11 அக்டோபர், 2009

இந்தியா நாடாளுமன்றத் தூதுக்குழு புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர்கள் சந்திப்பு


http://www.montagelanka.com/wp-content/uploads/2009/03/montage-march-final-2009-22.jpg


இன்று இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவினருக்கும் புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.ஸ்ரீதரன் ஆகியோர்க்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றுமாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்த விசேட சந்திப்பானது சுமார் 45நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்போதைய நாட்டின் நிலைமைகள் தொடர்பாக மேற்படி தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் மிகவும் ஆர்வமாக கட்டறிந்து கொண்டனர். தற்போதைய நிலைமைகள் மாத்திரமல்லாது கடந்த யுத்தத்தின்போது இடம்பெற்ற பிரச்சினைகள், யுத்தத்தின் தன்மைகள், அழிவுகள் பற்றியும் மிகவும் ஆழமாக இந்தியத் தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது இன்று முதலாவது பிரச்சினையாகவிருக்கும் இடம்பெயர்ந்து முகாம்களில் இருக்கின்ற மக்களை மீள வாழவைப்பது என்கிற பிரச்சினையை மேற்படி தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இருவரும் இந்தியத் தூதுக்குழுவினருக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். அத்துடன் தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளும், தமிழ்நாட்டு மக்களும் கடந்த காலங்களில் அதாவது 1980களில் தொடக்கம் தமிழ் மக்கள்பால் கொண்டுள்ள அக்கறைக்கும், அவர்களுக்கு வழங்கிவரும் உதவிகளுக்கும் இருவரும் நன்றி கூறிக் கொண்டார்கள். மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் செய்து அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து அவர்;களை மீள்குடியமர்த்தும் விடயத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்குமாறும் இருவரும் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பிலான மகஜர் ஒன்றினையும் தூதுக்குழுவிடம் கையளித்துள்ளனர்.













http://www.plote.org/images/TN%20MPs.jpg


[TN+MPs.jpg]


மேலும் இங்கே தொடர்க...
மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ் சென்ற தமிழக குழுவினரிடம் வேண்டுதல்


போரினால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த வேண்டும்: அத்துடன் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு ஞாயிறன்று விஜயம் செய்த தமிழக தூதுக்குழுவினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்குச் சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருக்கு துரையப்பா விளையாட்டரங்கத்தி்ற்கு அருகில் வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து, அங்குள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு குழுவினர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் யாழ் ‘நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் யாழ் மாவட்டத்தின் அரச திணைக்கள அதிகாரிகள், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தகர்சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் கருத்துக்கள் பிரச்சினைகள் குறித்து தமிழக அரசியல் தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். இந்தச் சந்திப்பையடுத்து, முகாம்களில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டு, யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களையும் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.

இந்தச் சந்திப்புக்களின்போது முகாம்களில் உள்ள மக்களை விரைவில் விடுதலை செய்து அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி வருகை தந்து மீன் பிடிப்பதனால் ஏற்பட்டுள்ள தீர்க்கப்படாத பிரச்சினைக்கு சுமுகாமான ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது பதிலளித்த இந்தியக் குழுவினர், முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்கவும், சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரின் அனுமதியோடும் இலங்கையின் உண்மையான நிலைமையை அறிவதற்காகவே தாங்கள் வந்துள்ளதாகவும், விசேடமாக இடம்பெயர்ந்த மக்களின் நிலைப்பாட்டை நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்து செல்வதற்காகவுமே வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை விஜயத்தின் முடிவில் முதல்வர் கருணாநிதிக்கு தாங்கள் அறிக்கையொன்றை கையளிக்கவுள்ளதாகவும், இதுபற்றி மத்திய அரசாங்கத்தன் கவனத்திற்குக் கொண்டு வரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள், இரண்டாந்தரப் பிரஜைகளாக அல்லாமல் முழு உரிமைகளுடனும் வாழ வழிசெய்ய வேண்டும் என்பதில் தமிழக அரசும் தமிழக மக்களும் உறுதியாக இருப்பதாகவும், இதற்கான ஓர் அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்கு இந்திய அரசு தயாராக இருப்பதாகவும், அந்த நோக்கத்தி்ன் முதற்படியாகவே தமது இந்த விஜயம் அமைந்திருப்பதாகவும் இந்தியக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் ப.சிதம்பரம் ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள இந்தியக் குழுவினர் மீனவர் பிரச்சினைக்கு விரைவில் சுமுகமான ஒரு தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.

முகாம்களில் இருந்’து வந்துள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள: தேவைகள் குறித்து கேட்டறிந்த அவர்கள் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
ஈழத்தமிழர்களை மீட்க கோரி தமிழகம் முழுவதும் மூன்று விழிப்புணர்வு பிரசார பயணம் - பழ. நெடுமாறன் அறிவிப்பு.


ராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம்களில் இருந்து ஈழத்தமிழர்களை மீட்க கோரி தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வருகிற ஓக்டோபர் மாதம் 27, 28, 29ஆகிய திகதிகளில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படும் என்றும், பயணத்தின் முடிவில் திருச்சியில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பழ நெடுமாறன் அறிவித்துள்ளார்.

இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு மனித உரிமை மீறலை சந்தித்து வரும் அப்பாவி ஈழத்தமிழர்களை விடுவிக்ககோரி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று மாலை மயிலாப்பூர் மாங்கொல்லையில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கதிற்கு பா. ம. க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு தலைமை தாங்கினார்.

கருத்தரங்கில் மனி உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சர்வதேச பெண்மணியான அமெரிக்காவை சார்ந்த எலைன் சான்டர் என்பரின் உரை திரையில் காண்பிக்கப்பட்டது. பின்னர் பேசிய பழ. நெடுமாறன், முள்வேலி முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழர்களை மீட்க, வருகிற ஓக்டோபர் மாதம் 27, 28, 29 ஆகிய மூன்று திகதிகளில் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படும்.

என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் தா. பாண்டியன் தலைமையிலாள குழுவினர் கன்னியாகுமரியிலிருந்தும், ம. தி. மு. க பொதுசெயலாளர் வைகோ தலைமையிலான குழுவினர் இராமேசுவரத்திலிருந்தும், பா. ம. க. நிறுகூனர் மருத்துவர் ராமதாசு தலைமையிலான குழுவினர் சென்னையிருந்தும், எம்முடைய தலைமையிலான குழுவினர் உதகமண்டலத்திலருந்தும் புறப்பட்டு 29 ஆம் திகதியன்று திருச்சியில் ஒன்று கூடுகிறோம்.

அன்றிரவு திருச்சியில் பிரமாண்டமான பொதுகூட்டத்தை நடத்தவும் தீர்மானித்துள்ளோம். இலங்கைக்கு சென்றிருக்கிற தமிழக எம்.பி.களின் குழுவினர் என்ன அறிக்கையினை வெளியிடுவார்கள் என்பது எல்லோரும் அறிந்ததோம். பி. களின் பயணம் குறித்து எதிர்கட்சிகள் கண்டன குரல் எழுப்பியவுடன், அவர்கள் அனைவரும் தங்கள் கட்சியின் செலவில் தான் சென்றுள்ளனர் என்று கூறியிருக்கிறார்.

கலைஞர் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ஈழத்தமிழர்களின் பிரச்சினை, இன்று உலக தமிழர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது.

அதனால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். என்றார். இந்த கருத்தரங்கில் வைகோ, ராமதாசு, கோ.க மணி, சி. மகேந்திரன், செல்வகுமார், மனோஜ்குமார், துரையரசன் உள்ளிட்ட ஏராளமான இன உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.




மேலும் இங்கே தொடர்க...
ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு- இந்திய நாடாளுமன்றக் குழு யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளுக்கு விஜயம்-

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றுமாலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொகுதிகளின் அமைப்பாளர்கள், கட்சிகளின் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கு பற்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் ஒன்று தொடர்பில் இதன்போது விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இலங்கைக்கான ஐந்துநாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள ரி.ஆர்.பாலு தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இன்றுமுற்பகல் யாழ். குடாநாட்டுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இக்குழுவினர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து யாழ். பொதுநூலகத்தில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்த இக்குழுவினர் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அத்துடன் வேலணைப் பகுதிக்கு சென்று அங்கு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமைகளையும் இவர்கள் பார்வையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்ட இந்தியத் தூதுக்குழுவினர் நலன்புரி நிலையங்களின் உள்ள மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிட்டனர். இந்திய நாடாளுமன்றக் குழுவுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்தும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்குழுவினர் நாளையதினம் மலையகத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கே தொடர்க...
ஆசிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு-
வீரச்சோலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் பற்றி தகவல் இல்லையென உறவினர்கள் தெரிவிப்பு-

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள வீரச்சோலையில் சிவில் மற்றும் சீருடையில் வந்தவர்களினால் விசாரணைக்கு என அழைத்துச் செல்லபபட்டதாகக் கூறப்படும் குடும்பஸ்தரொருவர் பற்றி தகவல்கள் இல்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 45வயதான சிந்தாத்துரை இராசையா என்ற குறித்த குடும்பஸ்தர் தொடர்பாக பொலிசில் உறவினர்கள் முறைப்பாடும் செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு பொலிஸ் சீருடையிலும், சிவில் உடையிலும் வந்தவர்களினால் இவர் வாகனமொன்றில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மறுநாளான நேற்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திலும், வீரச்சோலை பொலிஸ் காவல் நிலையத்திலும் சென்று விசாரித்தபோது அப்படி யாரையும் அழைத்துவரவில்லை என அங்கு பதிலளிக்கப்பட்டதாகவும் உறவினர்;கள் தெரிவித்துள்ளனர்

ஆசிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைத்துவம் இம்முறை இலங்கைக்கு கிடைக்கவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆசிய ஒத்துழைப்பு அமைப்பில் 30 நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்றும், எதிர்வரும் 14ம் திகதி நடபெறவுள்ள வருடாந்த மாநாட்டின்போது இந்த தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர், ரோகித்த போகொல்லாகம நாடு பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டு அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தி, நிரந்தரமான வாழ்வுரிமையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் - தமிழக பிரதிநிதிகளிடம் யாழ் மாணவர் ஒன்றியம் கோரிக்கை
இடம்பெயர்ந்துள்ள மக்களை உடனடியாக சொந்த இடங்களில் குடியமர்த்தி சிதைந்த தேசத்தை அவிருத்தி செய்து இழந்த வாழ்வை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுங்கள்.

நிரந்தரமான உரிமையற்ற அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு நிரந்தரமான வாழவுரிமையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுங்கள் என்று தமிழகத்தில் இருந்து இலங்கை வந்துள்ள தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரிடம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அக்குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். இந்தச் சந்திப்பின் பின்னர் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அன்புக்குரிய தமிழக அரசியல் பிரதிநிதிகளுக்கு!

உங்களுடைய வருகை எங்கள் மக்களிடத்தில் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இன்றைக்கு தமிழ் மக்கள் அவதியான காலத்திற்குள் சிக்குப்பட்டுக் கிடக்கிறார்கள். மிக பிரமாண்டமான முட்கம்பி வேலிகளுக்குள் அவர்கள் பெரிய ஏக்கத்துடன் இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளை இங்கே உங்களால் பாடக்க முடிகிறது. உங்களிடத்தில் எங்களால் எல்லாவற்றையும் இப்படியான முற்றுகைத் தருணத்தில் பேசிவிட முடியாது.

அப்படி ஒரு சூழல் எங்களுக்கு இல்லை என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்களது பயணம் எப்படியானது எதற்காக நிகழுகிறது என்பதைக்கூட அதன் சாட்சியத்திற்கு வலுத்தருகிற விதமாக அல்லது எங்கள் பாடுகளை சொல்லுகிற விதமாக கூட இந்த வாழ்வுச் சூழலும் இங்கு நடந்த உரையாடல் சூழலும் இல்லை என்பதுதான் எங்கள் துக்கமாக இருக்கிறது.

மிகவும் கொடுமையான யுத்தம் நடந்த பிறகு அதன் விளைவாக பெரியதாய் விளைந்து போய்க்கிடக்கிறது இன்றைய எமது மக்களின் துயரங்கள். எங்கள் மாணவர்கள் கால்களை, கைகளை, மனங்களை இழந்து யுத்தின் விளைபொருட்களாக இங்கு வந்திருக்கின்றார்கள்.

சமூக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். கல்வியையும் மாணவத்தன்மையையும் முழுமையாக இழந்து கற்க முடியாத நிலையிலேயே வந்திருக்கிறார்கள். இதை யாரால், எப்படி ஈடு செய்ய முடியும்? இந்த விளைவுகளுக்கு எல்லோருமே காரணமாக இருந்தவர்கள். யுத்தம் முடிவடைந்தது உயிரழிவை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. போதும் என்ற வெறுப்பையும் உலகத்தால் கைவிடப்பட்ட கையறு நிலையையும் உணர்த்தியிருக்கிறது.

நடந்து முடிந்தவைகள் தொடர்பான விசாரணைகளைப் பற்றியும் அதற்கு காரணானவர்கள் மீதான குறை கூறுதலைப் பற்றியும் நாம் எதைப் பேசியும் பிரயோசனமில்லை என்றே நினைக்கிறோம். அது ஒட்டு மொத்த உலகம் அதன் ஒழுங்கு, அதிகாரம் பற்றிய சாமானிய சனங்களின் கேள்வியாக இருக்கும்.

இன்று இங்கு நீங்கள் பார்க்கப்போகிறவைகள் பற்றி நீங்கள் கலைஞர் அவர்களுக்கு என்ன அறிக்கை கொடுக்கப்போகிறீர்கள்? அவர் பிரதமருக்கு அதை அனுப்பி வைக்கும்பொழுது என்ன நடக்கப்போகிறது? என்ற கேள்விகள் அல்லது எதிர்பார்ப்பு எமக்கு இருக்கிறது. உண்மையில் எங்கள் மக்களுக்கு விமோசனம் தருகிற விடயங்கள் நடக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.

மக்கள் யுத்த களத்தில் எல்லாவிதமான துன்பங்களையும் அனுபவித்து விட்டு வந்து தற்போது முட்கம்பிச்சிறைக்குள் வார்த்தைகளால் குறிப்பிட முடியாத துயரத்தை அனுபவிக்கிறார்கள். ,டூடு; ணஞ்ச்த;ஞு;ஒண்;ண் மக்களை உடனடியாக சொந்த இடங்களில் குடியமர்த்தி சிதைந்த தேசத்தை அவிருத்தி செய்து இழந்த வாழ்வை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுங்கள்.

நிரந்தரமான உரிமையற்ற அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு நிரந்தரமான வாழவுரிமையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுங்கள் என்ற இரண்டு கோரிக்கைகளையும்தான் எமது மாணவர்கள் சார்பாக மக்களுக்காக உங்கள் முன் தருகிறோம்.

தமிழ் மக்களாக அவர்களின் மாணவர்களாக இருந்து கொண்டு இந்தக் கோரிக்கைகளையே உங்களிடம் முன் வைக்கிறோம். தமிழ் மக்களின் அரசியல் தொடர்பாக ஈழப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே அதாவது 30 வருடத்திற்கு மேலாக எல்லோருடனும் பேசிவருகிறோம். ஏமாற்றங்களும் படுதுயரங்களும்தான் எமக்கு கிடைத்திருக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...
தென் மாகாண சபை தேர்தலில் ஐ. ம.சு. மு 38 ஆசனங்களை பெற்று வெற்றி
நடைபெற்று முடிந்த தென் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 804,071 வாக்குகளை பெற்று 38 ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி 297,180 வாக்குகளை பெற்று 14 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 72,397 வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களையும் பெற்றுள்ளன
மேலும் இங்கே தொடர்க...


இந்தியா நாடாளுமன்றத் தூதுக்குழு புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர்கள் சந்திப்பு


http://www.montagelanka.com/wp-content/uploads/2009/03/montage-march-final-2009-22.jpg


இன்று இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவினருக்கும் புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.ஸ்ரீதரன் ஆகியோர்க்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றுமாலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்த விசேட சந்திப்பானது சுமார் 45நிமிடங்கள் இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்போதைய நாட்டின் நிலைமைகள் தொடர்பாக மேற்படி தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் மிகவும் ஆர்வமாக கட்டறிந்து கொண்டனர். தற்போதைய நிலைமைகள் மாத்திரமல்லாது கடந்த யுத்தத்தின்போது இடம்பெற்ற பிரச்சினைகள், யுத்தத்தின் தன்மைகள், அழிவுகள் பற்றியும் மிகவும் ஆழமாக இந்தியத் தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது இன்று முதலாவது பிரச்சினையாகவிருக்கும் இடம்பெயர்ந்து முகாம்களில் இருக்கின்ற மக்களை மீள வாழவைப்பது என்கிற பிரச்சினையை மேற்படி தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இருவரும் இந்தியத் தூதுக்குழுவினருக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். அத்துடன் தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளும், தமிழ்நாட்டு மக்களும் கடந்த காலங்களில் அதாவது 1980களில் தொடக்கம் தமிழ் மக்கள்பால் கொண்டுள்ள அக்கறைக்கும், அவர்களுக்கு வழங்கிவரும் உதவிகளுக்கும் இருவரும் நன்றி கூறிக் கொண்டார்கள். மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் செய்து அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து அவர்;களை மீள்குடியமர்த்தும் விடயத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்குமாறும் இருவரும் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பிலான மகஜர் ஒன்றினையும் தூதுக்குழுவிடம் கையளித்துள்ளனர்.













http://www.plote.org/images/TN%20MPs.jpg


[TN+MPs.jpg]





மேலும் இங்கே தொடர்க...