17 மார்ச், 2011

ஜப்பானிலிருந்து இலங்கையரை அழைத்துவர விசேட ஏற்பாடு







இரு விமானங்கள் அவசரமாக அனுப்பிவைப்பு

ஜப்பானிலுள்ள இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இரு ஸ்ரீலங்கன் விமானங்கள் நேற்று ஜப்பானுக்கு அனுப்பப்பட்டதாக சிவில் விமானச் சேவை அமைச்சு தெரிவித்தது.

சுனாமி அனர்த்தம் காரணமாக ஜப்பானில் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 12 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர் உள்ளதோடு அவர்களில் நாடு திரும்ப விருப்பமானவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

சுனாமி அனர்த்தத்தினால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதும் வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க விசேட விமானங்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன. ஜப்பானிலுள்ள இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று நாடு திரும்புவர் என சிவில் விமானச் சேவை அமைச்சு கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக