18 மார்ச், 2011

ஜப்பான் அணு உலை குறைபாடுகள்: பாதிப்புகள் பற்றி எச்சரித்தும் ஜப்பான் உதாசீனம்




ஜப்பானில் புகுஷிமாவில் அமைக்கப்பட்ட அணு உலையில் இருந்த குறை பாடுகள் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகாமை அமைப்பு ஏற்கனவே ஜப் பானை எச்சரித்திருந்த தாகவும் அந்த எச்சரிக்கையை ஜப்பான் உதாசீனம் செய்தமையே ஜப்பானில் தற்போது அணு உலைகளில் கசிவு ஏற்பட்டமைக்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்திலிருந்து வெளியாகும் டெய்லி ரெலிகிராஃப்ட் என்ற பத்திரிகை விக்கிலீக்ஸை மேற்கோள்காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அப் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, சர்வதேச அணுசக்தி முகாமை நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் ஏற்படும் என குறிப்பிடப்பட்டி ருந்தது.

ஜப்பான் அணு மின் நிலை யம் ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கத்தை மட்டுமே தாங்கும் திறன் கொண்டது என சர்வதேச அணுசக்தி முகாமை நிலையம் அவ் எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பூகம்பம் ஏற்பட்டால் அதனால் ஜப்பானில் அணு மின் சக்தி உலை களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட லாம், என்று ஜப்பான் அரசை சர்வதேச அணு சக்தி முகாமை அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரித்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணம் கூறுகிறது.

ஜப்பானில் நிறுவப்பட்டுள்ள அணு மின் சக்தி உலைகள் அனை த்தும் ரிக்டர் 7.0 புள்ளிகளுக்கும் குறைவான பூகம்பத்தை மட்டுமே தாங்கும் உறுதி கொண்டவை. அதற்கும் அதிகமான அளவிற்கு பூகம்பம் ஏற்பட்டால் அதனால் கடும் பாதிப்பு ஏற்படும், என்று 2008 ம் ஆண்டிலேயே சர்வதேச அணு சக்தி முகாமை நிலையம் எச்சரித்த தாகவும் குறிப்பிடப் பட்டிருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் அறிக் கையை விக்கிலீக்ஸ் வெளியிட்டு ள்ளது.

ஜி 8 நாடுகளின் அணு உலை பாதுகாப்பு குறித்து குழு 2008 ம் ஆண்டு டோக்கியோவில் நடத்திய கூட்டத்தில், ஜப்பான் கடைபிடித்து வரும் அணு மின் உலை பாதுகாப்பு நெறிமுறைகள் பழமையானவை என்று சர்வதேச அணு சக்தி முகாமை அமைப்பு கருத்து தெரிவி த்ததாகவும் அந்த ஆவணத்தில் கூற ப்பட்டுள்ளது.

சர்வதேச அணு சக்தி முகா மைத்துவ அமைப்பு பூகம்பம் தொடர்பான அணு ஆயுத உலை களின் பாதுகாப்பு குறித்த வழி காட்டு நெறிமுறைகளை கடந்த 35 ஆண்டுகளில் 3 முறை திருத்தி மேம்படுத்தியுள்ளது, என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக