30 நவம்பர், 2010

அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள இளவாலை, வித்தகபுரத்தில் ஒரு மாதத்திற்குள் மீள்குடியேற்றம்

யாழ். குடா நாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த இளவாலை மற்றும் வித்தகபுரம் பிரதேசங்களில் அடுத்துவரும் ஒரு மாத காலத்திற்குள் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கேட்டிருந்த வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், யாழ்ப்பாணம் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் வசித்த மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்றி வருகிறோம்.

இதன்படி இளவாலை வட மேற்கு, வித்தகபுரம், இளவாலை வடக்கு ஆகிய பகுதிகளில் ஒருமாத காலத்தில் மக்கள் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.

இதேபோன்று மயிலிட்டியில் கண்ணி வெடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதோடு விரைவில் அங்கும் மீனவ குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவர்.

மயிலிட்டி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது.

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்ற பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

மயிலிட்டியில் மக்களை மீள் குடியேற்று வதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு யாழ். இராணுவத்தளபதியுடன் பேசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இங்கு மக்களை மீள் குடியேற்ற ஏற் கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறுக்கீடு: மயிலிட்டி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருப்பதாகக் கூறுவது தவறான தகவல் என அ. விநாயமூர்த்தி எம். பி. கூறினார்.

பதில்: இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் மயிலிட்டி பாதுகாப்பு வல யத்திலே இருக்கிறது. அதனை அண்டிய கிராமங்களான இளவாலை வட மேற்கு, வித்தகபுரம், இளவாலை வடக்கு ஆகிய பகுதிளில் மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ளனர். அதே போன்று மயிலிட்டியிலும் மக்களை மீள் குடியேற்றுவதில் எதுவித தடையும் இல்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

உலகின் தலைசிறந்த நாடாக இலங்கையை மேம்படுத்தும் பட்ஜெட் பிரதமர்


இந்த வரவு-செலவுத் திட்டத்தை முன்னெடுப்பதினூடாக எமது நாடு உலகில் தலை சிறந்த நாடாக அபிவிருத்தி அடைவதுடன் நாட்டில் புத்தெழுச்சியும் ஏற்படும் என்று பிரதமர் தி. மு. ஜயரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவி த்தார். வரவு-செலவுத் திட்டம் மீதான ஆறாவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமர் தனதுரையில் மேலும் கூறியதாவது;

மக்களை ஏமாற்றி ஆட்சி பீடமேறி வந்த ஐ.தே.க. நாட்டை அபிவிருத்தி செய்ய எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த வரவு-செலவுத் திட்டத்தினூடாக நாட்டை பொருளாதார ரீதியில் மேம்படுத்தவும் உலகில் சிறந்த நாடாக முன்னேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

யுத்தம் காரணமாக சேதமடைந்த வட பகுதியை அபிவிருத்தி செய்ய பெரு மளவு நிதி செலவிடப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு வீதிகள், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் என்பன மீளமைக்கப்படுகின்றன. இதன் காரணமாக வேறு தேவைகளுக்கு ஒதுக்கும் காசு குறைவடைகிறது.

இந்த வரவு-செலவுத் திட்டத்தினூடாக கிராமங்களை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வறியோருக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு கமநெகும, மகநெகும திட்டங்களுக் கும் கூடுதல் நிதி வழங்கப்பட்டு ள்ளது. பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கவும் கர்ப்பிணிகளுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளைக்காரர்கள் இங்கு கொண்டு வந்த பாண், பட்டர், சீனி போன்ற பல்வேறுபட்ட பொருட்களை ஓரம்கட்டி உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். நாம் ஊடக வியலாளர்களின் சுதந்திர செயற்பாடுகளுக்கு இடையூறு செய்ததாக கடந்த காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் ஊடக வியலாளர்கள் கெளரவமாகவும் சுதந்திர மாகவும் செயற்படக்கூடிய சூழலை ஏற் படுத்தவும் ஊடகத்துறையை மேம்படுத்தவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் படி ஊடகவியலாளர்களுக்கு புகைப்பட கருவி, கணனி என்பன கொள் வனவு செய்ய 50 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளது.

நாட்டில் 12 இலட்சம் அரச ஊழியர்களும் 6 இலட்சம் ஓய்வூதியம் பெறுவோரும் உள்ளனர். அரச ஊழியர்களுக்கு இப்போது 5 வீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் 25 ஆயிரம் ரூபா கூட வழங்க நாம் தயாராக உள் ளோம். அதனால் வீணாக அரச ஊழி யர்களை தூண்டிவிட வேண்டாமென்று எதிர்க்கட்சியை கோருகிறோம்.

கடந்த காலத்தில் பாகிஸ்தான் எமக்கு பலவகையிலும் உதவியது. பாகிஸ்தான் ஜனாதிபதி இங்கு வருகை தந்திருப்பது குறித்து பெருமையடைகிறோம். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எதிர்க்கட்சியில் உள்ள இளம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பண்டிகைக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, விலையேற்றத்தை தடுப்பதில் அரசு தீவிர கவனம்


பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டு க்குள் வைத்திருப்பது தொடர்பில் தமது நேரடி கவனத்தைச் செலுத்தப் போவதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரி வித்தார்.

அதேவேளை பிரேஸிலில் இருந்து சீனி இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையில் இரண்டாவது தடவையாகவும் வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சராகப் பொறுப்பேற்று ள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ; மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் தேவையான சகல அத்தியா வசியப் பொருட்க ளையும் பண்டிகைக் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விநியோ கிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

போதுமானளவில் அரிசி கையிருப்பில் உள்ளதால் தேவைப்படும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை இந்தியா, சீனா, ஜப்பான், அவுஸ்திரேலியா, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானித்துள் ளதாகத் தெரிவித்தார்.

அனைத்துப் பொருட்களையும் கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த அவர், பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடின்றி பொருட்களை கொள்வனவு செய்வதும் உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, பிரேஸில் தூதுவர் பெட்ரோ ஹென்றிலொப்ஸ்சுக்கும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வுக்குமிடையிலான சந்திப்பொன்று வர்த் தக நுகர்வோர் அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பிரேஸிலில் இருந்து சீனியை குறைந்த விலையில் இறக்குமதி செய்வதற்கு உதவுவதாக பிரேஸில் தூதுவர் தெரி வித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி யில் அரசாங்கம் தலையிட்டு நேரடிக் கொள்வனவை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இடைத்தரகர் களின் தலையீடின்றி பொருட்களை கொள்வனவு செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப் படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ராஜதந்திர ரீதியில் இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்ட அமைச்சர் கறுப்புச் சந்தை வர்த்தகர்களுக்கு எதிராக செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தற்போது பயங்கரவாதம் அற்ற நாடு; மிக விரைவில் முன்னேற்றம் அடைந்த நாடுகளின் பட்டியலிலும் சேரும்

பாகிஸ்தான் ஜனாதிபதி கூறுகிறார்

உலகிலே பயங்கரவாதம் இல்லாத ஒருசில நாடுகளில் இலங்கையும் இணைந்துள்ளது. உலகிலே அபிவிருத்தியடைந்த நாடுகளின் பட்டியலில் இணைவதற்கும் தற்போது இலங்கைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஷிப் அலி சர்தாரி குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தின் மூலம் துன்புறுத்தப்படுகின்ற ஒரு நாடு என்ற வகையில் பயங்கரவாதத்தின் கொடூர செயற்பாடுகள் பற்றி பாகிஸ்தான் நன்கறியும் என்று குறிப்பிடுகின்ற சர்தாரி பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டியுள்ள இலங்கைக்கு இன்று நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகிலே அபிவிருத்தியடைந்த நாடாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காணப்படும் உறவு பற்றி குறிப்பிட்ட பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி, தாம் இங்கே வந்ததற்கான நோக்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பினை மேலும் வலுப்படுத்துவதாகும். இந்த நாட்டின் டொலர்களை எமது நாட்டிற்கு கொண்டு செல்லும் நோக்கம் தமது பயணத்தில் கிடையாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் அழைப்பின் பேரில் நேற்று (29) கோட்டே பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகைதந்த பகிஸ்தான் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாகிஸ்தான் ஜனாதிபதியை வரவேற்றார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு தாம் எதிர் பார்த்து உள்ளதாகவும், ஸ்ரீலங்கன் விமான சேவை பாகிஸ்தானுக்கு வருகைத் தரு மென தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார். “பாகிஸ்தான் விமான சேவையைச் சேர்ந்த விமானங்கள் தற்போது இலங்கைக்கு வருகின்றன. எமது இரு நாடுகளுக்கும் இடையேயும் காணப்படும் நீண்டகால நட்புறவினை பேணி வருவது இரு நாடு களினதும் பொறுப்பாகும்.

இலங்கை எனக்கு வழங்கிய மகத்தான வரவேற்பினை நான் பெரிதும் மதிக்கிறேன்” இவ்வாறு சர்தாரி கூறினார். இதன் போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இரு நாடுகளினதும் கடந்தகால உறவுகள் பற்றி நினைவுகூர்ந்தார். முக்கியமாக இந்த நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 2005 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாரிய நன்மை அடைந்து வருவதாகவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார். நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த பாகிஸ்தான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்தனர்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி சிறிய கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார். இலங்கை எனக்கு வழங்கிய மகத்தான வரவேற்பினை நான் பெரிதும் மதிக்கிறேன்” இவ்வாறு சர்தாரி கூறினார். இதன் போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, இரு நாடுகளினதும் கடந்தகால உறவுகள் பற்றி நினைவுகூர்ந்தார். முக்கியமாக இந்த நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 2005 ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளும் பாரிய நன்மை அடைந்து வருவதாகவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார். நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த பாகிஸ்தான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் அங்கு தங்கியிருந்தனர்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி சிறிய கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் எப்பாகத்திலும் இனவிகிதாசாரத்தை மாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை






நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் எந்த ஓர் இனத்தினதும் இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன விகிதாசாரத்தை மாற்றும் எந்த குடியேற்றத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வரவு - செலவுத் திட்டத்தின் ஆறாவது நாள் விவாதத்தை நிறைவு செய்து வைத்து அமைச்சர் உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்புக் குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு - செலவுத் திட்டம் இதுவாகும். இந்த விவாதத்தின் நிறைவு உரையை இரண்டு பிரிவுக ளாக ஆற்ற விரும்புகிறேன். முதலில் எதிர்க் கட்சியினர் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்க விரும்புகிறேன்.

வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காதிருக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவைப் பாராட்டுகிறேன். வடக்கின் மீள்குடியேற்றப் பணிகளுக்கு ஒத்துழைப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

வடக்கில் மீள்குடியேற்றம் என்பது சுலபமானது அல்ல. சகல கட்டமைப்புகளும் அழிக்கப் பட்ட நிலையில் பெரும் தொகை யான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட சூழ்நிலையில் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றோம். முதலில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்கின்றோம். சிலர், மீள்குடியேற்றத்திற்கு நிதி ஒதுக்கப்பட வில்லை என்று கூறுகிறார்கள்.

வடக்கு நீர்ப்பாசனத்திற்கென 1385 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீதி புனரமைப்புக்கென 1065 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடிகளை அகற்ற 700 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு அபிவிருத்திக்கென இரண்டு இலட்சத்து 44 ஆயிரத்து 835 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே மக்களைத் தவறாக வழிநடத் தாதீர்கள். நாடு முன்னேறுவதற்கு நீர், மின்சாரம் இன்றியமையாத வளங்களாகும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கது. வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமே வாக்களித்துள்ளனர்.

வடக்கில் இந்திய இராணுவம் இருந்த போதும் சரி. போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலமானாலும் சரி உயர் பாதுகாப்பு வலயங்களில் யாரும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதன் முதலாகத் தமிழ் மக்களைக் குடியமர்த்தினார். 20 வருடங்களுக்கு முன் இடம்பெயர்ந்த முஸ்லிம்களைக்கூட குடியமர்த்தவில்லை.

நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் எந்த ஒரு இனத்தினதும் இன விகிதாசாரத்தைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வில்லை. அந்த மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவோம்.

பல அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக ஐ.தே.க. குற்றஞ்சாட்டியது. ஆனால் 38 அரச நிறுவனங்கள் இலாபமீட்டுவது குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. 2009 இல் 11,981 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டது. ஆனால் 2010 இல் இன்றுவரை 20 மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளது. இந்த வருட முடிவில் 26 மில்லியன் ரூபாவாக இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நஷ்டம் ஈட்டும் அரச நிறுவனங்களை இலாபமீட்ட வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வரவு - செலவுத் திட்டம் எந்த மாதிரி என எதிர்க் கட்சி கேள்வி எழுப்பியது. இது இலங்கை மாதிரி ‘மஹிந்த சிந்தனை’ மாதிரியாகவே இந்த வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தோட்டப் பகுதி உட்பட சகல இனப் பிரிவினரையும் உள்ளடக்கியதாகவே வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப் பட்டுள்ளது.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சி குற்றச்சாட்டியது. ஆனால் 90 அலகிற்கு அதிகம் பயன்படுத்தினாலே கட்டணம் உயரும். மொத்த மின் பாவனையாளர்களில் 70 வீதமானவர்கள் 90 அலகை விட குறைவாகவே பயன்படுத்துகின்றனர். குறைவாக மின்சாரம் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்.பிகளுக்கும் 90 அலகிற்கு குறைவாக மின்சாரத்தை பாவிக்குமாறு கோருகிறோம்.

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு கட்டண உயர்வு அமுலாகாது. பாடசாலைகள், மதஸ்தலங்களுக்கான மின் கட்டணம் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டு ள்ளது. எதிர்வரும் போகத்தின் போது 1550 மில்லியன் மெற்றிக்தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி இந்த வருடத்தில் 4189 மெற்றிக்தொன் மொத்த நெல் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. இது 17 வீத அதிகரிப்பாகும். இதனூடாக சுதந்திரத்தின் பின் அதிகூடிய நெல் உற்பத்தி இந்த வருடத்திலே பதிவாகிறது. வடக்கு, கிழக்கிலும் இம்முறை கூடுதலான நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

குரக்கன் மற்றும் உழுந்து உற்பத்தியில் தன்னிறைவு காணும் வகையில் இம்முறை வன்னிப் பிரதேசத்தில் குரக்கன் மற்றும் உழுந்து பயிரிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றது முதல் அரச ஊழியர்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் அளிக்கப்பட்டு வந்தன. இம்முறை வரவு - செலவுத் திட்டத்தினூடாக குறைந்தது 1250 ரூபா சம்பளம் அதிகரிக்கிறது. சிலருக்கு 3 ஆயிரம் ரூபாவுக்கு மேல் உயருகிறது.

2010 இல் மின் உற்பத்தி 10 வீதத்தினால் அதிகரித்துள்ளது. வடக்கு, கிழக்கிலும் மின் உற்பத்தியில் இணைந்துள்ளதே இதற்குக் காரணம். வடக்கு, கிழக்கில் மின் உற்பத்தியை 50 வீதத்தினால் உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். படகுகளின் பதிவுக் கட்டணம், திருத்தக் கட்டணம் என்பன நீக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...