10 ஜூன், 2011

இந்திய உயர்மட்ட குழு சற்றுமுன் இலங்கை வருகை

இலங்கை இந்திய புதிய புரிந்துணர்வு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இந்தியாவின் உயர் மட்டக் குழுவொன்று சற்றுமுன் இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் இணக்கப்பாடுகள் தொடர்பாக இக்குழு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய உயர்மட்டக் குழுவில் இந்திய பிரதமரின் செயலாளர் கே. நாயர், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் அடங்குகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கையை தாரைவார்க்க இரகசிய ஒப்பந்தம்: ரில்வின்

இந்த அரசு இரட்டைவேடம் பூண்டு ஆட்சி நடத்துவதுடன் இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கையை தாரைவார்க்க இரகசிய ஒப்பந்தம் செய்வதாக ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசப்பற்றுள்ளவர்கள் எனக் கூறிக்கொண்டே தேசப்பற்று அற்ற விதத்தில் இந்த அரசு செயற்படுகின்றது.

கண்டி அஞ்சல்கட்டிடத் தொகுதி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை அரசு வெளிநாடுகளில் ஒன்றையும் உள் நாட்டில் வேறொன்றையும் கூறுகிறது.

பான்கீமுன் அல்லது அவர்களது பிரதிநிதிகளை இலங்கைக்கு வர விசா வழங்கமாட்டோம் என்று கூறியபோதும் ஐ.நா. சபைக்கான இலங்கைப் பிரதிநிதி பான்கீமூனை அழைத்து பகற்போசன உணவு வழங்கி பேச்சுவார்த்ததையில் ஈடுபடுகின்றார்.

இலங்கையில் வடபகுதிக்கான புகையிரதப்பாதை உட்;பட தென்பகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து விட்டு கிழக்கு மாகாணத்தில் சம்பூர் பிரதேசத்தை அவர்களுக்கு தாரை வார்த்துள்ளது.

தம்மை தேசப்பற்றுள்ளவர்கள் எனக் கூறும் அரசு உண்மையான தேசப் பற்றாளர்கள் அல்லவென்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

839 புலி உறுப்பினர்கள் மாத்திரமே முகாம்களில் உள்ளனர்: அரசாங்கம்




யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான தற்காலத்தில் 839 புலி உறுப்பினர்கள் மூன்று முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நேற்று சபையில் அறிவித்த அரசாங்கம் இவர்களில் இருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தது.

இதேவேளை, மூன்று முகாம்களை மாத்திரமே குறிப்பிட்டு 839 புலி உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கம் கூறுமானால் திருகோணமலை, வெலிகந்தை ஆகிய முகாம்கள் தடுப்பு முகாம்கள் இல்லையா? 839 பேர் தான் எஞ்சியுள்ளனர் எனில் ஏனையோர் எங்கே? அரசாங்கம் இதனைப் பொறுப்புடன்தான் வெளிப்படுத்துகின்றதா என்று ஜே.வி.பி. கேள்வியெழுப்பியது.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார திசாநாயக்கவினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை குற்றப் பத்திரிகை தாக்கல், தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த முகாம்கள் என்றே கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன,

பூசா, வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய மூன்று தடுப்பு முகாம்களில் 839 விடுதலைப் புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

அனுரகுமார

இதன்போது இடைக்கேள்வியொன்றைத் தொடுத்த அனுரகுமார எம்.பி.,

கடந்த காலங்களில் அரசாங்கம் மேற்படி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் என்று கூறியது. பின்னர் 12,000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் பின்னர் 8000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியது. ஆனாலும் இன்று இந்த சபையில் 839 பேரே மூன்று தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றது.

அவ்வாறெனில் வெலிக்கந்தை திருகோணமலையில் அமைந்திருப்பவை தடுப்பு முகாம்கள் இல்லையா? எனக் கேட்கிறேன். இங்கு நான் தடுப்பு முகாம்கள் குறித்தே கேள்வியெழுப்பியிருக்கிறேன் என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில்,

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின்போது 2 இலட்சத்து 85 ஆயிரம் பேர் அரச தரப்பு பக்கத்திற்கு வந்தனர். இவர்களை நாம் முகாம்களில் வைத்தே பராமரித்தோம் என்றார்.

அனுரகுமார

இதனையடுத்து குறுக்கிட்ட அனுரகுமார எம்.பி. தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்கள் தொடர்பிலேயே இங்கு கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் கூறுவது போல் 839 பேரே மேற்படி முகாம்களில் உள்ளனர் என்றால் இதுவரை காலமும் கூறி வந்த ஏனைய எண்ணிக்கையிலானோர் எங்கே? அரசாங்கம் கூறுவதில் எது உண்மை எனக் கேட்டார்.

தினேஷ் குணவர்தன

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலேயே இங்கு நான் பதிலளித்துள்ளேன். இது முற்றிலும் உண்மையானதாகும்.

கடந்த காலங்களில் இந்நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள்தான் இன்று புலி உறுப்பினர்களுக்காக கேள்வி எழுப்புகின்றனர்.

புலிகளாக இனங்காணப்பட்டவர்களை தடுப்பு முகாம்களிலேயே வைத்திருப்பதற்கு எண்ணம் இல்லை. அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டு அவர்கள் தொழில் புரிகின்றனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றார். இதன்போது மேலுமொரு இடைக் கேள்வியைத் தொடுத்த அனுரகுமார எம்.பி.,

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு மொழிப் பிரச்சினை இருக்கின்றது. அவர்களுக்கு தமிழ் மொழியில் மாத்திரமே பரீச்சயம் இருக்கின்றது. இந்நிலையில் குறித்த புலி உறுப்பினர்கள் விசாரணைக்குட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளின்போது சிங்கள மொழியே பெரிதும் பாவனையில் உள்ளது. அண்மையில் பொரளை சிறையில் தமிழ் இளைஞர் ஒருவரை சந்தித்தேன்.

அவரது பிரச்சினை என்னவெனில், அவர் நீதிமன்ற விசாரணைகளுக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் சிங்கள மொழியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து அவருக்கு 50 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் அது குறித்து குறித்த அந்த தமிழ் இளைஞர் விளங்கிக் கொண்டிருக்கவில்லை. தான் விடுதலை செய்யப்பட்டதாகவே உணர்ந்த அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னரே தனக்கு 50 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. எனவே இவ்வாறான நிலைமைகளை மாற்றியமைப்பதை நோக்காகக் கொண்டு இவ்வாறானவர்களை விசாரணைக்குட்படுத்தும்போது நீதித்துறையில் தமிழ் மொழி மூலம் விசாரணைக்குட்படுத்துவதற்கான திட்டங்களை ஏற்படுத்த முடியுமா எனக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன,

நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தீர்ப்பளிக்கப்படுகின்றவர் சார்பில் தெளிவுபடுத்தல்களை கோர முடியும். அத்துடன் அவரது சட்டத்தரணிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பர். இது நீதித்துறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

எனவே அனுரகுமார எம்.பி. கூறுவதனை ஏற்க முடியாது என்றார்.

இதேவேளை, குறுக்கிட்ட அனுரகுமார எம்.பி. தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் தொடர்பில் அரசு கூறுவதில் நம்பிக்கையில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நாயை பிடித்து விழுங்கும் கடல் வாழ் உயிரினம்





நாயை பிடித்து விழுங்கும் கடல் வாழ் உயிரினம் இதை பார்த்தாவது பத்தான இடங்களில் உங்கள் குழந்தைகளை இறக்கி விட்டு புகை படம் எடுக்க முனையாதிர்
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலையில் பதிவு அவசியமற்றது: கெஹெலிய

வடக்கின் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுவது தொடர்பில் எனக்கு எந்தத் தவலும் கிடைக்கவில்லை. ஆனால் தற்போதைய நிலைமையில் அவ்வாறான பதிவு அவசியமற்றது என்றே நான் கருதுகின்றேன் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் மக்கள் பொலிஸ் பதிவை மேற்கொள்ளவேண்டும் என கிராம சேவகர்கள் ஊடாக அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது என்றும் ஏன் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் ஊடகவியலாளர்கள் வினவினர்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் வடக்கின் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுவது தொடர்பில் எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.

ஆனால் தற்போதைய நிலைமையில் இது அவசியமற்ற ஒன்று என்றே நான் கருதுகின்றேன். எனினும் இது தொடர்பில் நான் ஆராய்ந்துபார்த்துவிட்டு உங்களுக்கு கூறுகின்றேன். இந்த விடயம் குறித்த தகவல்களை நான் பெறவேண்டியுள்ளது. பெற்றதும் அறிவிக்கின்றேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவிற்கு கயிறு கொடுத்தது யார் : தினேஷ்

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் போட்டியிட்டிருக்கலாம் எனினும் சூழ்ச்சி செய்தனர். இதில் சரத் பொன்சேகாவிற்கு கயிறு கொடுத்தது யார் என்று அரசாங்கம் கேள்வி எழுப்பியது.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது யுத்தத்திற்கு பின்னர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் எண்ணிக்கை, தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்கள் உள்ளிட்ட விபரங்களை கேட்டிருந்தார்.

கேள்விக்கு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான தினேஷ் குணவர்தன பதிலளித்துக் கொண்டிருந்தார்.

இதனிடையே குறுக்கிட்ட ஐ.தே.க.எம்.பி யான ரவி கருணாநாயக்க, அப்படியாயின் சரத் பொன்சேகாவை எப்போது விடுவிப்பீர்கள் என வினவினார்.

அவர் தனது கடமைகளை செய்திருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் சூழ்ச்சியின் மூலம் அவருக்கு கயிறு கொடுத்தது யார் என அமைச்சர் தினேஷ் வினவினார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் தடையை நீக்கக் கோரும் வழக்கு ஐரோப்பிய நீதிமன்றத்தில் ஏற்பு




ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று புலிகள் சார்பாக விக்ரர் கொப்பே என்ற சட்டத்தரணி தாக்கல் செய்துள்ள வழக்கை ஐரோப்பிய நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக அந்த நீதிமன்றின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்குப் பிறகு விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை என்றும் எதுவித வன்முறையும் அற்ற விதத்தில் தமது உரிமைகளுக்காகப் போராட விரும்புகிறார்கள் என்றும் விக்ரர் கொப்பே வாதாடுகிறார்.

இதனை ஏற்று வழக்கை விசாரிக்க ஐரோப்பிய நீதிமன்றம் இணங்கியுள்ளது. இது ஒரு மைல் கல்லாக நோக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் ஆனது நீதிமன்று, பொது நீதிமன்று மற்றும் உரிமையியல் சேவை நீதிமன்று என்ற மூன்று நீதிமன்றங்களை உள்ளடக்கியது.

ஒவ்வொரு நீதிமன்றுக்கும் ஒரு நீதிபதியும் சட்டத்தரணியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு சமர்ப்பிக்கப்படும் வழக்குகள் எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் இரு நிலைகளில் விசாரிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நீதிமன்றமே ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் இடையிலான சட்ட முறுகல்களைத் தீர்த்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

எம்.பிக்களுக்கு தமிழ் மொழி பயிற்சி


பாராளுமன்ற உறுப்பினர்களின் மொழித்திறனை விருத்தி செய்வதற்காக தமிழ்மொழி பயிற்சி பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு பாராளுமன்றத்தில் இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படும். பயிற்சி நெறியானது பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெறும். தேசிய மொழி மற்றும் நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ஆலோசனையின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு மாதங்களுக்கு தமிழ்மொழி பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இப்பாடநெறியில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேருக்கு முதற்கட்டமாக பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இன்று நடைபெறும் பயிற்சி நெறியில் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, சிறைச்சாலைகள் சேவை அமைச்சர் சந்ரசிறி கஜதீர, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்ன, சிறு ஏற்றுமதி பயிர் அபிவிருத்தி அமைச்சர் ரெஜினோல்ட் குரே, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த ஆகியோரும், ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க, மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன ஆகியோர் கலந்து கொள்வர்.

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார் உட்பட மேலும் பலர் தமிழ் மொழி பயிற்சி கற்கை நெறியில் கலந்து கொள்வார்கள் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்கள் இலங்கை - இந்திய உறவை பாதிக்காது


இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு என்ற வகையில் சகல இராஜதந்திர தொடர்பாடல்களையும் இந்திய மத்திய அரசுடனேயே மேற்கொள்ளுகின்றதே தவிர மாநில அரசுடன் அல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், இலங்கையும், இந்தியாவும் இறைமையும், தன்னாதிக்கமும் கொண்ட இரண்டு நாடுகள். அதனால் எமது சகல இராஜதந்திர தொடர்பாடல்களையும் இந்திய மத்திய அரசுடனேயே நாம் மேற்கொள்ளுகின்றோம். மாநில அரசுகளுடன் அல்ல.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலம் நட்புறவும், நெருக்கமான தொடர்பாடலும் உள்ளது. இரு நாடுகளும் சமய, கலாசார ரீதியாகவும் மிக நெருக்கமான உறவை கொண்டிருக்கின்றது. இருநாடுகளும் மிகவும் நெருக்கமான நட்புறவு பேணும் நாடுகள். என்றாலும் இருநாடுகளுக்குமிடையிலான அரசி யல் வேலைத் திட்டங்கள் வேறு வேறானவை. அதனால் அபிப்பிராய பேதங்கள் ஏற்படலாம். அப்பேதங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் நட்புறவு ரீதியில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள் ளுகின்றோம். எல்லா பேதங்கள் தொடர்பாகவும் இரு நாடுக ளுக்கிடையிலான நட்புறவு மற்றும் அந்நியோன்யம் என்பவற்றை உயர்வாக மதித்தே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றோம். எந்தவொரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் இப் பேதங்களுக்குத் தீர்வுகளைக் காணு கின்றோம்.

இந்தியாவின் மாநிலமொன்றில் ஏற்படுகின்ற பிரச்சினைகள், அங்கு எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் அவர்களுடைய உள் விவகாரம். அவை இறைமையும், தன்னாதிக்கமும் உள்ள எந்த ஒரு நாட்டையும் பாதிக்காது. அது போல் தான் தமிழ்நாடு மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானமும் இலங்கை- இந்திய சிநேகபூர்வ நட்புறவைப் பாதிக்காது என்றார். இச்செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், அரசியல் தீர்வு தொடர்பாக 1987ம் ஆண்டு முதல் அதாவது அரசியலமைப் புக்கான 13வது திருத்தம் அறிமுகப்படுத்த ப்பட்டது முதல் பேச்சு இடம் பெறுகின்றது. எம்மால் 13வது திருத்தத்திற்கு மேலாக செல்லவும் முடியும். அச்சமயம் அரசியல் யாப்பில் திருத்தம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.

தற்போது பொலிஸ் அதிகாரம் குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம். மக்களின் நலன்களைக் கருத்தில் முன்வைத்தபடிதான் இக்கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. இந்த அடிப்படையில் சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

குறிப்பிட்ட காலத்துக்குள் அவசரகால சட்டத்தை நீக்குவதில் ஜனாதிபதி உறுதி’


அவசர காலச் சட்டத்தைக் குறிக்கப்பட்ட காலத்திற்குள் முழுமையாக நீக்கிவிட வேண்டும் என்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எதிர்பார்ப்பு என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.

அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், அவசர காலச் சட்டத்தை முழுமையாக நீக்கி விட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஏற்கனவே சில ஷரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. முழுமையாக நீக்கிவிடுவதில் சிறு தாமதங்கள் நிலவுகின்றன.

இதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விவகாரமும் ஒன்றாகும். இவர்கள் தொடர்பான கோவைகளைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளைச் சட்ட மா அதிபர் திணைக்களம் துரிதப்படுத்தியுள்ளது.

இந்தடிப்படையில், 1500 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இச் சமயம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர், கட்டுநாயக்க வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்தி முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர் மகாநாம திலகரட்ன நேற்று முன்தினம் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர் இச் சம்பவம் தொடர்பாக முக்கியமான நிலைப்பாட்டை எடுத்தார். இச் சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக குறித்த ஓய்வூதியத் திட்ட யோசனை வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்நாட்டு மக்களுக்கு பொய் கூறி குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றி கரமான அரசியல் பயணத்தில் பொறாமை கொண் டிருக்கும் எதிர்க்கட் சியைச் சேர்ந்த ஓரி ருவர் தமிழ் நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் பொய்களைக் கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக சுற்றாடல்துறை பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர் நேற்றுத் தெரிவித்தார்.

இந்நாட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்து ஓரிருவர் அற்ப அரசியல் இலாபம் பெறும் நோக்கில் மேற்கொள்ளும் முயற்சிகளை தமிழ் நாட்டு முத லமைச்சரோ, தமிழ் நாட்டு மக்களோ ஒரு போதும் நம்ப மாட்டார்கள் என் றும் அவர் குறிப் பிட்டார்.

வெகுவிரையில் இந்தியாவின் தமிழ் நாட்டுக்குச் செல்லவிருக்கும் தாம் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறித்தும், இலங்கை அரசியல் நிலைமை தொடர்பான உண்மைகளையும் அவருக்கு எடுத்துக் கூறவிருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; தமிழ்நாட்டு முதலமைச்சரான செல்வி ஜெயலலிதா எனது நல்ல அபிமானியாவார். முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆரின் காலம் முதல் அவரது அபிமானியாக நான் இருக்கின்றேன். தமிழ் நாட்டிலுள்ள எனது நண்பர்கள், வியாபார தோழர்கள், டொக்டர்கள் போன்றோருடன் அளவளாவும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முதலமைச்சர் ஜெயலலிதாவை மெச்சி பேசக் கூடியவனாக இருந்து வருகின்றேன். அவர் ஏழை எளிய மக்களின் உணர்வுகளை நன்குணர்ந்தவர்.

அதன் விளைவாகவே அவர் ஏழை எளியவர்களுக்கு பெரிதும் உதவக் கூடியவராகவும், அவர்களின் நலன்களில் அதிக அக்கறை செலுத்தக் கூடியவராகவும் திகழுகின்றார். அவரது வெற்றிக்காக நான் நல்வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம் இலங்கைப் பாராளுமன்றத்தில் தொடராக 23 வருடங்கள் உறுப்பினராக இருக்கின்றேன். இப்போது அரசில் சுற்றாடல் பிரதியமைச்சராகக் கடமையாற்றுகின்றேன்.

பயங்கரவாதம் காரணமாக கடந்த முப்பது வருடங்கள் நாமும் இந்த நாட்டு மக்களும் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்தோம். எங்கும் அச்சமும், பீதியும், அழிவுகளுமே தலை விரித்தாடியது. இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து இங்குவாழ்கின்ற சகல மக்களும் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தான் ஏற்படுத்தித் தந்திருக்கின்றார். இதன் பயனாக வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டு மக்களும் தமது அன்றாட பணிகளில் சுயமாகவும் நிம்மதியாகவும் ஈடுபடுகின்றார்கள்.

நான் இலங்கையில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றான முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன். இங்கு தமிழருக்கோ, முஸ்லிம்களுக்கோ எந்தப் பிரச்சினையுமே இல்லை. இங்கு வாழும் எல்லா சமூகத்தினரும் நட்புறவுடனும் புரிந்துணர்வுடனும்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நாட்டின் பெரும்பான்மையினர் நல்ல மக்கள். எனது தேர்தல் வெற்றிக்குக் கூட அதிக பங்களிப்பு நல்குகின்றனர். எமது ஜனாதிபதி இன, மத, பேதம் பாராதவர். அவர் எல்லா மக்களையும் சமமாக நோக்குபவர். அன்பாகப் பழகுபவர். இதனை சகலரும் அறிவர்.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்ததற்காக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மாத்திரமல்லாமல் முழு நாட்டு மக்களும் ஜனாதிபதியைப் பாராட்டுகின்றார்கள். அவருக்கு நன்றி தெரிவிக்கின்றார்கள்.

இப்படியான நிலையில் இலங்கையின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஓரிருவர் தமிழ் நாட்டுக்குச் சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தமிழ் மக்களுக்கும் பொய்யான தகவல்களைக் கூறி அற்ப அரசியல் லாபம் தேட முயற்சி செய்கின்றனர். இவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும் இவ்வாறு செயல்படுகின்றனர். ஜனாதிபதியின் அரசியல் வெற்றிப் பயணத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத இவர்களின் காழ்ப்புணர்வுகளின் வெளிப்பாடே இவை.

இவர்களது பொய்களை தமிழ்நாட்டு முதலமைச்சரோ, அங்கு வாழும் மக்களோ ஒரு போதும் நம்ப மாட்டார்கள். இதனை நானறிவேன். நான் நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் நாட்டுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகின்றேன்.

அந்த மக்கள் நல்ல பண்பாளர்கள். இந்தியாவின் மக்கள் பிரதிநிதிகள் இங்கு வந்தால் அவர்களை வடக்கு கிழக்குக்கு அழைத்துச் செல்லவும் தயாராக உள்ளேன்.

எமது ஜனாதிபதிக்கும், தமிழ் நாட்டு முதலமைச்சருக்கும் இடையில் அபிப்பிராய பேதங்களை ஏற்படுத்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஓரிருவர் முயற்சி செய்கின்றனர். இம்முயற்சி ஒரு போதும் பலிக்காது. அம்முயற்சியைத் தோல்வியுறச் செய்ய உண்மைகளைக் கூறி சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம். இதற்கு ஒரு போதும் பின்நிற்க மாட்டோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தடுப்புக்காவலில் 839 புலிகள்: விசாரணைகள் ஆரம்பம்



யுத்தத்தின் பின்னர் கைதான 839 புலி உறுப்பினர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு இவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளதாக ஆளுந் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வாய்மூல விடைக்காக அநுர குமார திசாநாயக்க எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் உறுப்பினர்களில் 2 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 839 புலி உறுப்பினர்களும் பூசா, கொழும்பு செயலக கட்டிட 6 ஆம் மாடி, வவுனியா பொலிஸ் தலைமையக கட்டிடம் என்பவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் புலிகள் அல்லாத சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படவில்லை.

ஆயுதம் ஏந்திய மேற்படி புலி உறுப்பினர்களின் தொகை குறை வடைந்துள்ளது. பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் மற்றும் தொழில்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். வட பகுதியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இவர்களின் வழக்கு விசாரணைகள் தமிழ்மொழி மூலம் விசாரிக்கப்படும். நீதி மன்றங்களுக்கு மாற்றுவீர்களா என எழுப்பப்பட்ட குறுக்கீட்டுக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், வழக்கு தீர்ப்புகள் தமிழில் விளக்கப்படுவதாகவும் தமிழ் மொழியில் பேசவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...