
பிரான்சில் `பர்தா' அணிவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா, அந்த நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேறியது. மொத்தம் 335 வாக்குகள் பெற்று இந்து சட்டம் நிறைவேறியது. அதிபர் சர்கோசி தலைமையிலான ஆளும் கூட்டணி மற்றும் சிறிய கட்சியான இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் சட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். பிரதான எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி வெளிநடப்பு செய்தது.
அதை தொடர்ந்து, வரும் செப்டம்பரில் பிரான்சு மேல்சபையில் (செனட்) சட்ட மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அங்கும் நிறைவேற்றப்பட்டதும், `பர்தா' அணிவதற்கான தடைச் சட்டம் அமலுக்கு வரும். அதன் பிறகு, `பர்தா' அணிந்தால் 150 ïரோ அபராதம் விதிக்கப்படும். மேலும், விழிப்புணர்வு கல்வி வகுப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்த சட்டத்துக்கு, பிரான்சு முஸ்லிம் அமைப்பின் தலைவர் முகமது முசொவுயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் 60 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகரசபை ஊழியர்கள் இன்று காலையில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.




ல் இணைந்துள்ளவர்களுக்கு இரண்டாவது மொழியைக் கட்டாயமாக்க அரசு தீர்மானித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அரச சேவையில் இணைந்தவர்களுக்கு இரண்டாவது மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
த்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் இலங்கை உட்பட்ட இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தாழ்நில கரையோர பிரதேசங்கள் பாதிக்கப்படும் எனவும் இதனால் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ன் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு எதிரில் இலங்கையர்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.