31 டிசம்பர், 2010

நகரப் பகுதிகளில் கட்டடங்களை அமைப்பதற்கான வரி நீக்கம்

வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் கட்டுமானப் பணிக்கென நகர அபிவிருத்தி அதிகார சபையால் அறவிடப்பட்டுவந்த ஒரு வீத வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த மாநாட்டிலேயே ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இத்தகவலைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 10 ஆண்டுகளில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளை 40 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு ஏதுவாக வீடுகள் நீங்கலாக ஏனைய கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட ஒரு வீத வரி நீக்கப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்திட்டத் துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக