30 மார்ச், 2011

அகதி அந்தஸ்து கோரும் இலங்கையரின் எண்ணிக்கை குறைவு: ஐ.நா. அகதிகளுக்கான நிறுவனம்

இலங்கை உட்பட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக செல்வோரின் தொகை குறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த அகதி அந்தஸ்துக்கோருவோரின் தொகை தற்போது அரைவாசியாக குறைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கைப்படி கடந்த ஆண்டு 44 வளர்ச்சியடைந்த நாடுகளில் 358 ஆயிரத்து 800 பேர் அகதி அந்தஸ்தை கோரியுள்ளனர்.

இது 2001ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 வீத குறைவான எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கையில் சேர்பியர்களே முன்னிலை பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக