28 டிசம்பர், 2010

முன்னாள் புலி உறுப்பினர்களின் விபரம் சேகரிக்கப்படுவதால் யாழில் அச்ச நிலை

undefined


யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வுப் பிரிவினர் அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிவருவதால் மீண்டும் ஓர் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

யாழில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் முன்னாள் புலி உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி இவ்வாறு விபரம் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மறுவாழ்வுத் திட்டத்;தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பெறுவதற்காகவே இவ்வாறு விபரங்கள் கோரப்படுவதாக இராணுவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக