26 டிசம்பர், 2010

மஹாரகம நகைக்கடையில் கொள்ளை முயற்சி:பொலிஸார் சுட்டதில் ஒருவர் பலி

மஹாரகம பகுதியில் வைத்து நகைக்கடை ஒன்றில் கொள்ளையிட முயற்சித்த சந்தேக நபர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை குறித்த ஆபணர விற்பனை நிலையத்தை கொள்ளையிட வந்த இனந்தெரியாத மூவர் தொடர்பில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரை நோக்கி குறித்த நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் பதிலுக்கு பொலிசார் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக