4 ஜூலை, 2011

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான விவாதம்

பிரித்தானிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை விரைவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கொன்சவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்கோட்டின் தகவல்படி இன்னும் விவாதத்துக்கான உறுதிப்படுத்தப்பட்ட திகதி குறிக்கப்படவில்லை.

இலங்கையில் சமாதானத்தையும் நீதியையும் நிலை நாட்டுவது தொடர்பிலேயே இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இந்தப் பிரேரணை 52 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் இலங்கை தொடர்பில் பரிந்துரைத்துள்ள போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளல் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு தொழிற் கட்சியும் ஆதரவளிக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

முச்சக்கர வண்டியில் நான்கு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்ல முடியும்

முச்சக்கரவண்டியில் இனிமேல் நான்கு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்லமுடியும் என்பதுடன் நான்கு பயணிகளுக்கு மேலதிகமாக ஏற்றிச்செல்லும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து பொலிஸினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவிக்கையில்,

முச்சக்கரவண்டியில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்செல்வது சட்டவிரோதமானது. அந்த விதியை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். முச்சக்கரவண்டிகள் வீதிவிபத்துகளில் சிக்கிக்கொள்வதற்கு இதுவே பிரதான காரணமாகும்.

முச்சக்கரவண்டியில் அதிகபட்சமாக நான்குபேரை மாத்திரமே ஏற்றிச்செல்லவேண்டும் இதுவே பாதுகாப்பானது. அதனை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

லோட்ஸ் மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய இளைஞர்

லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இளைஞர் ஒருவர் புலிக் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேற்று இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதன்போது தமிழ் இளைஞர் ஒருவர் விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியவாறு மைதானத்தினுள் ஓடியுள்ளார்.

இதனையடுத்து அவர் அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி வழங்க இந்தியா இணக்கம்

இந்திய, இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான இரண்டு நாள் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை புதுடில்லியில் நிறைவடைந்தது. இக்கலந்துரையாடலில் இலங்கை இராணுவத்தின் வினைத்திறனை முன்னேற்ற இந்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதன் போது இந்திய இராணுவக் கல்லூரிகளில் இலங்கை இராணுவத்தினருக்கு கல்வி சம்பந்தமான பயிற்சிகளை அதிகளவில் வழங்குதல், கலகத் தடுப்பு நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்வது போன்ற விடயங்களில் இரண்டு தரப்பும் இணக்கத்தை வெளியிட்டன.

இதனைத் தவிர இலங்கை இராணுவத்தினருக்கு பல பயிற்சித் திட்டங்களையும் வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. இதில் மனிதாபிமான பயிற்சிகளும் உள்ளடங்கும். ஆங்கிலப் பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறையிலும் இந்தியா, இலங்கை இராணுவத்துக்கு உதவவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவில் திரையிடப்படவிருக்கும் சனல்4 ஒளிப் பதிவுக் காட்சி

இந்திய தஞ்சை மாவட்ட திலகா திடலில் இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு நாளையொட்டி சுடரேந்தி உறுதியேற்கும் நிகழ்ச்சி எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை தமிழர் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தஞ்சை தெற்கு வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனியஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமை தாங்கினார்.

தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியின் மாவட்ட செயலாளர் பழ. ராசேந்திரன், தமிழர் தேசிய பேரவை தலைவர் துரை குபேந்திரன், அறிவியல் பேரவை தலைவர் பேராசிரியர் பாரி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்து உத்திராபதி, உடல் உழைப்பு சங்க பொதுச் செயலாளர் வெ. சேவையா, கும்பகோணம் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் துரை மதிவாணன், இந்திய கம்யூனியஸ் கட்சி நகர செயலாளர் ராசேந்திரன், மக்கள் விடுதலை கட்சி மாநிலக்குழு உறுப்பினர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எதிர்வரும் 8ஆம் திகதி இந்தியா முழுவதும் இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு நாளாக நடைபெறுவதையொட்டி தஞ்சை திலகர் திடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுடரேற்றி உறுதியேற்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும்.

கட்சி, சாதி, மத பேதங்களை கடந்து தமிழின உணர்வாளர்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரும் எதிர்வரும் 8ஆம் திகதி அணி திரள வேண்டும் என இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு தின கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. அன்றைய தினம் ஈழத் தமிழர்கள் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட துயரங்கள் ஆவணப்படமாக திரையிடப்படுகிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...