29 செப்டம்பர், 2009

மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான ரயில் சேவை மாற்றம்
மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான பாடும்மீன் மற்றும் உதயதேவி கடுகதி ரயில் சேவைகளில் நாளை ஒக்டோபர் முதலாம் திகதி வியாழக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத தினைக்களம் அறிவித்துள்ளது.

இம் மாற்றத்தின் பிரகாரம் பாடும்மீன் நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரதம் தினமும் மாலை 7.15 ற்கு கொழும்புக் கோட்டையிலிருந்து புறப்டப்டு மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தைச் சென்றடையும்

மட்டக்களப்பிலிருந்து இரவு 8.15 ற்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 ற்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையததைச் சென்றடையும் வகையில் இரவு நேர ரயிலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

உதயதேவி நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவையைப் பொறுத்த வரை காலை 8.45 ற்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு மாலை 4.40 ற்கு மட்டக்களப்பைச் சென்றடையும்; .

அதே வேளை மட்டக்களப்பிலிருந்து காலை 7.45 ற்கு புறப்பட்டு மாலை 4.10 ற்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையததைச் சென்றடையும் வகையில் பகல் நேர ரயிலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் பிரதம அதிபரான அருனாசலம் சிவனேசராஜா தெரிவிக்கின்றார்

புதிய மாற்றத்தின் கீழ் இது வரை காலமும் இரவு நேர ரயிலில் இனைக்கப்பட்டிருந்த படுக்கை வசதிப் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட வேண்டும் எனக்கோரி, அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை மாலை கை விட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் அனுராதரபுரத்திற்கு விஜயம் செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்பே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் இந்தப் பிரச்சினை குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக ஐந்து வார கால அவகாசம் கோரி, அக்காலப்பகுதிக்குள் இந்தப் பிரச்சினைக்கு எப்படியும் முடிவு காணப்படும் என அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுவதற்குத் தமிழ் அரசி்யல் கைதிகள் முன்வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளின் நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் கோரியுள்ள கால அவகாசத்தினுள்ளே தமது பிரச்சினைக்கு முடிவேற்படாவிட்டால் தாங்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அனுராதபுரத்தில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி செவ்வாய்க்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...
இன்று மட்டு. முகாம்கள் மூடப்பட்டன : மக்கள் சின்னக்குளத்தில் தற்காலிகமாக குடியமர்வு


மாகாணத்தில் 2006ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த அனைத்து இடைத்தங்கல் முகாம்களும் இன்றுடன் மூடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் இன்று கொக்குவில் முகாம் மூடப்பட்டு அங்கு இறுதியாகத் தங்கியிருந்த சம்பூர், கடற்கரைச்சேனை மற்றும் கூனித்தீவு ஆகிய கிராமங்களின் 97 குடும்பங்களைச் சேர்ந்த 327 பேர் 15 பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டு மூதூர் பிரதேச செயலக அதிகாரிகளிடம் வெருகலில் வைத்து ஒப்படைக்கப்பட்டனர் என மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வுத் திட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஷரீப் தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இக்குடும்பங்கள் தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேற முடியாத நிலையில் சின்னக்குளத்தில் தற்காலிகமாக குடியமர்த்தப்படவிருக்கின்றார்கள்.

இதற்கென அங்கு இடைத்தங்கல் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு நேரடியாக இவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெருகல் மற்றும் ஈச்சிலம்பத்தை ஆகிய பிரதேசங்களிலிருந்து சுமார் 7,300 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரம் பேர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து 75இற்கும் மேற்பட்ட முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

2007ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம், விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட பின்பு இக்குடும்பங்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த வருடம் முற்பகுதியில் முடிவடைந்தன.

இருப்பினும் மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 1523 குடும்பங்களைச் சேர்ந்த 6074 பேரில் 745 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இக்குடும்பங்களை அப்பிரதேசத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைந்துள்ளது.

இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டாலும் 123 குடும்பங்களைக் கொண்ட 465 பேர் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். சுய விருப்பத்தின் பேரில் அவர்களையும் அடுத்த வாரம் அந்தந்தப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நீடிப்பு : ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆராயும்
இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நீடிப்பது பற்றி பரிசீலனை செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழு இந்த வருட இறுதியில் இது சம்பந்தமாக இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த மாத நடுப்பகுதியில் இது தொடர்பாகக் கூடி ஆராய இருக்கிறது.

கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன.

இலங்கைக்கு மேற்படி வர்த்தக சலுகை வழங்கப்பட வேண்டுமா என்பது பற்றி அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆராயும். அதன் பின்னர் அது பற்றி இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு மேலும் இரண்டு மாதங்கள் செல்லும் என்று இவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

மேற்படி வர்த்தக சலுகையைப் பெறுவதற்காக பிரஸ்ஸல்ஸிலுள்ள இலங்கைத் தூதரகம் அரசாங்கத்தின் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மனித உரிமைகளைப் பேணுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கிக் கூறி, மிக முக்கியமான வர்த்தக சலுகையை பெற்றுக் கொள்வதற்கென அண்மையில் அமைச்சர்கள் மட்ட குழு ஒன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது
அமைச்சர்களின் பாதுகாப்பு செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் : மங்கள சமரவீர

- "யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், அமைச்சர்களுக்குப் பாதுகாப்புக்காக 50 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அதிகமான குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறைக்கப்பட வேண்டும்" என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் எம்.பியுமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

இலங்கையில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பிலும் இதனால் நாட்டில் ஏற்படும் பாதுகாப்பு செலவினம் குறித்தும் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ராஜகிரிய ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி மக்கள் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு கூட நமது நாட்டு ஜனாதிபதிக்கான பாதுகாப்புகளைப் போல் வழங்கப்படவில்லை. ராஜபக்ஷ குடும்பத்துக்கான பாதுகாப்பும் அந்த குடும்பங்களின் உறவினர்களில் இருந்தே பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிப்பதும் வரையறையை மீறுவதாக உள்ளது.

ஜனாதிபதியின் பாதுகாப்புக்கென குவிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை 50 ஆகக் குறைப்பதன் ஊடாகவும் அதேபோல் அநாவசிய வாகன விரயத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவரது பாதுகாப்புக்கென வழங்கப்பட்டிருக்கும் வாகனங்களை ஐந்தாக குறைப்பதற்கும் தேசிய பாதுகாப்பு சபைக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன்.

நாட்டின் நலன்கருதி தேசிய பாதுகாப்பு சபை, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பான் முறைப்பாட்டினைச் சமர்ப்பிக்கும் போது, அது தொடர்பான விசாரணைகளை நேரடியாக நடத்தும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும்.

சூழ்நிலைக்கேற்ப, பாதுகாப்பு செயலாளர், படை அதிகாரிகள் ஆகியோர் இது தொடர்பில் கலந்தாலோசித்து ஒரு தீர்வினை எடுக்க வேண்டும்.


விமான சேவைகள் நஷ்டம்

இதுவரை காலமும் இலாபத்தில் இயங்கிவந்த நிறுவனங்கள் இன்று நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதற்குக் காரணம் இன்றைய அரசாங்கமே.

1980 ஆம் ஆண்டிலிருந்தே விமான சேவையாற்றிவரும் நிறுவனம் இலங்கை விமான சேவை. இன்று இது நஷ்டத்தில் இயங்கும் நிலை தோன்றியுள்ளது.

வெளிநாடுகளிடம் கடன்வாங்கி அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இன்று கொழும்புத் துறைமுகம் வீழ்ச்சி அடைந்து காணப்படுகின்றது. துறைமுக ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தென்மாகாண சபை தேர்தலுக்காகப் பல அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு மோசடிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்
மேலும் இங்கே தொடர்க...
widgeo

வடக்கின் அபிவிருத்தியைத் துரிதப்படுத்த சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புல்டோசர், பெக்கோ இயந்திரங்களை படத்தில் காணலாம். 2353 மில்லியன் ரூபா செலவில் இவ்வியந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ், பிரான்ஸ் அமைச்சர்கள்
போகொல்லாகமவுடன் சந்திப்பு

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் குச்னர், பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோரை அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்துப் பேசியுள்ளார்.

நியூயோர்க்கில் வெள்ளியன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப் பின் போது வடக்கில் இடம்பெயர்ந் தவர் களின் நிலை தொடர்பாக ஆராயப் பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

(விரிவான செய்தி உள்ளே)

பிரிட்டிஷ், பிரான்ஸ் அமைச்சர்கள்

போகொல்லாகமவுடன் சந்திப்பு

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் குச்னர், பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோரை அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்துப் பேசியுள்ளார். நியூயோர்க்கில் வெள்ளியன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது வடக்கில் இடம்பெயர்ந்தவர் களின் நிலை தொடர்பாக ஆராயப்பட்ட தாக வெளிவிவகார அமைச்சு தெரி வித்துள்ளது.

வடக்கில் செயற்படுகின்ற மனிதாபிமான அமைப்புகள் நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களின் தேவையின் அடிப்படையில், தடையின்றிக் கிடைக்கும் வகையில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனரென அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பயங்கரவாத அமைப்பிலிருந்து சரணடைந்துள்ளவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கே இதன் போது கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் போகொல்லாகம இதன் போது குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமென பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதகதியில் முடிவடையும் பட்சத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த முடியுமென அமைச்சர் கூறினார்.

கண்ணிவெடியகற்றும் பணிகளுக்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் உதவி வரும் பட்சத்தில் இன்னும் பல நாடுகளின் உதவிகள் கோரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

இதேவேளை இனப்பிரச்சினை தீர்வுக்காக முன்வைக்கப்படவிருக்கும் அரசியல் தீர்வு குறித்தும் அமைச்சர் குச்னர் மற்றும் மிலிபான்ட் ஆகியோருக்கு விளக்கமளித்துள்ளா

சகல மக்களினதும் எதிர்பார்ப்புகளை
நிறைவேற்றும் தீர்வு விரைவில்

ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் உரை நாட்டுக்கே உரிய தனித்தன்மையான தீர்வு
இடம்பெயர்ந்தோரை பாதுகாப்பாக மீள் குடியேற்றுவதில் அரசு முன்னுரிமை

மூன்று தசாப்தகாலமாக நீடித்த பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த செயற்பாடுகளை தடுக்க சில தரப்பினர் மறைமுகமாக சதி செய்து வருவது கவலைக்குரிய விடயம் என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 64வது அமர்வில் கலந்து கொண்ட பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க மேற்கண்டவாறு கூறினார். இங்கு உரையாற்றிய பிரதமர் ரத்னசிறி மேலும் கூறியதாவது,

உலக பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக காணப்பட்ட நிலையிலே இலங்கை அரசாங்கம் புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்தது. இதன் பலனை இலங்கை மட்டுமன்றி சமாதானத்தை விரும்பும் சகல சர்வதேச சமூகத்தினரும் அனுபவிக்கின்றனர்.

மோதல்கள் முடிவுற்ற நிலையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் எம்முன் உள்ள முக்கிய சவால்களாகும்.

மோதல் முடிவடைந்த பின்னர் எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகவும் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் நாம் ஐ.நா.வுடன் பேச்சு நடத்தினோம். இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பாகவும் கெளரவமாகவும் மீள்குடியேற்றும் நடவடிக்கைக்கு எமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

சர்வதேச தரத்திற்கு ஏற்ப இடம்பெயர்ந்த மக்களுக்கு வசதிகள் அளிக்கப்படுவதோடு, இந்தப் பணிகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சமூக அமைப்புகள் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன. சர்வதேச தரப்பின் ஒத்துழைப்பு டன் இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்றுவதே எமது நோக்கமாகும்.

மீள்குடியேற்றல், அபிவிருத்தி, அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்குதல், மறுசீரமைப்பு, நிரந்தர சமாதானம், பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (விரிவான செய்தி உள்ளே)

சகல மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வு துரிதம்

ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர்

பயங்கரவாதம் முழுமையாக ஒடுக்கப்பட்டுள்ள சகல பிரதேசங்களிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் தேர்தல்கள் நடத்தப்படும்.

இலங்கை மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாக செயற்பட்டு வருகிறது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இலங்கைக்கு பொருத்தமான முறையில் சமூக சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்.

மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தவும் நாட்டின் ஏனைய மக்கள் போல தடையின்றி தமது பணிகளை மேற்கொள்ளவும் உரிய சூழல் ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.

படையில் சேர்க்கப்பட்ட புலிகளுக்கு புதிய வாழ்க்கை நிலையை உருவாக்குவதற்காக புனர்வாழ்வுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐ. நா.வினதும் தொண்டு நிறுவனங்களினதும் ஒத்துழைப்புடன் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தேசிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களின் பின்னர் முதற் தடவையாக நாட்டிலுள்ள சகல மக்களினதும் அரசியல், பொருளாதார தகைமைகள் மற்றும் ஆளணியை நாட்டின் நலனுக்காக பயன்படுத்த இலங்கை தயாராகி வருகிறது.

மீள்குடியேற்றல் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காக உதவி வழங்கும் நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றன.

கிழக்கு உதயம் திட்டத்தின் கீழ் தேசிய பொருளாதாரத்திற்கு கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் பலம் வாய்ந்த புதிய பொருளாதாரமொன்றை இந்த வருடத்தினுள் ஏற்படுத்துவதற்காக வடக்கின் வசந்தம் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார்.

மோதல்கள் முடிவுற்றுள்ள நிலையில் சகல மக்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்குமென நீண்டகால அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வ கட்சிக் குழுவினூடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதன் யோசனைக்கு சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டை பெறமுடியுமென அரசாங்கம் நம்புகிறது. இதனூடாக ஏற்படுத்தப்படும் தீர்வு எமது நாட்டுக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த தீர்வாக இருக்க வேண்டும்.

உலக மயமாக்கல் உட்பட சர்வதேச மட்டத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டுள்ள பிரச்சினைகளை ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும். பயங்கரவாதம், உலக பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற சர்வதேச மட்ட நெருக்கடிகளுக்கு சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

புலிகள் இயக்கம் இலங்கையில் மேற்கொண்ட நாசகார வேலைகளுக்கு சர்வதேச மார்க்கங்களினூடாகவே நிதி உதவி கிடைத்துள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளினூடாக புலிகளின் சர்வதேச பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் குழுக்கள் புலிகளுக்கு நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கி வந்துள்ளன. புலிகளின் சர்வதேச பிரதிநிதிகள் தொடர்ந்தும் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு சில புலி உறுப்பினர்கள் தாமிருக்கும் நாடுகளில் இருந்து கொண்டு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை முறியடிக்க தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச நட்பு நாடுகளிடமும் ஏனைய தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.

மனிதாபிமான நடவடிக்கைகள் என்ற பெயரில் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் முறையற்ற ரீதியில் பணம் திரட்டி வருகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க எமது நட்பு நாடுகள் முன்வர வேண்டும்.

பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச மட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட வேண்டியது அவசியமாகும்.

உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஐ. நா.வின் பிரதான குறிக்கோள் என இலங்கை கருதுகிறது. உலகம் முழுவதும் காணப்படும் தீர்க்கப்படாத பெருமளவான பிரச்சினைகள் குறித்து ஐ. நா. கவனம் &:Vr> வேண்டும்.

பலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் இஸ்ரேல் - பலஸ்தீன சமாதானம் என்பன தொடர்பில் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில் குறைந்த கவனமே செலுத்தப்பட்டன. இதனால் எமது எதிர்பார்ப்புகள் சிதைந்துவிட்டன.

கிழக்கு உள்ளூர் அலுவலர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்ப ஐக்கிய அமெரிக்கா உதவி
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி (USAID), கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூர் அலுவலர்களின் ஆற்றலைப் பலப்படுத்தும் பொருட்டு, இரண்டு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அனுசரணை வழங்கியது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் ஆதரவுடன் நடத்தப்பட்ட, இரண்டு வதிவிட செயலமர்வுகள், கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுள் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவற்றைச் சென்றடைந்தன.

உள்ளூர்ச் செயற் திட்டங்களை மேலும் சிறப்பாகத் திட்டமிடுவதற்கும், அவற்றுக்கான வரவு செலவுத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், முன்னுரிமைகளை முடிவு செய்வதற்கும் வேண்டிய திறமைகளை இச்செயலமர்வுகள் அலுவலர்களுக்கு வழங்கின.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் பணிப்பாளர் ரெபேக்கா கோன்,

“கிழக்கு மாகாணத்தில், சிக்கலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்வது சம்பந்தப்பட்ட அறைகூவல்களைச் சந்திப்பதற்கு, உள்ளூர் தலைவர்கள் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி வழங்கிய உதவி, தெரிவு செய்யப்பட்ட 100 அலுவலர்களுக்கும் 36 பிரதேசச் சபை அலுவலர்களுக்கும் ஒரு நகர சபை சேர்ந்தவருக்கும் வழங்கப்பட்டமை பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

இவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் மூலம் உள்ளூர் சமுதாயங்களுக்கு மேம்பட்ட சேவைகள் வழங்கப்படுமென்றும் வரையறைக்குட்பட்ட வளங்களை மேலும் சிறப்பாக முகாமைத்துவம் செய்வதன் பயனாக சிறந்த அபிவிருத்திப் பெறுபேறுகள் இடம்பெறும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்." என்றார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சிச் சபைகளின் ஆணையாளர் எம். உதயகுமாரும், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் டி. பி. ஹெட்டியாரச்சியும் இச்செயலமர்வுகளில் பங்குபற்றினர்.

நாமல் ஓயா பிரதேச சபையின் செயலாளர் எம். ரணபாகு,

"தமிழ் - சிங்களம் பேசும் உள்ளூர் அரசாங்க அலுவலர்கள் பலர், இப்பயிற்சிகளில் செயலார்வத்துடன் பங்குபற்றி, நிலவும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றின் சிக்கல் தன்மைகள் பற்றியும் சிந்தித்தனர் என்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இச்செயலமர்வு மூலமாக நாம் பெற்ற அறிவையும் அனுபவத்தையும், தற்பொழுது பிரதேச சபைகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தலாம். அனைத்துச் செயலமர்வும் பயன்மிக்கவையாக அமைந்திருந்தன" என்றார்.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியினூடாக, அமெரிக்க மக்கள், ஏறத்தாழ 50 வருடங்களாக, உலகம் முழுவதிலுமுள்ள, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்திக்கான உதவிகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக, 1946 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி, இலங்கை, ஏறத்தாழ இரண்டு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது
அக்கரைப்பற்றிலுள்ள இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களில் இன்றும் ஒரு சிறுதொகையினர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்



வவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு அக்கரைப்பற்றிலுள்ள இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அம் மாவட்டததைச் சேர்ந்த குடும்பங்களில் இன்றும் ஒரு சிறுதொகையினர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

இதன் பிரகாரம் இன்று 4 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் குறித்த முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் அவர்களது இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 11 ம் திகதி வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து அம்பாறை மாவட்டததைச் சேர்ந்த 42 குடும்பங்களைக் கொண்ட 130 பேர் விடுவிக்கப்பட்டு சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு மறுநாள் 12 ம் திகதி அழைத்து வரப்பட்டிருந்த போதிலும் பாதுகாப்பு தரப்பு தரப்பினர் சில விபரங்களைப் பெற வேண்டியிருப்பதாகக் காரணம் கூறி அக்கரைப்பற்றிலுள்ள இடைத் தங்கல் முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்

பொலிஸ் உட்பட பாதுகாப்பு தரப்பினரின் அறிக்கையின் பேரில் இக் குடும்பங்களை கட்டம் கட்டமாக இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் கடந்த 23 ம் திகதி ஆரம்பமான போதிலும் இது வரை 4 கட்டங்களில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளின் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

23 ம் திகதி 5 குடும்பங்கள் 11 பேர் ,14 ம் திகதி 7 குடும்பங்கள் 15 பேர் ,25 ம் திகதி 10 குடும்பங்கள் 29 பேர் இன்று 28 ம் திகதி 4குடும்பங்கள் 19 பேர் என குறித்த எண்ணிக்கை அமைகின்றது
ஜெனீவாவில் இன்று வருடாந்த அகதிகள் மாநாடு ஆரம்பம்



வருடாந்த அகதிகள் மாநாடு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

அகதிகளின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் பங்கு கொள்ளவுள்ளன.

இதன் போது அடுத்த ஆண்டுக்கான 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான வரவு செலவுத் திட்டம்; மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த வருடத்தில் மாத்திரம் உலகளாவிய ரீதியாக 42 மில்லியன் மக்கள் பலவந்தமாக இடப்பெயர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

பேரவையினால் இலங்கை, சோமாலியா போன்ற நாடுகளில் உள்ள சுமார் 25 மில்லியன் அகதிகளுக்கு உதவியளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு குச்னர் மிலிபான்ட் விருப்பம்- அமைச்சர் போகொல்லாகமவுடனும் பேச்சு


பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் பேர்னாட் குச்னர், பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகிய இருவரும் வட பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமையை அவதானிப்பதற்காக மீண்டும் இலங்கைக்கு வருகை தர விருப்பம் தெரிவித்துள்ளனர். நியூயோர்க்கில் வைத்து வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகமவிடம் இந்த முடிவை அவர்கள் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் பிரான்ஸ், பிரிட்டிஷ் வெளிநாட்டøமச்சர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தார். அமைச்சர் போகொல்லாகம விடுத்த அழைப்பின் பேரில் அமைச்சர்கள் குச்னர், மிலிபான்ட் ஆகியோர் இந்த வருடம் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது மூன்று அமைச்சர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே தற்போதைய சந்திப்பு இடம்பெற்றது.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி கிராமங்களின் நிலைமை, முகாமிலிருந்து அழைத்துச் செல்லப்படுவோர் வேறு இரகசிய நிலையங்களில் வைக்கப்படுகிறார்களா என்பது உட்பட மீள் குடியேற்ற முயற்சிகள் ஆகியன குறித்து இலங்கை தரப்பிடமிருந்து பிரான்ஸ், பிரிட்டிஷ் அமைச்சர்கள் விபரங்களைக் கோரினார்கள். இது சம்பந்தமாக ஆரம்பத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட கால எல்லை, மீள குடியேற்றப்படும் மக்கள் தொகை ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ், பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக் கொண்டார்கள். இதற்குப் பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம, எவ்வõறாயினும் கண்ணிவெடிகளை துரிதமாக அகற்றுவதற்கு போதிய உபகரணங்களும் பயிற்றப்பட்ட ஊழியர்களும் கிடைப்பதில் மீள் குடியேற்றம் தங்கியுள்ளது என்று கூறினார். சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதி ஏற்கனவே இந்த விடயத்தில் உதவி வருவதாக தெரிவித்த அமைச்சர் ஏனையோரும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மக்களை நலன்புரி கிராமங்களில் வைத்திருப்பதில் அரசாங்கத்திற்கு எவ்வித நன்மையும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர், மீள் குடியமர்வுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துள்ளது என்றும் கூறினார். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் குடியமர்த்துவதற்கென ஏற்கனவே ஒரு தொகுதி மக்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...