கொழும்பில்
நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண அரையிறுதி போட்டியை காண வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயி நிராகரித்துள்ளார்.
இந்த அழைப்பை நியுசிலாந்து பிரதமர் நிராகரித்து விட்டதாக அவரது செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனாதிபதியின் அழைப்பை நியுசிலாந்து பிரதமர் நிராகரித்ததற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள போட்டியக் காண நியூசிலாந்து பிரதமரின் பிரதிநிதியாக புதுடெல்லிக்கான நியூசிலாந்து தூதுவர் கொழும்பு வரவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண அரையிறுதி போட்டியை காண வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயி நிராகரித்துள்ளார்.இந்த அழைப்பை நியுசிலாந்து பிரதமர் நிராகரித்து விட்டதாக அவரது செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனாதிபதியின் அழைப்பை நியுசிலாந்து பிரதமர் நிராகரித்ததற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ள போட்டியக் காண நியூசிலாந்து பிரதமரின் பிரதிநிதியாக புதுடெல்லிக்கான நியூசிலாந்து தூதுவர் கொழும்பு வரவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக