31 டிசம்பர், 2010

அரச நிறுவனங்களின் பெயர் மாற்றம்; ‘சிலோன்’ என்பதற்கு பதிலாக இனிமேல் ‘ஸ்ரீலங்கா’ என்ற பதம்

‘சிலோன்’ எனப் பெயர் கொண்டிருக்கும் அனைத்து அரசாங்கத் திணைக்களத்தின் பெயர்களையும் ‘ஸ்ரீலங்கா’ என மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை காலமும் ‘சிலோன்’ என அழைக்கப்பட்ட அனைத்து அரசாங்க நிறுவனங்களும் இனிமேல் ‘ஸ்ரீலங்கா’ என மாற்றப்படவிருப்பதுடன், இதற்கு அவசியமான சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.

உதாரணமாக இத்திட்டத்துக்கு அமைய ‘பாங்க் ஒவ் சிலோன்’ ‘பாங்க் ஒவ் ஸ்ரீலங்கா’, ‘சிலோன் எலக்ட்டிசிட்டி போர்ட்’ ‘சிறிலங்கா எலக்ட்டிசிட்டி போர்ட்’ என்றும் மாற்றியமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக