28 மே, 2010

அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கு முக்கியமானவை

வட மாகாணத்துக்கான சில அபிவிருத்தித் திட் டங்களின் செயற்பாடு நேற்று அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள் ளது. மன்னார், பள்ளிமுனையில் வாழும் மக்களுக்கு நீர் விநியோகத் திட்டமும் கிளிநொச்சி மற்றும் சுன்னா கம் மின் நிலையங்கள் தடையின்றி மின்சாரம் விநி யோகிப்பதற்கான திட்டமும் நேற்று முதல் நடைமுறை க்கு வருகின்ற அதே வேளை மன்னாரிலும் கிளிநொ ச்சியிலும் வைத்தியசாலைகளுக்கான புதிய கட்டடங்க ளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஏழாயி ரம் மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவாகியுள்ளது.

வடபகுதி மக்களுக்குப் பிரதேச அபிவிருத்தி அரை நூற் றாண்டுக்கு மேல் எட்டாக்கனியாகவே இருந்து வந்து ள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரே இம்மக்கள் அபிவிருத்தியை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

வட மாகாணம் அபிவிருத்தியில் பின்தங்கியிருந்ததற்கு அரை நூற்றாண்டுக்கு மேலாக அம் மாகாண மக்களின் அரசியல் தலைமையை நியாயமான முறையிலும் நியா யமற்ற முறையிலும் தமதாக்கிக் கொண்டிருந்தவர்களே முழுப் பொறுப்பாளிகள். வடபகுதி மக்களை வெவ் வேறு காலகட்டத்தில் வெவ்வேறு கட்சிப் பெயர்களில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர் கள் அபிவிருத்தியில் சிறிதளவேனும் அக்கறை செலு த்தவில்லை.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே தங்கள் பிரதான பணி என்று இத் தலைவர்கள் கூறிய போதிலும் அந்தப் பணியையும் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை.

துப்பாக்கி முனையில் அரசியல் தலைமையைக் கைப்பற் றிய புலிகள் அபிவிருத்திச் செயற்பாட்டுக்கு இடமளிக் காதது மாத்திரமன்றி இருந்த ஓரிரு தொழிற்சாலைக ளையும் முடமாக்கினார்கள. முன்னைய தலைவர்களை போல இவர்களும் இன விடுதலைக்குப் பின்னரே அபி விருத்தி என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

ஜனநாயக வழித் தலைவர்களும் ஆயுதம் ஏந்தியவர்க ளும் இனப் பிரச்சினையின் தீர்வுக்குப் பின்னரே அபி விருத்தி எனக் கூறிய போதிலும் இரண்டையுமே கோட்டை விட்டனர் என்பதே உண்மை. கற்பனாவாதச் சிந்தனை கள் காரணமாக இனப் பிரச்சினையைச் சிக்கலாக்கியது தான் இவர்களின் சாதனை.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இனப்பிரச்சினைக் கான தீர்வும் பிரதேச அபிவிருத்தியும் சம அளவில் முக்கியத்துவம் பெற வேண்டியவை. இனத்தின் கெளர வமும் இருப்பும் அரசியல் தீர்வில் தங்கியுள்ள அதே வேளை மக்களின் நாளாந்த பெளதீகத் தேவைகளின் பூர்த்தி அபிவிருத்தியில் தங்கியுள்ளது.

எனவே, இம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் அர சியல் தீர்வை அடைவதற்கு அளிக்கின்ற அதேயளவு முக்கியத்துவத்தை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் அளிக்க வேண்டும்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இப்போது உரிமை கோருபவர்கள் அரசியல் தீர்வைப் பெறுவதற் குச் சரியான அணுகுமுறையைப் பின்பற்றவில்லை. அபி விருத்தியின் பக்கம் இவர்கள் திரும்பவேயில்லை.

இனி மேல் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். எதிர்ப்பு அரசியலால் எதையும் சாதிக்க முடியாது. வட க்கு, கிழக்கு அபிவிருத்திக்கு அரசாங்கம் முக்கியத்து வம் அளிக்கின்றது. சமகால யதார்த்தத்துக்கு அமை வான அரசியல் தீர்வுக்கும் தயாராக இருக்கின்றது. தமிழ் மக்களின் நலன் கருதித் தமிழ்த் தலைவர்கள் இவ்விடயங்களில் அரசாங்கத்துடன் இணக்கமாகச் செய ற்பட முன்வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக