27 டிசம்பர், 2010

மஹரகமவில் கொள்ளையர் மீது பொலிஸ் சூடு: ஒருவர் பலி அடகுக்கடையை கொள்ளையிட முயன்றபோது சம்பவம்




மஹரகமவில் ஆயுதம் தாங்கிய கொள்ளைக் கும்பல் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொள்ளைக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

மஹரகம, ஹைலெவல் வீதியிலுள்ள நகை அடகு வைக்கும் இடமொன்றைக் கொள்ளையிடவென நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஆயுதம் தாங்கிய மூன்று கொள்ளையர் முற்பட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு உடனடியாக விரைந்த பொலிஸார் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இதன்போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டாவது நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதுடன் மற்றையவர் தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ரவைகளை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

தப்பிச் சென்ற கொள்ளையரை கைது செய்யும் பொருட்டு மஹரகம மற்றும் நுகேகொட பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக