29 செப்டம்பர், 2009

மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான ரயில் சேவை மாற்றம்
மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்குமிடையிலான பாடும்மீன் மற்றும் உதயதேவி கடுகதி ரயில் சேவைகளில் நாளை ஒக்டோபர் முதலாம் திகதி வியாழக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத தினைக்களம் அறிவித்துள்ளது.

இம் மாற்றத்தின் பிரகாரம் பாடும்மீன் நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரதம் தினமும் மாலை 7.15 ற்கு கொழும்புக் கோட்டையிலிருந்து புறப்டப்டு மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தைச் சென்றடையும்

மட்டக்களப்பிலிருந்து இரவு 8.15 ற்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 ற்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையததைச் சென்றடையும் வகையில் இரவு நேர ரயிலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

உதயதேவி நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவையைப் பொறுத்த வரை காலை 8.45 ற்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு மாலை 4.40 ற்கு மட்டக்களப்பைச் சென்றடையும்; .

அதே வேளை மட்டக்களப்பிலிருந்து காலை 7.45 ற்கு புறப்பட்டு மாலை 4.10 ற்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையததைச் சென்றடையும் வகையில் பகல் நேர ரயிலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் பிரதம அதிபரான அருனாசலம் சிவனேசராஜா தெரிவிக்கின்றார்

புதிய மாற்றத்தின் கீழ் இது வரை காலமும் இரவு நேர ரயிலில் இனைக்கப்பட்டிருந்த படுக்கை வசதிப் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட வேண்டும் எனக்கோரி, அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை மாலை கை விட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் அனுராதரபுரத்திற்கு விஜயம் செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்பே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் இந்தப் பிரச்சினை குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக ஐந்து வார கால அவகாசம் கோரி, அக்காலப்பகுதிக்குள் இந்தப் பிரச்சினைக்கு எப்படியும் முடிவு காணப்படும் என அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுவதற்குத் தமிழ் அரசி்யல் கைதிகள் முன்வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளின் நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் கோரியுள்ள கால அவகாசத்தினுள்ளே தமது பிரச்சினைக்கு முடிவேற்படாவிட்டால் தாங்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அனுராதபுரத்தில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி செவ்வாய்க்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...
இன்று மட்டு. முகாம்கள் மூடப்பட்டன : மக்கள் சின்னக்குளத்தில் தற்காலிகமாக குடியமர்வு


மாகாணத்தில் 2006ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த அனைத்து இடைத்தங்கல் முகாம்களும் இன்றுடன் மூடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் இன்று கொக்குவில் முகாம் மூடப்பட்டு அங்கு இறுதியாகத் தங்கியிருந்த சம்பூர், கடற்கரைச்சேனை மற்றும் கூனித்தீவு ஆகிய கிராமங்களின் 97 குடும்பங்களைச் சேர்ந்த 327 பேர் 15 பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டு மூதூர் பிரதேச செயலக அதிகாரிகளிடம் வெருகலில் வைத்து ஒப்படைக்கப்பட்டனர் என மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வுத் திட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஷரீப் தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இக்குடும்பங்கள் தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேற முடியாத நிலையில் சின்னக்குளத்தில் தற்காலிகமாக குடியமர்த்தப்படவிருக்கின்றார்கள்.

இதற்கென அங்கு இடைத்தங்கல் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு நேரடியாக இவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெருகல் மற்றும் ஈச்சிலம்பத்தை ஆகிய பிரதேசங்களிலிருந்து சுமார் 7,300 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரம் பேர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து 75இற்கும் மேற்பட்ட முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

2007ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம், விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட பின்பு இக்குடும்பங்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த வருடம் முற்பகுதியில் முடிவடைந்தன.

இருப்பினும் மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 1523 குடும்பங்களைச் சேர்ந்த 6074 பேரில் 745 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இக்குடும்பங்களை அப்பிரதேசத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைந்துள்ளது.

இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டாலும் 123 குடும்பங்களைக் கொண்ட 465 பேர் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். சுய விருப்பத்தின் பேரில் அவர்களையும் அடுத்த வாரம் அந்தந்தப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நீடிப்பு : ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆராயும்
இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நீடிப்பது பற்றி பரிசீலனை செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழு இந்த வருட இறுதியில் இது சம்பந்தமாக இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த மாத நடுப்பகுதியில் இது தொடர்பாகக் கூடி ஆராய இருக்கிறது.

கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன.

இலங்கைக்கு மேற்படி வர்த்தக சலுகை வழங்கப்பட வேண்டுமா என்பது பற்றி அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆராயும். அதன் பின்னர் அது பற்றி இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு மேலும் இரண்டு மாதங்கள் செல்லும் என்று இவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

மேற்படி வர்த்தக சலுகையைப் பெறுவதற்காக பிரஸ்ஸல்ஸிலுள்ள இலங்கைத் தூதரகம் அரசாங்கத்தின் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மனித உரிமைகளைப் பேணுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கிக் கூறி, மிக முக்கியமான வர்த்தக சலுகையை பெற்றுக் கொள்வதற்கென அண்மையில் அமைச்சர்கள் மட்ட குழு ஒன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது
அமைச்சர்களின் பாதுகாப்பு செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் : மங்கள சமரவீர

- "யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், அமைச்சர்களுக்குப் பாதுகாப்புக்காக 50 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அதிகமான குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறைக்கப்பட வேண்டும்" என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் எம்.பியுமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

இலங்கையில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பிலும் இதனால் நாட்டில் ஏற்படும் பாதுகாப்பு செலவினம் குறித்தும் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ராஜகிரிய ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி மக்கள் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு கூட நமது நாட்டு ஜனாதிபதிக்கான பாதுகாப்புகளைப் போல் வழங்கப்படவில்லை. ராஜபக்ஷ குடும்பத்துக்கான பாதுகாப்பும் அந்த குடும்பங்களின் உறவினர்களில் இருந்தே பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிப்பதும் வரையறையை மீறுவதாக உள்ளது.

ஜனாதிபதியின் பாதுகாப்புக்கென குவிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை 50 ஆகக் குறைப்பதன் ஊடாகவும் அதேபோல் அநாவசிய வாகன விரயத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவரது பாதுகாப்புக்கென வழங்கப்பட்டிருக்கும் வாகனங்களை ஐந்தாக குறைப்பதற்கும் தேசிய பாதுகாப்பு சபைக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன்.

நாட்டின் நலன்கருதி தேசிய பாதுகாப்பு சபை, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பான் முறைப்பாட்டினைச் சமர்ப்பிக்கும் போது, அது தொடர்பான விசாரணைகளை நேரடியாக நடத்தும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும்.

சூழ்நிலைக்கேற்ப, பாதுகாப்பு செயலாளர், படை அதிகாரிகள் ஆகியோர் இது தொடர்பில் கலந்தாலோசித்து ஒரு தீர்வினை எடுக்க வேண்டும்.


விமான சேவைகள் நஷ்டம்

இதுவரை காலமும் இலாபத்தில் இயங்கிவந்த நிறுவனங்கள் இன்று நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதற்குக் காரணம் இன்றைய அரசாங்கமே.

1980 ஆம் ஆண்டிலிருந்தே விமான சேவையாற்றிவரும் நிறுவனம் இலங்கை விமான சேவை. இன்று இது நஷ்டத்தில் இயங்கும் நிலை தோன்றியுள்ளது.

வெளிநாடுகளிடம் கடன்வாங்கி அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இன்று கொழும்புத் துறைமுகம் வீழ்ச்சி அடைந்து காணப்படுகின்றது. துறைமுக ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தென்மாகாண சபை தேர்தலுக்காகப் பல அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு மோசடிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்
மேலும் இங்கே தொடர்க...
widgeo

வடக்கின் அபிவிருத்தியைத் துரிதப்படுத்த சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புல்டோசர், பெக்கோ இயந்திரங்களை படத்தில் காணலாம். 2353 மில்லியன் ரூபா செலவில் இவ்வியந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ், பிரான்ஸ் அமைச்சர்கள்
போகொல்லாகமவுடன் சந்திப்பு

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் குச்னர், பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோரை அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்துப் பேசியுள்ளார்.

நியூயோர்க்கில் வெள்ளியன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப் பின் போது வடக்கில் இடம்பெயர்ந் தவர் களின் நிலை தொடர்பாக ஆராயப் பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

(விரிவான செய்தி உள்ளே)

பிரிட்டிஷ், பிரான்ஸ் அமைச்சர்கள்

போகொல்லாகமவுடன் சந்திப்பு

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் குச்னர், பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோரை அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்துப் பேசியுள்ளார். நியூயோர்க்கில் வெள்ளியன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது வடக்கில் இடம்பெயர்ந்தவர் களின் நிலை தொடர்பாக ஆராயப்பட்ட தாக வெளிவிவகார அமைச்சு தெரி வித்துள்ளது.

வடக்கில் செயற்படுகின்ற மனிதாபிமான அமைப்புகள் நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களின் தேவையின் அடிப்படையில், தடையின்றிக் கிடைக்கும் வகையில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனரென அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பயங்கரவாத அமைப்பிலிருந்து சரணடைந்துள்ளவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கே இதன் போது கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் போகொல்லாகம இதன் போது குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமென பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதகதியில் முடிவடையும் பட்சத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த முடியுமென அமைச்சர் கூறினார்.

கண்ணிவெடியகற்றும் பணிகளுக்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் உதவி வரும் பட்சத்தில் இன்னும் பல நாடுகளின் உதவிகள் கோரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

இதேவேளை இனப்பிரச்சினை தீர்வுக்காக முன்வைக்கப்படவிருக்கும் அரசியல் தீர்வு குறித்தும் அமைச்சர் குச்னர் மற்றும் மிலிபான்ட் ஆகியோருக்கு விளக்கமளித்துள்ளா

சகல மக்களினதும் எதிர்பார்ப்புகளை
நிறைவேற்றும் தீர்வு விரைவில்

ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் உரை நாட்டுக்கே உரிய தனித்தன்மையான தீர்வு
இடம்பெயர்ந்தோரை பாதுகாப்பாக மீள் குடியேற்றுவதில் அரசு முன்னுரிமை

மூன்று தசாப்தகாலமாக நீடித்த பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த செயற்பாடுகளை தடுக்க சில தரப்பினர் மறைமுகமாக சதி செய்து வருவது கவலைக்குரிய விடயம் என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 64வது அமர்வில் கலந்து கொண்ட பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க மேற்கண்டவாறு கூறினார். இங்கு உரையாற்றிய பிரதமர் ரத்னசிறி மேலும் கூறியதாவது,

உலக பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக காணப்பட்ட நிலையிலே இலங்கை அரசாங்கம் புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்தது. இதன் பலனை இலங்கை மட்டுமன்றி சமாதானத்தை விரும்பும் சகல சர்வதேச சமூகத்தினரும் அனுபவிக்கின்றனர்.

மோதல்கள் முடிவுற்ற நிலையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் எம்முன் உள்ள முக்கிய சவால்களாகும்.

மோதல் முடிவடைந்த பின்னர் எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகவும் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் நாம் ஐ.நா.வுடன் பேச்சு நடத்தினோம். இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பாகவும் கெளரவமாகவும் மீள்குடியேற்றும் நடவடிக்கைக்கு எமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

சர்வதேச தரத்திற்கு ஏற்ப இடம்பெயர்ந்த மக்களுக்கு வசதிகள் அளிக்கப்படுவதோடு, இந்தப் பணிகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சமூக அமைப்புகள் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன. சர்வதேச தரப்பின் ஒத்துழைப்பு டன் இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்றுவதே எமது நோக்கமாகும்.

மீள்குடியேற்றல், அபிவிருத்தி, அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்குதல், மறுசீரமைப்பு, நிரந்தர சமாதானம், பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (விரிவான செய்தி உள்ளே)

சகல மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வு துரிதம்

ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர்

பயங்கரவாதம் முழுமையாக ஒடுக்கப்பட்டுள்ள சகல பிரதேசங்களிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் தேர்தல்கள் நடத்தப்படும்.

இலங்கை மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாக செயற்பட்டு வருகிறது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இலங்கைக்கு பொருத்தமான முறையில் சமூக சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்.

மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தவும் நாட்டின் ஏனைய மக்கள் போல தடையின்றி தமது பணிகளை மேற்கொள்ளவும் உரிய சூழல் ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.

படையில் சேர்க்கப்பட்ட புலிகளுக்கு புதிய வாழ்க்கை நிலையை உருவாக்குவதற்காக புனர்வாழ்வுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐ. நா.வினதும் தொண்டு நிறுவனங்களினதும் ஒத்துழைப்புடன் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தேசிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களின் பின்னர் முதற் தடவையாக நாட்டிலுள்ள சகல மக்களினதும் அரசியல், பொருளாதார தகைமைகள் மற்றும் ஆளணியை நாட்டின் நலனுக்காக பயன்படுத்த இலங்கை தயாராகி வருகிறது.

மீள்குடியேற்றல் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்காக உதவி வழங்கும் நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றன.

கிழக்கு உதயம் திட்டத்தின் கீழ் தேசிய பொருளாதாரத்திற்கு கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் பலம் வாய்ந்த புதிய பொருளாதாரமொன்றை இந்த வருடத்தினுள் ஏற்படுத்துவதற்காக வடக்கின் வசந்தம் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார்.

மோதல்கள் முடிவுற்றுள்ள நிலையில் சகல மக்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்குமென நீண்டகால அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வ கட்சிக் குழுவினூடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதன் யோசனைக்கு சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டை பெறமுடியுமென அரசாங்கம் நம்புகிறது. இதனூடாக ஏற்படுத்தப்படும் தீர்வு எமது நாட்டுக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த தீர்வாக இருக்க வேண்டும்.

உலக மயமாக்கல் உட்பட சர்வதேச மட்டத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டுள்ள பிரச்சினைகளை ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும். பயங்கரவாதம், உலக பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற சர்வதேச மட்ட நெருக்கடிகளுக்கு சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

புலிகள் இயக்கம் இலங்கையில் மேற்கொண்ட நாசகார வேலைகளுக்கு சர்வதேச மார்க்கங்களினூடாகவே நிதி உதவி கிடைத்துள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளினூடாக புலிகளின் சர்வதேச பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளும் குழுக்கள் புலிகளுக்கு நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கி வந்துள்ளன. புலிகளின் சர்வதேச பிரதிநிதிகள் தொடர்ந்தும் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு சில புலி உறுப்பினர்கள் தாமிருக்கும் நாடுகளில் இருந்து கொண்டு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை முறியடிக்க தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச நட்பு நாடுகளிடமும் ஏனைய தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.

மனிதாபிமான நடவடிக்கைகள் என்ற பெயரில் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் முறையற்ற ரீதியில் பணம் திரட்டி வருகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க எமது நட்பு நாடுகள் முன்வர வேண்டும்.

பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச மட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட வேண்டியது அவசியமாகும்.

உலக சமாதானம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஐ. நா.வின் பிரதான குறிக்கோள் என இலங்கை கருதுகிறது. உலகம் முழுவதும் காணப்படும் தீர்க்கப்படாத பெருமளவான பிரச்சினைகள் குறித்து ஐ. நா. கவனம் &:Vr> வேண்டும்.

பலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் இஸ்ரேல் - பலஸ்தீன சமாதானம் என்பன தொடர்பில் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில் குறைந்த கவனமே செலுத்தப்பட்டன. இதனால் எமது எதிர்பார்ப்புகள் சிதைந்துவிட்டன.

கிழக்கு உள்ளூர் அலுவலர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்ப ஐக்கிய அமெரிக்கா உதவி
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி (USAID), கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூர் அலுவலர்களின் ஆற்றலைப் பலப்படுத்தும் பொருட்டு, இரண்டு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அனுசரணை வழங்கியது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் ஆதரவுடன் நடத்தப்பட்ட, இரண்டு வதிவிட செயலமர்வுகள், கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுள் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவற்றைச் சென்றடைந்தன.

உள்ளூர்ச் செயற் திட்டங்களை மேலும் சிறப்பாகத் திட்டமிடுவதற்கும், அவற்றுக்கான வரவு செலவுத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், முன்னுரிமைகளை முடிவு செய்வதற்கும் வேண்டிய திறமைகளை இச்செயலமர்வுகள் அலுவலர்களுக்கு வழங்கின.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் பணிப்பாளர் ரெபேக்கா கோன்,

“கிழக்கு மாகாணத்தில், சிக்கலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்வது சம்பந்தப்பட்ட அறைகூவல்களைச் சந்திப்பதற்கு, உள்ளூர் தலைவர்கள் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி வழங்கிய உதவி, தெரிவு செய்யப்பட்ட 100 அலுவலர்களுக்கும் 36 பிரதேசச் சபை அலுவலர்களுக்கும் ஒரு நகர சபை சேர்ந்தவருக்கும் வழங்கப்பட்டமை பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

இவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் மூலம் உள்ளூர் சமுதாயங்களுக்கு மேம்பட்ட சேவைகள் வழங்கப்படுமென்றும் வரையறைக்குட்பட்ட வளங்களை மேலும் சிறப்பாக முகாமைத்துவம் செய்வதன் பயனாக சிறந்த அபிவிருத்திப் பெறுபேறுகள் இடம்பெறும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்." என்றார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சிச் சபைகளின் ஆணையாளர் எம். உதயகுமாரும், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் டி. பி. ஹெட்டியாரச்சியும் இச்செயலமர்வுகளில் பங்குபற்றினர்.

நாமல் ஓயா பிரதேச சபையின் செயலாளர் எம். ரணபாகு,

"தமிழ் - சிங்களம் பேசும் உள்ளூர் அரசாங்க அலுவலர்கள் பலர், இப்பயிற்சிகளில் செயலார்வத்துடன் பங்குபற்றி, நிலவும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றின் சிக்கல் தன்மைகள் பற்றியும் சிந்தித்தனர் என்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

இச்செயலமர்வு மூலமாக நாம் பெற்ற அறிவையும் அனுபவத்தையும், தற்பொழுது பிரதேச சபைகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தலாம். அனைத்துச் செயலமர்வும் பயன்மிக்கவையாக அமைந்திருந்தன" என்றார்.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியினூடாக, அமெரிக்க மக்கள், ஏறத்தாழ 50 வருடங்களாக, உலகம் முழுவதிலுமுள்ள, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்திக்கான உதவிகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக, 1946 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி, இலங்கை, ஏறத்தாழ இரண்டு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது
அக்கரைப்பற்றிலுள்ள இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களில் இன்றும் ஒரு சிறுதொகையினர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்



வவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு அக்கரைப்பற்றிலுள்ள இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அம் மாவட்டததைச் சேர்ந்த குடும்பங்களில் இன்றும் ஒரு சிறுதொகையினர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

இதன் பிரகாரம் இன்று 4 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் குறித்த முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் அவர்களது இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 11 ம் திகதி வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து அம்பாறை மாவட்டததைச் சேர்ந்த 42 குடும்பங்களைக் கொண்ட 130 பேர் விடுவிக்கப்பட்டு சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு மறுநாள் 12 ம் திகதி அழைத்து வரப்பட்டிருந்த போதிலும் பாதுகாப்பு தரப்பு தரப்பினர் சில விபரங்களைப் பெற வேண்டியிருப்பதாகக் காரணம் கூறி அக்கரைப்பற்றிலுள்ள இடைத் தங்கல் முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்

பொலிஸ் உட்பட பாதுகாப்பு தரப்பினரின் அறிக்கையின் பேரில் இக் குடும்பங்களை கட்டம் கட்டமாக இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் கடந்த 23 ம் திகதி ஆரம்பமான போதிலும் இது வரை 4 கட்டங்களில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளின் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

23 ம் திகதி 5 குடும்பங்கள் 11 பேர் ,14 ம் திகதி 7 குடும்பங்கள் 15 பேர் ,25 ம் திகதி 10 குடும்பங்கள் 29 பேர் இன்று 28 ம் திகதி 4குடும்பங்கள் 19 பேர் என குறித்த எண்ணிக்கை அமைகின்றது
ஜெனீவாவில் இன்று வருடாந்த அகதிகள் மாநாடு ஆரம்பம்



வருடாந்த அகதிகள் மாநாடு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

அகதிகளின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் பங்கு கொள்ளவுள்ளன.

இதன் போது அடுத்த ஆண்டுக்கான 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான வரவு செலவுத் திட்டம்; மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த வருடத்தில் மாத்திரம் உலகளாவிய ரீதியாக 42 மில்லியன் மக்கள் பலவந்தமாக இடப்பெயர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

பேரவையினால் இலங்கை, சோமாலியா போன்ற நாடுகளில் உள்ள சுமார் 25 மில்லியன் அகதிகளுக்கு உதவியளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு குச்னர் மிலிபான்ட் விருப்பம்- அமைச்சர் போகொல்லாகமவுடனும் பேச்சு


பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் பேர்னாட் குச்னர், பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகிய இருவரும் வட பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமையை அவதானிப்பதற்காக மீண்டும் இலங்கைக்கு வருகை தர விருப்பம் தெரிவித்துள்ளனர். நியூயோர்க்கில் வைத்து வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகமவிடம் இந்த முடிவை அவர்கள் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் பிரான்ஸ், பிரிட்டிஷ் வெளிநாட்டøமச்சர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தார். அமைச்சர் போகொல்லாகம விடுத்த அழைப்பின் பேரில் அமைச்சர்கள் குச்னர், மிலிபான்ட் ஆகியோர் இந்த வருடம் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது மூன்று அமைச்சர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே தற்போதைய சந்திப்பு இடம்பெற்றது.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி கிராமங்களின் நிலைமை, முகாமிலிருந்து அழைத்துச் செல்லப்படுவோர் வேறு இரகசிய நிலையங்களில் வைக்கப்படுகிறார்களா என்பது உட்பட மீள் குடியேற்ற முயற்சிகள் ஆகியன குறித்து இலங்கை தரப்பிடமிருந்து பிரான்ஸ், பிரிட்டிஷ் அமைச்சர்கள் விபரங்களைக் கோரினார்கள். இது சம்பந்தமாக ஆரம்பத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட கால எல்லை, மீள குடியேற்றப்படும் மக்கள் தொகை ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ், பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக் கொண்டார்கள். இதற்குப் பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம, எவ்வõறாயினும் கண்ணிவெடிகளை துரிதமாக அகற்றுவதற்கு போதிய உபகரணங்களும் பயிற்றப்பட்ட ஊழியர்களும் கிடைப்பதில் மீள் குடியேற்றம் தங்கியுள்ளது என்று கூறினார். சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதி ஏற்கனவே இந்த விடயத்தில் உதவி வருவதாக தெரிவித்த அமைச்சர் ஏனையோரும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மக்களை நலன்புரி கிராமங்களில் வைத்திருப்பதில் அரசாங்கத்திற்கு எவ்வித நன்மையும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர், மீள் குடியமர்வுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துள்ளது என்றும் கூறினார். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் குடியமர்த்துவதற்கென ஏற்கனவே ஒரு தொகுதி மக்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

28 செப்டம்பர், 2009

ஐ.நா. கூட்டத் தொடரில் பாதுகாப்புசெயலர் கோத்தபாயவும் பங்கேற்பு



அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் 64 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கை தூதுக்குழுவில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 64 ஆவது கூட்டத் தொடர் கடந்தவாரம் ஆரம்பமானது. இதில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் தலைமையிலான தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித்த கோஹனவும் இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ளார். ஐ.நா. வின் பொதுச் சபை கூட்டத்தில் கடந்த சனிக்கிழமை பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க உரையாற்றியிருந்தார்
மேலும் இங்கே தொடர்க...
நாடுகளின் உள் விவகாரங்களில் ஐ.நா சபை தலையிடக்கூடாது-64 ஆவது பொதுக்கூட்டத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க உரை


ஐக்கிய நாடுகள் சபை எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது. ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் ஐ.நா. தலையிடக்கூடாது என கூறும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2(7) சரத்தை மதித்து நடக்க வேண்டியது அவசியமாகும். பயங்கரவாதம் தேசிய பாதுகாப்புக்கு மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாகவே அமையும். பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்துள்ளமை யை உலக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதன்பெறுபேறுகள் இலங்கை மக்களுக்கு மட்டமல்லாது சமாதானத்தை விரும்பும் சகலருக்கும் கிடைத்த வெற்றியாகும். என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்துடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடிமர்த்துவதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும். இடம்பெயர்ந்தவர்களுடன் இணைந்து புலிகளும் முகாம்களில் உள்ளனர். அவர்களை மக்களுடன் இணைந்திருப்பதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர் சொன்னார். ஐக்கிய நாடுகள் சபையின் 64ஆவது பொதுச் சபைக்கூட்டத்தில் நேற்று முன்தினம் இலங்கையின் சார்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் 63 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியதன் பின்னர் இலங்கையில் பல்வேறு வேறுபாடுகள் இடம்பெற்றுள்ளன. எனது நாடு தொடர்பில் புதிய எதிர்ப்பார்ப்புடனேயே இந்த வருடத்தில் சபையில் உரையாற்றுகின்றேன். ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தலையிடக்கூடாது எனக் கூறும் ஐக்கியநாடுகள் சாஸத்தின் 2 (7) சரத்தை மதித்து நடத்த வேண்டும். பல்லின தன்மை என்பது, சக்திவாய்ந்த நாடுகளின் சிறுபான்மை இனத்தின் கோரிக்கைகளை செவிசாய்ப்பது மட்டுமல்ல சக்தியற்ற பெரும்பான்மை இனத்தின் நலன்களை பாதுகாப்பதுமாகும்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது எனற ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2 (7) சரத்தில் பிரதிபலிக்கும் தடை அனுசரிக்கப்பட வேண்டியது என்பது தட்டிக்கழிக்க முடியாத ஒன்றாகும்.

இந்த சாசனம் எம்மை ஒன்றிணைப்பதால் அது எமது வழிகாட்டல் கருவியாக இருக்க வேண்டும். எவ்வேளையிலும் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை மதிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினதும் பாதுகாப்பு சபையினதும் சீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பல்லின தன்மையை பலப்படுத்துவது, ஜனநாயகம், வெளிப்படைத் தன்மை, ஆக்கசக்தி, பொறுப்புடைமை ஆகியவற்றை மேலும் ஜனநாயக ரீதியிலான ஐக்கிய நாடுகள் முறைமையில் ஊக்குவிப்பதே சீரமைப்பதன் குறிக்கோள் என்று இலங்கைத் தூதுக்குழு நம்புகிறது. ஜனாதிபதி ஒபாமா தெளிவாக எடுத்துக் கூறியது போன்று எதிர்காலத்தின் இன்றியமையாத அம்சங்களாக கருதப்படும் மேற்கூறப்பட்ட நான்கு அம்சங்களையும் கடைப்பிடிக்க தூண்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.

சர்வதேச பிரஜைகளினால் கொடூரமான பயங்கரவாதம் என்று இனங்காணப்பட்டன. எமது நாட்டில் 30 வருடங்களாக நிலவிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை நிறைவிற்கு கொண்டுவரப்பட்டதுடன் கடந்த மே மாதத்துடன் இலங்கையிலிருந்து பயங்கரவாதம் முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தேசிய பாதுகாப்பிற்கு மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாகவே அமையும். பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்துள்ளதை உலக மக்கள் ஏற்றுக்கொள்ளவார்கள் அதன் பெறுபேறு இலங்கை மக்களுக்கு மட்டுமல்லாது சமாதானத்தை விரும்புகின்ற சகல சர்வதேச மக்களுக்கு கிடைத்துள்ளது.மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் நீண்ட காலத்திற்கு சமாதானம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் வரையிலும் அதனை தொடர்ச்சியாக நிலையானதாக நிலைநாட்டுவது எமது முன்னிலையில் இருக்கின்ற சவாலாகும் என்றே எமக்கு தெரியும்.

பயங்கரவாதத்தை தோற்கடித்து எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியை எம் முன்னால் நிலைநிறுத்திக்கொள்ளவேண்டும் அதற்காக எமக்கு ஒத்துழைப்பு நல்கிய உதவிய சகல நட்பு நாடுகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் எமது நோக்கம் மற்றும் முரண்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் மோதல்கள் நிறைவடைந்தததன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது உயர்மட்ட நபர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான பான் கீ மூன் ஆவார்.

இலங்கையில் ,இவ்வருடன் மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் புலிகளின் பிடியிலிருந்த வடக்கின் அப்பாவி பொதுமக்கள் அண்ணளவாக 290,000 பேரை மீட்டெடுத்தோம். மீட்டெடுக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் பாதுகாப்பு, கௌரவம், நிரந்தரமான மீளக்குடியமர்த்தல் போன்றவற்றை மேற்கொண்டு வருக்கின்றோம். தற்போது தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு மக்களுக்கு தேவையான நலன்புரி விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், சர்வதேச மற்றும் தேரிய ரீதியிலான சிவில் சமூகத்தினரிடமிருந்து கிøட்த்த ஒத்துழைப்பு காரணமாகவே இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுக்க முடிந்தது.

எம்முடன் அண்ணளவாக 57 உறுப்பினர்கள் இந்த நலன்புரி கிராமங்களில் தொடர்ச்சியாக சேவையாற்றிவருகின்றனர். நலன்புரி கிராமங்களில் வாழ்கின்றவர்களுக்கு உணவு மற்றும் தற்காலிக உறைவிடத்தை அமைத்துக்கொடுப்பது மட்டுமற்றி அவர்களுக்கு தேவையான ஏனைய வசதிகளான வங்கி,பாடசாலை,தபால் காரியாலயம் மற்றும் சுகாதார பாதுகாப்பு மத்திய நிலையம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. புலிகளினால் இல்லாதொழிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வியை மீண்டும் அந்த பிள்ளைகளுக்கே பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையும் இந்த முகாம்களிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. அங்கு பிள்ளைகளும் கல்வியை பயிலுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

அரசின் அபிலாஷை

சர்வதேச சமூகத்துடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்துவதேச அரசாங்கத்தின் அபிலாசையாகும் . சுனாமி அனர்த்தத்திற்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட மீள் குடியேற்றத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவமும் இருக்கின்றது. அதனால் மீள் குடியேற்றம் நேர்த்தியாக மற்றும் நிரந்தரமான பொறுப்புடன் செய்யவேண்டுமாயின் அதனை பலவந்தமான செய்யமுடியாது.

நடைமுறையில் இருக்கின்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட சகல மனிதாபிமான மூலதர்மத்திற்கு எதிராக புலிகளால் வடக்கில் சிவில் நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடிகள் ,பயன்படுத்த கூடாத வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன. காலத்தை சீரழிக்கின்ற மிகவும் நிதானமாக முன்னெடுக்கவேண்டிய கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மறுபுறத்தில் பல உயிர்களை இழந்து மக்கள் காப்பாற்றப்பட்ட போதிலும் பெருந்தொகையான புலிகள் இடம்பெயர்ந்தவர்களுடன் இணைந்து இருக்கின்றனர். அவர்களையும் இடம்பெயர்ந்துள்ளவர்களுடன் இருப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தில் இடமளிக்க கூடாது.மோதல்கள் நிறைவடைந்தத்தன் பின்னர் மீள் குடியமர்த்தல் ,அபிவிருத்தி மற்றும் அரசியல் ரீதியில் அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தல் மீள்குடியமர்த்தல் மற்றும் சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன எங்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றன.

வடக்கில் தேர்தல்

மோதல்கள் நிறைவடைந்த மூன்று மாதங்களுக்குள் வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சகல பிரதேசங்களிலும் ஜனநாயகம் கட்டியெழுப்புவதற்கு தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டத்திட்டங்கள் தொடர்பில் சர்வதேச கொள்கைகளை முன்னெடுப்பதில் பொறுப்புடன் செயற்படுகின்றோம். அதேபோல கடந்த காலங்களில் நாம் பெற்றுக்கொண்ட அனுபவத்தை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புலிகள் சிறுவர்களை தங்கள் அமைப்பில் போராளிகளாக இணைத்து கொண்டு அவர்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். பிள்ளை பருவத்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தேசிய ரீதியில் மட்டுமல்லாது தனிப்பட்ட ரீதியிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். முன்னாள் சிறுவர் போராளிகளின் வாழ்க்கையை புதிதாக ஆரம்பிப்பதற்கு புனர்வாழ்வுக்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

புலிகளுக்கு புனர்வாழ்வு

ஐக்கிய நாடுகள் மற்றும் உதவிவழங்குவோரின் ஆதரவுடன் முன்னாள் புலி உறுப்பினர்கள் மீண்டும் சிவில் சமூகத்தில் இணைந்து கொள்வதற்கு தேசிய திட்டங்கள் எம்மால் வகுக்கப்பட்டதுடன் அண்ணளவாக பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ள 10 ஆயிரம் புலி உறுப்பினர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மோதல்கள் நிறைவடைந்ததன் பின்னர் முதல் தடவையாக எமது மக்களின் மனித சக்தி, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இணைந்து பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. மீள் கட்டுமானத்திற்காக உதவி வழங்கும் நாடுகள் சர்வதேச அமைப்புகள் நிதி மற்றும் திட்டமிடல் ரீதியில் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

பல வருடங்களுக்கு பின்னர் கிழக்கின் நவோதயம் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வடக்கின் வசந்தம் எனும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளில் தொழில்களில் ஈடுபடுவதற்கு வசதிவாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. சீர்குலைந்திருந்த வீதி,நீர்நிலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் திருத்தியமைக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக வடக்கு பொருளாதார நடவடிக்கை நாட்டின் ஏனைய மாகாணங்களின் பொருளாதார நடவடிக்கைகளுடன் இணைந்துள்ளது. வடக்கில் பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் ,பாடசாலைகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீர்வுத்திட்டம் மோதல்கள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நீண்ட காலம் நிலைத்து நிற்ககூடிய விதத்தில் தீர்வுத்திட்டத்திற்கு சர்வக்கட்சி ஆலோசனை குழு சகல கட்சிகளின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டுள்ளது.இந்த இணக்கப்பாட்டுடன் ஏற்படுத்த போகும் தீர்வானது தேசிய ரீதியில் உருவாக்கப்பட்ட தீர்வாகவே அமையும். உலக மயமாக்கல் மூலமாக எம்முன்னிலையில் இருக்கின்ற சவால்கள் அதிகமானதாகும். அது ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கின்றது. இதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் தனித்தனியாக தலையிட்டு தீர்வு காண இயலாது. அதேபோல பயங்கரவாதம் சர்வதேச பொருளாதார பிரச்சினை,காலநிலை மாற்றத்தில் பெறுபோறுகள், உணவு மற்றும் மின்சக்தியின் பாதுகாப்பு போன்றவற்றில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.சார்க் அமைய நாடுகளில் அங்கத்துவம் பெறுகின்ற நாங்கள் இவ்வாறான பிரச்சினைக்கு வலய ரீதியில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அதேபோல புலி பயங்கவாதிகளின் பயங்கவாத குற்றச்செயல்கள் தேசிய எல்லையை மீறி சென்றிருந்தது. ஆயுத கடத்தல்கள் மட்டுமல்லது போதைப்பொருள் கடத்தல்களையும் அவ்வமைப்பினர் மேற்கொண்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. புலி பயங்கரவாதிகளினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிக கொடூரமான செயற்பõடுகளுக்கு சர்வதேச மட்டத்திலிருந்தே நிதி கிடைத்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது. புலிகளின் வெளிநாட்டு பிரஜைகள் என்று கூறிக்கொள்பவர்கள் புலிகளுக்கு ஆயுதங்களையும் நிதியையுமே திரட்டியுள்ளனர்.

புலிகளின் சர்வதேச வலையமைப்பினர் மூலமாக இவ்வாறான நடவடிக்கை இன்னமும் முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை எம்மால் மிகவும் நேர்த்தியான முறையில் அழிக்கப்பட்டுள்ளது . என்பதுடன் புலிகளின் சட்டவிரோதமான நடவடிக்கைகளை முற்றாக ஒழிப்பதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு நல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

புலிகள் கடந்த காலங்களில் கடல்மார்க்கமாக ஆயுதங்களை கடத்தியிருந்தனர் இது வலயநாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும். எனினும் ஆயுத கடத்தலை எமது கடற்படையினர் முற்றாக முறியடித்தது மட்டுமல்லாது ஆயுதங்களை ஏற்றிவந்த கப்பல்களையும் அழித்துள்ளனர். இது வெளிப்படையானது என்பதனால் கடலுக்கு சென்று கப்பல்களையும் ஏனைய இயந்திரங்களையும் சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஏற்ப எமது சட்டத்திட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு அவற்றை சர்வதேச ரீதியில் மேற்கொள்வதற்கான தேவையிருக்கின்றது.அபிவிருத்தியை நோக்காக கொண்ட எமது திட்டங்கள் 2015 ஆம் ஆண்டு வரையிலான தூர நோக்கத்தை கொண்டதாகும் அந்த இலக்கை எட்டுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
நாளையும் மறுதினமும் தபால் மூல வாக்களிப்பு -31,151 பேர் வாக்களிக்க தகுதி



தென் மாகாண சபைக்கான தேர்தல் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. இந்நிலையில் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், 30 ஆம் திகதி புதன்கிழமையும் இடம்பெறவிருக்கின்றது என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 38 ஆயிரத்து 394 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும் மூன்று மாவட்டங்களிலிருந்தும் 31 ஆயிரத்து 151 பேரே தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றோர் இருதினங்களுக்குள் வாக்களித்துவிடவேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள அரசாங்க ஊழியர்கள் தத்தமது காரியாலயங்களில் காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை வாக்களிக்கலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...
பொலீஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கு யாழில் 1500ற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் பெற்றனர்-

யாழ். மாவட்டங்களிலுள்ள பொலீஸ் நிலையங்களுக்கு பொலீஸ் உத்தியோகத்தர்களை சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் பொலீஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு யாழ்.குடாநாட்டில் நேற்றையதினம் 1500ற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பொலீஸ் நிலையங்களில் கடiமாயற்றுவதற்காக தமிழ்ப்பேசும் பொலீசாரை சேர்க்கும் திட்டத்தின்கீழ் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்ககள் இடம்பெறுகின்றன இதன்போது நடத்தப்படும் நேர்முகப் பரீட்சைகளில் தெரிவுசெய்யப்படுகின்றவர்களுக்கு மீண்டும் இம்மாதம் 29ம் திகதி மற்றும் 30ம் திகதிகளில் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளதாகவும் பொலீஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நேர்முகப் பரீட்சைகள் மூலம் யாழ். பொலீஸ் நிலையங்களுக்கு ஆண் கான்ஸ்டபிள், பெண் கான்ஸ்டபிள் மற்றும் வாகன சாரதிகள் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பொலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது
புத்தளம் பழைய மன்னார் வீதி பாலத்திற்கு அருகிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு-
புத்தளம் பழைய மன்னார் வீதியிலுள்ள பாலமொன்றுக்கு அருகாமையிலிருந்து சீ4ரக வெடிபொருட்களை பொலீசார் மீட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே குறித்த வெடிபொருட்கள் பொலீசாரினால் மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். குறித்த பாலத்திற்கு அருகில் பொதிசெய்யப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 750கிறாம் சீ4 ரக வெடிபொருட்களே இதன்போது மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்
கிராண்ட்பாஸில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது, நிட்டம்புவையில் பரா குண்டுகள் மீட்பு-

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஆயுதமொன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி கொள்வனவு தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்றுமாலை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். இத்தாலிய தயாரிப்பிலான 8மில்லிமீற்றர் ரக துப்பாக்கியே இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கம்பஹா, நிட்டம்புவைப் பிரதேச கிணறு ஒன்றுக்குள்ளிருந்து முன்னேறிச் செல்லும் பகுதியைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் பரா வெளிச்சக் குண்டுகள் இரண்டு இன்று மீட்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றினை உரிமையாளர்கள் துப்புரவு செய்தபோதே இக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பொலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மாவிலாறுமுதல் புதுமாந்தளன் வரையான நடவடிக்கை தொடர்பிலான கண்காட்சி-

படையினர் மாவிலாறு முதல் புதுமாத்தளன்வரை நடவடிக்கை மேற்கொண்ட விதத்தையும், பிரபாகரனின் உடலைக் கண்டெடுத்ததையும் பொதுமக்கள் மீண்டும் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 3ம்;திகதி முதல் 07ம் திகதிவரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்;த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் கண்காட்சியில் இச்சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இராணுவத்தின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது மாவிலாற்றிலிருந்து புதுமாத்தளன்வரை படையினர் மேற்கொண்ட சகல முன்னகர்வு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கும் காட்சிக் கூடங்கள் அமைக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது புலிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது படையினர் கைப்பற்றிய ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதுடன் படையினர் பயன்படுத்திய ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதேவேளை, படையினரை கௌரவிக்குமுகமாக நினைவு முத்திரையொன்றும் ஆயிரம் ரூபா நாணயக் குற்றியொன்றும் வெளியிடப்படவுள்ளது
முட்கம்பி சிறைக் கூடங்களிலேயே தமிழ் மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர் - மனோகணேசன் எம்.பி. விசனம்




தமிழ் மக்கள் இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்படவில்லை. மாறாக முட்கம்பி வேலிகள் போடப்பட்ட சிறைக் கூடங்களிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்து அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழ முடியுமென ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.

ஆனால் ஏன் தமிழ் மக்களுக்கு இத்தகைய பாரபட்சம் காட்டப்படுகிறது. அவர்கள் இந்நாட்டு பிரஜைகள் இல்லையா என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.க. வின் மக்கள் பேரவை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. உண்மையில் இவை முகாம்கள் அல்ல, முட்கம்பிகள் போடப்பட்ட சிறைக் கூடங்களே ஆகும்.

கண்ணிவெடிகளை அகற்றிய பின்பே மக்களின் மீள் குடியேற்றம் நடைபெறுமென அரசு கூறுவது முழுப் பொய்யாகும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் எமது படையினர் கண்ணிவெடிகளை அகற்றிக் கொண்டே புலிகளை முடக்கினர்.

எனவே இன்று மிஞ்சிப் போனால் 10 வீதமாகவே கண்ணிவெடிகள் இருக்கும். எனவே மக்களை மீளக் குடியேற்றõமைக்கு கண்ணிவெடிகள் காரணமல்ல.

எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. எனவே முகாம்களில் உள்ள 3 இலட்சம் மக்களில் 1 1/2 இலட்சம் பேருக்கு வாக்குரிமை உண்டு.

இந்த வாக்குகளை கொள்ளையடிப்பதற்கே மக்களை அரசாங்கம் பலாத்காரமாக தடுத்து வைத்துள்ளது.
அமெரிக்கா உட்பட சில நாடுகள் இலங்கையை போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்த முயற்சி - விமல் வீரவன்ச எம்.பி. குற்றச்சாட்டு


சர்வதேச மட்டத்தில் இலங்கையை ஒரு போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்தி விட வேண்டும் என்பதில் புலிகளுக்கு ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர் என்ற வேதனையிலே இவ்வாறு இந்த நாடுகள் செயற்படுகின்றன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டினார்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றத் துடிக்கும் சர்வதேச சக்திகளின் சதித் திட்டங்களை முறியடிப்பதற்கு அனைவரும் அணி திரள வேண்டும். அத்துடன் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு எமது கட்சி தயாராகி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே விமல் வீரவங்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்
இலங்கையில் இடம்பெயர் மக்கள் குறித்து ஹிலாரி - எஸ்.எம். கிருஷ்ணா நியூயோர்க்கில் கலந்துரையாடல்


இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள 3 இலட்சம் மக்கள் குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் நேற்று முன் தினம் நியூயோர் நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளக்கும் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்படாமல், விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் துரித கதியில் முன்னெடுப்பதற்கு, இரண்டு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

27 செப்டம்பர், 2009

இலங்கையில் இடம்பெயர் மக்கள் குறித்து ஹிலாரி - எஸ்.எம். கிருஷ்ணா நியூயோர்க்கில் கலந்துரையாடல்


இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள 3 இலட்சம் மக்கள் குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் நேற்று முன் தினம் நியூயோர் நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளக்கும் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்படாமல், விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் துரித கதியில் முன்னெடுப்பதற்கு, இரண்டு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மனிக்பாம் முகாமிற்கு விஜயம்







இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கு நேற்று விஜயம் செய்துள்ளார்.வவுனியா மனிக்பாம் நலன்புரி நிலையத்தில் மக்களின் தேவைகள் மற்றும் நலன்கள் குறித்து வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ் மற்றும் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும் இச்சந்திப்பின் போது பருவகாலங்களில் ஏற்படும் வெள்ள அபாயங்களை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள வேளைத்திட்டம் குறித்து தெளிப்படுத்தியுள்ள அவர் .மேலும் இடம்பெயர் மக்களின் மீள்குயேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது மனிக்பாம் நலன்புரி நிலையத்தில் உள்ள 100 பாடசாலை மாணவர்களுக்கு இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட கல்வி கற்க தேவையான பொருட்கள் ஆலோக் பிரசாத்தினால் பகிர்தளிக்கப்பட்டது. மேலும் அவர் கதிர்காமர் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுப்பட்டார்
மேலும் இங்கே தொடர்க...
சென்னை
இலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம்: மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர் வேதனை


சென்னை, செப். 26: "இலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம் நடக்கிறது' என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர் வேதனை தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழகத்தில் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதுடன், அவரது இந்தியப் பயணத்துக்கான விசா அனுமதியும் ரத்து செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது.விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம்... இந்நிலையில் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் "இலங்கைத் தமிழர்' குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற இக்கருத்தரங்கில் விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் அமெரிக்காவில் இருந்து எலின் ஷான்டர் பேசியது: 1940-களில் போலந்து நாட்டில் சித்திரவதை முகாம்களில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்படி படுகொலையானவர்களில் என்னுடைய குடும்பத்தாரும் அடங்குவர். ஈழத்தமிழருக்கு எதிராக இலங்கை ராணுவம் திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறது. இலங்கைத் தமிழர்கள், இலங்கையின் யூதர்கள் என்று அழைக்கலாம். அகதிகள் முகாமில் 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டனர். இப்போது தொடங்கிவிட்ட பருவ மழையால் அங்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. முகாம்களில் உள்ள 35 ஆயிரம் குழந்தைகளில், 1,800 பேர் பெற்றோரை இழந்து அனாதையாக்கப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் உதவி நிறுவனத்தை இலங்கை அரசு வெளியேற்றி விட்டது. அக் குழந்தைகளுக்கு யார் உதவி செய்ய இருக்கிறார்கள். கொசாவோ நகரில் மக்களை படுகொலை செய்த மிலோசெவிக், சூடான் பஷீர், லிபியா அதிபர் கடாபி ஆகியோர் போல இலங்கை அதிபர் ராஜபக்ஷவும் கொடுமையாக தமிழர்களை கொன்றுள்ளார். அவரை ஒரு போர் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும். உலகில் எந்த நாடும், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லை. ஐக்கிய நாடுகள் சபை உதவ மறுக்கிறது. இப்போது தமிழக தமிழர்களும் உதவி செய்யாவிட்டால் யார் உதவி செய்வர்?. தமிழகத்தில் இருந்து 18 மைல் தொலைவில் தான் ஈழத்தமிழர்கள் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரப் புறக்கணிப்பு செய்தன. அதன் விளைவாக நிறவெறி அரசு வீழ்ந்தது. அதுபோல ராஜபக்ஷ அரசுக்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்பை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் பொருள்களை வாங்கக் கூடாது. அங்கு சுற்றுலா செல்லக் கூடாது. இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலியில் 3 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளது வேறு எங்கும் நடக்காத மனிதப் பேரவலமாகும். 3 லட்சம் பேருக்கு முறையான தங்கும் வசதி கிடையாது. போதிய கழிப்பறை வசதி கிடையாது. வெறும் 500 கழிப்பறைகள் தான் உள்ளன. சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் சிக்குன்-குன்யா, மலேரியா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி இறந்து வருகின்றனர். சிகிச்சை அளிக்கப் போதிய டாக்டர்கள் இல்லை. இலங்கை அரசின் போர் குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் தண்டனை வழங்க வேண்டும் என்றார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் இதில் பேசினர்.
மேலும் இங்கே தொடர்க...
சென்னை
இலங்கை அகதிகள் நிரந்தரமாகத் தங்க உதவி: மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்


அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி காஞ்சிபுரம் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள 40 அடி உயர அண்ணா நினைவுத் தூணை திறந்து வைத்தார் முதல்வர் கருணாநிதி. உடன் ம
காஞ்சிபுரம், செப்.26: தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் சுதந்திரமாகவும், நிரந்தரமாகவும் தங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்குமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழாவில நிறைவேற்றப்பட்ட 8 தீர்மானங்கள்: இலங்கைத் தமிழ் அகதிகள் சுதந்திரமாக தங்குவதற்கு வழி செய்ய வேண்டும். தற்போது தமிழகத்தில் 115 முகாம்களில் மொத்தம் 73 ஆயிரத்து 572 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர். மேலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்காமல் வெளியே தங்கியுள்ளனர். அவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்குமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும். இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் விரைவில் இலங்கையில் அவர்களது வீடுகளுக்கு திரும்புவதுதான் தாற்காலிக முகாம்களில் அவர்கள் அனுபவித்து வரும் துயரங்களைக் களையும் ஒரே தீர்வாகும் என்று இலங்கை உணர்த்திடும் வகையில் மத்திய அரசு தேவையான அழுத்தத்தைக் கொடுத்திட வேண்டும். இலங்கைக் கடற்படையினர் நடத்தும் அத்துமீறல்கள், தாக்குதல்கள், வன்முறைகளால் தமிழக மீனவர்கள் துன்பத்துக்கு ஆளாவதற்கு நிரந்தரமாக முடிவு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கச்சத்தீவை மீட்க...: கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்கள் தடை ஏதுமின்றி செல்வதற்கும் அதையொட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்டு எடுப்பதற்கும் கச்சத்தீவினை இந்தியாவுக்கே திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். தமிழ்மொழியை ஆட்சி மொழிகளில் ஒன்றாக்க வேண்டும். இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகள் நிரந்தரமாக காப்பாற்றப்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆட்சி மொழிகள் அனைத்தும் மத்திய ஆட்சி மொழியாக ஆக்கப்படவேண்டும். இந்தியாவில் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் தாமதம் ஏற்படுமேயானல் முதல் கட்டமாக திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்த செம்மொழியுமான தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மாநிலத்தில் சுயாட்சியும், மத்திய கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற இந்திய அரசு அமைப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்திய நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தில் நிலுவையில் உள்ள எஞ்சிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...
சென்னை
ஏர் இந்தியா பைலட்டுகள் திடீர் வேலை நிறுத்தம்

http://www.indiavisitinformation.com/india-tour/india-transportation/airlines/images/air-india1.jpg
புது தில்லி, செப். 26: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பைலட்டுகளில் ஒரு பிரிவினர் வேலைக்கு வராததால் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையை ஏர் இந்தியா நிறுவனம் குறைத்ததை எதிர்த்து பைலட்டுகளில் ஒரு பிரிவினர் சனிக்கிழமை வேலைக்கு வரவில்லை. தில்லியிலிருந்து காபூலுக்குச் செல்லும் சர்வதேச விமான சேவை மற்றும் மும்பையிலிருந்து லக்னெü, ஒüரங்காபாத், புணே, சென்னை, ஸ்ரீநகர், இந்தூர், போபால் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து கொழும்பு மற்றும் ஷார்ஜாவுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது தவிர சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டது. கோல்கத்தாவிலிருந்து அய்ஸ்வால் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டது. விமான சேவையில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட்டபோதிலும் பெருமளவிலான விமானங்கள் இயக்கப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் ஜிதேந்திர பார்கவா தெரிவித்தார். மொத்தம் 11 விமான சேவைகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டன. பெரும்பாலான மார்க்கங்களில் விமான சேவை பாதிப்பின்றி நடைபெற்றதாக அவர் மேலும் கூறினார். 11 பைலட்டுகள் பணிக்குத் திரும்பவில்லை என்று பார்கவா தெரிவித்தார். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக பைலட்டுகள் பணிக்குத் திரும்பவில்லை என்று கேப்டன் ஆர்.கே. பல்லா தெரிவித்தார். பணிக்குத் திரும்பாத பைலட்டுகள் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை ஏர் இந்தியா நிர்வாகத்துடன் பேச்சு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...
வடக்கின்; அபிவிருத்தி திட்டம் பெரும் வெற்றி.முன்னேற்ற கூட்டத்தில்; அதிகாரிகளுக்கு பாராட்டு













அரசாங்கம் வடக்கில் பயங்கரவாதத்தை
ஒழித்துஜனநாயகசூழலை ஏற்படுத்திவருவதுடன்,வடமாகாணத்தின் அபிவிருத்தியில் அதி கூடிய கவனத்தை செலுத்திவருவதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கூறினார்.

வடக்கின் வசந்தம் மற்றும் 180 நாள் அபிவிருத்தி திட்டம்,மாவட்டங்களின் ;கமநெகும கிராம எழச்சி திட்டம் பற்றி ஆராயும் மீளாய்வு கூட்டம் வவுனியா அரசாங்க அதிபர் பணிமனை கேட்போர் கூடத்தில் இன்று (2009.09.26)இடம் பெற்றது.

தற்போதை சூழலில் அரசாங்கம் வடக்கின் ;வசந்தம அபிவிருத்தி திட்டத்தின் மூலம் முழுமையான தமது வேலைத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.குறிப்பாக கட்டிட நிர்மாணப்பணிகளுக்கு அதி கூடிய கவனத்தை செலுத்தி அப்பணிகளை விரைவுபடுத்திவருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும்.ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்; பாராளுமன்ற உறுப்பினருமான பெஷில் ராஜபக்ஷவின் நெரடி கண்கானிப்பின் கீழும் இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பயங்கரவாத செயற்பாடுகளால் சேதமான கட்டிடங்களை மீள்கட்டுமானம்ணீ செய்யும் பணிகள் செவ்வனே இடம் பெறுகின்றது.முன்பள்ளி பாடசாலைகள்,பாடசாலைகள்,வைத்தியசாலைகள்,பலநோக்கு கூட்டுறவு சங்க கடைகள்,உள்ளிட்ட அரச திணைக்களங்களின் புனரமைப்பகளும் அவற்றில் சிலவாகும்.

மக்களின் மிகவும்; அடிப்படை தேவைகளுல் பாதை,மின்சாரம்,குடிநீர் திட்டங்கள் என்பனவும் முன்னுரிமையடிப்படையில் வழங்கபட்டுவருகின்றது.

இப்பணிகளை அரசாங்கம் மன்னெடுக்கின்ற போது.அதனை மிகவும் துரிதமாக முன்னெடுப்பதில் வடமாகாண அரச திணைக்களங்களின் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கிவருவதற்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கணடள்கின்றேன் என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார்.

இந்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜீ..சந்திர சிறி,மன்னால் பொலீஸ் மா அதிபர் சந்திரா பெர்ணாண்டோ,வவுனியா.மன்னார்,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் உட்பட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.


மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றத்திற்கு சவாலாக இருப்பது நிலக்கண்ணிகளும் மிதிவெடிகளுமே

தெரிந்து கொண்டே மரணப்பிடிக்குள்

மக்களை தள்ளிவிட முடியாது

“இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் நட வடிக்கைகளுக்கு பெரும் சவாலாக இருப்பது நிலக் கண்ணி வெடிகளும், மிதிவெடிகளுமே. தெரிந்து கொண்டே மக்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளிவிட எம்மால் முடியாது. படிப்படியாக மீளக்குடியமர்த்தும் நடவடிக்கை களை அரசாங்கம் நடத்தியும் வருகிறது” என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கா தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 64வது பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெ ரிக்கா சென்றுள்ள பிரதமர் ரத்னசிறி விக் கிரமநாயக்கா, அங்கு நடைபெற்ற ஆசிய சங்கத்தின் கூட்டத் தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அவர் சிங்களத்தில் உரை யாற்றினார். பிரதமர் தொடர்ந்தும் உரையாற்று கையில் கூறியதாவது,

எனது தாய்நாடு மூன்று தசாப்தங்களாக பயங் கரவாதப் பிரச்சினையில் சிக்கித் தவித்துக் கொண் டிருந்தது. அதனை எவ்வாறு எமது நாட்டிலிரு ந்து துடைத் தெறிந்தது என்பதையும் உலகுக்கு காட்டிவிட்டோம்.

அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் கூட புலிகள் இயக்கம் உலகிலேயே பலம்வாய்ந்த பயங்கர அமைப்பு என கூறியிருந்தது.

புலிகளை எவராலும் தோற்கடிக்கச் செய்ய முடியாது என்ற எண்ணங்கள் உருவாக்கப்பட்டு சிலர் புலிகளை உயரிய ஸ்தானத்தில் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான ஒரு இயக் கத்தை தவிடுபொடியாக்கி தோற்கடித்தோம்.

இதற்கென சமாதானத்தை விரும்புகின்ற மக் களும், உலகத் தலைவர்களும், அங்கு வாழுகி ன்ற மக்களும் எமக்கு பல்வேறு வழிகளில் உத விகளை செய்தார்கள்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் அவர் களது சொந்த மண்ணில் குடியமர்த்தும் நடவடி க்கைகளை துரிதமாக செய்து வருகிறோம்.

வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரு கோணமலை பகுதியிலுள்ள மக்களை மீளக்குடி யமர்த்திவிட்டோம். குறுகிய நாட்களுக்குள் இவ ர்களை மீளக்குடியமர்த்தியது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

என்றாலும், இதற்கு தடையாக இருப்பது பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்டுள்ள நிலக் கண்ணிவெடிகளும், மிதிவெடிகளுமே. மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விளை நிலங்களில் மிதி வெடிகள் மரணத்தின் சாயலில் புதைந்து கிட க்கின்றன.

தெரிந்து கொண்டே அப்பாவி மக்களை மர ணத்தின் பிடிக்குள் எங்களால் தள்ளிவிட முடி யாது.

வடக்கில் நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெ ற்று கொண்டிருக்கின்றன. இதில் அரச சார்பற்ற நிறுவனங்களும் செயற்படுகின்றன. இராணுவம் பெருந்தொகையான மிதிவெடிகளை அகற்றி யுள்ளன. நிலக் கண்ணிவெடி, மிதிவெடிகள் அகற்றுவதற்காக நவீன ரக இயந்திரங்களையும் அரசாங்கம் கொண்டுவந்துள்ளன.

உலக ரீதியாக எங்களுக்கு இரண்டு பிரதான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக் கின்றது. சுற்றாடல் மாசடைவது ஒரு சவாலாக வும், பயங்கவாதம் இன்னுமொரு சவாலாக வும் இருக்கிறது.

ஒற்றுமை, ஒத்துழைப்பு, செயற்படுதல் என்ப தன் ஊடாக இந்த சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதை இந்த இடத்தில் கூற விரு ம்புகிறேன். இதற்கென ஒருங்கிணைந்து செயற் பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் சிறந்த உலகத்தை காண்பதற்கு இவை உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும் இங்கே தொடர்க...


ரூ. 2353 மில். செலவில் புல்டோசர், பெக்கோ இயந்திரங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி

வடக்கின் அபிவிருத்தியை துரிதப்படுத்தல்


வடக்கின் அபிவிருத்தியை துரிதப்படுத்தும் நோக்குடன் கட்டட நிர்மாணப் பணிகள், வீதி அபிவிருத்தி உட்கட்ட மைப்பு வசதிகளின் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள வென 2353 மில்லியன் ரூபா செலவில் 101 புல்டோசர்கள், பெக்கோ இயந்திரங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய் யப்பட்டுள்ளன.

வடக்கின் அபிவிருத்தி மீள் குடியேற்ற நடவடிக் கைக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று மேற்படி இயந்திரங்களை பொறுப்பேற்றார்.

கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற கையளிப்பு வைபவத்தின் போது 101 இயந்திரங்களும் பொறுப்பேற்க ப்பட்டது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்க ளுள் 22 டோசர்கள், 37 மோட்டர் கிறேடர்கள், 09 ரோல ர்கள், 14 எக்ஸ்கவேட்டர்கள். 19 வீல் லோடர்கள் என்பன அடங்குகின்றன.

மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கு ஏதுவாக வீதிகளை புனரமைப்பதுடன் உட்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ளன
மேலும் இங்கே தொடர்க...

உட்கட்டமைப்பு வசதிகளை ஒக்டோபர் 15க்கு முன் பூர்த்தி செய்ய பணிப்பு

கட்டுக்கரை குளத்திலிருந்து நவம்பர் 15இல் நீர்

வன்னியில் மீள்குடியேற்றத்தை நடத்துவதற்கு ஏதுவாக கட்டட நிர்மாணப் பணிகள், உட்கட்டமைப்பு வசதிகளை ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னதாக பூர்த்தி செய்யு மாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனம், அரச வர்த்தக கூட் டுத்தாபனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை உட்பட நிறு வனங்களுக்கு இப்பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அரசின் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என் றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் மன்னார் அரச அதிபர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது மேற்படி அறிவுறு த்தல்கள் வழங்கப்பட்டன.

வன்னியில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, வவுனியாவில் ஏ-9 வீதிக்கு அண்மித்த பகுதியிலுள்ள சுமார் 2000 ஏக்கர் நெற் காணியில் செய் கையை ஆரம்பிக்கும் நோக்குடன் எதிர்வரும் முதலாம் திகதி ஏர்பூட்டு விழாவொன்றும் நடத்தப்படவுள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்திலுள்ள மன்னார் கட்டுக் கரை குளத்தை அண்டிய பகுதியிலுள்ள சுமார் 4000 ஏக்கர் நெற் காணிகளில் செய்கையை ஆரம்பிக்கவும் முடிவு செய் யப்பட்டுள்ளது.

கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதிகளில் மிதி வெடி, கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வரும் படைத்தரப்பினர் இன்னும் இரண் டொரு தினங்களில் அனுமதியளித்ததும் செய்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

அடுத்த பெரும்போகத்தில் வடக்கில் பாரிய விளைச்சலை செய்ய வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயற்படு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மன்னார் கட்டுக்கரை குளத்திற்கு அருவியாற்றிலிருந்து நீரை சேகரிக்கும் வேலைகள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுவதுடன் நவம்பர் 15ஆம் திகதி முதல் நானாட்டான், வங்காலை பகுதியில் உள்ள 2000 ஏக்கர் நிலத்திற்கு நீர் திறந்துவிடப்படவுள்ளது. முற்றாக மிதிவெடிகள் அகற்றப்பட்ட இப்பகுதியில் பெரும் போகத் திற்கான விளைச்சல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் கே. சிவபாதசுந்தரம் தெரி வித்தார்.

மேலும் இங்கே தொடர்க...

பிறைன்டிக்ஸ் உதவித் திட்டத்தின் கீழ் மெனிக் நலன்புரி கிராமத்தில் குளியல் வசதி

இலங்கையின் முன்னணி ஆடைத் தயாரிப்பு நிறுவனமான பிறெண்டிக்ஸ், வவுனியா மெனிக் நலன்புரி கிராமத்தில் ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் குளிக்கவும் 50 குளியலறைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இவ்வருடத்தில் இந்நிறுவனம் மேற்கொண்டிருக்கும் பாரிய சமூகப் பணிகளில் ஒன்றான இக்குளியலறை அமைக்கும் திட்டத்தின் கீழ் 50 குளியல் தொகுதிகள் அமைக்கப்படுவதோடு ஒவ்வொன்றிலும் 20 குளியல் அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும்.

தண்ணீரும் சுத்திகரிப்புமே நிவாரண முகாம்களின் முக்கிய தேவைகளில் முதன்மையானவை என்ற கருத்தின்படியே பிறைண்டிக்ஸ் நிறுவனம் இத் திட்டத்தை செயல்படுத்த முன்வந்தது என்று நிறுவனத்தின் சமூக சேவைகள் பிரிவின் தலைவர் அனுஷா அலஸ் தெரிவித்துள்ளார். இத்திட்டம் செப்டம்பர் இறுதியில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 50 குளியல் மையங்களும் முகாமின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படவுள்ளதால் முகாம் வாசிகளுக்கு எளிதாக ஏதாவது ஒரு மையத்தை நாடக்கூடியதாக இருக்கும் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் ஏற்கனவே அகதிகளின் பேரில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஆடைகளை வழங்கியுள்ளதோடு மேலும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான நீர்த் தாங்கிகள், தண்ணீர் போத்தல்கள், உலர் உணவுகள் போன்றவற்றையும் வழங்கியிருக்கிறது.

மேலும் இங்கே தொடர்க...