ஜே.வி.பி.
ஆர்ப்பாட்டம் செய்ததற்காகவே சரத் பொன்சேகாவை சிறையிலிட்டுள்ளோம் என அரசாங்கம் கூறுமேயானால், அவரை விடுதலை செய்து எட்டு ஜே.வி.பி.யினரை கைது செய்து முறையிட வேண்டும். வைராக்கியம் பிடித்த அரசாங்கம் வேரோடு அழியப் போகின்றது என்று டில்வின் சில்வா தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.
இவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
"நாட்டில் சட்ட ஒழுங்கின் மீது நம்பிக்கை வைக்க முடியாதளவுக்கு அரசாங்கத்தின் சர்வாதிகாரம் மேலோங்கியுள்ளது. ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினால் சரத் பொன்சேகாவுக்கு விடுதலை வழங்குவது குறித்து ஆலோசிப்பதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தார். இது வேடிக்கையாகவே உள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு சொல் புத்தியும் கிடையாது சொந்த புத்தியும் கிடையாது. எனவே ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை ஆர்ப்பாட்டங்களின் ஊடாக அழுத்தித்தான் கூற வேண்டியுள்ளது.
ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் செய்ததற்காகவே சரத் பொன்சேகாவை சிறையிலிட்டுள்ளோம் என அரசாங்கம் கூறுமேயானால் சரத் பொன்சேகாவை விடுதலை செய்து எட்டு ஜே.வி.பி.யினரை கைது செய்து முறையிட வேண்டும். வைராக்கியம் பிடித்த அரசாங்கம் விரைவில் வேரோடு அழியப் போகின்றது.
எனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான அரசாங்கத்தின் பழிவாங்கும் நோக்கத்திற்கு எதிராக இறுதி வரை போராடுவோம். அச்சுறுத்தல்களைக் கண்டு பின்வாங்கப் போவதில்லை" என்றார்.
நாளை கடவத்தையிலும் ஞாயிற்றுக்கிழமை பிரான்சிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டம் செய்ததற்காகவே சரத் பொன்சேகாவை சிறையிலிட்டுள்ளோம் என அரசாங்கம் கூறுமேயானால், அவரை விடுதலை செய்து எட்டு ஜே.வி.பி.யினரை கைது செய்து முறையிட வேண்டும். வைராக்கியம் பிடித்த அரசாங்கம் வேரோடு அழியப் போகின்றது என்று டில்வின் சில்வா தெரிவித்தார்.பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.
இவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
"நாட்டில் சட்ட ஒழுங்கின் மீது நம்பிக்கை வைக்க முடியாதளவுக்கு அரசாங்கத்தின் சர்வாதிகாரம் மேலோங்கியுள்ளது. ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினால் சரத் பொன்சேகாவுக்கு விடுதலை வழங்குவது குறித்து ஆலோசிப்பதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தார். இது வேடிக்கையாகவே உள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு சொல் புத்தியும் கிடையாது சொந்த புத்தியும் கிடையாது. எனவே ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை ஆர்ப்பாட்டங்களின் ஊடாக அழுத்தித்தான் கூற வேண்டியுள்ளது.
ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் செய்ததற்காகவே சரத் பொன்சேகாவை சிறையிலிட்டுள்ளோம் என அரசாங்கம் கூறுமேயானால் சரத் பொன்சேகாவை விடுதலை செய்து எட்டு ஜே.வி.பி.யினரை கைது செய்து முறையிட வேண்டும். வைராக்கியம் பிடித்த அரசாங்கம் விரைவில் வேரோடு அழியப் போகின்றது.
எனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான அரசாங்கத்தின் பழிவாங்கும் நோக்கத்திற்கு எதிராக இறுதி வரை போராடுவோம். அச்சுறுத்தல்களைக் கண்டு பின்வாங்கப் போவதில்லை" என்றார்.
நாளை கடவத்தையிலும் ஞாயிற்றுக்கிழமை பிரான்சிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேட்டோ படைகளுக்கான விநியோகப் பாதையை பாகிஸ்தான் மூடியுள்ளது. இது பாகிஸ்தானுக்கூடாகச் செல்லும் பாதை.
ன் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனா நகரில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். புத்தளம் மாவட்டதைச் சேர்ந்த உயிரிழந்த இலங்கையர்கள் இருவரின் சடலங்களை நாட்டிற்கு எடுத்துவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அரசியல் ரீதியாக பழிவாங்கி அவருக்கு 30 வருட சிறைத்தண்டனையைப் பெற்றுக் கொடுத்திருப்பதும் ஜனாதிபதியே அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டிருப்பதும் அருவருக்கத்தக்க செயலாகும். இது சர்வதேச மட்டத்தில் பல கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது. இந்த இழிவான செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதுடன் தேசிய சர்வதேச மட்டத்தில் பாரிய போராட்டங்களை நடத்தி பொன்சேகாவை விடுதலை செய்ய திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.