18 மார்ச், 2011

யாழ். நகர் விக்டோரியா வீதி திறப்பு இறுதி வீதி தடையும் நீங்கியது

யாழ். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா வீதி நேற்று முதல் பொதுமக்கள் பாவனைக் காக திறந்துவிடப் பட்டுள்ளது. யாழ். நகரின் மையத்தில் யாழ். போதனா வைத்திய சாலையின் பின்புற மாக உள்ள மேற்படி வீதி மின்சார நிலைய வீதி, மணிக்கூட்டு வீதி, பருத்தித்துறை வீதி ஆகியவற்றை இணைக்கும் பிரதானமான குறுக்கு வீதி ஆகும்.

கடந்த 15 ஆண்டுகாலமாக பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த இவ்வீதி நேற்று பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டது.

இந்த வீதித் திறப்புடன் யாழ். நகரில் இருந்த இறுதி வீதித்தடைகளும் அகற்றப்பட்டு பாதுகாப்பு வலய வீதித் தடைகள் எதுவுமற்ற நகரமாக யாழ். நகரம் உருவாகியுள்ளது.

இந்த வீதித் திறப்பு நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கதுருசிங்க யாழ். நகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார் மற்றும் யாழ். அரச அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ். நகரின் அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கவனத்தில் கொண்டு இவ்வீதி பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக