14 ஜூன், 2010

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை குறித்து விவாதம்

இலங்கையில் நிலவரம் குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வரும் எதிர்வரும் 16ஆம் திகதி புதன்கிழமை விவாதமொன்று நடைபெறவுள்ளது.

பிரிட்டிஷ் பாராளுமன்ற இணையதளம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

மேற்படி விவாதம் நடத்தப்படவிருப்பது குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபாயின் மெக்டொனாக் அறிவித்திருப்பதாக அந்த இணையத் தளம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை நிலவரத்தில் அமெ.-இந்தியா ஒரே கருத்து : ரொபர்ட் ஓ பிளேக்


அமெரிக்கா, இந்தியா நாடுகள் இலங்கை நிலவரம் குறித்து ஒரே பார்வையைக் கொண்டுள்ளதாக தெற்காசியாவுக்கான அமெரிக்க பிரதிச் செயலாளர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ரிடிப் ( ஐடூக்ஷடுஹ'ஙூ தடீக்ஷடுக்க் ) இணையத்தளத்திற்கு அவர் அளித்த பிரத்தியேக போட்டியிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 40, 000 மக்களை குடியமர்த்துவது தொடர்பில் அமெரிக்கா, இந்தியா நாடுகள் வெளிவிவகார கொள்கைகளுக்கமைய உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

அமெரிக்கா, இந்தியாவுடன் அண்மைக் காலமாக நட்புணர்வைப் பேணி வருகிறது. இலங்கை நிலவரம் குறித்தும் நாம் அவதானித்து வருகிறோம்.

யுத்தகாலத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு நிவாரணங்களை வழங்கி உதவிய அமெரிக்கா, யுத்தத்தின் பின்னர் வடபகுதியில் மீள் குடியேற்றப்படும் மக்களின் நலன்கருதி பல வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கை நிலவரம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பிரீஸ் மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு வெற்றி அளித்துள்ளது.

இலங்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரிக்க அரசாங்கம் குழு ஒன்றை நியமித்துள்ளமை வரவேற்கதக்கதாகும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

எலிக்காய்ச்சலால் நாட்டில் 2000 பேர் பாதிப்பு : 20 பேர் வரை பலி

இலங்கையில் சுமார் 2000 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 20 பேர் வரை மரணித்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அண்மையில் நகரமயமாக்கப்பட்ட பகுதிகளின் அருகிலேயே இது அதிகம் பரவி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக காலி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக எலியின் சிறு நீர் வயல்வெளிகளில் கலக்கும்போது, விவசாயிகளே இதனால் அதிகம் பாதிப்படைகின்றனர். விசேடமாக உடலில் காயங்கள் உள்ளவர்களுக்கு இது விரைவில் தொற்றுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

1000. கோடி நேரடி உதவி: இந்தியா பரிசீலனை

அமைச்சர் சிதம்பரம்

அமைச்சர் சிதம்பரம்
இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்
இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கென இந்தியா ஒதுக்கியுள்ள ஆயிரம் கோடி ரூபாயை நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கே வங்கிகள் வழியாக வழங்குவது பற்றி யோசித்து வருவதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே அண்மையில் இந்தியா வந்தபோது அவருடன் புதுடில்லியில் நடந்த ஆலோசனைகள் குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து அமைச்சர் சிதம்பரம் தகவல் வழங்கியிருந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதுதான் மறுவாழ்வுத்திட்டங்கள் பற்றி அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி என்று மத்திய அரசுக்கு தெரியாதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, சிதம்பரம் அது பற்றி அதிகாரபூர்வமாக மத்திய அரசுக்கு எதுவும் வரவில்லை என்று மட்டும் கூறினார்.

விழுப்புரத்தில் ரயில் தண்டவாளம் தகர்ப்பு ஒரு தீவிரவாத, பயங்கரவாத செயலுக்கான முயற்சி என்பதால் இதை வன்மையாகவே கண்டிப்பதாகவும் தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் இணைந்து செயல்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தன்னைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூற முடியாது. ஏனென்றால் தான் டெல்லியில் இருக்கும்போதே மலைக்கோட்டை ரயிலில் செல்லும் முடிவை ரத்துசெய்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் தமிழக காங்கிரசின் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுபேசும்போது, அதிகாரப்பரவலுக்கான சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று ராஜபக்சேயிடம் இந்தியா வற்புறுத்தியிருப்பதாகவும், யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் ஒன்றைத் துவக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் சிதம்பரம் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

350 கோடி ஆண்டுக்கு முன்பே செவ்வாய் கிரகத்தில் கடல் போல் தண்ணீர்: ஆய்வில் தகவல்




செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? இல்லையா? என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஹலோ ரொபோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வெளியிட்ட செவ்வாய் கிரகத்தின் படங்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.

இவை தவிர ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க செயற்கை கோள் வெளியிட்ட தகவல்கள் மூலமும் ஆராய்ச்சி செய்தனர்.

இதன் மூலம் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உருவாகி இருக்க வேண்டும் என்ற கருத்து தெரிவித்துள்ளனர். இங்கு வடக்கு துருவத்தில் அட்லாண்டிக் கடல் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. இது பூமியில் உள்ள அளவுக்கு சமமானதாகும்.

மேலும் அங்கு 54 ஆறுகளின் டெல்டா படுகைகள் உள்ளன. இதனால் அங்கு ஆறுகள் உற்பத்தியாகி ஓடிக்கொண்டிருக்க வாய்ப்பும் உள்ளது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தன்மீதான களங்கத்தை போக்க நித்யானந்தா "பஞ்ச தபசு' பூஜை





பெங்களூரு: தன் மீது சுமத்தப்பட்ட அவதூறு களங்கத்தை போக்குவதற்காக, அக்னி நடுவே சாமியார் நித்யானந்தா இரண்டு மணி நேரம் "பஞ்ச தபசு' பூஜை நடத்தினார்.ராம்நகர் சிறையிலிருந்து 44 நாட்கள் கழித்து வெளியே வந்த நித்யானந்தாவுக்கு நேற்று முன்தினம், கர்நாடகா மாநிலம் பிடதி ஆசிரமத்தில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், அங்குள்ள மூலஸ்தானத்திற்கு சென்று அவரே பூஜை நடத்தினார்.

நேற்று காலை 6:30 மணிக்கு தனது அறையை விட்டு வெளியே வந்த நித்யானந்தா, ஆசிரமத்தின் திறந்தவெளியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அவரை சுற்றி இரண்டு அடி சுற்றளவில், சிறிய பள்ளம் தோண்டி, அதில் சிறிய விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டு நெய், எண்ணெய் ஊற்றி தீயிடப்பட்டது. தொடர்ந்து காலை 8.30 மணி வரை, நெருப்பில் நெய், எண்ணெய் விடப்பட்டு வந்தது. தீ அணையாமல் பக்தர்கள் கவனித்து வந்தனர். இதற்கு "பஞ்ச தபசு' பூஜை என கூறப்பட்டது.இதயத்தை சுத்தமாக்க செய்யும் யாகமே "பஞ்சாக்னி தபஸ்' யாகமாகும். இதன் மூலம் ஆன்மிக நடவடிக்கைகளில் மிகவும் ஆழமான நடைமுறையை மேற்கொள்வதாகும்.

நித்யானந்தா தன் மீதான எதிர்மறையான நோக்கம் அனைத்திலிருந்தும் விடுபடுவதற்கென்றே இந்த தபசு நடத்தினார். உலக சமாதானத்தை தனது முதல் நோக்கமாக நித்யானந்தா கொண்டுள்ளார் என்று அவரது சீடர்கள் கருதுகின்றனர்.இந்த தபசில், நித்யானந்தா மட்டுமின்றி அவரைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர். சாமியார் நித்யானந்தா வழக்கம் போல் காவி உடை அணிந்திருந்தார். அவரது பக்தர்கள் சிலர் காவி உடையும், சிலர் வெள்ளை உடையும் அணிந்து கலந்து கொண்டனர்.சில மாதங்களாக பத்திரிகையாளர்களை ஆசிரமத்துக்குள் அனுமதிக்காத ஆசிரம நிர்வாகிகள், நேற்று நடந்த பூஜைக்கு மட்டும் அனுமதி கொடுத்தனர். ஆனால், பொதுமக்களை அனுமதிக்கவில்லை.

பிடதி ஆசிரமத்தில் பக்தானந்தா, நித்ய பியானந்தா, நித்ய சதானந்தா ஆகியோர் கூறுகையில், ""இது ஆசிரமத்திற்கும், நித்யானந்தாவிற்கும் சோதனைக் காலம். இதிலிருந்து விரைவில் மீள்வோம். தடைபட்டு இருந்த சமூக நலப்பணிகள் தொடரும். அதே நேரம், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கடைபிடிப்போம். நீதிமன்றம் நிபந்தனை விதித்திருப்பதால் நித்யானந்தா ஆன்மிக பிரசாரம் மேற்கொள்ள மாட்டார்,'' என்றனர்.நேற்று காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை "தபசு' நடப்பதாக கூறப்பட்டது. ஆனால், இரண்டு மணி நேரத்தில் தபசு முடிந்து நித்யானந்தா தனது தனி அறைக்கு சென்று விட்டார். இன்றும் இதுபோன்ற தபசு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மருந்துகள் இறக்குமதி, விநியோகத்தில் ஊழல்கள் நடந்தால் மன்னிப்பு இல்லை கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

அப்பாவி நோயாளர்களுக்காக அரசாங்க ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் மருந்துப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்யும் ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, அந்நடவடிக்கை தொடர்பாக உள்ள சட்ட திட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீல.சு.க. பொதுச் செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் சரியான தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அதை இறக்குமதி செய்வதிலும் விநியோகிப்பதிலும் ஊழல்கள் நடக்கு மாயின் அத்தகைய வர்களுக்கு எவ்வித மன்னிப்புகளும் வழங்கப்படமாட்டா தெனவும் அவர் கூறினார்.

நேற்று முன்தினம் (12) அரசாங்க ஔசத சங்கத்தின் 13வது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்:- அப்பாவி நோயாளர்களுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் மருந்து வில்லையிலும் சுரண்டுகின்ற சுரண்டல் வாதிகள் இருப்பதாகவும் தெரியவருகிறது. மேலும் வழங்க வேண்டிய மருந்தை குறைத்து வழங்குவோர்களும் உள்ளனர்.

சட்டத்தை கடுமையாக்கி இவர்களுக்கு தண்டனை வழங்குவதால் மட்டும் இதனைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சகலரும் செயலாற்றினால் சமூகத்தை கட்டியெழுப்பி, மனிதர்களுக்கு அன்பைக் காட்டி மனச்சாட்சிப்படி நடப்பதை மட்டும் கொண்டே எமது கடமைகளை செவ்வனே நிறைவேற்ற முடியும். ஆகவே, இதனை அனைத்து அதிகாரிகளும் புரிந்து கொள்ளல்வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பூநகரி-குருநகர் படகு சேவை நேற்று ஆரம்பம்


பூநகரிக்கும் யாழ்-குருநகருக்கும் இடை யிலான படகுச் சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமைச்சர்கள், பிரதியமைச் சர்கள், வட மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு இந்த படகுச் சேவையை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்தப் படகுச் சேவை நடத்தப்படவுள்ள துடன் முதற்கட்டமாக நான்கு படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதன் மூலம், தரைவழியாக 2 1/2 மணி நேரம் மேற்கொள்ளும் பயணத்தை இந்த படகுச் சேவையின் மூலம் சுமார் 45 நிமிடங்களுக்குள் மேற்கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் இந்தப் பிரதேசத்திலுள்ள மக்கள் பெரிதும் நண்மையடையவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பூநகரியிலிருந்து குருநகருக்கு தற்பொழுது சென்றுவரும் பொதுமக்கள் வழங்கும் பஸ் கட்டணத்தை விட குறைந்ததாக படகின் மூலம் செல்லும் பயணமொன்றுக்கு 40 ரூபா மாத்திரமே அறவிடப்படவுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வட பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பூநகரி – குருநகர் பிரதேசங்களுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் இந்தப் படகுச் சேவையை வெகுவிரைவில் ஆரம்பிப்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் விரைவில் மீள்குடியேற்றம் அமைச்சர் மில்ரோய் உறுதி

சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு விரைவில் வீடுகளை நிர்மாணித்து குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இவர்களுக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சம்பூரில் வீடுகளை நிர்மாணித்து வழங்க முடியாது போனால் அதற்கு அயலிலுள்ள பிரதேசமொன்றிலாவது அம் மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படு மெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த நான்கு வருட காலமாக சம்பூரிலிருந்து இவ்வாறு 500 குடும்பங்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்கின்றன என தெரிவித்த அமைச்சர், நேற்று முன்தினம் தாமும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் நேரில் சென்று அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சி னைகள் சம்பந்தமாக ஆராய்ந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:

இறுதிக்கட்ட யுத்தத்தில்பாதிக்கப் பட்டவர்கள் சம்பந்தமாகவே பலரது கவனமும் உள்ளது. எனினும் அதற்கு முன்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் தொடர்பாக ஆராய்ந்து அவர்களுக்கும் தீர்வு பெற்றுக் கொடுப்பதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். அந்த வகையில் சம்பூர் மக்களின் பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

நிகோபார் தீவு அருகில் நள்ளிரவில் புகம்பம் இலங்கை, இந்தியா உட்பட 6 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை; கரையோரங்களில் பதற்றம்; மக்கள் அலறியடித்து ஓட்டம்


திருகோணமலையிலிருந்து ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் கிழக்கு புறமாக நிக்கோபார் தீவுகளுக்கருகில் கடலில் நேற்று அதிகாலையில் பூகம்பம் ஏற்பட் டதாக இலங்கை வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் நந்தலால் பீரிஸ் தெரிவித்தார்.

இந்த பூகம்பம் நிக்கோபார் தீவுகளிலிருந்து 164 கிலோ மீட்டர் தூரத்தில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் கடலுக்கடியில் இலங்கை நேரப்படி நள்ளிரவுக்கு சற்று பின்னர் 1.05 மணிக்கு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இப்பூகம்பம் 7.5 ரிச்டர் அளவில் பதி வானது. இதனையடுத்து அதிகாலை 1.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு சுனாமி முன்னெச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிக்கோபார் தீவுகளுக்கருகில் பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் அனுராதபுரம், பதுளை, பண்டாரவளை, கொழும்பு, காலி, பொத்துவில் போன்ற இடங்களில் நில அதிர்வு உணர்வு உணரப் பட்டுள்ளது. சில இடங்களில் பொருட்கள் ஓரிரு வினாடிகள் குலுங்கியதாகவும் உயரத்திலிருந்த ஓரிரு பொருட்கள் உருண்டு கீழே விழுந்ததாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார்.

இப்பூகம்பத்தையடுத்து வானிலை அவதான நிலையம் விடுத்த சுனாமி முன்னெச்சரிக்கை குறுந் தகவலாக கையடக்கத் தொலைபேசிகளில் முதலில் வெளியாகின. அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணம் உட்பட முழு நாட்டி லும் கரையோரப் பிரதேசங்களில் அமைக் கப்பட்டிருக்கும் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் ஊடாகவும், மத வழிபாட்டுத் தலங்களின் ஒலிபெருக்கிகள் ஊடாகவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் உட்பட சகல கரையோரப் பிரதேசங்களிலும் அல்லோலகல்லோல நிலைமை ஏற்பட்டது. ஆழ்ந்த தூக் கத்திலிருந்த மக்கள் விழுந்தடித்துக்கொண்டு எழுந்து செய்வதறியாது சில நிமிடங்கள் திகைத்து நின்றனர்.

சொற்ப வினாடிகளில் கைகளுக்கு கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக உயரமான பாதுகாப்பு

இடங்களை நோக்கி மக்கள் வெளியே றினர். இதன் விளைவாக கிழக்கு மாகாணத்திலுள்ள கரையோர நகரங்களிலும், முச்சந்திகளிலும் பெரும் சனநெரிசல் ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. எங்கும் பதற்ற நிலைமை சூழ்ந்திருந்தது.

இவ்வாறான நிலையில் இலங்கை வானிலை அவதான நிலையம் அதிகாலை 2.45 மணியளவில் சுனாமி முன்னெ ச்சரிக்கையை மீளப் பெற்றதாகவும் வானி லையாளர் நந்தலால் பீரிஸ் கூறினார்.

இருப்பினும் பதற்றமடைந்திருந்த மக்கள் உடனடியாக வழமை நிலைக்குத் திரும்பவுமில்லை. தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பவுமில்லை. ஓரிரு மணித்தியாலங்களின் பின்னரே மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பியதாக பிரதேசவாசிகள் கூறினர்.

இப்பூகம்பம் ஏற்பட்ட இடத்திலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் நேற்று பிற்பகல் 3.00 மணிவரையும் பத்து சிறிய நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அவை அனைத்தும் 5 ரிச்டர் அளவுக்கு குறைவாகவே பதிவாகின. இந்த அதிர்வுகள் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இப்பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியா, இந்தோனேசியா, மியன்மார், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலும் உடனடியாக சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்களும் அல்லோலகல்லோலப்பட்டனர்.

இருப்பினும் அந்த நாடுகளும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் சுனாமி முன்னெச்சரிக்கையை வாபஸ் பெற்றுக் கொண்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

டுபாய் நீதிமன்றில் இலங்கையருக்கு மரண தண்டனை

டுபாய் நீதிமன்றத்தில், 26 வயதான இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காதலியின் கணவரை படுகொலை செய்த குற்றத்திற்காகவே சம்பந்தப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலனை செய்த நீதவான்கள் ஆயுள் தண்டனையை ரத்து செய்து மரண தண்டனை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டுபாய் மேன்முறையீட்டு நீதவான் எய்சா சாரீப் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆபிரிக்க வாசி ஒருவர் தமது கணவரைப் படுகொலை செய்ததாகக் கொலையுண்டவரின் மனைவி முதலில் வாக்கு மூலம் அளித்திருந்தார். எனினும், தீவிர விசாரணைகளின் பின்னர் தமது காதலரே கணவரை படுகொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த டக்ஸி சாரதி ஒருவரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

தண்டனை விதிக்கப்பட்ட, கொலையுண்ட இலங்கையர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

சேகுவராவின் 82ஆவது நினைவு தினம் இன்று

இடது சாரிப் புரட்சித் தலைவர்களுள் ஒருவரான செகுவராவின் 82ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி பிறந்த இவர், 1959இல் கியூபாவை மீட்டவர் என்ற வகையில் போற்றப்படுகின்றார்.

பிடரல் காஸ்ட்ரோவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட இவர், இடது சாரிக் கருத்துக்களால் கவரப்பட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செயல்படுவதில் தீவிரம் காட்டியவராவார். இளைஞர்கள் மத்தியில் இவர் பெரிதும் போற்றப்பட்ட ஒருவர்.

இவர் இளைஞராக இருந்த காலத்தில் ஆர்ஜென்டினாவில் உதைப்பந்தாட்டம் மற்றும் றக்பி என்பவற்றில் பிரபலம் பெற்றிருந்தார்.

1971இல் இலங்கையில் ஏற்பட்ட இளைஞர் புரட்சியின் போது, இவரது பெயர் இலங்கையில் மிகப் பிரபலம் பெற்றிருந்தது.

புரட்சிக் கருத்துக்களை அல்லது ஏகாதிபத்திய எதிர்கருத்துக்களைக் கொண்டோர், அக்காலப் பகுதியில் இலங்கையில் 'சேகுவரா' என்று அழைக்கப்படும் அளவு இலங்கையில் இவரது பெயர் பிரபலம் பெற்றிருந்தது
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் விடுதலை முன்னணி தூதுக்குழு இன்று வன்னி விஜயம்

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த நிலையில் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மற்றும் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை சந்திப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான தூதுக்குழுவொன்று இன்று வன்னிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

ஜே.வி.பி செயலாளர் ரில்வின் சில்வா,அனுரகுமார திஸ்ஸாநாயக்க,விஜித்த ஹெரத்,சுனில் ஹந்துன்னெத்தி,அர்ஜூன ரணதுங்க,முன்னாள் எம்.பிக்களான இராமலிங்கம் சந்திரசேகரன்,லால்காந்த, ஆகியோர் இக்குழுவில் அடங்கிகின்றனர்.

மூன்று நாட்களாக அமையவுள்ள இந்த விஜயத்தின் போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...