28 டிசம்பர், 2010

இவ்வருடம் 2 இலட்சம் பேருக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

undefined
இவ்வருடம் இரண்டு இலட்சம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவிக்கின்றது.

மொத்தம் 2 இலட்சத்து 3 ஆயிரத்து 488 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாகவும், இவர்களில் 1 இலட்சத்து ஆயிரத்து 140 பேர் ஆண்களும், 89ஆயிரத்து 409 பேர் பெண்களும் ஆவர்.

90 ஆயிரம் பேர் சவூதி அரேபியாவில் வேலை பெற்றுள்ளதாகவும் தற்போது சவூதி அரேபியாவில் 56 ஆயிரத்து 100 இலங்கையர்கள் தொழில் புரிவதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது.

இலங்கையிலிருந்து சென்றுள்ள ஏனையவர்கள் பஹ்ரைன், ஓமான்,கட்டார், குவைத், இஸ்ரவேல், சிங்கப்பூர், மலேசியா, ஜோர்தான்,சைபிரஸ், மாலைத்தீவு, தென்கொரியா போன்ற நாடுகளில் பணி புரிகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக