17 மார்ச், 2011

உயர் கல்விக்குத் 62 சதவீதமானோர் தகுதிபெற்றுள்ளனர்: பரீட்சை ஆணையாளர்


2010 ஆம் ஆண்டு ஜீ.ஸி.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் முதன் முறையாக 62 சதவீதமானோர் உயர்தரக் கல்வி கற்கத் தகுதி பெற்றுள்ளர் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பெலவத்தையில் உள்ள பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்: கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜீ.ஸி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு 3இலட்சத்து 10ஆயிரத்து 642 பாடசாலைப் பரீட்சார்த்திகள் தோற்றினர். அவர்களில் 1இலட்சத்து 82ஆயிரத்து 630 பேர் உயர் தரம் கற்கத் தகைமை பெற்றுள்ளனர்.

பாடசாலை மதிப்பீட்டுப் பரீட்சைகள் மூலம் 12ஆயிரத்து 482 பேர் உயர்கல்விக்கு தகுதிபெற்றுள்ளனர். ஆகவே இம்முறை மொத்தம் 1இலட்சத்து 95ஆயிரத்து 112 பேர் உயர்கல்விக்குத் தகைமை பெற்றுள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக