30 மார்ச், 2011

ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் வீட்டின்மீது டைனமைட் தாக்குதல்

திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேச ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் வீட்டின் மீது டைனமைட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வீட்டின் ஓடுகள் சேதமடைந்துள்ளதாகவும், உயிர் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மே மாதம் நடைபெறவுள்ள உள்ராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள இவ்வேட்பாளரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதற்கான காரணங்கள் பற்றி புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக