29 டிசம்பர், 2010

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள் பெற்றோர்களை இழந்தவர்கள்

முல்லைundefinedத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த கால யுத்தத்தின் போது பெற்றோர்களை இழந்து பிள்ளைகள் ஆயிரத்து 100 பேர் காணப்படுவதாக தேசிய பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இம் மாவட்டங்களில் உள்ள இப் பிள்ளைகளின் நன்மை கருதி விசேட நிகழ்ச்சி திட்டமொன்றை நடைமுறைப்படுத்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் ஆரம்பகட்டமாக இப் பிள்ளைகளுக்கு உதவ விரும்புவோர், நேரடியாக உதவலாம் எனவும், அல்லது 24 மணிதியாலம் சேவையில் உள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் 1929 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக