18 ஜனவரி, 2010




மலையக மலர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும் : கொட்டகலையில் ஜனாதிபதி


"வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயத்தினை போல்இ மலையகத்தை அபிவிருத்தி செய்ய மலையக மலர்ச்சி எனும் வேலைத் திட்டத்தினை உருவாக்குவேன்" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம் நேற்று கொட்டகலை பொது விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதி அமைச்சர்களான முத்துசிவலிங்கம்இ ஜெகதீஸ்வரன்இ மாகாண அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன்இ மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன்இ மாகாணசபை அமைச்சர்கள்இ பிரதேச சபைஇ நகரசபை தலைவர்இ உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து உரையாற்றுகையில்இ

"நான் உங்களிடம் வந்து உரையாற்றக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். இன்று எனக்குத் தெரியும்இ நீங்கள் பாரிய பொருளாதார சுமைக்கு முகம்கொடுத்து வருகிறீர்கள். மே 19 திகதிக்கு முன் இந்த நாட்டில் வேறு பிரச்சினைகள் இருந்தன.

மலையக இளைஞர்கள் வேலைக்குச் செல்லமுடியாது; நிம்மதியாக இருக்க முடியாத நிலை இருந்தது. அதை இன்று நான் இல்லாது செய்துள்ளேன். அதேபோன்றுஇ உங்கள் வாழ்க்கையையும் சுபீட்சமாக்குவேன்.

மலையக மக்கள் இந்நாட்டின் உயிர்நாடிகளாவர். அதனை எவரும் மறுக்கமுடியாது. அதுதான் யதார்த்தம். எனவேஇஅவர்களின் வாழ்க்கை வளம் பெறுவதற்காக இன்னும் 3இ000 அரச நியமனங்களை வழங்க உள்ளேன்.

இன்று மலையக இளைஞர்கள் பொலிஸில் சேரலாம்; இராணுவத்தில் சேரலாம். எவருக்கும் ஒரே நியாயம் தான். உங்கள் பிள்ளைகள் தேயிலை கொழுந்து பறிப்பவர்களாக இருக்கக்கூடாது. கணினிக் கல்வியைக் கற்று சர்வதேச ரீதியில் தொழில் வாய்ப்புக்களை பெற வேண்டும்.

தோட்டத்தொழிலாளர்கள் லயத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பதிலாக அவர்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டிகொடுத்து லயத்து முறையினை இல்லாது செய்வேன்.

அத்தோடு அவர்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது ஏனைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வேன்.

வேலையில்லாத இளைஞர்களுக்குத் தரிசுக் காணிகளை வழங்கி புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவேன். நான் ஒரு போதும் பொய் சொன்னது கிடையாது. சொல்வதை செய்வேன்; செய்வதை சொல்வேன். நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். இந்த நாட்டில் கிராம மக்களுக்கு தங்கத்தை கொடுத்து இரும்பையும் தகரத்தையும் உங்களுக்கு ஒருபோதும் கொடுக்க மாட்டேன்.

இன்று இலங்கையில் சிறுபான்மை என்று ஒரு சமூகம் இல்லை. எல்லோரும் இலங்கை திருநாட்டின் பிள்ளைகள். ஆகவேஇ நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்.

எந்த நேரத்தில் உங்களது சம்பளம் உயர்த்த வேண்டுமோ அந்த நேரத்தில் நான் உங்கள் சம்பளத்தை உயர்த்துவேன். நான் தொழில் அமைச்சராக இருந்த போது உங்கள் உரிமைகள் தொடர்பாக உங்கள் தலைவர்களுடன் பல தடவைகள் பேசியுள்ளேன்.

எனவேஇ என்னை நம்புங்கள் நான் உங்கள் தோழன். நான் உங்களைக் காப்பேன். எனவேஇ வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்துஇ என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்" என்றார்.


நாட்டைத் துண்டாடுவதற்கு ஒருபோதும் இடமளியேன் : ஜெனரல் பொன்சேகா



No Image
அரசாங்கம் கூறுவதைப்போல் எந்தவொரு அரசியல் கட்சியுடனோ அல்லது கட்சித் தலைவர்களுடனோ இரகசிய உடன்படிக்கைகள் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை.

எனது நாட்டை துண்டாடுவதற்கோ அல்லது அதன் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதற்கோ எந்தச் சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டேன் என்று எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

"என்மீது வைத்துள்ள நம்பிக்கையின் பிரகாரமே பலதரப்பட்ட அரசியல் சக்திகள் எனக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில்இ என்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஆளும் தரப்பினால் முன்வைக்கப்படுகின்றன.

இருப்பினும் எனது சேவைக் காலத்தில் ஒரு சதத்தையேனும் மோசடி செய்யவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: "40 வருடகால அரச சேவையில் பணியாற்றிய நான் அக்காலப்பகுதியில் அரசாங்கத்தினால் எனக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்பினை எந்தவிதமான குறைபாடுகளும் இன்றி நிறைவேற்றியிருக்கிறேன்.

இந்நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியின் பிரகாரம் புலிப் பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மக்களே அறிவர்.

ஊழல் மோசடிகளோ அல்லது நிதி தொடர்பிலான மோசடிகளோ இல்லாவிட்டால் தரகுப் பணம் சம்பாதிப்பதிலோ ஈடுபட்டிருந்தால் என்னால் தொழில் ரீதியாக முன்னேற்றம் கண்டிருக்க முடியாது.

எனவேஇ எந்தவிதமான ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்டதில்லை என்பதை என்னால் பகிரங்கமாகக் கூறிக் கொள்ள முடியும். அரச சேவையில் இருந்த காலப்பகுதியில் ஒரு சதத்தையேனும் மோசடி செய்யவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன்.

பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள்இ கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முழுமையான ஆதரவு மற்றும் அமைப்புக்கு மத்தியிலேயே நான் அரசியல் பயணத்திற்குள் பிரவேசித்துள்ளேன்.

இப்போது நான் இணைந்துள்ள அரசியல் கட்சிகளுடன் எந்த விதமான உடன்படிக்கைகளும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதேபோல்இ எந்தவொரு அரசியல் தலைவர்களுடனும் கூட ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை.

அவர்கள் என்னுடன் இணைந்திருப்பது என்மீதும் எனது கடந்தகால 40 வருட நம்பிக்கைமிக்க சேவையில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் காரணத்தினாலுமே ஆகும்.

நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதையிட்டு தோல்வியைக் கண்டு கொண்டிருக்கின்ற தற்போதைய ஜனாதிபதியும் அவரது குழுவினரும் என்மீது ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றனர்.

என்மீது விரல் நீட்டி குற்றம் சுமத்துபவர்கள் என்மீது மட்டுமல்லாது என்னைப்போல் அரச சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராகவே குற்றம் சுமத்துகின்றனர் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இதனால் அரச சேவையாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு இலக்காகியுள்ளனர்.

எனவேஇ என்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அரச ஊழியர்களின் சேவைøய பெற்றுக்கொண்டு பின்னர் அவர்களையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகளையும் தூக்கியெறிவது ஜனாதிபதியின் இயல்பான விடயமாகும்.

ஆனாலும் அந்த நிலைப்பாட்டை நான் கொண்டிருக்கவில்லை என்பதையும் மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சரத்தின் சுவரொட்டிகளை ஒட்டியவர் வாரியபொலவில் கொலை

வாரியபொலவில் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் ஒருவர் நேற்று இரவு கொல்லப்பட்டுள்ளார்.இவர் நேற்று இரவு வாரியபொலவில் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் சுவரொடிகளை ஒட்டிக் கொண்டிருந்த சமயம் அங்கு வந்த ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர் வாரியபொலவைச் சேர்ந்த தம்மிக ஹேரத் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னரான வன்முறைகளில் இதுவரை மூவர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை எதிவரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்களின் போது வாக்களார்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும்இ வாக்கு மோசடிகள் மேற்கொள்ளவும் ஆளுங்கட்சியினர் தமது ஆதரவாளர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியுள்ளதாக சரத் பொன்சேகாவின் தேர்தல் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்தன்று வாக்களர்கள் தமது பிரதேசங்களில் உள்ள இந்துஇ பௌத்தஇ கிறிஸ்தவ மதகுருமார்களை அணுகி சுதந்திரமானதும்இ நீதியானதுமான தேர்தல் நடைபெற உதவுமாறும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக வாக்களர்கள் தமது பிரதேசங்களில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்தும்இ வாக்குத் திருட்டுகள் குறித்தும் ஊடகங்களுடன் தொடர்புகொள்ளுமாறும்இ கையடக்க தொலைபேசிகள் ஊடக அவற்றைக் காட்சிப்படுதுவதுடன் புகைப்படங்கள் எடுக்குமாறும் சரத் பொன்சேகாவின் தேர்தல் அலுவலகம் வாக்காளர்களைக் கோரியுள்ளது.

ஜனநாயகத்திற்கான மாறுதல்: கனடாவில் இடம்பெற்ற சுந்தரம் நினைவுதினம்!


நேற்றையதினம் கனடா ரொறன்ரோ நகரில் புதிய பாதை ஆசிரியர் சுந்தரம் அவர்களின் 28வது நினைவுதினம் மிகவும் சிறப்பாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் இடம்பெற்றது. மார்க்கம் 2401டெனிசன் வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்றுமாலை 5:00 மணிக்கு நிகழ்வுகள் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது.

ஜனநாயகத்திற்கான மாற்றத்தின் வெளிப்பாட்டை நேற்றைய கூட்டத்தில் வெளிப்படையாகவே காணமுடிந்தது. பல்வேறு பாதைகள் கொள்கைகளை கொண்ட பலரும் மேற்படி நினைவுகூரல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர். புளொட் அமைப்பின் சார்பில் சாரங்கன் அவர்களின் தொகுப்புடன் கூடிய ஆரம்ப உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் மாணவர் பொதுமன்றத்தின் பொது செயலர் டேவிற்சன். யாழ் நோர்த்தன் பிறின்ரஸ் உரிமையாளரும் இடதுசாரி உறுப்பினருமான மணியம், இலங்கை சட்டத்தரணி சிவகுருநாதன், யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் மாணவர் ஜக்கி ஆகியோர் உரையாற்றியதுடன். சுpங்கப்ப+ரில் இருந்து சுப்பிரமணியம் வள்ளியம்மை அவர்களினால் சுந்தரம் தொடர்பாக எழுதி அனுப்பி வைக்கப்பட்ட கவிதையை நிரஞ்சன் அவர்களும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைமையகத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட செய்தியை செல்வம் அவர்கள்; வாசித்தார், சுந்தரம் தொடர்பான நற்பண்புகளுடன் கூடிய சுந்தரத்தின் இயல்பினை சிம்ஹராஜ்வர்மா அவர்களும் எடுத்துக் கூறினார்.

ஊடகங்களின் தவறுகளும் இன்றுவரை அவை ஒருபக்கசார்பாக நடந்து கொள்வது உட்பட, மக்களுக்கு உண்மையை எடுத்துகூற தயங்குவது குறித்தும் இதனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள், அழிவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு இனியாவது ஊடகங்கள் உண்மையை எழுதவேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியோர் வலியுறுத்தினார்.

இங்கு உரையாற்றிய இளைஞர் மாணவர் பொதுமன்றத்தின் பொது செயலர் டேவிற்சன் அவர்கள் உரையாற்றுகையில், ஆயுதபோராட்டம் என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அல்லது தொடங்கியதோ அது அழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மையாகவே அது அழிக்கப்படவில்லை. ஏன்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. அவை தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதம் தலைதூக்கலாம் என்றும் தெரிவித்ததுடன். தமிழ் அமைப்புக்களின் ஜக்கியத்தை எடுத்துக்கூறியதுடன் அதற்கான சூழ்நிலை கடந்த ஆண்டு மே மாதத்துடன் தோன்றியுள்ளதையும் அதற்கான முன்னேற்பாடுகள் அண்மையில் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தலைவர்கள் எல்லோரும் ஒரேமேடையில் தோன்றியுள்ளது மூலம் நல்லதொரு ஜனநாயக மாற்றத்திற்கான தோன்றல் ஏற்பட்டுள்ளது என்றும் டேவிற்சன் அவர்கள் உரையாற்றினர்.

இங்கு உரையாற்றிய யாழ் நோர்த்தன் பிரின்ரஸ் உரிமையாளர் மணியம் அவர்கள் உரையாற்றுகையில், சுந்தரத்தின் முற்போக்கு சிந்தனைகளையும், அவரது நற்பண்புகைளயும் எடுத்து கூறியதுடன், புதியபாதை பத்திரிகை அச்சிடுவதற்கு உதவியவமை பற்றியும் அப்போது உள்ள அச்சமான சூழிநிலையிலும், பத்திரிகை வெளியீட்டுக்கான முயற்சிகளில் சுந்தரம் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்களையும் சுந்தரத்தின் தீர்க்கமான செயற்பாடுகளையும் நினைவுகூர்ந்து கொண்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் விஞ்ஞானபீட மாணவன் ஜக்கி அவர்கள் உரையாற்றுகையில் பேச்சு சுதந்திரம் எவ்வாறு மறுக்கப்பட்டது என்பதை நினைகூர்ந்து கொண்டதுடன், யாழ் பல்கலைக்கழகத்திற்குள் 1985களில் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டமை போன்றவற்றை மிகவும் சுவார்சியமாக எடுத்து கூறி பார்வையாளர்களை சுவார்சியப்படுத்தினார்.

பொதுவாகவே நேற்றைய நினைவுதின கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதுடன், இவ்வாறக தொடர்ந்து ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டும் என்றும் இவ்வாறாக மேலும் பல கூட்டங்கள் நடாத்தப்பட்டு மாற்று ஜனநாயகத்திற்கான சூழ்நிலை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டோர் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இறுதியாக புளொட் உறுப்பினர் ரமேஸ் அவர்களின் நண்றியுரையுடன் நினைவுகூரல் நிகழ்வு சிறப்புடன் நிறைவுபெற்றது.


தொகுப்பு: கண்ணன்.






அக்கரைப்பற்றில் .தே..ஆதரவாளர்கள் பயணித்த வாகனங்கள்மீது கல்வீச்சு



No Image


அம்பாறையிலிருந்து திருக்கோயில் நோக்கி 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி 20 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்றுஇ அம்பாறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அக்கரைப்பற்று அரசடிப் குதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் இரகசியமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அடங்கிய வெள்ளை வேன் ஒன்றை கைப்பற்றிய பொலிஸார் அதிலிருந்த 8 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அக்கறைப்பற்றுப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண சபை உறுப்பினர்களான தயா கமகேஇ சந்திரதாஸ கலப்பதிஇ மற்றும் வசந்த பியதிஸ்ஸ எம்.பி. ஆகியோர் தலைமையில் அக்கறைப்பற்று தம்பிலுவில்இ திருக்கோயில்இ பொத்துவில் ஊடாக இந்த வாகனப் பேரணி செல்ல முற்பட்டபோதே இந்தத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

ஐ.தே.க. ஆதரவாளர்கள் மீதான தாக்குதலை அடுத்து அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தாக்குதலை அடுத்து ஐ.தே.க. ஆதரவாளர்கள் திருக்கோயில் செல்லுவதற்கு பொலிஸார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் பொலிஸாருக்கும் தயா கமகே தலைமையிலான குழுவினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

பொலிஸாரின் தடையினை அடுத்து அக்கறைபற்று நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகில் இவர்கள் கூட்டமொன்றினை நடாத்தினர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கூட்டத்தில் கலந்து கொண்டோர் மீதும் கல் வீச்சு நடத்தப்பட்டது. இந்தக் கல்வீச்சில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஐ.தே..க ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கூட்டம் என்பவற்றினால் அக்கறைப்பற்று நகரம் சில மணிநேரம் பதற்றத்திற்குள்ளாகி இருந்தது. இங்கு கடைகளும் மூடப்பட்டதுடன் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்திருந்தது

தேர்தலின் பின் மீண்டும் இந்தியா செல்வோம் : மாவை சேனாதிராஜா
No Image

"ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இம்மாத இறுதியில் மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் செய்து உயர்மட்ட தலைவர்களை சந்திக்க எதிர்பார்க்கின்றோம்.

இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக அரசியல் தீர்வு விடயம் குறித்து இந்திய உயர்மட்டத்துடன் பேச்சு நடத்தவுள்ளோம்" என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாவை சேனாதிராஜா எம்.பி.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது : "கடந்தவாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்கு விஜயம் செய்து அந்நாட்டின் உயரதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தியது. முக்கியமாக இந்திய வெளியுறவு செயலாளரை சந்தித்து பேசினோம்.

அதாவது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் இந்திய உயரதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினோம்.

நாம் கூறிய விடயங்களை ஆர்வமாகவும் அக்கறையுடனும் செவிமடுத்த இந்திய தரப்பினர் அவற்றை உள்வாங்கிக் கொண்டனர். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து செயற்படத் தயார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதேவேளைஇ மோசமான காலநிலை காரணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்திக்க முடியவில்லை. நாங்கள் சென்ற விமானம் மோசமான காலநிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பிவிட்டது. அதற்கிடையில் இந்திய வெளியுறவு அமைச்சர் வெளிநாடு சென்றுவிட்டார்.

எனவே மீண்டும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்து உயர்மட்ட தலைவர்களைச் சந்திக்கவுள்ளோம். அதன்போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


புலிகளின் வங்கிக் கணக்குகள் கு றித்து கெஹெலியவே தெரிவித்தார்:அநுர

No Image


சர்வதேச ரீதியாக விடுதலைப் புலிகளுக்குள்ள சொத்து விபரங்களை கே.பி. தெரிவித்ததாக அரசாங்கமே தகவல்களை வெளியிட்டுள்ளது.

எனவேஇ அச் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பதையும் வெளியிட வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்று ஜே. வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

புலிகளின் சர்வதேச முக்கியஸ்தர் கே.பி. க்கு சிறப்புரிமைகளை வழங்கி ஏன் அரசாங்கம் பாதுகாக்கின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதுஇ கே.பி. வெளியிட்டதாகக் கூறி வெளியான தகவல்கள் தவறானவை என தேசிய புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அநுரகுமார திசாநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்இ

"நாமல் ராஜபக்ஷ புலிகளின் சர்வதேச உளவுப் பிரிவின் முக்கியஸ்தர் எமில் காந்தனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தவறில்லை என்ற அரசின் மனப்பாங்கு கே.பி.யின் விடயம் தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தர் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதிலும் தவறில்லை என்ற போக்கை அரசு கொண்டிருக்கலாம்.

இதுவல்ல முக்கியம். சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளுக்கு 600 வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும் 14 கப்பல்கள் இருப்பதாகவும் கே.பி. தெரிவித்ததாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இவ்வாறான தகவல்களை நாம் வழங்கவில்லை. எனவேஇ மக்களுக்கு உண்மையை தெரிந்துகொள்ளும் உரிமை உண்டு. அதற்காகவே கேள்விகளை தொடுக்கின்றோம்.

600 வங்கிக் கணக்குகளுக்கு 14 கப்பல்களுக்கு என்ன நடந்தது? கே.பி. எங்கே? அவருக்கு சிறப்புரிமைகளை வழங்கி அரசாங்கம் பாதுகாக்கின்றது. இது ஏன்? எதற்காக?

புலிகளின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொள்வதற்காகவா? வங்கியில் ஒப்படைக்கப்பட்ட புலிகளின் தங்கத்திற்கு என்ன நடந்தது? இக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.

நாமல் புகைப்பட விவகாரம்

நான் கிராமத்தில் பிறந்தவன். எனவேஇ எவராவது என்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பினால் தடை போட மாட்டேன் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் இவர் இந்நாட்டு ஜனாதிபதியின் மூத்த மகன். இளைஞர்களுக்கான நாளைஇ நீலப் படையணி போன்றவற்றில் பதவி வகிப்பவர்.

இவ்வாறான ஒருவர்இ பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விடுதலைப் புலிகளின் சர்வதேச உளவுப் பிரிவின் தலைவர்களுடன்இ ஊர்ஜிதப்படுத்தப்பட்ட எமில் காந்தனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதானது பாரதூரமான செயலாகும்.

எனவேஇ நாமல் ராஜபக்ஷஇ எமில் காந்தனை ஏன் சந்தித்தார். இருவருக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் என்ன? இதற்கான அனுமதியை யார் வழங்கினார்கள்? என்ற விபரங்களை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.

எமது படையினர் உயிர்களை தியாகம் செய்துஇ அங்கவீனர்களாகி பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒழித்தனர். அதனை காட்டிக்கொடுக்கும் விதத்தில் எமில் காந்தனை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது" என்றார்
மேலும் இங்கே தொடர்க...
எனது வெற்றி உறுதி என்கிறார் ஜெனரல் சரத்பொன்சேகா
No Image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனக்கு 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்களானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்டுப்பணத்தினையும் கூட இழக்க நேரிடும் என்று எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

நுவரெலியா நகரில் இன்று 17 ஆம் திகதி இடம் பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நுவரெலியா மாநகர மேயர் சந்தனலால் கருணாரத்ன ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்தத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இமுஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப்ஹக்கிம் இ மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச்செயலாளர் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இதொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் திகாம்பரம் இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் சதாசிவம் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.செல்லச்சாமிஇ அர்ச்சுன ரணதுங்கஇ ஜெயலத் ஜெயவர்தனஇ ராமலிங்கம் சந்திரசேகரன்இ சச்சிதானந்தன்இ மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமார் இகே.கே.பியதாச உட்பட பலர்கலந்து கொண்டார்.

ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்ந்து பேசுகையில்இ

எமது வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இடம் பெற்ற தபால் மூல வாக்களிப்பில் எனக்கு 90 வீதமானோர் வாக்களித்துள்ளனர். 10 வீதத்தை மர்ததிரமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனக்கு 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்களானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்டுப்பணத்தினையும் இழக்க நேரிடும்.எனவே இன்று இந்த நாட்டிலுள்ள முக்கிய கட்சிகள் என்னை ஆதரிக்க முன்வந்துள்ளன.

நான் வெற்றி பெறுவதன் மூலம் இந்த நாட்டில் சர்வாதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து ஜனநாயகத்தினை நிலை நிறுத்துவேன். அத்துடன் என்னால் வழங்கப்பட்ட சகல வாக்குறுதிளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

குறிப்பாக அரசாங்க ஊழியர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது போல் சம்பளவுயர்வினை வழங்குவேன். அரச சேவையில் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி கௌரவத்துக்குரியதொன்றாக அத்துடன் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கும் நியாயமான சம்பளத்தினைப்பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

தனியார் பயணிகள் சேவையை நடத்துகின்றவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மானிய முறைஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளேன். அத்துடன் குறைந்த வருமானத்தினைப்பெறுகின்றவர்களுக்கும் உரிய நிவாரணங்களைப்பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

ஆகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்று இந்த நாட்டு மக்களின் வாழ்க்கையில் சுபீட்சத்தினை ஏற்படுத்துவேன்.

ஆகவே அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து இந்த நாட்டில் வாழ்கின்ற சகல மக்களும் ஒரே குடையின் கீழ் அணித்திரளுவோம். இந்த நாட்டில் வாழும் தோட்டத்தொழிலாளர் சமூகம் உட்பட சகல இன மக்களும் ஒற்றுமையுடனும் சுபீட்சத்துடனும் வாழக்கூடிய சூழ்நிலையை எனது வெற்றியின் மூலம் நிலை நிறுத்துவேன்" என்றார்
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 67 சதவீதமான மக்கள் ஆதரவு

பொன்சேக்காவின் தோல்வி உறுதி - அமைச்சர் மைத்திரிபால


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 67 சதவீத மக்கள் ஆதரவைப் பெற்று முன்னணியில் திகழ்வதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பெறுபேறுகள் சுட்டிக்காட்டியிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான மக்களின் ஆதரவு குறித்து மூன்றாவது தடவையாக எடுக்கப்ப ட்டிருக்கும் கணக்கெடுப்பின் பெறுபேறே இதனை சுட்டிக்காட்டு கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் இயலாமையையும் வங்குரோத்து அரசியல் பிரசாரங்களையும் நன்கு அறிந்து வைத்துள்ள நாட்டு மக்கள் என்றுமில்லாதவாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்துக்கு அணிதிரண்டு வருகிறார்கள். எமது கூட்டங்களுக்கு வருகைதரும் இலட்சக் கணக்கான மக்களை பார்க்கையில் இந்த நாட்டின்

தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் என்பதனை அவர்கள் உறுதிசெய்துவிட்டா ர்கள் என்பது மேலும் ஊர்ஜிதமாகியி ருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால கூறினார்.

கொழும்பு மகாவெலி கேந்திர நிலையத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். அதில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெல்வது உறுதியாகியுள்ளது. வீதியில் எங்கு பார்த்தாலும் 90 சதவீதம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அலுவலகங்களும் நீலக்கொடிகளும் வெற்றிலைச் சின்னங்களுமே காணப்படு கின்றன.

நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி சரத் பொன்சேகாவுக்கும் எதிர்க்கட்சியினரின் வங்குரோத்து அரசியல் பிரசாரம் நன்கு புரிந்துவிட்டது.

தான் தேர்தலில் தோல்வியடையப் போகின்றேன் என்பது பொன்சேகாவுக்கு நன்கு விளங்கிவிட்டது.

இயலாமையை தோல்வியின் வேதனையை பொன்சேக்காவின் நடவடிக்கைகள்இ முகபாவம் மற்றும் பிரசாரங்கள் வாயிலாகவே அறிந்துக்கொள்ள முடிகிறதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மைத்திரிபால இது தொடர்பாக மேலும் கூறுகையில்இ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியால் ஒருபோதும் வெற்றி காண முடியாதென அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்கு தெரியும். தோல்வி உறுதியென்பது நிச்சயமானதன் பின்னரே மக்களுக்கு வேடிக்கை காண்பிப்பதற்காக அரசியல் அனுபவமில்லாத இந்த பொன்சேக்காவை அறிமுகம் செய்துள்ளனர். பொன்சேக்காவின் மனசாட்சிக்கு இந்த உண்மை நன்கு தெரியும்.

சரத் பொன்சேக்கா இராணுவத்தில் பதவியிலிருந்த காலப்பகுதியிலேயே ரணில் விக்கிரமசிங்க பிரபாகரனுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருந்தார். அவரது ஒப்பந்தப்படி புலிகள் படையினருக்கு எத்தனை அவதூறு செய்திருந்தாலும் அதனை படையினர் கைகட்டி பார்த்திருக்க வேண்டும்.

பொன்சேக்கா திறமையான படை வீரரென்றால் அந்த நேரமே யுத்தத்துக்கு முடிவு கண்டிருக்கலாமே? ஏன் அவரால் அதனை செய்ய முடியவில்லை. எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சிக்கு வந்த பின்பே நாட்டில் பல தசாப்த காலமாக நிலவி வந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்போதுஇ பொன்சேக்கா தானே மோதல்களை தீர்த்து வைத்ததாக பெருமை தேடிக்கொள்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியினரின் வங்குரோத்து அரசியல் நிலையினை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர். போலிப் பிரசாரங்கள் மூலம் மக்களை ஏமாற்ற நினைப்பது வெறும் கனவு மாத்திரமே.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மாத்திரமேயுள்ளன. அதற்கிடையில் எமது ஜனாதிபதிக்கான ஆதரவினை இன்னும் பல மடங்கு பலப்படுத்துவோம். ஜனாதிபதிக்கு வெற்றி நிச்சயமெனவும் அவர் கூறினார்.

மாகாண சபை தேர்தல்களுக்கு விநியோகிக்கப்பட்ட
தற்காலிக அடையாள அட்டைகளை ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்த முடியும்

மாகாண சபைத் தேர்தல்களுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை மீள வழங்காது வைத்திருக்கும் வாக்காளர்கள் அவற்றை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பயன்படுத்த முடி யும் எனத் தேர்தல்கள் தலைமையகம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு ள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் மாகாண சபைத் தேர்தல்களுக்காகத் தேர்தல்கள் தலைமையகம் தற்காலிக அடையாள அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகித்தது. எனினும் அந்த அடையாள அட்டைகளைத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம்

மீள ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால்இ பெரும்பாலான வாக்காளர்கள் அந்தத் தற்காலிக அட்டைகளை மீள ஒப்படைக்காது தம்மிடமே வைத்துள்ளனர்.

இந்நிலையில்இ கிழக்கு மாகாணத்தைத் தவிர்ந்த வாக்காளர்கள் மீள ஒப்படைக்காமல் வைத்திருக்கும் தற்காலிக அடையாள அட்டைகளை இந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்த தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக ஆணையாளர்கள் உதவி ஆணையாளர்கள் ஆகியோர் பங்குபற்றிய கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர் இந்த முடிவை அறிவித்ததாக மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி தெரிவித்தார்.

தேர்தல்கள் தலைமையகம் விநியோகிக்கும் தற்காலிக அட்டைகளைப் பெற்றுக்கொள்வத ற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள் ளது. எனினும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் வழங்கும் தற்காலிக அட்டைகளைப் பெறுவதற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணபிக்க முடியும் என்று மேலதிக ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.

தேர்தல்கள் தலைமையகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதால் ஜனாதிபதித் தேர்தலில் அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியாது என எந்த வாக்காளரும் ஆதங்கப்பட வேண்டியதில்லை என்றும் மேலதிக ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டையைத் தம்முடன் கொண்டு செல்ல வேண்டும். அது இல்லாதவர்கள்இ காலாவதியாகாத கடவுச் சீட்டுஇ காலாவதியாகாத சாரதி அனுமதிப்பத்திரம்இ ஓய்வூதிய அடையாள அட்டைஇ முதியோர் அடையாள அட்டைஇ ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் மத குருமார்களுக்கான அடையாள அட்டைஇ தற்காலிக அட்டை அல்லது தேர்தல்கள் தலைமையகம் வழங்கும் தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல்கள் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாட்டுக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்து ஒழித்தேன்

2வது ஒப்பந்தத்தை ஒழிக்கும் பொறுப்பு மக்களுடையது - ஜனாதிபதி

(குருநாகலிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்இ வாரியபொல தினகரன் நிருபர்)

தாய்நாட்டுக்கெதிரான முதலாவது ஒப்பந்தத்தை நான் நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்து இல்லாதொழித்தேன். இரண்டாவது ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களுடையதெனவும் அதனை எதிர்வரும் 26ம் திகதி மக்கள் நிறைவேற்றுவரெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வன்முறைக்கும் விரோத அரசியலுக்கும் இனி இந்த நாட்டில் இடமில்லையென தெரிவித்த ஜனாதிபதிஇ பயங்கரவாதத்திலிருந்து மீட்டு ஒன்றிணைந்துள்ள நாட்டைப் பாதுகாத்து ஜனநாயகத்தையும் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று குருநாகல் நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் அநுர பிரியதர்ஷன யாப்பாஇ எஸ். பி. நாவின்னஇ சாலிந்த திசாநாயக்கஇ பாட்டலி சம்பிக்கை ரணவக்கஇ முன்னாள் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கஇ பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட கலைஞர்கள்இ கட்சித் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

மதுரங்குழி பகுதியில் எமது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் பலியாகியுள்ளது டன் ஐயர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள் ளனர். மீண்டும் வன்முறை யுகம் கட்ட விழ்க்கப்பட்டுள்ளது.

இதனை முடிவுக்குக் கொண்டுவரவும் இரகசிய ஒப்பந்தங்களுக்கு முடிவு கட்டவும் எதிர்வரும் 26ம் திகதி மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

கடந்த நான்கு வருடத்திற்கு முன்னர் இந்த நாட்டை மீட்டு ஐக்கியப்படு த்துவதற்காக மக்கள் இந்த நாட்டைப் பாரம்கொடுத்தார்கள். அதனை நான் முழுமையாக நிறைவேற்றியுள்ளேன்.

தனி நிர்வாக அதிகாரத்துடன் அடையாள அட்டையிலிருந்து சகலதையும் தமக்கென தனியாக வைத்திருந்த பயங்கரவாதியி டமிருந்து நாட்டை மீட்டு தற்போது ஒரு கொடியின் கீழ் அனைத்தையும் கொண்டுவர முடிந்துள்ளது.

வெளிநாடுகளுக்கு அடிபணிந்து முதுகெலும்பில்லாமல் எம் தலைவர்கள் செயற்பட்ட யுகத்துக்கும் முடிவு காணப் பட்டுள்ளது.

நாம் யுத்தத்தை மாத்திரம் முன்னெடுக்க வில்லை. நாட்டில் அபிவிருத்தியையும் மேற்கொண்டோம். அத்துடன் அரச துறையை மேம்படுத்தும் வகையில் ஆறு இலட்சமாகவிருந்த அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 12 இலட்சமாக அதிகரிக்க எம்மால் முடிந்துள்ளது. நாம் இந்த நாட்டை ஆசிய பிராந்தியத்திலேயே பெறுமதிமிக்க நாடாக மாற்ற பின்புலத்தைக் கட்டியெழுப்பியுள்ளோம். வடக்கு கிழக்கு உட்பட சகல பிரதேசங்களையும் அபிவிரு த்தியில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

எம்மைப் பற்றி பல அவதூறுகள்இ சேறு பூசுதல்கள் இடம்பெறுகின்றன. எம்முடனுள்ள விமல் வீரவன்சஇ ஜோன்சன் பெர்னாண்டோ போன்றவர்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. எந்தவித சவால்களையும் ஏற்க நாம் தயார்.

வைராக்கியமும் குரோதமும் நிறைந்த அரசியலுக்கு இந்த நாட்டில் இனி இடமில்லை. நாமும் நாட்டு மக்களும் அதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

பணத்திற்கு விலைபோகும் அரசியல்வாதிகள் எம்மிடமில்லை. 30 மில்லியன் ரூபாவுக்கு முஸம்மிலை விலைபேசியுள்ள விடயம் அம்பலமாகி யுள்ளது.



முஸம்மிலுக்கு ரூ.3கோடி வழங்கியமைக்கு எதிராக இன்று சட்ட நடவடிக்கை

ஒலிப்பதிவு ஆவணங்களும் ஊடகங்களுக்கு விநியோகம்



சரத் பொன்சேக்காவை ஆதரித்து அவரது ஊழல் மோசடிகளை மூடிமறைக்கக் கோரியும் முஸம்மில் எம்.பி.க்கு மூன்று கோடி ரூபா பணத்தை வழங்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்இ பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.

உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்இ இன்று முதல் இதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலக த்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. இலஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் கைமாறியமை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதைப் போன்று சம்பவத்துடன் தொடர்புடைய பேச்சுக்கள் இடம்பெற்ற ஒலி நாடாக்கள் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் ஒலிபரப்பிக் காண்பிக்கப்பட்டது.

சரத் பொன்சேகாவுக்கு முஸம்மில் எம்.பி.யின் ஆதரவை பெற்றுக்கொள்வ தற்கான இடைத்தரகராக செயற்பட்ட மயோன் முஸ்தபா எம்.பி. முஸம்மில் எம். பி.யுடன் பேரம் பேசுவதை அதில் கேட்கக் கூடியதாக இருந்தது.

அதேபோன்றுஇ கடந்த 14ம் திகதி இராஜகிரியவிலுள்ள ஐ. தே. க. அலுவலகம் ஒன்றில் வைத்து ஐ. தே. க. முக்கியஸ்தரான மலிக் சமரவிக்ரம முஸம்மில் எம்.பி.யுடன் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.

மயோன் முஸ்தபா ஹாபிஸ் நமர் அஹமட் (துஆ தலைவர்) மற்றும் சரத் என்று அழைக்கப்படும் ஐ. தே. க.வின் மற்றுமொரு முக்கியஸ்தர் ஆகியோர் இணைந்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தையை முஸம்மில் எம்.பி. மிகவும் இரகசியமான முறையில் தனது உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நவீன ஒலிப்பதிவு இயந்திரம் மூலம் பதிவுசெய்துள்ளார். இந்த உரையாடலையும் இங்கு அவர் ஒலிபரப்பிக் காண்பித்தார்.

சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழல் மோசடிகளை மூடிமறைக்கவும்இ தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கு எதிராகவும்இ சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதற்கான அறிவித்தலை முஸம்மில் எம்.பி. ஊடாக வெளியிடுவது தொடர்பாக இங்கு கலந்துரையாடியதை கேட்கக்கூடியதாக இருந்தது.

இதற்கான செய்தியாளர் மாநாட்டை நடத்தும் இடம் தொடர்பான முரண்பாடுகள் வந்ததையடுத்து அதனை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக ஐ. தே. க. முக்கியஸ்தர் மலிக் சமரவிக்ரம அந்த இடத்திலிருந்தவாறே ரவி கருணாநாயக்க எம்.பி.யுடன் தொலைபேசி மூலம் பேசுவதையும்இ மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள ஒரு இடத்தில் இந்த செய்தியாளர் மாநாட்டை நடத்த ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமையையும் அந்த ஒலி நடாவிலிருந்து கேட்கக் கூடியதாக இருந்தது.

ஒலிபரப்பி காண்பிக்கப்பட்ட உரையாட ல்கள் சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு ஊடகங்களுக்கு இந்த செய்தியாளர் மாநாட்டில் வழங்கப்பட்டது.

இந்த மாநாட்டில் விமல் வீரவன்ச எம்.பி. தகவல் தருகையில் :-

மிகவும் பொறுப்புடனும்இ ஆதாரபூர்வ மாகவும் இந்த தகவல்களையும் இதனுடன் சம்பந்தப்பட்ட ஒளிஇ ஒலி நாடாக்களையும் நாங்கள் வெளியிடுகின்றோம்.

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு தனக்கு தொடர்ந்து அழுத்தங்கள் தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக முஸம்மில் என்னிடம் தெரிவித்தார். அதனையடுத்து நாங்கள் திட்டமிட்ட சில செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

இந்த நாட்டிலுள்ள மக்கள் பிரதிநிதிகளை வாங்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் எனது ஆலோசனைக்கமைய நாட்டுக்காக முஸம்மில் எம்.பி. மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் காட்சிகளையும் பேச்சுக்களையும் ஒளிஇ ஒலிப்பதிவுகளை செய்துள்ளார்.

இவற்றில் உண்மையில்லை என்று கூறும் எவரும் இதனை உறுதிப்படுத்த முடியும். நாங்கள் தயாராக உள்ளோம். உண்மையானதும்இ தகுந்த ஆதாரங்களும் இருப்பதால் எந்தவித தயக்கமும் இன்றி சட்டத்தின் முன் இதனை முன்வைக்கவு ள்ளோம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இதற்கான சகல சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

3 கோடி ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசப்பட்டுள்ள போதிலும் ஒரு தொகைப் பணத்தையே முற்பணமாக கொடுத்துள்ளனர். இதற்காக வெள்ளவத்தையிலுள்ள சபயார் ஹோட்டலில் இரண்டு அறைகள் எடுக்கப்பட்டுள்ளன. 105ம் இலக்க அறை முஸம்மில் எம்.பி.க்காகவும்இ 102ம் இலக்க அறை அவரது மெய்பாது காவலர்களுக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. மயோன் முஸ்தபாஇ தனது பெயர்இ அடையான அட்டை இலக்கம் ஆகிய தகவல்களை வழங்கி இந்த இரு அறைகளை பதிவு செய்துள்ளமை ஹோட்டல் பதிவு மூலம் தெளிவாக உறுதியாகின்றது.

எம்.பி.க்களை பணம் கொடுத்து வாங்கும் விடயம் மிகவும் பாரதூரமான விடயமாகும். சரத் பொன்சேகா தான் ஊழல் அற்றவர் என்றும் தன்னுடன் இருப்பவர்களும் நேர்மையானவர்கள் என்றும் கூறித் திரிகின்றார்.

இலஞ்சம் கொடுத்து எம்.பி.க்களை வாங்குபவர்களிடமிருந்து எவ்வாறு நல்லாட்சியை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஏகாதிபத்தியவாதிகள் தங்களுக்குத் தேவையானதை இந்த நாட்டில் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.

மேற்கத்திய நாடுகளின் பணங்கள் மூலம் இந்த நாட்டு மக்களின் தீர்மானத்தை ஒருபோதும் மாற்ற முடியாது. எனவேஇ மக்கள் ஒருபோதும் இதனை அனுமதிக்கப் போவதில்லை என்றார்.

முஸம்மில் எம். பி.

சில ஊடகங்கள் கூறுவது போன்று பணத்தைப் பெறும் நோக்கம் இருந்தால் அந்த காட்சிகளையும்இ பேச்சுவார்த்தைகளை யும் ஒளிஇ ஒலிப்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை என்று முஸம்மில் எம்.பி. தெரிவித்தார்.

இது போன்ற இலஞ்சம் கொடுக்கும் திட்டங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுச் சென்றேன் என்று அவர் குறிப்பிட்டார்.

எமது திட்டத்தை சரியான முறையில் நிறைவேற்றுவதற்காக அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடிக்க வேண்டி ஏற்பட்டது. இதற்காக பொன்சேகாவுக்கு ஆதரவாக சில பொய்களை சொல்ல நேர்ந்ததாக முஸம்மில் தெரிவித்தார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு;

‘கொமான்டோ படையினர் வேண்டுமா? அல்லது என்னிடம் பாதுகாப்பு ஆட்கள் உள்ளனர். எது வேண்டும் என்று ரவி கருணாநாயக்க எம்.பி. கேட்டுள்ளார்.

மயோன் முஸ்தபாவுடனான ஒலி நாடா உரையிலும் இதனை கேட்கக்கூடி யதாக இருந்தது.

கடந்த 5ம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த முஸம்மில்இ உங்களைப் பற்றி தலைவரிடம் சொல்லியுள்ளேன். இன்னும் சில முக்கியஸ்தர்கள் வரவுள்ளனர். சகலருக்கும் பணம் கொடுக்க தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாஇ ரணில்இ ஜே. வி. பி. மற்றும் முக்கியஸ்தருக்கு இந்த விடயங்கள் தொடர்பாக தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...