30 டிசம்பர், 2010

கெமரா ஊடாக கொழும்பு நகரை கண்காணிக்கும் பணி ஆரம்பித்து வைப்பு



சகல நடவடிக்கைகளையும் துல்லியமாக படம்பிடிக்கும் (சி. சி. ரி. வி) கெமராக்களின் ஊடாக கொழும்பு நகரை முழுமையாகக் கண்காணிக்கும் பணிகள் நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

புறக்கோட்டை யிலுள்ள பொலிஸ் நலன்புரி கட்டிடத் தொகுதியில் அமைக்கப் பட்டுள்ள சி. சி. ரி. வி. கட்டுப்பாட்டு அறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்த பாதுகாப்புச் செயலாளர்:

கொழும்பு நகரில் பொருத்தப்பட்ட கெமராக்களின் ஊடாக பிடிக்கப்படும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையிலுள்ள திரைகள் ஊடாக சுமார் ஒரு மணித்தி யாலமாக இருந்து பாதுகாப்புச் செயலாளர் அவதானித்தார்.

பல்வேறு கேணங்களில் துல்லியமாக படம்பிடித்த காட்சிகளை திரைகளின் ஊடாக பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர், அவற்றை தானே இயக்கி பார்வையிட்ட துடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண, பொலிஸ் தகவல் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பெர்னாண்டோ ஆகியோர் சி. சி. ரி. வி. கெமராக்களின் செயற்பாடுகள் மற்றும் கண்காணிக்கும் விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளருக்கு விளக்கமளித்தனர்.

23 கோடியே 80 இலட்சம் ரூபா செலவில் இந்த சி. சி. ரி. வி கெமரா பாதுகாப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டு ள்ளது.

வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் சிறந்த ஒரு கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2007ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது 228 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

கொழும்பு நகரிலுள்ள பிரதான இடங்களில் சுமார் 108 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அவற்றை 28 திரைகள் ஊடாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணிநேரமும் பொலிஸ் சி. சி. ரி. வி. கண்காணிப்பு பிரிவினர் அவதானித்து வருகின்றனர்.

குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக குற்றவாளிகளை கைது செய்கின்ற போது குற்றவாளிகளை பின்தொடர்தல், வாகனங்களை அடையாளம் காணுதல், விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச் செல்லல், கொலை, கொள்ளை, வாகன நெரிசல் போன்றவற்றை இந்த கெமராக்கள் மூலமாக துல்லியமாக அவதானிக்க முடியும் என்றார்.

ஜனாதிபதி அவர்களினது ஆலோசனைக் கமைய, பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள இந்தத் திட்டம் பொது மக்களுக்கு பாரிய நன்மைகளை அளிக்கும்.

புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல், வாகன நெரிசல்களை அவதானித்தல் போன்றவற்றையும் இதன்மூலம் மேற்கொள்ள முடியும் என்றார்.

பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தை கொழும்பு நகரில் உருவாக்குவதற்காக, மெட்ரோ பொலிடன் நிறுவனமும் மொரட்டுவ பல்கலைக்கழத்தின் பொறியியல் பிரிவும் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக