5 ஜூன், 2011

ஐ.நா. அறிக்கை குறித்து கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை: அமெரிக்கா

இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. அறிக்கை குறித்து அமெரிக்கா மேற்கொண் டுள்ள கொள்கை நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது அப்பாவித் தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியதாகவும் அதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. குழுவினரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டதற்கு ஆதாரங்களையும் அந்த அறிக்கை கொண்டிருக்கிறது. போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஐ.நா. அறிக்கை குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து ராஜபக்ச அரசு இந்த விஷயத்தில் நம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தெளிவாக தெரிந்த நிலையில்இ அது குறித்து வெளிப்படையான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய மீனவர்கள் நால்வருக்கு இலங்கையில் 14 நாள் சிறை

நயினைதீவு கடற்பரப்பில் கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்களுக்கு, இலங்கை நீதிமன்றம் 14 நாட்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக இந்திய மீன்வளத்துறை சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டதன் பின்னர் அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்பு நீதிமன்றம் அவர்களை 14 நாட்கள் சிறைப்படுத்த உத்தரவிட்டதாகவும் தெரியவ ருகிறது.

இதன்படி இன்று யாழ் சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்படும் இவர்கள் ஜூலை 17ஆம் திகதி விடுவிக்கப்படுவர் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மற்றுமொரு ஐ.நா பிரதிநிதிக்கு தடைவிதித்துள்ளது இலங்கை

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, காணாமல் போன, தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பிராங்க லா றூ இலங்கை வருவதற்கான அனு மதியை இரண்டாவது தடவையாகவும் அர சாங்கம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி பிராங்க லா றூவை இலங்கைக்கு அழைத்து காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத், படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, உட்பட காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 37 சர்வதேச ஊடக மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் கேட்டுள்ளன.

இது தொடர்பான தீர்மானம் ஒன்றையும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கூடிய இந்த அமைப்புகள் எடுத்துள்ளன. 37 சர்வதேச ஊடக மற்றும் மனித உரிமை அமைப்புகளை உள்ளடக்கிய சர்வதேச சுதந்திரமான கருத்துக் கூறல் பரிவர்த்தனை அமைப்பு ஐணசிஞுணச்சிடிணிணச்டூ ஊஞுஞுஞீணிட் ணிஞூ உதுணீஞுண்ண்டிணிண உதுஞிடச்ணஞ்ஞு (ஐஊஉஙீ) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நேற்று முன்தினம் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

புதிய புரிந்துணர்வு பேச்சுவார்த்தைக்கு இலங்கை வரும் இந்தியக் குழு

இலங்கை இந்திய புதிய புரிந்துணர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசி யல் இணக்கப்பாடுகள் தொடர்பாக இதன் போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய உயர்மட்டக் குழுவில் இந்திய பிரதமரின் செயலாளர் ரி.கே. நாயகர், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் அடங்குகின்றனர்.

கடந்த காலங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் இந்திய வெளிவிகார அமைச்சரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக இந்த உயர்மட்டக் குழுவினர் தீர்க்கமாக ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வெடிபொருள் மீட்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களால் சில பொருள்கள் மீட்பு

யாழ்.குடாநாட்டில் வெடிபொருள், கண்ணிவெடி அபாயமற்ற பகுதிகளென கூறப்பட்டு, மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் வெடிபொருட்கள் பொதுமக்களால் மீட்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருப்திகரமான வகையினில் கண்ணிவெடியகற்றல் பணிகள் இடம்பெற்றதாவென்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள வடமராட்சி கிழக்கின் தாளையடிப் பகுதியில் வெடிக்காத நிலையில் எறிகணைகள் சில, கடந்த நாட்களில் மீட்கப்பட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவன களப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பாக பாடசாலை சூழலினுள்ளும் பனை மரத்திலும் கூட இவ்வாறு வெடிக்காத எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென்மராட்சியின் தனங்கிளப்பு, கோயிலாக்கண்டி மற்றும் மிருசுவில், எழுதுமட்டுவாள் பகுதிகளில் இவ்வாறு வெடிபொருட்கள் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்படுகின்றமை தொடர்பாக, தகவல்களை வழங்க பொதுமக்கள் பின்னடித்தே வருகின்றனர். இதனை காரணங்காட்டி, தம்மை அங்கிருந்து மீண்டும் வெளியேற்றிவிட படைத்தரப்பு முனையலாமென அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். வடமராட்சி கிழக்கிலும் அதே போன்று தென்மராட்சி மற்றும் பளை பகுதிகளிலும் கண்ணிவெடி அபாயத்தை காரணங்காட்டி பல கிராமங்களினில் இதுவரை மீள் குடியமர்வதற்கான அனுமதி படைத்தரப்பினால் வழங்கப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தப் பணியைச் செய்ததன் மூலம் நல்ல ஒரு புண்ணியத்தை தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்'.



இது ஒரு தனிமனித புகழ்ச்சியல்ல. எழுதவேண்டிய ஒன்றை எழுதவேண்டிய நேரத்திலேயே எழுதவேண்டும் என்பதற்காக எழுதப்படுகின்ற குறிப்பு இது.
நேயல் நடேசன் என்ற எழுத்தாளர் ஒருவரை அவரது எழுத்துக்கள் ஊடாக சந்தித்திருக்கின்றேன்.
பின்னர் அவரது கட்டுரைகள் ஊடாக அவரது சமூக அக்கறையை கண்டிருக்கின்றேன்.
விடுதலைப் புலிகள் இயக்கம் முள்ளிவாய்க்காலில் காணாமல் போனதற்கு பல வருடங்களுக்கு முன்னரே அவர்களின் வரலாற்றை எழுதியவர் டாக்டர் நோயல் நடேசன். அப்படி இவர் எழுதுகின்றபோதெல்லாம், பூனைகளையும் நாய்களையும் வெட்டுகின்ற ஒரு மிருகவைத்தியர் தேவையில்லாமல் அரசியல் பேசுகின்றார் என்று என்னுள் நினைத்ததுண்டு.
ஆனால் புலிகளின் போராட்டம் இப்படித்தான் முடியும் என்று அவர் முன்னரே எழுதியது அப்படியே நடந்தபோது ஆச்சரியமாகவும் இருந்தது.
2009 மார்ச் மாதத்தில், புலம்பெயர்ந்த தமிழர்கள் இருபதுபேர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு, அங்குள்ள நிலைமைகள் குறித்து அவர்கள் தெரிந்துகொள்ள வைக்கப்பட்டபோது, அவரை நேரில் சந்திக்க முடிந்தது.
கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நமது உறவுகளுக்கு எப்படியெல்லாம் உதவமுடியுமோ அந்தந்த வழிகளில் உதவ விரும்பும் பலநூறு தமிழர்களில் ஒருவராக அவரை அப்போது பார்க்கமுடிந்தது.
இவ்வளவு விரைவாக யாழ். மண்ணில் கால்பதிக்க தன்னால் முடியும் என்று அவரே நினைத்திருப்பாரோ தெரியவில்லை.
மே 18க்கு பின்னர் தமது மண்ணில் முதல்தடவையாக அவர் கால்பதித்தபோது அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும் நான் பகிர்ந்துகொண்டிருக்கின்றேன்.
பாதிக்கப்படும் மக்களுக்காக குரல்கொடுத்த பலரை பார்த்திருக்கின்றேன். மற்றவர்கள் இந்த மக்களுக்கு உதவவேண்டும் என்று எழுதிய பலரை, இன்னமும் எழுதிக்கொண்டிருக்கின்ற பலரை கண்டிருக்கின்றேன்.
ஆனால் அப்படி எழுதுவதுடன் நின்று விடாமல், செய்தும் காட்டியவர்கள் ஒரு சிலர்தான்.
தான் பிறந்த சிறிய தீவான எழுவைதீவு கிராமத்திற்கு அவர் நீண்டகாலத்திற்கு பின்னர் கடந்த ஆண்டு சென்றபோது, அவரை அவரது கிராமத்தவர்கள் வரவேற்றனர்.
'இந்தக் கிராமத்திற்கு நான் எதையாவது செய்யவேண்டும், உங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுவது என்ன?' என்று அவர் கிராமத்தவர்களை பார்த்து கேட்டபோது, அவர்கள் தயங்காமல் சொன்னது, 'எமக்கு அவசரம் தேவைப்படுவது ஒரு ஆஸ்பத்திரிதான். ஆதற்காக நாங்கள் ஒரு காணியை வாங்கவிருக்கின்றோம் நீங்கள் காணியை வாங்குவதற்கு பணஉதவி செய்யவேண்டும்' என்று அந்தக் கிராமத்து மீனவர் சங்கத்தினர் அவரிடம் கோரிக்கை வைத்தனர்.
அவர் எந்தவித தயக்கமோ அல்லது யோசனையோ இல்லாமல் அவர்களுக்கு சொன்னது, 'நீங்கள் காணியை வாங்குங்கள். நான் ஆஸ்பத்திரியை கட்டித்தருகின்றேன்.'.
கிராமத்தவர்கள் கூட அதனை நம்பியிருப்பார்களோ தெரியவில்லை.
ஆனால் அவர் எழுவைதீவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பியதும், கட்டிடம் கட்டுவதற்கான பணிகளைத் தொடக்கியது ஆச்சரியமாக இருந்தது.
ஆஸ்பத்திரிகளைக் கட்டிக்கொடுக்கத்தானே அரசாங்கம் இருக்கின்றது. இந்த மனுசனுக்கு ஏன் தேவையில்லாதவேலை என்று என்னுள் நினைத்ததையும் இப்போதாவது பதிவுசெய்யத்தான் வேண்டும்.
கடந்த திங்கள் கிழமையன்று (மே 30) ஆஸ்பத்திரி கட்டிடத்தை முழுமையாக கட்டி அரசாங்கத்திடம் கையளித்தபோது அந்த நிகழ்வில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.
சுமார் ஒரு கோடி செலவில் (கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியபோது 50 லட்சத்தில் கட்டி முடிக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அது 70, 80 என்று அதிகரித்து கட்டி முடிக்கப்பட்டபோது 100 ஆகிவிட்டது) கட்டிமுடிக்கப்பட்ட இந்த பணிக்கு கனடாவில் வாழும் எழுவைதீவு கிராமத்தவர்கள் சிலர் 4 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளனர். மிகுதிப் பணம் முழுவதையும் இவரது குடும்பமே செலவிட்டிருக்கின்றது.
மிகச்சிறப்பாக, எளிமையாக நடந்த அந்த வைபவத்தில் அவர் பேசியதைக் கேட்டபோது இத்தகைய ஒருவரின் நட்புவட்டத்திற்குள் இடம்பிடித்ததை நினைத்தபோதே ஒரு நெகிழ்ச்சியாக இருந்தது.
தனது சிறுபராயத்தில் இந்தக் கிராமத்தில் தான் வாழ்ந்தபோது, தனக்கு வருத்தம் வருகின்றபோது, தன்னை தனது தாயார் பக்கத்து தீவுகளுக்கு வைத்தியச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்கின்ற கஸ்டங்களை நினைவுகூர்ந்த அவர், அந்த கஸ்டங்களை இன்றும் தனது கிராமத்தவர்கள் அனுபவிப்பதை எண்ணிப்பார்த்திருக்கின்றார்.
வழியில் நாம் நடந்துசெல்லும்போது கல் ஒன்று நமது காலில் இடித்துவிடுகின்றது. கால் விரலில் காயம். நாம் என்ன செய்கின்றோம். நமக்கு காலில் அடித்த கல்லை எடுத்து ஒரு கரையில் போட்டுவிடுகின்றோம். காலில் அடித்த கல் நமக்கு மீண்டும் அடிக்கப்போவதில்லை, ஆனாலும் அது மற்றவர் காலில் அடித்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்தக்கல்லை எடுத்து கரையில் போடுகின்றோம்.
அதுபோலத்தான் இந்த ஆஸ்பத்திரியை நான் கட்டியதும் என்று நடேசன் அங்கு உரையாற்றியபோது கூறியது பலரையும் சிந்திக்கவைத்தது.
தமிழ் மக்களின் அவலங்களை காட்சிக்கு வைத்து பணம் பார்த்த பலர் இன்று அந்தப்பணத்திற்காக தத்தமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றனர். பல லட்சம் கோடி சொத்துக்களுக்காக இவர்கள் தமக்குள் மோதிக்கொண்டிருக்கின்றனர். யாரைக் காட்டி, யார் துயரங்களைக் காட்டி மக்களிடம் பணம்பார்த்தார்களோ அந்த மக்கள் இன்னமும் தமது எதிர்காலத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவற்றை விமர்சிப்பவராக மாத்திரம் இல்லாமல், தனது கடமையை செய்யவேண்டிய நேரத்தில் செய்து காட்டிய நோயல் நடேசன், ஆஸ்பத்திரி திறப்புவிழாவை முடித்துக்கொண்டு எழுவைதீவை விட்டு வெளியேறியபோது, அந்தத் துறைமுகத்தில் காவல் கடமையிலிருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் கூறிய வார்த்தைகளைத் தான் என்னாலும் இப்போது கூறமுடியும்.
'இந்தப் பணியைச் செய்ததன் மூலம் நல்ல ஒரு புண்ணியத்தை தேடிக்கொண்டிருக்கின்றீர்கள்'.-

எஸ்.எஸ்.குகநாதன்
மேலும் இங்கே தொடர்க...