30 டிசம்பர், 2010

வவுனியா சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்


வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை யிலிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட ஒரு கைதியை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு வரவேண்டும் என கோரி கைதிகளில் ஒரு தொகையினர் நேற்றுக் காலை முதல் உண்ணாவிரதம் அனுஷ்டித்து வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய கைதிகள் உணவு பரிமாறுவ தினை உண்ணாவிரதிகள் தடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சிறைச்சாலையில் 86 கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரிலிருந்து விளக்கமறியலுக்கு கொண்டுவரப்பட்ட பாதிரியார் மீது தாக்குதலை நடத்தியமைக்காக குறித்த கைதி அனுராதபுரம் விளக்கமறியல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக