1 ஏப்ரல், 2010

சீனா மிரட்டலை சந்திக்க இந்திய ராணுவம் தயார்: புதிய தளபதி வி.கே.சிங் பேட்டி





இந்தியாவின் பகை நாடுகளாக பாகிஸ்தானும், சீனாவும் உள்ளன. 1962-ம் ஆண்டு சீனா இந்தியா மீது போர் தொடுத்தது. இதன் பிறகு இந்தியாவுடன் எந்த போரிலும் ஈடுபடவில்லை. என்றாலும் இந்தியா மீது மறைமுக யுத்தத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சீன போரின்போது காஷ்மீர், இமாச்சல பிரதேசம் பகுதியில் கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை இன்னும் திருப்பி தர மறுக்கிறது. சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலம் எங்களுக்குதான் சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகிறது.

அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவி அட்ட காசங்களை செய்கிறது. இது மட்டுமல்லாமல் இந்தியாவில் முக்கிய இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்களை திருடுகிறது. அல்லது தகவல்களை அழிக்கிறது.

எல்லை பகுதி முழுவதிலும் சாலைகளை அமைத்து ராணுவ முகாம்களையும் வலுப்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவின் வட எல்லை பகுதியில் மட்டுமே அச்சுறுத்தி வந்த சீனா இப்போது தமிழ்நாட் டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த சண்டையின்போது இலங்கை அரசுக்கு உதவியது போல வந்த சீனா இப்போது அங்கு ஆழமாக காலூன்றி இருக்கிறது.

மறு சீரமைப்பு மற்றும் உதவி பணிகளை செய்வதாக 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் இலங்கையில் புகுந்துள்ளனர். இவர்களில் ஒரு பிரிவினர் தமிழ்நாட்டுக்கு மிக அருகில் உள்ள கச்சத்தீவிலும் முகாமிட்டு உள்ளனர்.

இந்தியாவை நோட்டமிடு வதற்கும் எதிர்காலத்தில் இந்தியா மீது போர் தொடுக்க தயாராகும் வகையிலும் அவர்கள் இலங்கையில் ஊடுருவி இருப்பதாக கருதப்படுகிறது.

இது இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில் நேற்று இந்திய புதிய ராணுவ தளபதியாக பதவி ஏற்றுக்கொண்ட வி.கே.சிங் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

இந்திய ராணுவம் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்கிறது. பாகிஸ் தான் மட்டும் அல்ல சீனாவின் அச்சுறுத்தலையும் சந்திக்கும் வகையில் நமது ராணுவம் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவுக்கு உடனடியாக எந்தவித ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை.

ராணுவத்துறையில் ஊழல் போன்றவை நடக்காமல் பார்த்து கொள்வதில் கவனம் செலுத்தப்படும். இதற்காக ராணுவ உள்கட்ட மைப்புகளில் தேவையான சீரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்படும்.

உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பணிகள் பல உள்ளன. அதில் அதிக அக்கறை எடுத்து கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டிஷ் அமைச்சரின் அறிக்கையை அடுத்து பிரிட்டன் செயற்பாடுகளில் இலங்கை சந்தேகம்



நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் இவ்வேளையில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் இலங்கை பற்றி விசேட அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளதால் பிரிட்டனின் செயற்பாடு குறித்து இலங்கைக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் அமைச்சர் நேற்று முன்தினம் வெளியிட்ட இந்த விசேட வீடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நிராகரித்த அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து ஈட்டிக்கொண்ட வெற்றியை பிரிட்டன் புறக்கணிக்க முயற்சி செய்வதாக தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரம்புக்வெல்ல இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:

"பிரிட்டன் பாரபட்சம் காண்பிக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட காலநேரம் பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது. பரிட்டன் மிக நீண்ட காலமாக இலங்கையின் மனித உரிமை பேணல் பற்றி மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் வெற்றியை ஒடுக்குவதற்காகவே அவர்கள் இவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அமைச்சர் மிலிபான்டின் அறிக்கைக்கு விசேட அரசாங்க தூதுக்குழு ஒன்று விரைவில் பதிலளிக்கும் இவ்வாறு அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலிபான்ட் விசேட வீடியோ அறிக்கையில் தெரிவித்ததாவது:

"இலங்கை அரசாங்கத்திடமிருந்து பதில் பெற்றுக் கொள்வதற்கென மூன்று முக்கிய விடயங்களை நான் இனம்கண்டுள்ளேன். கடந்த மாதம் லண்டனில் நான் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய உலக தமிழர் பேரவை மகாநாட்டிலும் இந்த முக்கிய விடயங்களை முன்வைத்தேன்.

உலகத் தமிழர் பேரவையில் கலந்து கொண்டவர்களின் கவனத்திற்கு நான் முன்வைத்த அதே செய்தியை நான் உங்கள் கவனத்திற்கும் கொண்டு வருகிறேன். இந்த நவீன உலகில் பார்வையாளர்களுக்கு முரண்பாடற்ற செய்திகளை நாம் முன்வைப்பது மிகமிக முக்கியமாகும்.

இலங்கையில் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயம் வன்செயலை ஒழித்தலாகும். பொருளாதார, சமூக மாற்றங்கள் வன்முறை மூலம் அன்றி அரசியல் மூலமே ஏற்படுத்தப்படுகின்றன. இலங்கையில் எந்த சமூகத்தினருக்கும் வன்முறை உதவமாட்டாது.

இரண்டாவது முன்னுரிமை, சகல இலங்கையர்களுக்கும் சம அடிப்படையில் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகள் கிடைக்க வேண்டும். அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் அதன் பின்னரும் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் இலங்கையில் ஊடக சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் குறித்தும் உங்களில் பலர் கவலை கொண்டிருக்கலாம்.

ஒரு ஆரோக்கியமான ஜனநாயகம் தேர்தல்கள் மூலம் மட்டும் ஏற்படுவதில்லை. சுதந்திரமான சமுதாயத்தில் சுயாதீனமான நீதிசேவை மூலமே ஆரோக்கியமான ஜனநாயகம் மலர்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வது மிக முக்கியமாகும்.

இலங்கை அங்கீகரிக்க வேண்டிய இரண்டாவது தொகுதி உரிமைகள் என்னவென்றால், சகல இலங்கை குடிமக்களுக்கும் சம உரிமைகளை கொடுக்கும் வகையில் அரசியல்யாப்பு விதிமுறைகளை சீரமைப்பதாகும். எந்தவொரு நாட்டிலும் இது ஒரு சவால் விடுக்கும் பிரச்சினையாகும்.

ஆனால் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதித்து நடப்பது ஒரு நாகரிகமான சமுதாயத்திற்கு இருக்கவேண்டிய அத்தியாவசிய பண்புகளில் ஒன்றாகும்."எனத் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை நிறுத்தியது பற்றி குறிப்பிடுகையில், "ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் வெளிப்படையான வர்த்தக உறவுகளை பேணவே விரும்புகிறது என்று கூறினார். ஆனால், ஐரோப்பிய ஆணைக்குழு எழுப்பிய மனித உரிமை பேணல் விடயங்கள் குறித்து திருப்திகரமான பதிலளிக்காதமையே வரிச்சலுகையை இடைநிறுத்துவதற்கு காரணமாக இருந்தது" என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவில் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கையில் தஞ்சம்!






இந்தியாவில் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கையில் தஞ்சம்!
இந்தியாவில் பொலிசாரால் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கைக் காடுகளில் மறைந்திருப்பதாக இரகசியத் தகவல் ஒன்று கசிந்திருக்கின்றது.

இவருக்கு இங்குப் புகலிடம் கொடுத்திருப்பவர் ஒரு 'பெரும் புள்ளி' என்றும் கூறப்படுகின்றது. இவரைக் காண்பவர்கள் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் தரலாம்.virakesari
மேலும் இங்கே தொடர்க...

புலிகளிடமிருந்து எடுக்கப்பட்ட தங்கம் வங்கிகளில் டெபாசிட்: இலங்கை அரசு தகவல்






புலிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பெருமளவு தங்கம் மற்றும் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
÷விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், அவர்களிடமிருந்து கிலோ கணக்கில் தங்கம் மற்றும் ஏராளமான பணத்தை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அது தற்போது வங்கிகளில் உரிய கணக்குகளோடு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று அதிபரின் மூத்த ஆலோசகர் பாசில் ராஜபட்ச தெரிவித்தார்.
÷விடுதலைப் புலிகளிடமிருந்து அபகரிக்கப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை இலங்கை அரசு கணக்கில் கொண்டு வரவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கு பாசில் ராஜபட்ச விளக்கம் அளித்துள்ளார்.
÷விடுதலைப் புலிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எல்லாவற்றையும் பாதுகாப்பு படையினர் எங்களிடம் ஒப்படைத்தனர். அதை நாங்கள் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளோம் என்றார் அவர்.
÷இந்தப் பிரச்னையை எதிர்க்கட்சி தலைமை கொறடா ஜோசப் மைக்கேல் பெரேரா இலங்கை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். விடுதலைப் புலிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் பெருமளவு பணத்தின் கதி என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
÷விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார செயலர் குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தெரிவித்த தகவல்களை அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
÷பிற எதிர்க்கட்சிகளும் இந்த கேள்வியை எழுப்பின. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும் எந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
÷கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த முக்கிய ஆவணங்களையும் தங்கம், பணம் போற்றவற்றையும் இலங்கை ராணுவம் அபகரித்து கொண்டது. ஆனால் பணம், தங்கம் அபகரித்தது குறித்து இலங்கை அரசு தரப்பில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டதை இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அடுத்த தலைவரை கட்சிதான் கூறவேண்டும்





மு. கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி, திமுகவின் தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கட்சிக்கு மட்டுமே உண்டு என்றும், தான் உட்பட எந்த ஒரு தனி நபரும் அது குறித்து இறுதி முடிவு எடுத்துவிட முடியாது எனவும் கூறியிருக்கிறார்.

மத்திய உரத்துறை அமைச்சரும் திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, கருணாநிதிக்கு பிறகு திமுகவில் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும், அவரிடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அண்மையில் கூறியது குறித்தே தனது கருத்துக்களை முதல்வர் அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அரசுப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்று சமூகப் பணியில் இறங்கப்போவதாக கருணாநிதி அறிவித்ததிலிருந்து, அவருக்குப் பிறகு கட்சித் தலைமை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்பது குறித்து தொடர்ந்து ஊகங்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.


ஸ்டாலின்

நீண்ட காலமாக கட்சிப் பணியில் ஈடுபட்டு இப்போது துணைமுதல்வராகவும் இருக்கும் கருணாநிதியின் இரண்டாவது மகன் ஸ்டாலின் தான் அடுத்த திமுக தலைவர் மற்றும் முதல்வராவார் என்று பொதுவாக பேசப்பட்டாலுங்கூட, கடந்த சில ஆண்டுகளாக கட்சிப் பணியில் தீவிரம் காட்டி இப்போது கட்சிப் பொறுப்பையும் பெற்றிருக்கும் மூத்த மகன் அழகிரியோ, தம்பி ஸ்டாலின் முதல்வராவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அதன் விளைவாகத்தான் கடந்த வாரம் ஜூனியர் விகடன் தமிழ் இதழுக்கு அளித்த பேட்டியில் கருணாநிதிக்குப் பிறகு எவரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்று கூறியது என நம்பப்படுகிறது.

ஆனால் அழகிரி பேட்டி குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நக்கீரன் தமிழிதழ் முதல்வரை பேட்டி கண்டபோது அழகிரியின் கருத்து பற்றி கேள்வி எழுப்ப கட்சியே முடிவு செய்யும் என முதல்வர் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் மோதல் இருப்பதாக நிலவும் செய்திகள் குறித்து நக்கீரன் பேட்டியாளர் கேட்டபோது கருணாநிதி, அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் நீங்கள் கூறுவது போல உரசல் எதுவுமில்லை, அப்படி அவர்கள் உரசிக் கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல என்று மட்டுமே கூறியிருக்கிறார்.


மு.க. அழகிரி

ஓய்வு பெறுவது என்ற தனது முடிவில் மாற்றமில்லை என்பதையும் அவர் சூசகமாக மீண்டும் தெரிவித்திருக்கிறார். மற்றபடி தனது திட்டங்கள் குறித்து எதையும் சொல்லமறுத்துவிட்டார் அவர்.

கடந்த ஆகஸ்டிலிருந்து குறைந்தபட்சம் மூன்று முறையாவது ஓய்வு பெறுவது உறுதி என்றும், ஒரு முறை ஸ்டாலினே தனது பணியினைத் தொடரவேண்டும் என்ற ரீதியிலும் கருணாநிதி பேசியிருக்கிறார், நான்காவது முறை ஓய்வு பெறுவது என் சொந்த விஷயம் என்றார்.


திமுக ஊர்வலம் ஒன்று

அழகிரியின் ஜூனியர் விகடன் பேட்டி வெளியான பிறகு, கடந்த ஞாயிறன்று, சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போதும் கருணாநிதி ஸ்டாலினை வெகுவாகப் பாராட்டி, என் மனதில் நினைக்கிற அனைத்தையும் சிறப்பாக செய்துமுடிக்கிறார். அவரை ஆங்கிலத்தில் டெபுடி சி எம் என்று அழைக்கிறார்கள். நான் அவரை எனக்கு துணையாக இருக்கின்ற முதல்வர் என்றே கருதுகிறேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்ட அவரது உரை பிரதியில் எனக்குத் துணையாக இருக்கின்ற முதல் அமைச்சர் என்றே கருதுகிறேன் என்று அவர் கூறியதாக காணப்பட்டது. இது பற்றியும் நோக்கர்கள் பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள அழகிரி இன்றிரவு சென்னை திரும்புகிறார்
மேலும் இங்கே தொடர்க...

கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் எனும் கருத்தை அரசாங்கமும் ஏற்பு:மைத்திரி



பயங்கரவாத, பிரிவினைவாதத்தை மீண்டும் தோற்றுவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் பிரிவினைவாதத்தை விதைப்பதற்கு முயற்சிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு துணைபோகும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியிருப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து பதிலளிக்கையில்,

" பயங்கரவாதம், பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரிவினைவாதத்தை மீண்டும் விதைப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.

தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த பலர் பயங்கரவாதத்திற்கு கடந்த காலங்களில் துணைபோயிருந்தனர். அந்த நிலைமை கைவிடப்படவேண்டும். பிரிவினைவாதம் மீண்டும் விதைக்கப்படக்கூடாது. இவ்வாறானதொரு நிலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூற்று சரியானதாகும்.

குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. இந்த கூட்டமைப்பை சேர்ந்த சிலர் கடந்த காலங்களில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கு முயற்சித்தனர்.தவறுகளை திருத்திக்கொண்டு பொறுப்புடன் செயற்படல்வேண்டும்.

இதேவேளை, தேசிய நல்லிணக்க அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி விடுத்திருக்கும் அழைப்பு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், யுகத்திற்கு தேவையான தலைவரும் சிறந்த தலைவரும் இருக்கின்றார். அவரது மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு எவரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளலாம்.

யுகத்திற்கு தேவையான தலைவர் இருக்கின்ற நிலையில், புதிய தலைவரை தேடவேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு யாரும் தயங்கக் கூடாது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தொடர்பில் மிலிபாண்ட் கருத்து





இலங்கை ஜனாதிபதியுடன் டேவிட் மிலிபாண்ட்

இலங்கையில் போருக்கு பின்னரான அரசியல் மற்றும் மனித உரிமை நிலவரம் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபண்ட் செவ்வாய்க்கிழமை இரவு பிரிட்டனின் கரிசனைகளை வெளிப்படுத்தினார்.

பிரிட்டனில் வாழுகின்ற இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியின மக்களின் சந்திப்பு ஒன்றை இலங்கைக்கான பிரிட்டிஷ் பிரதமரின் சிறப்புத் தூதுவரான நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ் பிரவுண் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் ஃபொஸ்டர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த சந்திப்பில் வீடியோ மூலம் உரையாற்றிய டேவிட் மிலிபாண்ட் அவர்கள், இலங்கை முன்னுரிமை கொடுக்க வேண்டிய மூன்று முக்கிய விடயங்களை வலியுறுத்தியுள்ளார்.


இலங்கை அகதிகள் மத்தியில் மிலிபாண்ட்
இலங்கை அகதிகள் மத்தியில் மிலிபாண்ட்
இலங்கையில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை வன்செயல்கள் மூலம் கொண்டுவர முடியாது என்று கூறிய மிலிபாண்ட் அவர்கள், அங்கு வன்செயல்கள் குறைக்கப்படுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். வன்செயல்கள் இலங்கையில் எந்த சமூகத்துக்கும் பலனைத்தராது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் அனைத்து இலங்கையருக்கும் சமமாக கிடைக்க வழி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


உண்மையான ஜனநாயகம் என்பது, நியாயமான தேர்தல், சுதந்திரமான ஊடகம், மற்றும் சுயாதீனமான நீதித்துறை ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிவில் சமூகத்தின் பெறுமானங்களில் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படல் ஒரு முக்கிய அம்சம் என்றும் டேவிட் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் வெளிப்படையான மற்றும் பங்களிப்புடனான ஒரு வணிக உறவைப் பேண ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக கூறிய அவர், ஆனால், மனித உரிமைகள் விவகாரங்கள் காரணமாக ஜி.எஸ்.பிளஸ் சலுகைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுவிட்ட்டதாகவும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுவர் போராளிகள், அங்கவீனர்கள்; 1300 பேர் இன்று உறவினரிடம் ஒப்படைப்பு





புனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அங்கவீனர் களடங்கிய சுமார் 1300 பேர் இன்று முதலாம் திகதி விடுவிக் கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்படவிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நடைபெறவிருக்கும் இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார். பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி சிறுவர் பேரா ளிகள் விடுவிக்கப்பட்டு பெற்றோர்களிடமும் உறவினர்களிட மும் கையளிக்கப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே மேலும் ஒரு பகுதி சிறுவர் போராளிகள் இன்று விடுவிக்கப்படுவர்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் 437 வீடுகள் இன்று மக்களிடம் ஜனாதிபதியினால் கையளிப்பு






வடமராட்சி, தென்மராட்சி மற்றும் வலிகாமம் ஆகிய பகுதிகளில் இராணு வத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 437 வீடுகள் இன்று பொதுமக்களிடம் கைய ளிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்த வீடுகளை உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வைப்பார்.

வீடுகள் கையளிக்கும் நிகழ்வு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும். மீளக் குடி யேற்றப்பட்டவர்களுள் மிகவும் வறுமை நிலையிலுள்ளவர்களுக்காகவே விசேட மாக இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் இந்த வீடுகளை தென்பகுதி வர்த்தகர்களின் உதவியுடன் நிர்மாணித்துள்ளனர்.

வீடுகள் அவரவர் சொந்தக் காணிகளில் நிர்மாணிக்கப் பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...