29 டிசம்பர், 2010

120 மின் அலகுக்குள் கட்டண மாற்றமில்லை 90 அலகு மின்கட்டண முடிவை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மின்சார சபைக்கு பணிப்பு 90 வீதமானோருக்கு பாதிப்பில்லை

undefined

ஜனவரி மாதம் முதல் 90 அலகுக்கு மேல் மின் கட்டணத்தை அதிகரிக்கும் முடிவை இடை நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மின்சக்தி அமைச்சிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 120 அலகு வரை மின் கட்டணத்தில் மாற்றம் செய்யாது 120 அலகுக்கு மேற்படும் அலகுகளுக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, அமைச்சின் செயலாளர் சீ. பெர்டினன்டஸ், திறைசேரி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுத் தலைவர் ஜயதிஸ்ஸ கொஸ்தா உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஜனவரி மாதம் முதல் 90 அலகுக்கு மேல் மின் கட்டணத்தை 8 வீதத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பில் மக்கள் பயன்பாட்டு ஆணைக் குழு பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட றிந்தது. இதனடிப்படையிலேயே மின் கட்டண உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட இருந்தது.

நாட்டில் 46 இலட்சம் மின் பாவனை யாளர்கள் உள்ளனர். மின் கட்டணத்தை 120 அலகிற்கு மேல் உயர்த்துவதால் 4 இலட்சம் பேர் மட்டுமே கட்டண அதிகரி ப்புக்கு உள்ளாவர். இவர்கள் மொத்த பாவனையாளர்களில் 8 வீதமானவர்களாகும் என மின்சக்தி அமைச்சு கூறியது. புதிய திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் அடங்கலாக 90 வீதமானவர்களின் மின் கட்டணத்தில் எதுவித மாற்றமும் ஏற்படாது.

இது தவிர 2011 வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு அரச ஆஸ்பத்திரிகள், மத ஸ்தலங்கள், பாடசாலைகளின் மின் கட்டணத்தை 25 வீதத்தினால் குறைக்கும் திட்டமும் அதேபோல அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சு கூறியது.

தற்பொழுது நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி 8 வீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் 6 வீதமாக குறைந்துள்ளது. முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இந்த நிலைமைகளை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே அறிவித்த மின் கட்டண உயர்வு நாட்டின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளுக்கு உகந்ததல்ல என மேற்படி கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. மின்சார சபை நஷ்டத்தில் இயங்குவதால் குறிப்பிட்ட அளவினால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளபோதும் அதனை நியாயமான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் இங்கு தெரி விக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக