18 மார்ச், 2011

குருநாகல் மாவட்டத்தில் 60 வீத வாக்கு பதிவு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் 60 சதவீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. எதுவித அசம்பாவிதங்களுமின்றி மிக அமைதியான முறையில் குருநாகல் மாவட்டத்திலுள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றன.

மாவட்டத்திலுள்ள 225 வாக்குச் சாவடிகளில் 4120 பேர் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேற்று நண்பகல் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிக்கச் சென்றதை காண முடிந்தது.

நேற்று பி. ப. 4 மணிக்கு வாக்குகளிப்பு முடிவடைந்து வாக்குப் பெட்டிகள் குருநாகல் நகரில் அமைக்கப்பட்டுள்ள மூன்று வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதேவேளை, குளியாப்பிட்டி பிரதேச சபை உட்பட மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் இம் மாவட்டத்தில் இடம்பெறவில்லை. நீதிமன்ற உத்தரவின் பேரில் அவை பின்போடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக