30 டிசம்பர், 2010

கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு


இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்கள் கடற் படையினரால் காப்பாற்றப்பட்டுள் ளனர்.

இயந்திரக் கோளாறு காரணமாக இந்திய மீனவர்கள் பயணித்த படகு ஒன்று நடுக்கடலில் செயலிழந்துள் ளது.

உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் கடற்படையினர் இந்திய மீனவர்க ளைக் காப்பாற்றிக் கரைக்கு அழை த்து வந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாதகல் மேற்கை அண்மித்த ஆழ்கடல் பகுதியிலேயே இவ் இந்திய மீனவர்கள் மீட்கப் பட்டதாக கடற்படையினர் அறிவித் துள்ளனர்.

இதற்கு முன்னரும் பல தட வைகள் நடுக்கடலில் தத்தளித்த இந் திய மீனவர்களைக் காப்பாற்றியிரு ப்பதாகத் தெரிவித்திருக்கும் கடற் படையினர், நவம்பர் 2 ஆம் திகதி யும் 11 இந்திய மீனவர்களைக் காப் பாற்றியிருப்பதாகவும் கூறினர்.

காப்பாற்றப்பட்ட மீனவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கியிருப்பதுடன் அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பிய னுப்ப நடவடிக்கை எடுத்திருப்ப தாகவும், அவர்களின் படகு திருத்தப் பட்டிருப்பதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக