு வருட கற்கைத் தடைக்குட்படுத்தப்படுவதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் நடைபெற்ற ஒழுக்காற்றுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இத்தடை விதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வர்த்தக பீட மாணவி ஒருவரை செவ்வாய்க்கிழமை பகிடி வதைக்குட்படுத்திய ஒரு மாணவி அடங்கலான 5 மாணவர்களுக்கும், கடந்த வாரத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில் சம்பந்தப்பட்ட இருவருக்கும். மேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விபுலாந்த இசை நடனக் கல்லூரியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மோதல் தொடர்பில் விசாரணைக்கால வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்த 7 மாணவர்களுக்கும் இந்தக் கற்கைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயன்று, வர்த்தக பீடத்தைச் சேர்ந்த ஒரு மாணவியைப் பகிடி வதைக்குட்படுத்திய ஒரு மாணவன் மற்றும் 4 மாணவிகளுக்கும் விசாரணைகள் முடியும் வரை வகுப்புத் தடை விதிப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்ததது.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட முறுகல் காரணமாக வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழகத்தில் காலை 10.00 மணிமுதல் விசாரணைகள் நடைபெற்று நேற்று மாலை இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் அதிகளவில் சிவில் உடையுடனேயே போரிட்டனர் : ஷவேந்திர டி. சில்வா

புலிகளுக்கு எதிராகப் போரிட்டு வெற்றிகொண்ட நாங்கள் தற்போது சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் மக்களினால் முன்னெடுக்கப்படும் தவறான பிரசாரங்களுக்கு எதிராக இராஜதந்திர ரீதியில் செயற்படவேண்டியுள்ளது. அத்துடன், இறுதி யுத்தத்தின்போது அதிகளவான புலிகள் சிவில் உடையிலேயே எம்முடன் போரிட்டனர். பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்டனி கூட சிவில் உடையில் போரிடுகையிலேயே கொல்லப்பட்டார் என்று அப்போதைய 58 ஆவது படையணியின் தளபதியும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தற்போதைய பிரதி வதிவிட பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் ஷவேந்திர டி. சில்வா தெரிவித்தார்.

புலிகள் அவர்களுக்கு எதிரான மக்களை ரகசிய சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் எம்மிடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எங்களிடம் எவ்விதமான இரகசிய முகாம்களும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

புலிகள் பாடசாலைகளை கெரில்லா கூடங்களாகவும் ஆலயங்களை மோட்டார் தாக்குதல்களின் மையமாகவும் பயன்படுத்தினர். ஆனால் பாதுகாப்பு வலயங்களை நோக்கி எந்த நேரத்திலும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தவில்லை. அதாவது இறுதிக் கட்டத்தில் நாங்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவேயில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை அமர்வில் இரண்டாவது தடவையாக கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு : தமிழ்க் கூட்டமைப்பு மகிழ்ச்சி

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்றுக்கொள்வதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்ளையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதுடன், ஏற்கனவே கலந்துரையாடப்பட்டது போன்று இணைந்துசெயற்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணம் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவிக் காலத்தை ஏற்றுக் கொள்வதையிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவிக்கின்றது. அதேவேளை ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு காண்பது மற்றும் வடக்குகிழக்கு பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் ஏலவே கலந்துரையாடப்பட்டதற்கமைய தங்களுடன் ஒத்துழைத்து செயற்படவும் தயாராகவுள்ளது.

மேலும் இவ்விவகாரங்கள் தொடர்பில் எமக்கு அளித்த உத்தரவாதங்களுக்கு அமைய அவசியமான பொறிமுறை ஒன்றை தாங்கள் சாத்தியமானளவு விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பீர்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கவும் :அரசாங்கம்

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி. க்கள் வெளிநாடுகளுக்கான பயணங்களை தவிர்க்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின்தின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கடவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இந்நிலையில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் நடைபெறும் காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி. க்கள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று உயர்மட்டத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார். இந்நிலையில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிவரை பாராளுமன்றத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை திங்கட்கிழமை காலை சுபநேரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தடவை பதவிக் காலத்துக்கான பதவியேற்பு விழா இன்று வெள்ளிக்கிழமை பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ( தற்போதைய ஜனாதிபதி செயலகம்) நடைபெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவிப்பிரமாணம்



இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை பிரதம நீதியரசர் முன்னிலையில் சுபவேளையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்.

இந்த வைபவத்தை முன்னிட்டு தலைநகர் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், பிரதான வீதிகளில் நீடூழி வாழ்க, நீடூழி வாழ்க என்று எழுதப்பட்ட கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. தேசியக்கொஐ, மாகாண கொடிகளால் மட்டுமன்றி வர்ணக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு காலி முகத்திடல் விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவிப்பிரமாணத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பிரமாண்டமான ஏற்பாடுகள் யாவும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டு கொழும்பு 1 முதல் 4 வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் இன்று மூடப்பட்டிருக்கும். பிரதான வைபவம் நிறைவு பெற்று அதிதிகள் அங்கிருந்து வெளியேறும் வரை புறக்கோட்டைக்கான வீதிகள் யாவும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்.

இரண்டாவது தவணைக்கான பதவி பிரமாண வைபவத்தில் மாலைதீவு ஜனாதிபதி,பூட்டான் பிரதமர் மற்றும் சீனாவின் உபபிரதமர் ஆகியோர் பிரதம அதிதிகளாக பங்கேற்கவிருக்கின்றனர். அத்துடன் இந்தியா, பாகிஸ்தான், உள்ளிட்ட ஏனைய நாடுகளைச் சேர்ந்த 150 பிரதிநிதிகள் அதிதிகளாக பங்கேற்கவிருக்கின்றனர். அவர்களில் பலர் நேற்றிரவு வருகைதந்து விட்டதாக தூதரகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது பதவிக்காலம் 2011 நவம்பர் மாதமே நிறைவடைய விருக்கின்றது அதற்கு முன்னரே இரண்டாவது தவøணக்கான தேர்தல் 2010 ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கெணண்ட ஜனாதிபதித்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிரணியின் வேட்பாளர் சரத்பொன்சேகாவை தோல்வியுறச்செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 18 இலட்சத்து 42 ஆயிரத்து 749 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டினார்.

அத்தேர்தலில் வாக்களிப்பதற்காக பதிவுசெய்யப்பட்ட 1 கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 50 வாக்குகளில் 60 இலட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளை அவர் பெற்றுக்கொண்டார். இது 57.88 சதவீதமாகும். எதிரணியின் வேட்பாளரான சரத் பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகளை பெற்றுக்கொண்டார். இது 40.15 வீதமாகும். ஏனையோர் 1.0 வீத வாக்குகளை பெற்றுக்கொண்டதுடன் அத்தேர்தலில் 0.97 வீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

தென்மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியல் குடும்பமான டீ.ஏ. ராஜபக்ஷவின் குடும்பத்தில் 1945 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி பிறந்த மஹிந்த ராஜபக்ஷ தனது 65 ஆவது வயதில் இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொள்ளவிருக்கின்றார்.

1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி தனது 24 ஆவது வயதில் பாராளுமன்றத்திற்கு தெரிவான மஹிந்த ராஜபக்ஷ 1994 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றியீட்டி அன்றைய அரசாங்கத்தில் தொழில், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சராகவும் பதவிவகித்தார்.

2001 ஆம் ஆண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றியீட்டியதை அடுத்து எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ 2004 ஆம் ஆண்டு வரையிலும் அப்பதவியை வகித்தார்.

2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் வெற்றியீட்டியதை அடுத்து இலங்கையின் 13 ஆவது பிரதமராக 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி தெரிவானார்.

2005 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அத்தேர்தலில் 48 இலட்சத்து 87 ஆயிரத்து 152 வாக்குகளை பெற்றிருந்தார் அது 50.29 சதவீதமாகும் அத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 47 இலட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளை பெற்றிருந்தார். இது 48.43 வீதமாகும்.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 1 கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்த போதிலும் 1 கோடியே 4 இலட்சத்து 95 ஆயிரத்து 41 பேரே வாக்களித்திருந்தனர். அதிலும் 1 கோடியே 3 இலட்சத்து 93 ஆயிரத்து 613 வாக்குகள் மட்டுமே செல்லுபடியாகியிருந்தன.

இத்தேர்தலில் 18 பேர் பதிவு செய்யப்பட்ட கட்சிகளிடமிருந்தும் நான்கு பேர் சுயேட்சையாகவும் போட்டியிட்டமையினால் வரலாற்றிலேயே மிக நீளமாக 19.5 அங்குலத்தில் வாக்குச்சீட்டு தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை 1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன நான்கு வருடங்களுக்கு பின்னர் 1982 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் வெற்றியீட்டிக்கொண்டதுடன் 1988 ஆம் ஆண்டு வரையிலும் அவர் அப்பதவியை வகித்தார்.

1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பிரேமதாசா வெற்றியீட்டியதுடன் 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அவர் பலியானார். அதற்கு பின்னர் மறைந்த ஜனாதிபதி டி.பி விஜயதுங்க ஒருவருடம் மட்டுமே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிவகித்தார்.

அதே ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றியீட்டியதுடன் தனது ஐந்தாண்டு நிறைவில் 1999 ஆம் ஆண்டு மக்கள் ஆணையை கோரி நின்றார். அவ்வாண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றியீட்டிய அவர் 2005 ஆம் ஆண்டு வரை பதவிவகித்தார்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது தவணைக்காக 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியதுடன் இன்று வெள்ளிக்கிழமை சுபநேரத்தில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவிருக்கின்றார்.

இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் 1978 ஆம் ஆண்டு யாப்பியின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என வரையறுக்கப்பட்டிருந்தது. எனினும் பாராளுமன்றத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 18 ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவர் இரண்டு தவணைக்கு மேல் தேர்தலில் போட்டியிடமுடியாது என்ற வரையறை நீக்கப்பட்டது.

அவ்வாறானதொரு நிலையிலேயே மிகப்பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் காலி முகத்திடலிலுள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள விசேட மேடையில் வைத்து ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொள்வதுடன் நாட்டு மக்களுக்கும் உரையாற்றவிருக்கின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரம்மா ஒரு தருணத்தில் தான் தான் பெரியவன் விஸ்ணு சிவனைவிட




பிரம்மா ஒரு தருணத்தில் தான் தான் பெரியவன் விஸ்ணு சிவனைவிட என்று கர்வம் கொண்டார் , அப்போது இதை பார்த்த விஸ்ணு சிவனிடம் கூற சிவன் விஸ்ணு இருவரும் சென்றார்கள் பிரம்மாவிடம் பிரம்மா இருந்த இடத்தை விட்டு எழும்பவில்லை ,இருந்த படியே பார்த்தார் அங்கெ சென்ற விஸ்ணு
கூ றினார் எங்கள் இருவரையும் விட குணத்தாலும் உயரத்தாலும் உயர்ந்தவர் சிவன் தான் ஆகவே நாம் இருவருமே சிறியவர்கள் என்றார் எப்படி என்று பிரம்மா வினாவினார் உடனே விஸ்ணு கூறினார் நான் இன்னும் சிவனின் முடியை கூட காணவில்லை என்றார் அதற்கு ஏளனமாக பிரம்மா கூறினார் நீர் முடியை பார்க்கவில்லை என்றால் அவர் பெரியவரா என்றார் இதை பார்த்து கொண்டிருந்த சிவன் கூறினார் இருவருன் முயற்சி செய்யுங்கள் யார் முதலில் என் முடியை கான்கிண்றீர்களோ அவர் தான் பெரியவர் என்றார் ,

உடனே இருவரும் சேர்ந்து முதலில் முடியை தேடி சென்றார்கள் பாதி வளி சென்ற இருவரில் ஒருவரான விஸ்ணு கூறினார் என்னால் இனி முடியாது நீயே பெரியவன் வா திரும்பி செல்வோம் என்றார் ஏற்க மறுத்த பிரம்மா நீ திரும்பிசெல் நான் முடியை பார்த்து தான் வருவேன் என்றார் விஸ்ணு திருன்பினார் பாதி வழியில் பிரம்மா தொடர்ந்தார் முடியை தேடி செல்லும் வழியில் சிவனின் தலையை அலங்கரிக்கும் தாளம்பூ என்ற பெண்ணை கண்டார்
உடனே அவருக்கு ஒரு ஆச்சரியம் இங்கே இவ்வளவு தூரத்தில் ஒரு பெண் உடனே அவர் அந்த பெண்ணிடம் வினாவினார் நீ யார் அதற்கு அந்த பெண் கூறினார் என் பெயர் தாளம்பூ நான் சிவனின் தலையை அலங்கரிப்பவள் என்றாள் பிரம்மாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி ஒ அப்படியானால் சிவனின் முடி மிக அண்மையில் தான் உள்ளது என்றார்

இதை கேட்ட தாளம்பூ சிரித்தாள் பிரம்மாவிற்குஆச்சர்யமாக இருந்தது ஏன் சிரிக்கின்றாய் என்றார் உடனே தாளம்பூ கூறினார் தங்கள் பதவிக்காலம் எவ்வளவு முற்பது ஆயிரம் ஆண்டுகள் .30 .000 .என்றார் பிரம்மா, உடனே தாளம்பூ கூறினார் நான் சிவனின் முடியை அலங்கரிது விட்டு வரும் இபோது வரைக்கும் இரண்டு பிரம்மாக்கள் பதவி வகித்து விட்டார்கள் நான் தலையில் இருந்து இறங்கி அறுபது ஆயிரம் ஆண்டுகள் என்றார் பிரம்மாவிற்கு தலை சுற்றியது உடனே பிரம்மா அந்த பெண்ணிடம் நீயோ சிவனின் முடியை அலங்கரிப்பவள் உன்னை பார்த்தாலும் சரி சிவனின் முடியை பார்த்தாலும் சரி இரண்டும் ஒன்று தான் அகவே நீ எனக்காக ஒரு பொய் சொல் நான் சிவனின் முடியை பார்த்ததாக என்றார் முதலில் மறுத்த தளம்பூ அவரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி பொய் சொன்னார் இவை இப்படி இருக்க

விஸ்ணு பூமியை துளைத்து கொண்டு அடியை தேடி சென்றார் சென்று அடியை கண்டார் கண்டதும் சிவனின் பாதங்களை தொட்டு வணங்கினார் காலை தொட்டதும் அதிர்ச்சி யான சிவன் உடனே குனிந்து விஸ்ணுவை தூக்கினார்
அபோது அடியையும் முடியையும் கண்டார் விஸ்ணு அப்படியே சிவன் விஸ்ணுவை தழுவி தூக்கும் காட்சியை பிரம்மாவையும் அழைத்து காட்டினார்
பிரம்மா தோல்வியை ஒப்புகொண்டார் ஆத்திரம் கொண்ட சிவன் பொய் சொன்ன காரணத்தால் இனிமேல் பிரம்மாக்கு என்று ஒரு தனி கோவில் வைத்து யாரும் வழிபட கூடது என்று ஆணையிட்டார் அத்துடன் தளம்பூவை பிரம்மாவுடன் சேர்ந்து பொய் சொன்ன காரணத்தால் எந்த இறை வழிபாட்டிற்கும் எடுக்க கூடது அத்துடன் யாரும் வாசமாக உள்ளது என்று மணக்க வும் கூடாது
பூவுக்குள் சிறு நாகம் இருக்கக்கடவது என்று சாபமிட்டார் ஆகவே அன்பர்களே
பக்தர்களே பணிவு என்பது எந்த பெரியவரையும் பணியவைக்கும்
நன்றி வணக்கம் பணிவையும் பணிய வைக்கும் பணிவு


அன்பு நன்பர்களே ஒருவரின் காலில் விழுந்து பணிவதில் எந்த தவறும் கிடையாது நாம் காலில் விழுந்தால் நிச்சயம் எந்த பெரிய மனிதனும் எம்மை போல் பணிவார் எம்மை தூக்குவதர்று ஆகவே பணிவே பணிவு
மேலும் இங்கே தொடர்க...