29 மார்ச், 2011

எவருமே அப்பாவி பொதுமக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடாது: ஜனாதிபதி

எவருமே அப்பாவி பொதுமக்களு க்கு கேடுவிளைவிக்கக் கூடாது, பொ துமக்களைக் கொல்வதையோ தேசத் தின் இறையாண்மை மீறப்படுவ தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்றுக்காலை அலரி மாளிகையில் வெளிநாட்டு செய்தி நிறு வனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது லிபியா மீதான மேற்குலகின் தாக்குதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

லிபிய பிரச்சினை தொடர்பாக மேலும் ஜனாதிபதி கருத்துவெளியிடுகையில், மக்களே என்றும் சரியானவர்கள் என்பதில் தான் எப்போதுமே நம்பிக்கை கொண்டுள்ளேன். மக்கள் தவறிழைக்கமாட்டார்கள். ஆனால் எவருமே அப்பாவி பொதுமக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடாது பொதுமக்களைக் கொல்வதையோ தேசத்தின் இறையாண்மை மீறப்படுவதையோ ஏற்றுக்கொள்ளமுடியாது. யாரேனும் மக்களைக் கொல்லுமிடத்து நாம் அவர்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றார்.

இந்தச்சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சில சந்தர்ப்பங்களில் கூட்டுப்படைகள் 1973 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின் பிரகாரமான ஆணையையும் மீறியிப்பதாகவும் தோன்றுகின்றதென சுட்டிக்காட்டினார்.

சுமார் இரண்டரை மணிநேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடக்கம் லிபியப் பிரச்சினைவரையில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக