31 மே, 2010

பொன்சேகாவுக்கு முறையான உரிமைகள் வழங்க வேண்டும் இலங்கை மந்திரியிடம் அமெரிக்கா வற்புறுத்தல்


இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபஹ்சா வுக்கு எதிராக ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அதிபர் ராஜபக்சேவை கொல்ல சதி திட்டம் தீட்டியதாகவும் பொன்சேகா மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இலங்கை வெளியுறவுத் துறை மந்திரி பெய்ரிஸ் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, பொன்சேகாவுக்கு முறையான உரிமைகள் வழங்க வேண்டும் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணைச் செயலாளர் ராபர்ட் பிளாக் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இலங்கை அரசு போர் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பொன்சேகாவுக்கு முறையான உரிமைகளை வழங்கியதாக தெரியவில்லை. இந்த வழக்கில் வெளிப்படையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதனால் இலங்கை அரசு இதை மிக முக்கியமானதாக கருதி செயல்பட வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக