15 ஜூலை, 2010

பிரான்சில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது







பிரான்சில் `பர்தா' அணிவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா, அந்த நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேறியது. மொத்தம் 335 வாக்குகள் பெற்று இந்து சட்டம் நிறைவேறியது. அதிபர் சர்கோசி தலைமையிலான ஆளும் கூட்டணி மற்றும் சிறிய கட்சியான இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் சட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். பிரதான எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி வெளிநடப்பு செய்தது.

அதை தொடர்ந்து, வரும் செப்டம்பரில் பிரான்சு மேல்சபையில் (செனட்) சட்ட மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அங்கும் நிறைவேற்றப்பட்டதும், `பர்தா' அணிவதற்கான தடைச் சட்டம் அமலுக்கு வரும். அதன் பிறகு, `பர்தா' அணிந்தால் 150 ïரோ அபராதம் விதிக்கப்படும். மேலும், விழிப்புணர்வு கல்வி வகுப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இந்த சட்டத்துக்கு, பிரான்சு முஸ்லிம் அமைப்பின் தலைவர் முகமது முசொவுயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் 60 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் இன்று காலையில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மாலை மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மதுபோதையில் சென்று மாநகரசபை ஊழியர் ஒருவரை ( மேற்பார்வையாளர்) முறைகேடான வார்த்தைகளால் பேசி தாக்கச் சென்றதாகவும் மாநகர சபை வாசலில் குந்தி இருடா என மிரட்டி வாசலில் இருக்க வைத்து அவமானப்படுத்தியுமுள்ளார் எனவும் அதற்கெதிராக அவர்கள் இந்த பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்துகோரும் தமிழர்கள் உண்மையான அகதிகளென நிபுணர் தெரிவிப்பு


அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்துகோரும் தமிழ்மக்கள் உண்மையான அகதிகளே என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழர்கள் என்பதால் அவர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என நோக்கப்படுவதாக பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் கிலைவ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டுமுதல் அவுஸ்திரேலியா வந்த இலங்கைத் தமிழர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு அண்மையில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கிலைவ் வில்லியம் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்த மக்களை புலிகள் எனக் கூறிவிட முடியாது. இரத்தக்கறையுடன் வரும் தமிழர்களை அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்க முடியாது.

எனினும் அவுஸ்திரேலியாவிற்குள் வரும் 99 சதவீதமான தமிழர்கள் இரத்தக்கறை படிந்தவர்கள் அல்லர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பட்டதாரிகளை உதவிப் பொலீஸ் அத்தியட்சகர்களாக இணைத்துக் கொள்ளத் தீர்மானம்





சுமார் 25 பட்டதாரிகளை உதவிப் பொலீஸ் அத்தியட்சகர்களாக இணைத்துக் கொள்வதற்கு பொலீஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலீஸ் திணைக்கள தகவல்கள் கூறுகின்றன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 23ம் திகதி வெளியிடப்படவுள்ளது. பட்;டதாரிகள் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர்களாக சேர்த்துக் கொள்ளப்படும் முதலாவது முறை இதுவாகும்
மேலும் இங்கே தொடர்க...

நெடுங்கேணி பிரதேச செயலகம், வவுனியா சமுர்த்தி மகாசங்க கட்டிடம் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் திறந்துவைப்பு



பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நெடுங்கேணி பிரதேச செயலகம் மற்றும் வவுனியா சமூர்த்தி மகாசங்க கட்டிடம் ஆகியன நேற்றுமாலை திறந்துவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நெடுங்கேணியில் மீள்குடியேறிய மக்களுக்கான அனைத்து வசதிகளும் குறித்த பிரதேச செயலகத்தினூடாகவே முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன் வவுனியா பிரதேச மக்களுக்கான சமூர்த்தி வேலைத்திட்ட அபிவிருத்தியினை முன்னிட்டு மகாசங்கம் திறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் நீதியமைச்சர் அத்தாவுட செனவிரத்ன, பிரதியமைச்சர் பி.குரே, அமைச்சின் செயலர் கம்லத் உள்ளிட பலரும் பங்கேற்றிருந்தனர்
மேலும் இங்கே தொடர்க...

உடுவில் கிழக்கு ஸ்ரீ கற்பகபில்ளையார்



உடுவில் கிழக்கு
ஸ்ரீ கற்பகபில்ளையார் அடியார்களே எம்பெருமான் வினாஜகனின் வருடாந்த திருவிழா இன்று . 15 .7.2010 . கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளதென்பதை மிகவும் மகிழ்ச்சி யுடன் அறியத்தருகிறோம்




மேலும் இங்கே தொடர்க...

மனிதனைப் போன்று ஆடைகளுக்கும் உணரும் சக்தி உள்ளது






மனிதன், விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்ற உயிரினங்களுக்கு உணரும் சக்தி உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது மனிதர்கள் உடுத்தும் ஆடைகளுக்கும் உணரும் சக்தி உள்ளது என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் யோல் பிங்க் தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆடைகள் தயாரிக்கப்பயன்படும் இழைகளில் மிகவும் நுண்ணிய அளவிலான மைக்ரோ போன்கள் உள்ளன. அவை மனித உடலில் நடைபெறும் செயல்பாடுகள், ரத்த ஓட்டம் மற்றும் மூளையின் அழுத்தத்தை அறிந்து கொள்கின்றன.

அதே நேரத்தில் ஒரு மைக்ரோ மீட்டர் அகலத்துக்கும் குறைவான நூலிழையை மனித உடலின் உறுப்புகள் அல்லது இதயரத்த நாளம் போன்றவற்றில் பொருத்தி கண்காணித்தால் அல்ட்ரா சவுண்டு போன்ற ஒலியை எழுப்புகின்றன. இந்த தகவல்கள் ஆய்வில் தெரியவந்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

. நீண்ட கால புதிருக்கு விடை: கோழியில் இருந்துதான் முட்டை வந்தது விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு




முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்பது இதுவரை யாரும் பதில் அளிக்க முடியாத கேள்வியாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதற்கு விடை கண்டு பிடித்து உள்ளனர். அதாவது கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று அவர் உறுதி செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள்.

முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்தனர். அதில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது. இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும் அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது.

வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறி : கார்கள் எரிப்பு



மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் மீண்டும் இனவெறித் தாக்குதல் நடந்துள்ளது. இந்திய மாணவர்களின் கார்கள் எரிக்கப்பட்டுள்ளன.ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அடிலாய்டில் வசிக்கும் இந்திய மாணவர்கள் சிலர், "எங்களை ஆஸ்திரேலிய இளைஞர்கள் கும்பல் ஒன்று மிரட்டியது. எங்களின் கார்களை நெருப்புக் குண்டுகளை வீசி எரித்தது. இதனால், எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது' என, புகார் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் அவர்களின் கார்கள் எரிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இதுபோன்று 12 கார்கள் எரிக்கப்பட்டுள்ளன.இச்சம்பவம் தொடர்பாக யாசிப் முல்தானி (வயது 28) என்ற இந்திய மாணவர் கூறுகையில், ""எங்கள் பகுதியில் வசிக்கும் 15 இளைஞர்கள் தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர். நாங்கள் எப்போது வீட்டில் இருப்போம். எப்போது வேலைக்கு செல்வோம் என்பதை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர். எங்களை அவர்கள் கண்காணிக்கின்றனர். நாங்கள் செய்வதை எல்லாம் அவர்கள் அறிந்துள்ளனர். எங்களின் கார்கள் எது என்பதும் அவர்களுக்கு தெரியும். உள்ளூர்வாசிகள் யாரின் காரையும் அவர்கள் சேதப்படுத்துவதில்லை. வெளிநாட்டவர்களின் கார்களை மட்டுமே எரிக்கின்றனர்,'' என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியில் இலங்கை அமைச்சரவைக் கூட்டம்: பேரணியில் தமிழில் பேசினார் ராஜபட்ச






தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கிளிநொச்சியில் இலங்கை அமைச்சரவையின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியில் இலங்கை அமைச்சரவையின் கூட்டத்தை நடத்த இலங்கை அரசு முடிவு செய்தது. அதன்படி கிளிநொச்சியிலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில் அமைச்சரவைக் கூட்டம் அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் மட்டுமல்லாது பல்வேறு மாகாணங்களின் முதல்வர்களும் பங்கேற்றனர்.

÷யாழ்ப்பாணம் பகுதியில் மட்டும் பெட்ரோல், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து ஊடக அமைச்சர் கெஹலியா ராம்புக்வெல்லா கூறியதாவது: இதேபோன்று அமைச்சரவைக் கூட்டங்கள் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் இனி நடத்தப்படும்.÷வடக்கு மாகாணத்தில் முதல்முறையாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிபர் ராஜபட்ச அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்றார் அவர்.

தமிழில் பேசினார் ராஜபட்ச: பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற பின்னர் இரணமடு பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டம், பேரணியில் ராஜபட்ச கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் சிறிது நேரம் அவர் தமிழிலும் பேசினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை உற்பத்திகளை பங்களாதேஷ் விரும்புகிறது: அமைச்சர் றிஷாத்

ஏனைய நாடுகளை விட, பங்களாதேஷ் இலங்கையின் உற்பத்திகளை அதிகமாக விரும்பி கொள்வனவு செய்கின்றது என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஏற்றுமதி தரம் கடந்த வருடங்களைப் பார்க்கிலும், 2009 ஆண்டு முதல் 13 சதவீதமான வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வந்துள்ள பங்களாதேஷின் வர்த்தக சபை உறுப்பினர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர், மற்றும் டாக்கா வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலின் போது சமூகமளித்திருந்தனர்.

எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெறும் மெகா கைத்தொழில், வர்த்தகக் கண்காட்சியில் இலங்கையின் உற்பத்திகளையும் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்
மேலும் இங்கே தொடர்க...

அரச சேவையாளர்களுக்கு 2ஆம் மொழி கட்டாயம்:அரசு தீர்மானம்

அரச சேவையில் இணைந்துள்ளவர்களுக்கு இரண்டாவது மொழியைக் கட்டாயமாக்க அரசு தீர்மானித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அரச சேவையில் இணைந்தவர்களுக்கு இரண்டாவது மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கென அரச ஊழியர்களுக்கு இரண்டாம் தர மொழியைக் கற்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மொழித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாகத் தமிழ் மொழியைக் கற்பிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான கருத்தரங்கு எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாகவும் இதில் சகல மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 45 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும் மொழித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ரணிலை விரட்டும் எண்ணமில்லை : சஜித் பிரேமதாச

இன்றும் எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கதான். அதனை நாம் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். ரணிலை விரட்ட வேண்டுமென்ற அடிப்படையில் ஒருபோதும் நாம் செயற்படவில்லை என அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைப் பதவியைத் தட்டிப்பறிக்கும் எண்ணம் தன்னிடம் துளியளவும் கிடையாதெனவும் ரணிலின் தலைமைத்துவத்தை நூறு வீதம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை கட்சிக்குள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 6 பேர் கொண்ட மறுசீரமைப்புக் குழுவின் சிபாரிசு அறிக்கை கட்சித் தலைமைத்துவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறுபட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

அந்த சிபாரிசு அறிக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்படவிருக்கின்றது. மேற்கொண்டு திருத்தங்கள் குறித்தும் செயற்குழு கவனத்தில் எடுக்கவுள்ளது.

ஊடகங்களின் தப்பபிப்பிராயம்

தனிப்பட்ட ரீதியில் தலைவரை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணமெதுவும் எம்மிடம் கிடையாது. அண்மைக் காலமாக ஊடகங்களில் தப்பபிப்பிராயங்களே வெளியாகி வந்தன.

தலைவர் பதவிக்கு மாத்திரம் இரகசிய வாக்கெடுப்பு நடத்தும் எண்ணம் கிடையாது. பிரதான பதவிகள் ஐந்துக்கும் ஜனநாயக அடிப்படையில் தெரிவுகள் இடம்பெற வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் நிலைப்பாடாகும்.

இன்றும் எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கதான். அதனை நாம் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். ரணிலை விரட்ட வேண்டுமென்ற அடிப்படையில் ஒருபோதும் நாம் செயற்படவில்லை. அவரின் தலைமைத்துவத்தை நான் நூறுவீதம் ஏற்றுக்கொண்டிருக்கின்றேன்.

கட்சிக்கோ, தலைமைத்துவத்திற்கோ நான் ஒருபோதும் துரோகமிழைக்க முற்படவில்லை. எப்போதும் நான் கூட்டுப்பொறுப்புடனேயே செயற்பட்டு வருகின்றேன்.

எனது கருத்துகள் சில ஊடகங்களில் திரிபுபடுத்தியும் தவறான முறையிலும் வெளியிடப்பட்டதன் காரணமாக மக்கள் மத்தியில் தப்பெண்ணங்கள் உருவாகக் காரணமானது. தலைமைத்துவத்துக்கு எதிராக நாம் எந்தவிதமான சதிகளிலும் ஈடுபடவில்லை" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்து சமுத்திரத்தில் நீர் மட்டம் உயர்வு: இலங்கைக்கு பாதிப்பு

இந்து சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் இலங்கை உட்பட்ட இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தாழ்நில கரையோர பிரதேசங்கள் பாதிக்கப்படும் எனவும் இதனால் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


கொலராடோ பல்கலைக்கழகத்தின் வெய்குயிங் ஹன் என்பவர் தலைமையிலான ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக உலகின் வெப்பநிலையில் மாற்றங்கள் நிகழும் எனவும் அத்துடன், சூழல் சுற்றோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் மட்டம் பொதுவாக வருடந்தோறும் 3 மில்லிமீற்றர் அதாவது 0.1181 அங்குலத்தினால் உயர்கிறது.வாகன புகை வெளியீடு உட்பட்ட சுற்றாடலுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புகள் மற்றும் பச்சைவீட்டு தாக்கம் போன்றவை காரணமாகவே பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்கமே கிரீன்லாந்து மற்றும் மேற்கு அந்தாட்டிகா பனிமலைகள் கரைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

மகள் மீது பாலியல் வல்லுறவு; ஆனமடுவவில் தந்தைக்கு 10 வருட கடூழியச் சிறை






தனது 14 வயதான மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் ஒருவருக்கு 10 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புத்தளம் மேல்நீதிமன்ற நீதவான் எஸ்.டி. அப்ரா தாஸிம் இந்த தீர்ப்பை நேற்று முன்தினம் வழங்கினார்.

2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி மேற்படி தந்தை தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டி ருந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் சந்தேக நபரான ஆனமடுவ திறல்வெவ வட்டகெதர வாசியான சோமதாஸ என்பவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்ட னையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்தத் தவறின் மேலதிகமாக மூன்று மாதம் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25,000 ரூபாவை நஷ்டஈடாக வழங்கவும், நஷ்ட ஈட்டை செலுத்தத்தவறின் மேலதி கமாக ஆறுமாதகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் புத்தளம் மேல் நீதிமன்ற நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

4 குழந்தைகளின் தந்தையான இவர் தனது மனைவி வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுச் சென்றுள்ள சமயம் பாட்டியின் பாதுகாப்பிலிருந்த தனது மூத்த மகளையே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியில் நேற்று அமைச்சரவை கூட்டம் யாழ். குடாவில் நேற்று நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை குறைப்பு பெட்ரோல் 115.60,டீசல் 73.60,மண்ணெண்ணெய் 51.60






இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக கிளிநொச்சி நகரில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை ஆரம்பித்து வைத்தார்.

யாழ். குடாநாட்டுக்குரிய எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுக் கூடிய முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

இதன்படி இதுவரை காலமும் யாழ். குடாநாட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல் லீட்டர் ஒன்று 118 ரூபாவிலிருந்து 115 ரூபா 60 சதமாகவும், டீசல் 75 ரூபா 50 சதத்திலி ருந்து 73 ரூபா 60 சதமாகவும் மண்ணெண் ணெய் 53 ரூபா 50 சதத்தி லிருந்து 51 ரூபா 60 சதமாகவும் குறைக்கப்பட்டு ள்ளது.

பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று அமைச்சரவைக்கு சமர்ப்பித்த ஆலோசனை க்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஏ-9 பாதை மூடப்பட்டிருந்த காலத்திலும் ஏ-9 பாதை திறக்கப்பட்ட பின்னரும் யாழ். குடாவுக்கான எரிபொருள் விநியோகம் நடைபெற்ற போதும் போக்குவரத்து செலவீனமும் சேர்ந்தே எரிபொருள் விற்பனைக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டன.

பெளஸர்கள் மூலம் எரிபொருள் விநியோகம் செய்வது தற்போது வவுனியா வரை மட்டுப்படுத்தப்பட்டு ள்ளதுடன் சரக்கு ரயில் மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து செலவுகள் வெகுவாக குறைக்கப்படுவதால் இதன் பயனை யாழ். குடாநாட்டு மக்களுக்கே பெற்றுக்கொடுக்கும் நோக்குடனேயே எரிபொருள் விலை குறைக்கப்படு வதாக அமைச்சர் தெரிவித்தார்.

அண்மையில் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்த பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அங்குள்ள மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க எரிபொருளின் விலையை ஒரு ரூபாவினால் குறைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மாகாணங்களின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மாகாண மட்டத்தில் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கமைய நடத்தப்பட்ட இக்கூட்டத்தின் இறுதியில் மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள் பாதுகாப்பு துறை தொடர்பான மீளாய்வு கூட்டங்களும் நடைபெற்றன.

இக்கூட்டத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து வடமாகாண அரச அதிகாரிகள் பங்கு பற்றும் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையதிகாரிகளுக்கான கூட்டமும் நடைபெற்றுது.

பிரதமர் தி.மு.ஜயரட்ன உட்பட அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் ஹெலிக்கொப்டரில் கிளிநொச்சிக்கு அழைத்துவரப்பட்டதுடன் அங்கிருந்து சொகுசு பஸ் வண்டிகள் மூலம் இரணைமடுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனால் கிளிநொச்சி நகர் களை கட்டியிருந்ததுடன் இரணைமடு குளத்தை அண்டிய பகுதியில் வாகனங்கள் நிறைந்து காணப்பட்டன. சுகாதாரத்துறை அம்புலன்ஸ் வண்டிகள், தீயணைப்பு வண்டிகளும் ஆயத்த நிலையில் இருந்தன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வை ஒலி/ஒளிப்பதிவு செய்வதற்கும் செய்தி சேகரிப்பதற்குமாக அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தனர்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வை ஒளிப்பதிவு செய்வதற்கு முதற்தடவையாக இலத்திரனியல் ஊடகங்களுக்கு அனுமதியளிக் கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வடமாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் கிளிநொச்சி மைதானத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்கூட்டத்தில் தமிழில் உரையாற்றினார்
மேலும் இங்கே தொடர்க...

ஜெனீவா ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு எதிரில் இலங்கையர்கள் போராட்டம்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு எதிரில் இலங்கையர்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவினை கலைக்குறுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக கூறப்படும் தொடர்பில் ஆலோசனை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர்கள் குழுவினை கலைக்குமாறு இலங்கையர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு எதிரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நியூயோர்க், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானியச் சிறுமி மீது பாலியல்

இலங்கைக்கு சுற்றுலாவுக்காக தாய் தந்தையருடன் வந்த 14 வயது பிரித்தானியச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கபட்டுள்ள சம்பவம் காலி தலபே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இக் குடும்பத்தினர் காலியில் உள்ள தலபே பிரதேசத்தில் ஒரு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவேளை இச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சிறுமி தனியாக தங்கியிருந்த வேளை ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் இச் சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார் என அச் சிறுமி தெரிவித்துளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொழும்பில் உள்ள சுற்றுலா பயணிகள் பிரிவுப் பொலிஸாருக்கு இச்சம்பவம் தொடர்பாக முறையிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...