30 டிசம்பர், 2010

முல்லைத்தீவில் இன்று 800 பேர் மீள்குடியமர்வு


உறவினர், நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ள 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்றில் மீள் குடியேற்றப்பட உள்ளனர்.

கரைதுறைப் பற்றில் உள்ள 33 கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதோடு, இதுவரை இங்கு மீள்குடியேற்றப்படாதவ ர்களே இன்று மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைதீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் கூறினார். மழை காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமாகியுள்ள தாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடி யேற்றப் பணிகள் பெருமளவு நிறைவடை ந்துள்ளதோடு, மேலும் 28 கிராம சேவகர் பிரிவுகளிலே மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ளனர்.

கரைதுறைப்பற்றில் 13 கிராம சேவகர் பிரிவுகளிலும், புதுக்குடியிருப்பில் 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒட்டுச்சுட்டானில் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் மீள்குடியேற்றம் எஞ்சியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக